Friday 17 August 2018

எப்போ வருவாரோ … ? (சிறுகதை)


siragu eppa varuvaro1
”வைதேகி, வைதேகி” என்று சிவகாமி கத்தியது சமையல் அறையில் கூட்டுக்குத் தாளித்துக் கொண்டிருந்த வைதேகி காதில் விழுந்தது. அடுப்பை அணைத்துவிட்டு வந்து ”என்னம்மா வேண்டும் உங்களுக்கு?”  என்று மாமியாரைக் கேட்டாள்.
சிவகாமி படுத்தப் படுக்கையாய் இருக்கும் ஒரு நோயாளி. வயசு எழுபத்து ஆறு. போன வருடம்வரை கோலோடு நடமாடிக் கொண்டிருந்தாள். இப்போது டையாபர் கட்டும் நோயாளியாய் மாறி விட்டாள். வைதேகிதான் மாமியாருக்கு  டையாபர் மாற்றி, குளிப்பாட்டி, வேளாவேளைக்கு மருந்து கொடுத்து சாப்பிடக் கொடுத்து கவனித்துக் கொள்கிறாள்.
மாமனார் சம்பத் எண்பது வயது ஆகிறது. அவருக்கு இருக்கும் ஒரே பிரச்சனை டெம்னிஷியா என்று சொல்லப்படும் ஞாபக மறதிதான். வெளியே போனால் வீட்டு முகவரியை மறந்து விடுவார். ஏன் அவர் பெயரையே சில சமயம் மறந்து விடுவார். அவரை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்வது கடினமென்றாலும் பக்கத்தில் உள்ள தெரிந்தவர்கள் உதவியுடன் வைதேகி  எப்படியோ அவரைப் பார்த்துக்கொள்கிறாள்.

கிருஷ்ண குமாருக்கும் வைதேகிக்கும் ஜாதகம் பொருத்தம் பார்த்து சாஸ்திர சம்பிரதாயப்படி கல்யாணம் நடந்தது. மாப்பிள்ளைக்கு மதுரையில்  வங்கியில் வேலை. கை நிறையச் சம்பளம். பத்து மணியிலிருந்து ஐந்து மணி வரை வேலை. மாலை ஆறு மணிக்குள் வீட்டுக்கு வந்துவிடுவார். வைதேகி மிகவும் மகிழ்ச்சியாய் குடும்பம் நடத்தினாள். மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கைக்குச் சான்றாக அக்‌ஷயா பிறந்தாள். மழலை தரும் இன்பத்தில் வாழ்க்கைப் படகு ஆனந்தமாய் போய் கொண்டிருந்தது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment