Tuesday 5 February 2019

‘தி காந்தி மர்டர்’


Siragu-gandhi_murder3
இது காந்தியின் நினைவு நாளன்று இந்து மகா சபையின் தலைவர் பூஜா சகுன் பாண்டே தலைமையில் காவிகளின் கூட்டமொன்று காந்தியின் உருவபொம்மையை துப்பாக்கியால் சுட்டு, தீயிட்டு எரித்துக் கொண்டாடியது குறித்து மிகைப்படுத்தி எழுதப்பட்ட தலைப்பு அல்ல (பாப்ரி மஸ்ஜித் இடிபட்ட நாளை வெற்றிநாளாகக் கொண்டாடிவரும் கூட்டத்திடம் வேறென்ன நாம் எதிர்பார்க்க முடியும்?). இது காந்தியின் 71 ஆவது நினைவுநாளையொட்டி, அந்நாளில் இந்தியா தவிர்த்து உலகம் முழுவதும் திரையிடப்பட்ட ‘தி காந்தி மர்டர்’ (The Gandhi Murder) என்ற திரைப்பட விமர்சனம்.

இந்தப்படம் துவக்கத்தில் இருந்து இந்தியாவில் எதிர்ப்பை எதிர்கொண்டே வந்திருக்கிறது. படம் எடுக்க அனுமதி மறுக்கப்பட்டதால் துபாயில் கொஞ்சமும், பெரும்பாலான பகுதியை இலங்கையிலும் படம் பிடித்துள்ளார்கள். பின்னர் திரைப்படத் தணிக்கை குழு ஒரு 13 மாதங்களுக்கு இழுத்தடித்துள்ளது. படம் வெளியிடப் போவதையொட்டி தயாரிப்பாளர், இயக்குநர் ஆகியோருக்குக் கொலைமிரட்டல் அனுப்பத் துவங்கியதில் தயாரிப்பாளர் இருமுறை வீடுமாற்ற வேண்டியது நிகழ்ந்திருக்கிறது. தொடர்ந்து தடைகளையே எதிர்கொண்ட திரைப்படக் குழுவினர் இந்தியாவில் திரைப்படத்தை வெளியிட வேண்டாம் என்ற முடிவெடுத்ததில் காந்தியின் இந்தியாவில், காந்தியின் நினைவு நாளன்று, காந்தியின் படம் வெளியாகவில்லை. வாழ்க ஊடகச் சுதந்திரம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment