Wednesday 19 December 2018

சட்டம் யார் கையில்?


Sirgu siddur decison1
ஒரு மக்கள் நாயகச் சமூகத்தை இயக்கும் சட்டங்களை இயற்றுவது மக்கள் பிரதிநிதிகளின் கடமை.  சமூகமாற்றத்தைக் கணக்கில் கொண்டு அவ்வப்போது சட்டத்திருத்தங்கள் செய்யவேண்டும் என்றாலும், புதியசட்டங்களை இயற்றவேண்டும் என்றாலும், பழைய சட்டங்களை நீக்க வேண்டும் என்றாலும், அது மக்களிடம் விரிவாக விவாதிக்கப்பட்ட பிறகு, மக்களின் கருத்துப்படிதான், மக்களின் பிரதிநிதிகள் அதைச் செய்யவேண்டும். இந்தியாவில் இவ்வழிமுறைதான் பின்பற்றப்படுகிறது என்று சொல்லப்பட்டாலும், நடைமுறையில் பரிதாபத்திற்கு உரிய செய்திகள் நிறையவே உள்ளன.
முதலாவதாக மக்கள் பிரதிநிதிகள் பலருக்கு, சட்டம் இயற்றுதல், சட்டத்திருத்தம் செய்தல், சட்டத்தை நீக்குதல் பற்றிய முழுமையான புரிதல் இருப்பது இல்லை. அதிகாரத்தில் இருக்க ஆசைப்படும் அரசியல் கட்சிகள் அவ்வகையான புரிதல் குறைவானவர்களையே தேர்தலில் நிறுத்தி வெற்றிபெற வைக்கின்றன. தவிர்க்கமுடியாதபடி விவரம் புரிந்த மக்கள் நலன் விரும்பிகள் இம்மையத்தில் நுழைய நேரிட்டால், அவர்களைத் தங்கள் அதிகார வலிமையால் அடக்கிவிடுகின்றன. இதன்மூலம் ஒரு சிறு குழுவினர் தங்கள் விருப்பப்படி எல்லாம் சட்டங்களை இயற்றவும், திருத்தவும், நீக்கவும் செய்து கொள்கின்றனர்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment