Wednesday 15 August 2018

ஜசியா வரி


Siragu Zisya tax1
ஜசியா வரியைப் பற்றி நமது பார்ப்பன ஆதிக்கக் கல்வி முறை தவறான கருத்தை மக்களிடையே பரப்பி வைத்து இருக்கிறது. அதன் சுருக்கம் இது தான். இந்துக்களைக் கொடுமைப்படுத்துவதற்கு என்றே பாபர் இந்துக்கள் மீது ஜசியா வரி எனும் வரியை விதித்தார். இவ்வரி இந்துக்களுக்கு மட்டுமே பொருந்தும். இஸ்லாமியர்கள் இவ்வரியைச் செலுத்தத் தேவை இல்லை. அவருக்குப் பின் வந்த அக்பர் இக்கொடுமையைக் களைய ஜசியா வரியை நீக்கினார். ஆனால் அவுரங்கசீப் தன் மூன்று சகோதரர்களைக் கொன்று, தன் தந்தையைச் சிறைப்படுத்தி ஆட்சியில் அமர்ந்த பின் இவ்வரியை மீண்டும் விதித்தார். ஏனெனில் அவரங்கசீப் சகிப்புத் தன்மை இல்லாத ஒரு இஸ்லாமிய மதவாதி. இது போன்ற கருத்தை மதவாதிகள் மட்டும் அல்லாமல் அரசின் கல்வித் துறையே பரப்புவது வேதனைக்கு உரியது. ஆனால் உண்மை என்ன?

பாபர் முதன் முதலாக முகலாய அரசை நிறுவிய போது, ஆட்சியை நடத்துவதற்காக மக்களிடம் இருந்து வரி வசூல் செய்யும் திட்டத்தை வகுத்தார். இஸ்லாமிய மதச் சட்டத்தின் படியே வரிகளை விதிக்க அமைச்சர்கள் ஆலோசனை கூறிய போது பாபர் அதை மறுத்தார். இஸ்லாமிய மக்களிடம் இஸ்லாமியச் சட்டப்படி வரி வசூலிக்கலாம் என்றும், இந்துக்கள் மீது இஸ்லாமியச் சட்டங்களைத் திணிப்பது முறையல்ல என்றும், வேறு வழிகளைக் காணும் படியும் அவர் கூறினார். இதன் படி தோன்றியது தான் ஜசியா வரி. அதாவது ஜசியா வரி என்பது இந்துக்களைக் கொடுமைப்படுத்த அல்ல; மாறாக இந்துக்களுக்கு மதச் சுதந்திரம் அளிக்கும் வகையில் தான் ஜசியா வரி விதிக்கப்பட்டது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment