Monday 31 December 2018

அரசு மருத்துவமனைகளின் அலட்சியப்போக்கும், பாதிக்கப்படும் விளிம்புநிலை மக்களும்!


siragu govt hospital2

கடந்த நான்கு நாட்களாக, நம் எல்லோரையும் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகிய ஒரு செய்தி என்னவென்றால், விருதுநகர் மாவட்டம், சாத்தூரைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்ணிற்கு எச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரமாகத்தான் இருக்க முடியும். இந்த செய்தியை விட்டு வெளியே வரமுடியாத நிலையில், மேலும் மற்றொரு செய்தி வெளியாகி இருக்கிறது. சென்னை மாங்காடைச் சேர்ந்த ஒரு பெண்ணும் தற்போது, தனக்கும் இதுபோன்ற கொடுமை நிகழ்ந்ததாக தெரிவித்திருக்கிறார். அதுவும், தலைநகரத்திலேயே, மிகப்பெரிய, மிகசிறந்த அரசு மருத்துவமனையாகக் கருதப்படும் கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரியில் இந்த மனித தவறு நடந்திருப்பதாகக் கூறுகிறார்.
எப்படி இப்படிப்பட்ட அலட்சியப்போக்கு அரசு மருத்துவமனைகளில் ஏற்படுகிறது என்பதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
ஏற்றப்படும் ரத்தம் எவ்வித தொற்றுமில்லாமல் பரிசுத்தமானதா என்ற சோதனையைக் கூட எடுக்கவில்லை என்றால், இந்த துறையின் செயல்பாடுகள் மீது மக்களுக்கு எப்படி நம்பிக்கை ஏற்படும்.!

சாத்தூரைச் சேர்ந்த எட்டு மாத கர்ப்பிணி பெண் ஒருவருக்கு, ரத்தம் செலுத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டதால், அந்த பகுதி அரசு மருத்துவமனையில் ரத்தம் ஏற்றப்பட்டது. அதன்பிறகு, வீட்டிற்கு வந்த அந்த பெண்ணிற்கு உடல்நலம் பாதிப்பிற்கு உள்ளானது. வயிற்றுப்போக்கு, வாந்தி என சில உடல் உபாதைகளால், மீண்டும் அங்கே சென்றிருக்கிறார். அப்போது ரத்தப்பரிசோதனையின் போது அப்பெண்ணிற்கு எச்ஐவி தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. முந்தைய பரிசோதனைகளின் போது இல்லாத தொற்று, தற்சமயம் எப்படி வந்தது என்ற கேள்வி எழுந்தநிலையில், சிவகாசியைச் சேர்ந்த ஒரு இளைஞர் அளித்த ரத்தத்தில், இந்த தோற்று இருப்பது அறியப்பட்டது. இதில் மிகவும் கொடுமையான ஒரு விசயம் என்னவென்றால், ‘ரத்ததானம் செய்தபோது தனக்கு இந்த தொற்று இருப்பது தெரியாது. வெளிநாடு செல்வதற்கு முயற்சி செய்தபோது, பரிசோதித்த ரத்தத்தில் தொற்று இருப்பது தெரிந்தவுடனே, மருத்துவமனைக்கு தெரிவித்து விட்டேன்.’ என்று அந்த இளைஞர் கூறியிருக்கிறார். மேலும், அந்த இளைஞர் தற்கொலைக்கு முயற்சி செய்து, தற்சமயம் சிகிச்சையில் இருக்கிறார் என்பதுவுமாகும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 27 December 2018

லாங்ஸ்டோன் ஹுக்ஸ்


siragu Langston_Hughes1
Donald B. Gibson என்ற ஆங்கில கவிதைகளின் விமர்சகர் அவருடைய கறுப்பின கவிஞர்கள் (Modern Black Poets: A Collection of Critical Essays (Prentice Hall, 1973) என்ற நூலில் லாங்ஸ்டோன் ஹுக்ஸ் (Langston Hughes) பற்றிக் கூறும் போது ஹுக்ஸ் இன் கவிதைகள் மற்ற கறுப்பின கவிஞர்களிடம் இருந்து வேறுபட்டது. இவரின் கவிதைகள் முழுவதும் மக்களின், குறிப்பாக கறுப்பின மக்களுக்கானது என்று கூறுகின்றார். ஆம் லாங்ஸ்டோன் ஹுக்ஸ் அமெரிக்க கறுப்பின கவிஞர்களில் ஒரு விடிவெள்ளியாக மின்னியவர். 1902 ஆம் ஆண்டு பிப்ரவரி 1, ஜோப்லினில் பிறந்தவர். (Joplin, Missouri.) ஹுக்ஸ் அவர்களின் இளமைக்காலம் அவரின் பெற்றோரின் மணவிலக்கினால் மிகுந்த போராட்டங்களுக்கிடையே கழிந்தது. இருப்பினும் இந்த போராட்டமே அவரை ஒரு தேர்ந்த கவிஞராவும் உருவாக்கியது எனின் மிகையல்ல.

ஒரு கவிஞராக தன்னை இவ்வுலகிற்கு வெளிப்படுத்துவதற்கு முன்னர், ஒரு சலவைக்காரராக, சமையற்காரராக, பேருந்து நடத்துனராக என பல வேலைகளை தன் வாழ்க்கை ஓட்டத்திற்காக செய்தவர் ஹுக்ஸ். இவரின் முதல் கவிதைத்தொகுப்பு The Weary Blues(1926)வெளிவந்தது. பின் 1930 இல் அவரின் முதல் நெடுங்கதை Without Laughter, (1930) வெளிவந்து இலக்கியத்திற்கான ஹர்மோன் (Harmon) தங்கப் பதக்கத்தை பெற்றது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 26 December 2018

களப்பிரர் காலம் குறித்து இன்று நாம் அறிவது என்ன?


Thamizhaga-Varalatril-Kalapirar-Kaalam-Book-Cover
மொகலாயர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும், பகதூர்கான் திப்பு சுல்தான், மாமன்னர் அக்பர் போன்ற வரலாற்று நூல்களை எழுதியுள்ள டி.கே.இரவீந்திரன், களப்பிரர் காலம் குறித்து எழுதியுள்ள நூல் விகடன் பிரசுரம் 2016 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ள ‘தமிழக வரலாற்றில் களப்பிரர் காலம்’ என்ற நூல். இதழியல் பின்புலம் கொண்டவராக வரலாற்று நூல்கள் எழுதுவதில் ஆர்வம் கொண்ட டி.கே.இரவீந்திரன் இந்த நூலில் பொதுவாக தமிழக வரலாறு குறித்த அறிமுகத்துடன் துவங்கி, களப்பிரர் வருகை, அவர்களது ஆட்சிக்காலம் என விவரித்து இறுதியில் களப்பிரர் வீழ்ச்சி வரை 30 அத்தியாயங்களில் 230 பக்கங்களில் எளிய நடையில் எழுதியுள்ளார்.
களப்பிரர்கள் காலம் இருண்டகாலம்:

ஆம், இவ்வாறுதான் நாம் பள்ளியில் படித்துள்ளோம். தமிழகத்தை ஆட்சி செய்த முடியுடை மூவேந்தர்களை வீழ்த்தி அன்னியரான இவர்கள் தமிழகத்தை ஆண்டனர். இவர்கள் ஆட்சிக்காலம் பற்றிய தொல்லியல் தடயங்கள் மற்றும் இலக்கியக் குறிப்புகள் போன்ற தரவுகள் இல்லாமையால் வரலாற்று ஆசிரியர்கள், சங்கம் மருவிய காலம் முதல் மீண்டும் பல்லவரும் பாண்டியரும் தமிழக ஆட்சியை மீட்டெடுக்கும் வரையில் உள்ள இடைப்பட்ட மூன்று நூற்றாண்டுகளை இருண்டகாலம் எனக் குறிப்பிட்டனர். கிபி 250 – 550 வரையில் களப்பிரர் ஆட்சியின் கீழ் தமிழகம் இருந்தது என்பதும், அவர்கள் இன்றைய மைசூர் பகுதிக்கு அண்மையில் இருக்கும் நந்தி மலைப்பகுதியில் இருந்த ஓர் இனத்தவர் என்பதால் வடுக கருநாடர் என்று இலக்கியக் குறிப்புகள் கூறுகிறது என்பதுவும் இன்று பெரும்பாலோர் ஏற்றுக் கொள்ளும் கருத்தாக இருக்கிறது. ஆகவே, வரலாற்றாசிரியர்கள் கருத்தின்படி இவர்கள் ஆரியருமல்லர் தமிழருமல்லர் ஆனால் திராவிட இனத்தவர், குறிப்பாகக் கன்னட வடுகர்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 25 December 2018

தமிழி-யைத் தமிழுக்கு அடையாளப்படுத்தியவர்: ஐராவதம் மகாதேவன்.


siragu tamiliyai2
தென்னிந்திய மொழிகள் மற்றும் பண்பாடுகள் தொடர்பான ஆய்வுகள் சுதந்திர இந்தியாவில் பன்னெடுங் காலமாக தொடர்ந்து நடந்து வந்த, நடந்து வருகிற, காலங்களில் அடிப்படையான சில ஒத்திசைவான கொள்கைகளை சிலர் கடைபிடித்து வருகின்றனர். அதாவது, தென்னிந்திய வரலாறு மற்றும் அது தொடர்பான வலுவான ஆதாரங்களை தொல்லியல் துறையினர் கண்டடைந்ததை உயர் ஆய்விற்கு, அறிவியல் பூர்வமான சோதனைகள் மேற்கொள்ள பல நூதன வழிகளில் தடைகளை ஏற்படுத்துவது. இது தொடர்பான செய்திகள் அவ்வப்போது ஓரிரு விசயங்கள் மட்டுமே பொதுவெளியில் தென்னிந்திய மக்களிடையே அது பற்றி தெரியவருகின்றன அல்லது எளிதில் அது பற்றி திட்டமிட்டு கவனத்தை திசை திருப்பி விடுதல் வேலையைச் செய்து வருகின்றனர்.

நாம் மேற்கண்டவை பற்றி தெரிந்து கொள்ள அல்லது இன்னும் சற்று அது தொடர்பாக தெளிந்து கொள்ள சமீபத்தில் தமிழகத்தில் கண்டறியப்பட்ட முன்னேறிய நகர நாகரீகமான கீழடி தொடர்பான சம்பவங்களை நாம் தொடர்புபடுத்திப் பார்த்துக் கொள்வது நம்மை மேற் கூறிவற்றோடு ஒன்றச் செய்யும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 20 December 2018

ரஜினி – தலைவரா 1.0? அல்லது வியாபாரியா 2.0?


Siragu Rajni arasiyal2
மகாராஷ்டிராவில் பிறந்து, கர்நாடகத்தில் வளர்ந்து தமிழ் சினிமாவில் நடித்து கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். இவர் ஒரு நடிகர் மட்டும் தானா? அல்லது தமிழ்நாட்டின் மீது உண்மையிலேயே அக்கறை கொண்டவரா? –ஒருசிறு அலசல்.
என் வழி தனி வழி
‘என் வழி தனி வழி’ என்ற வசனம் போல் தனக்கென்று ஒரு பாணியை அமைத்துக்கொண்டு தொடர்ந்து 40 ஆண்டுகளுக்கும் மேலாக சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரின் மனம் கவர்ந்த நடிகர். இவரின் படம் வெளியாகும்போதும், பிறந்த நாளின்போதும் காவடி எடுத்து, கட் அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்து திருவிழா போல் கொண்டாடும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இதையும் தாண்டி கடவுள் போல் பாவிக்கும் ரசிகர்கள் கூட உண்டு.பக்தர்கள் ரஜினிக்கு கோவில் கூட கட்டலாம், தவறில்லை.

தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு, இந்தி போன்ற பிற மொழிகளில் கூட படங்கள் வருவதுண்டு. ஏன், ஜப்பானில் கூட ஓரிரு படங்கள் மொழிமாற்றம் செய்து வெற்றிகரமாக வெளியிடப்பட்டது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 19 December 2018

சட்டம் யார் கையில்?


Sirgu siddur decison1
ஒரு மக்கள் நாயகச் சமூகத்தை இயக்கும் சட்டங்களை இயற்றுவது மக்கள் பிரதிநிதிகளின் கடமை.  சமூகமாற்றத்தைக் கணக்கில் கொண்டு அவ்வப்போது சட்டத்திருத்தங்கள் செய்யவேண்டும் என்றாலும், புதியசட்டங்களை இயற்றவேண்டும் என்றாலும், பழைய சட்டங்களை நீக்க வேண்டும் என்றாலும், அது மக்களிடம் விரிவாக விவாதிக்கப்பட்ட பிறகு, மக்களின் கருத்துப்படிதான், மக்களின் பிரதிநிதிகள் அதைச் செய்யவேண்டும். இந்தியாவில் இவ்வழிமுறைதான் பின்பற்றப்படுகிறது என்று சொல்லப்பட்டாலும், நடைமுறையில் பரிதாபத்திற்கு உரிய செய்திகள் நிறையவே உள்ளன.
முதலாவதாக மக்கள் பிரதிநிதிகள் பலருக்கு, சட்டம் இயற்றுதல், சட்டத்திருத்தம் செய்தல், சட்டத்தை நீக்குதல் பற்றிய முழுமையான புரிதல் இருப்பது இல்லை. அதிகாரத்தில் இருக்க ஆசைப்படும் அரசியல் கட்சிகள் அவ்வகையான புரிதல் குறைவானவர்களையே தேர்தலில் நிறுத்தி வெற்றிபெற வைக்கின்றன. தவிர்க்கமுடியாதபடி விவரம் புரிந்த மக்கள் நலன் விரும்பிகள் இம்மையத்தில் நுழைய நேரிட்டால், அவர்களைத் தங்கள் அதிகார வலிமையால் அடக்கிவிடுகின்றன. இதன்மூலம் ஒரு சிறு குழுவினர் தங்கள் விருப்பப்படி எல்லாம் சட்டங்களை இயற்றவும், திருத்தவும், நீக்கவும் செய்து கொள்கின்றனர்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 18 December 2018

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் சொல்லும் செய்திகள்!


Siragu election result1
தற்சமயம் நடந்து முடிந்திருக்கும் 5 மாநில தேர்தல் முடிவுகள் நமக்கு சொல்லும் செய்தியென்னவென்றால், மோடி அலை என்ற ஒரு மாயபிம்பத்தை தோற்றுவித்து, அதன் மூலம் மக்களை ஒரு மயக்கத்திலேயே வைத்திருந்த பா.ச.க அரசை, ஒரு மதவாத அரசை, சனநாயகத்திற்கு கேடு விளைவிக்க எத்தனிக்கும், ஒரு சர்வாதிகார அரசை, மக்கள் நலனில் சிறிதும் அக்கறைகொள்ளாத ஒரு அரசை, கொதித்தெழுந்து மக்கள் வீழ்த்தியிருக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம், மதசார்பற்ற சமூகநீதிக்கு போராடும் சக்திகள் ஒன்றிணைந்து ஒரே குரலாக, மதவாத பா.ச.க-வை எதிர்த்தது தான். மேலும், அனைத்து எதிர்க்கட்சிகளும், சனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும் என்ற ஒரே நோக்கில் தான் ஒன்றிணைந்து போராடுகின்றன என்பதை மக்கள் உணர்ந்ததால் தான், பாசிச பா.ச.க-விற்கு எதிராக வாக்களித்திருக்கிறார்கள்.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர், மிசோராம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் முடிவுகள் சமீபத்தில் வெளியாகின. தெலுங்கானாவில் ஆளும் கட்சியாக இருந்த சந்திரசேகர ராவ் தலைமையிலான, தெலுங்கானா ராஷ்டிர சமிதி என்ற கட்சி தான் ஆண்டுகொண்டிருந்தது. ஆனால், அங்கு சாதி அடிப்படையிலான ரெட்டிகளுக்கும், கம்மாக்களுக்கும் இடையே அதிகாரப்போட்டி வந்ததின் விளைவு, அரசின் மீது அதிருப்தி ஏற்பட காரணமாக அமைந்தது. அதனை, மிகவும் துணிச்சலாக அணுகுகினார் சந்திரசேகர ராவ். ஆட்சியை களைத்துவிட்டு தேர்தலுக்கு ஆயுத்தமானார். மீண்டும் தன்னுடைய ஆட்சியை மூன்றில் இரண்டு பங்கு வெற்றிபெற்று தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். மிசோராமில், காங்கிரசு தன்னுடைய நீண்டகால ஆட்சியை இழந்திருக்கிறது. அம்மாநில கட்சியான தேசிய முன்னணி அரிதி பெரும்பான்மை பெற்று, தேர்தலில் வென்று ஆட்சியை பிடித்திருக்கிறது. 5 தேர்தல்களில், இரண்டு மாநிலக் கட்சிகள் வென்றிருக்கின்றன என்பதில் மகிழ்ச்சி.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 17 December 2018

நானாகிய நான் (கவிதை)


siragu mounam2

கடந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்கும்
இடையில் கழியும் நிகழ்காலத்தில் நான்!
எனக்கு இன்னமும் எதுவும் அகப்படவில்லை.
மறையாத முகமொன்றின் காட்சிகள்
என் விழித்திரையில் நிலைகொள்ள
சலனமற்று கண்மூடி நடக்கிறேன்.
இனி எவ்வளவு காலம்தான்  தொடரும்
என் பயணம் என்ற விடைதெரியா வினா
என்னில் நீளத்தான் செய்கிறது
என்ன செய்ய ?
வினாவை அழிக்கும் அழிப்பானைக்
கடையில் வாங்கிவிடவேண்டியதுதான்!

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/

Friday 14 December 2018

அண்ணல் அம்பேத்கர்!


siragu ambedkar1
அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 63 வது நினைவு நாள். இந்து மத எதிர்ப்பை தன் வாழ்வியலாகவே கொண்டு பார்ப்பனியத்தை, அது ஏற்படுத்திய நான்கு வர்ணங்களை அதன் புரட்டை, பௌத்தம் என்ற பகுத்தறிவு பண்பாட்டை பார்ப்பனர்கள் எப்படி அழித்து ஒழித்தனர் என்பதை மக்களுக்கு தோலுரித்துக் காட்டியவர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள்.
அண்ணல் ஏற்படுத்திய அமைப்பைப் பற்றி அண்ணல் அவர்களே கூறும்போது,

“நம்முடைய அமைப்பு நமது குறைபாடுகளை மட்டுமே போக்குவதற்கான அமைப்பு அல்ல. மாறாக, அது ஒரு சமூகப் புரட்சியை உருவாகும் நோக்கம் உடையது. அந்த சமூகப் புரட்சியானது, சமூக உரிமைகளைப் பொறுத்தவரையில் மனிதர்களுக்கிடையே எந்தப் பாகுபாடும் காட்டாததாக இருக்கும். அதோடு, வாழ்வின் உச்சபட்ச நிலையை எட்டும் வாய்ப்பை அனைவருக்கும் சமமாக அளிப்பதன் மூலம், சாதி உருவாக்கியுள்ள செயற்கைத் தடைகளை நீக்கக்கூடிய ஒரு புரட்சியாகவும் அது இருக்கும். நமது அமைப்பானது ஒற்றுமை, சமத்துவம், சகோதரத்துவம் இவற்றிற்குமான அமைப்பே ஆகும். நாம் நமது அமைப்பை அந்த அளவிற்கு அமைதியாகவே கொண்டு செல்ல விழைகிறோம். இருப்பினும் வன்முறையின்றி இருக்க வேண்டும் என்ற எங்கள் உறுதியானது எங்கள் எதிரிகளின் மனப்போக்கைப் பொறுத்தே உள்ளது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/

Wednesday 12 December 2018

புற்றுநோயைக் கண்டறியும் விலை குறைந்த, எளிய சோதனை முறை கண்டுபிடிப்பு

Siragu cancer1
புற்றுநோய் செல்லின் டி.என்.ஏ. தங்கத்துடன் பிணைகிறது. இப்பண்பினால் புற்றுநோயைக் கண்டறியும் புதிய இரத்தப் பரிசோதனை ஒன்று உருவாக்கப்படமுடியும் என்று அறியப்பட்டுள்ளது. இந்த வார “நேச்சர் கம்யூனிகேஷன்” (Nature Communications) இதழில் வெளியான ஆய்வுக்கட்டுரை அறிமுகப்படுத்தும் இந்த புதிய சோதனை முறை, புற்றுநோய் மருத்துவத்துறையில் நல்லதொரு மாற்றம் கொண்டுவரும் என்பதில் ஐயமில்லை.
இந்த மிக எளிய சோதனையைச் செய்ய ஆகும் செலவும் குறைவு, முடிவுகளும் 90% வரை உறுதியான முறையில் அமையும். விரைவில் பத்து நிமிடங்களுக்குள் சோதனையை செய்து முடித்துவிட முடியும். பயாப்சி போன்று நோயாளியின் உடலை ஊடுருவும் முறையும் இதில் கிடையாது. இரத்தப்பரிசோதனை (ஒரு சொட்டு அளவு இரத்தம்) மூலம் சிறிய அளவில் டி.என்.ஏ. மட்டுமே தேவைப்படுகிறது என்பது இந்தச் சோதனை முறையின் சிறப்பு. இந்தச் சோதனையால் புற்றுநோய் இருக்கிறது என்பதைக் கண்டறியமுடியும், ஆனால் எந்த வகைப் புற்றுநோய் என்பதை அறியக் கூடிய திறன் இச்சோதனைக்கு இல்லை.

இச்சோதனை டி.என்.ஏ. மெத்திலேஷன் (methylation) பண்பை அடிப்படையாகக் கொண்டது. டி.என்.ஏ மெத்திலேஷன் என்பது மெத்தில் குரூப் (methyl group) ஒன்று சைட்டோசைன் நியூக்ளியோட்டைடு (cytosine nucleotide) ஒன்றுடன் இணையும் மரபணு அளவில் நிகழும் ஒரு மாற்றம் என்பது சுருக்கமான அறிவியல் விளக்கம். இந்த மரபணு மாற்றங்களே உயிர்கள் எவ்வாறு இயங்கும், அந்த இயக்கத்தை மரபணுக்கள் எவ்வாறு கட்டுப்படுத்தும் என்பதன் அடிப்படையும் ஆகும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

குமாருக்கு மட்டும் தெரிந்த அவளுடைய கண்ணீர் (சிறுகதை)


siragu small story2
வழக்கமாக நான்கு மணிக்கு படுக்கையிலிருந்து எழும் பழக்கமுடைய குமார் அன்று பொழுது விடிந்ததுகூட தெரியாமல் உறங்கிக் கொண்டிருந்தான். இரவு படுக்கப்போகும் போதே சொல்லி இருந்ததால் அவனை எழுப்பாமல் தன்னுடைய வழக்கமான வேலைகளைச் செய்து கொண்டிருந்தாள் விமலா.
வீட்டிற்கு வெளியில் ஏதோ வண்டியின் ஆரன் சத்தம் கேட்டுத் திடுக்கிட்டு எழுந்தவன் கதவைத் திறந்தபோது அவனுக்கு அங்கு இன்ப அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது. அவன் எதிர்பார்த்தவன் ஆனால் எதிர்பார்க்காத நேரத்தில் வந்திருந்தான். அவனை மகிழ்ச்சியுடன் வரவேற்க முற்பட்டாலும், எனக்கு நேரமில்லை, பஸ் வந்திடுச்சி. ஏழு ஏழரைக்கெல்லாம் புறப்படும், கிளம்பி வந்து விடுங்க! என்று இருசக்கர வண்டியில் இருந்து இறங்ககூட நேரமில்லாத அவனது நண்பனான சங்கர் சொல்லிவிட்டு கிளம்பினான்.
அப்போது அவனது மனைவி விமலா, ‘போகாமல் இருந்துவிடலாம் என்று தானே! இருந்தீங்க, அதனால்தானே என்னை காலையில் எழுப்ப வேண்டாமென்று சொன்னீங்க!’ என்றாள்.

“போம்மா! ஞாயிற்றுக் கிழமை ஒரு நாள்தான் விடுமுறை கிடைக்குது. அன்னைக்குன்னுப் பார்த்து இந்தமாதிரி ஏதாவது நிகழ்ச்சி வந்திடுது” என்று அவன் சலிப்போடு சொன்னாலும் அவனது சலிப்பிற்கான காரணம் சோம்பேறித்தனம் அல்ல என்பது அவனுக்கு மட்டும்தான் தெரியும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 6 December 2018

துறவி


Siragu Kasturba-Gandhi2
மோகன் தாஸ் கரம் சந்த் காந்தி என்பவரை மகாத்மாவாக பரிணமிக்கச் செய்தவர்களில் மிகப் பெரிய பங்கு அன்னை கஸ்தூரி பாய் அவர்களுக்கு உண்டு. காந்தியடிகளுக்கு இளம் வயதிலேயே திருமணம் நடைபெற்றது. இளம் வயது முதலே கஸ்தூரி பாய் அவர்களுடன் கலந்து பழகிய காரணத்தினால் காந்தியடிகளுக்கு மிகச் சிறந்த துணைவியாக அன்னை கஸ்தூரிபாய் விளங்கினார்.

அன்னை கஸ்தூரிபாய் அவர்களும் காந்தியடிகளுக்கு பல வழிகளில் வழிகாட்டியாக, காந்தியக் கொள்கைகளை ஏற்பவராக சிறந்த சத்யாகிரகியாக விளங்கியனார். இளம் வயதிலேயே திருமணம் ஆன காரணத்தினால் காந்தியடிகள் கஸ்தூரிபாயை தன் விருப்பப்படி அமைத்துக்கொள்ள விரும்பினார். கஸ்தூரிபாயை ஆலயத்திற்கு அடிக்கடி போகக் கூடாது, தோழிகளுடன் உரையாடக் கூடாது என்றெல்லாம் காந்தியடிகள் கட்டுப்படுத்தியதுண்டு. இதற்குக் கட்டுப்பட்டும் கட்டுப்பாடாமலும் கஸ்தூரிபாய் நடந்து வந்தார். கட்டுப்பட்டபோது மகிழ்ந்த காந்தியடிகளில் கட்டுப்படாதபோது வருத்தப்படமால் இருக்க இயலவில்லை. தன் அதிகாரத்துக்குக் கட்டுப்பட்டவர்கள் கட்டுப்பாட்டை மீறும்போது கோபம் வரும் என்பதை அறிந்துகொள்ள இந்த அனுபவங்கள் காந்தியடிகளுக்குக் கைகொடுத்தன.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 5 December 2018

வெளிச்சத்திற்கு வரும் பாலியல் புகார்கள் (#MeToo)


siragu Metoo4
கடந்த 2017 ஆம் ஆண்டு ட்விட்டர் (Twitter) சமூக வலைதளத்தில் தொடங்கப்பட்ட #MeToo இயக்கம் இன்று உலகம் முழுதும் பாணி(Trend) ஆகிவிட்டது. #MeToo என்பது பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் தொல்லைகளுக்கு எதிராக ஒலிக்கும் சமூகக் குரல்.
திரைத்துறை

ஹாலிவுட்டில் ஆரம்பித்த இக்குரல் இன்று இந்தி மற்றும் தமிழ் திரைத்துறை வரை ஒலித்துக்கொண்டிருந்தது. திரைத்துறையில் இதுபோன்ற அத்துமீறல்கள் சினிமா ஆரம்பித்த காலத்தில் இருந்தே நடப்பதாக நம்பப்படுகிறது. புகழ் மற்றும் பணம் புரளும் துறை என்பதால் வாய்ப்பு தேடி வரும் பெண்களும் சில ஆண்களும் தெரிந்தே இதில் விழுவதாகவும் கூறப்படுகிறது. எப்படி இருந்தாலும் இது அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தொழில், எனவே இதுபோன்ற செயல்கள் நடைபெறக்கூடாது என்பதில் யாருக்கும் நிச்சயம் மாற்று கருத்து இருக்காது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.