Friday 29 March 2019

சாதியில்லாச் சான்றிதழ்


siragu saadhiyillaa1
திருமதி சிநேகா சாதியில்லாச் சான்றிதழைப் பெறுகிறார்
வேலூர் மாவட்டம், திருப்பத்தூரைச் சேர்ந்தவர் திருமதி எம்.ஏ.சிநேகா. இவருடைய பெற்றோர்கள் சாதி மத நம்பிக்கைகளைக் கடந்த மனிதநேயச் சிந்தனையாளர்கள். இவரும் பெற்றோர்கள் வழியில் சாதி மத நம்பிக்கைகள் இல்லாமல் வளர்ந்து, சட்டப்படிப்பை முடித்து, வழக்கறிஞராகப் பணியாற்றுகிறார். இவருடைய கணவரும், தமிழ்ப் பேராசிரியருமான திரு பார்த்திபராசாவும், சாதி மத நம்பிக்கைகளைத் துறந்தவரே.
திருமதி சிநேகா 2010-ஆம்ஆண்டு முதல், தான் எந்த சாதியையும் மதத்தையும் சாராதவர் என்று சான்றிதழ் வழங்கும்படி கேட்டுப் போராடினார்.

இதற்கு முன் இதுபோன்ற சான்றிதழ் வழங்கப்படவில்லை என்று கூறி அவருடைய கோரிக்கை நிராகரிக்கப்பட்டுக் கொண்டே இருந்தது. 2017-ஆம்ஆண்டு முதல் அவர் ஒவ்வொரு அதிகாரியையும் நேரில் சந்தித்து விளக்கம் அளித்ததன் பயனாக 5.2.2019 அன்று அவருக்கு இந்தச் சான்றிதழ் வழங்கப்பட்டது. இவ்வாறு ஒரு சான்றிதழ் பெற்றதன் மூலம் சமூக முன்னேற்றத்தில் ஒரு படி ஏறி உள்ளதாக அவர் 13.2.2019 அன்று கூறினார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 26 March 2019

வாக்களித்தல் நம் சனநாயக கடமை !


Siragu By-election-in-RK-Nagar
2019 – ஆம் ஆண்டிற்கான மக்களவைத் தேர்தலும், தமிழகத்திற்கான 18 தொகுதிகளின் இடைத்தேர்தலும் ஒருசேர அடுத்த இரு மாதங்களில் அதாவது, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறயிருக்கின்றன. இது நமக்குக் கிடைத்திருக்கும் பொன்னானதொரு வாய்ப்பு. இதனை நாம் நல்லமுறையில், பயன்படுத்திக் கொள்ளவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். தற்போதைய இந்திய அரசியல் சூழலில், தமிழ்நாடு அரசியல் சூழலில், மக்கள் வாக்களிக்கும் இந்த தேர்தல் தருணம் மிகவும் முக்கியமானது. இதனை மக்கள் மிகவும் கவனமாக சிந்தித்து, செயல்படுத்தவேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறார்கள். வருங்காலத்தில் தங்கள் சந்ததியினர் எதிர்கொள்ளும் வாழ்க்கை முறையை தீர்மானிக்கும் கட்டத்தில் இருக்கிறார்கள். இதை உணர்ந்து மக்கள் யாரை வெற்றிபெற செய்ய வேண்டும், யாரை படுதோல்வியடைய வைக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்க வேண்டும். எந்தக்கட்சி வெற்றிபெறுகிறது என்பதைவிட, எந்தக்கட்சி வெற்றிபெற்றுவிடக்கூடாது என்பதில் ஒரு தெளிவு இருக்கவேண்டும். மத்தியில் பா.ச.க-வும், மாநிலத்தில் அதனுடன் கூட்டணி வைத்திருக்கும், அதிமுகவும் அதன் கூட்டணிக்கட்சிகளும் படுதோல்வியை காணவேண்டும் என்பது மிகவும் முக்கியமான ஒன்று.
ஏன் பா.ச.க மீண்டும் ஆட்சிக்கு வரவே கூடாது..?
பா.ச.க வெற்றிபெற்றுவிடக்கூடாது என்பதற்கான காரணங்கள் மட்டுமே அதிகளவில் நம் முன்னே இருக்கின்றன!

முதலில் மனிதகுலம் காப்பற்றப்பட வேண்டும். பசுமாட்டிற்கு கொடுக்கப்படும் மரியாதை மனிதனுக்கு இங்கு கொடுக்கப்படவில்லை என்பது மிகப்பெரிய அவலநிலை. கடந்த ஈராயிரம் ஆண்டுகளாக சாதிரீதியாகவும், கடந்த சில நூற்றாண்டுகளாக மத ரீதியாகவும், நம்மை பிரித்தாளும் வேலையை செய்துமுடித்த ஆரியம், அடுத்தகட்ட நடவடிக்கையான, தங்களின் மனுதர்ம ஆட்சியை நிறுவுவதற்கு துடித்துக்கொண்டிருந்தது. அதனை கடந்த 5 ஆண்டுகளில் பாதிக்கு மேல் அதனை செய்தும் விட்டது. மீண்டும் ஒருமுறை ஆட்சி, அதிகாரம் கிடைத்துவிட்டால், முழுவதையும் செய்துவிடும் என்பது மட்டும் உறுதி!

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Friday 22 March 2019

ஊருணி நீர் நிறைந்தற்றே… (சிறுகதை)


siragu ooruni neer1
ஒரு ஊரில் இரண்டு செல்வந்தர்கள் இருந்தார்கள். இருவரும் நறுமணப்பொருட்கள் வாசனைத் திரவியங்கள் முதலானவற்றை ஏற்றுமதி செய்து பெருஞ்செல்வம் ஈட்டிவந்தார்கள். இருந்தாலும் முதலாவது செல்வந்தரைக் காட்டிலும், இரண்டாவது செல்வந்தருக்கே ஊர் மக்களிடம் மதிப்பு, மரியாதை இருந்தது. இது குறித்து முதலாவது செல்வந்தர் பெரிதாக கண்டுகொள்ளாமல் இருந்தார்.

நாட்கள் நகர்ந்தன. இரண்டாவது செல்வந்தரை சிறந்த சமூக செல்வாக்கு உள்ளவராக அரசன் தேர்வு செய்தான். அதற்கான விருது வழங்கும் விழாவில் முதலாவது செல்வந்தரும் கலந்துகொண்டார். விழாவில் இரண்டாவது செல்வந்தரிடம் மன்னர் காட்டிய பரிவும் அன்பும் முதலாவது செல்வந்தர் மனத்தில் பொறாமையை உண்டு செய்தது. இருவருமே ஏற்றுமதி வணிகத்திற்காக அரசுக்கு வரி செலுத்துகிறார்கள். சொல்லப்போனால் முதலாவது செல்வந்தரே இரண்டாமவரைக் காட்டிலும் கூடுதல்வரி செலுத்துகிறார். அரசுக்குக் கூடுதல் வருவாயை ஈட்டித்தரும் தன்னைக் காட்டிலும் அவர் எந்த விதத்தில் உயர்ந்தவர் என்ற எண்ணம் முதலாவது செல்வந்தருக்கு வந்தது.


மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 21 March 2019

தந்தை பெரியார் பார்வையில் கற்பு !!


siragu karpu2
கற்பெனப்படுவது யாது எனின் அது சொற்றிறம்பாமை !! அதவாது சொல் தவறாமை. இன்னும் விளக்கி சொல்ல வேண்டும் என்றால் நாணயம், சத்தியம், ஒப்பந்தத்திற்கு விரோதமில்லாமல் இருப்பது என்ற கருத்துகள் கொண்டதாக இருக்கின்றது என்கிறார் பெரியார். கற்பு என்பதை பகுபதமாக்கி பார்க்கின்றபோது கல் -கற்பு என்கின்ற இலக்கணம் சொல்லப்பட்டு வருகின்றது. இந்த இடத்தில் அந்த சொல்லை பகாப்பதமாக (பிரித்தால் பொருள் தராதது) மகளிர் நிறை என்று காணப்படுகின்றது. இந்த இடத்தில் மகளிர் என்பது பெண்களையே குறிக்கும் பதமாக எப்படி ஏற்பட்டது என்று விளங்கவில்லை என்கிறார். கற்பு என்பதற்கு அழிவில்லாதது, உறுதியுடையது என்கின்ற பொருள்கள் உண்டு. அழிவில்லாதது என்கின்ற சொல்லுக்கு, உண்மையான கருத்துப் பார்க்கும்போது, சுத்தமான அதாவது கெடாதது, மாசற்றது என்பதாகத்தான் கொள்ளலாம். இந்த சுத்தம் என்ற சொல்லும் ஆங்கிலத்தில் கெடாதது என்கின்ற கருத்தில்தான் காணப்படுகின்றது. அதாவது chastity என்கிற ஆங்கில சொல்லுக்கு virginity என்பதே பொருள். அதை அந்தப் பொருளின்படி பார்த்தால் இது ஆணுக்கென்றோ அல்லது பெண்ணுக்கென்றோ சொல்லாமல் பொதுவாக மனித சமூகத்திற்கே – எவ்வித ஆண், பெண் புணர்ச்சி சம்மந்தமே சிறிதும் இல்லாத பரிசுத்த தன்மைக்கே உபயோகப்படுத்தி இருப்பதை காணலாம். ஆகவே கற்பு என்பது பெண்களுக்கு மாத்திரமானது அல்ல, குறிப்பாக ஆணோ, பெண்ணோ ஒரு தடவை கலந்த பின்பு எவ்வளவு சுத்தமாக இருந்தாலும் கற்பு போய்விடுகிறது என்கின்ற கருத்தை கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 19 March 2019

பெண்களுக்கு நாம் காட்டுகின்ற வழி என்ன?


siragu pengalukku1
பொள்ளாச்சி நிகழ்வு ….அதில் நூற்றுக்கணக்கான பெண்கள் பாதிப்பு என்றால் …. ஏன்?
இதுதான் இந்த நிகழ்வில் அதிர்ச்சி தரும் ஓர் உண்மை.
தன்மீது நிகழ்த்தப்பட்ட கொடுமையான வன்முறை இது. இதற்காக குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும், தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் ஏன் இத்தனை பெண்களுக்குத் தோன்றவில்லை.
இது காலம் காலமாக பாலியல் குற்றம் நிகழ்ந்தால் அது பெண்ணின் தவறு என்று குற்றம் சாட்டுவதால் வரும் விளைவு.
இது காலம் காலமாக பாலியல் குற்றம் நிகழ்ந்தால் ஆண்கள் கண்டிக்கப்படாமல் தண்டிக்கப்படாமல் விட்டதால் வரும் விளைவு.
இது காலம் காலமாக பாலியல் குற்றம் நிகழ்ந்தால் அதற்கான தண்டனையை பெண்களின் வாழ்வு பாதிக்கப்படுவதன் மூலம் சமூகம் கட்டமைத்து வைத்துவிட்டதால் வரும் விளைவு.

மீண்டும் மீண்டும் பெண்களின் தோற்றம் நடத்தை இவை காரணம் எனக் கூறுபவர்கள், மீண்டும் மீண்டும் பெண்கள் எவ்வாறு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறத் தயங்காதவர்கள் தங்கள் பொறுப்பு குறித்தும், அவர்களுக்கு சமூகத்தில் உள்ள கடமை குறித்தும் என்னதான் நினைக்கிறார்கள்?

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Friday 15 March 2019

அறிவுமதியின் மௌனம் (சிறுகதை)


siragu arivumathi1
யாமத்து அமைதி நிலவிய பேருந்தின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த இருவரின் உரையாடல் அவனைப் பள்ளிப் பருவத்திற்கு அழைத்துச் சென்றது. அந்த ஆண்டு அக்டோபர் இரண்டாம் நாள் ஞாயிற்றுக் கிழமையாக இருந்தது. நகரை நோக்கி ஆமைவேகத்தில் போய்க்கொண்டிருந்த அந்த அரசுப்பேருந்தின் நடுப்பகுதியில் அமர்ந்திருந்தான் அறிவுமதி. பள்ளி மாணவர்களுக்காகப் பிரத்தேயகமாக விடப்பட்டிருந்த அந்தப் பேருந்தில் விடுமுறை என்பதால் அவனுக்கு உட்கார இடம் கிடைத்தது.
கொண்டை ஊசி வளைவில் பேருந்து திரும்பியபோது வளர்ந்துகொண்டிருந்த புதிய கட்டிடங்கள் அவன் கண்ணில் பட்டன. நிறைமாத கர்ப்பினி விளைந்திருந்த நெல் மணிகளுக்கிடையே சுமைதாங்க முடியாமல் தள்ளாடி நடந்து போய்க்கொண்டிருந்தாள். அவற்றையெல்லம் பார்த்தவாறே இருந்தவன் எப்போது தூங்கினானோ தெரியாது.

பேருந்திலிருந்து பயணிகள் இரங்கும் அதிகப்படியான சப்தம் கேட்டு விழித்தவனுடைய மனதில் பதட்டம் தொற்றிக்கொண்டது. “அவள் வந்துவிட்டிருப்பாளோ?” என்ற பதட்டத்துடன் எழுந்து வேகமாய் ரோசினி வரச்சொன்ன இடத்திற்குப் போனான். அவள் இன்னும் வரவில்லை என்பதை உறுதிசெய்த பின்னரும் பதட்டம் அவனைவிட்டு போக மறுத்துவிட்டது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 14 March 2019

ஹச்சிமோஜி டிஎன்ஏ


siragu Hachimoji DNA
உயிரினங்களின், அவற்றின் பரிணாம வளர்ச்சியின் அடிப்படையான மூலக்கூறு டிஎன்ஏ எனப்படும் டிஆக்சி ரிபோ நியூக்ளிக்அமிலம். இயற்கையில் நான்கு நியூக்ளியோடைட்கள் கொண்ட டிஎன்ஏ இல் மாறுதல் செய்து, மேலும் நான்கு நியூக்ளியோடைட்களை இணைத்து 8 நியூக்ளியோடைட்கள் கொண்ட செயற்கை டிஎன்ஏ இரட்டைச்சுருள் வடிவ இழைகளை உருவாக்கியுள்ளனர் அமெரிக்க ஆய்வாளர்கள்.
இந்தப் புதிய அறிவியல் கண்டுபிடிப்பான செயற்கை டிஎன்ஏ க்கு, ‘ஹச்சிமோஜி டிஎன்ஏ’ (Hachimoji DNA) என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது ஹோஷிக்கா குழுவினரின் ஆய்வறிக்கையாக சயின்ஸ் ஆய்விதழில் வெளியாகியுள்ளது. ஹச்சிமோஜி (ஹச்சி=8; மோஜி=எழுத்து) என்றால் ஜப்பானிய மொழியில் ‘எட்டெழுத்து’ என்று பொருள்.

வேற்றுக்கோள்களில் உயிரினங்கள் இருப்பின் அவை இவ்வுலக உயிரினங்கள் போலவே AGCT நியூக்ளியோடைட்களை உடைய டிஎன்ஏ வைக் கொண்டிராமல், அவை வாழும் கோள்களின் தன்மைக்கு ஏற்ப வேறுபட்டிருக்கக்கூடும் என்ற கோணத்தில் ஆராயும் பொருட்டு அமெரிக்க வானவியல் ஆய்வுமையமான நாசா இந்த ஆய்வுக்கு நிதி நல்கியுள்ளது. அமெரிக்காவின் பல ஆய்வகங்களும் பங்கு பெற்ற இந்த ஆய்வை விஞ்ஞானி ஸ்டீவன் பென்னர் தலைமையேற்று வழி நடத்தினார். இவர் இதற்கு முன்னர் 6 நியூக்ளியோடைட்கள் கொண்ட ஒரு செயற்கை டிஎன்ஏ ஒன்றையும் உருவாக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 13 March 2019

நாகசாமியும், அவர்தம் சமற்கிருத பற்றும்!


siragu R-Nagaswamy1
சமீபத்தில், மத்திய மோடி அரசாங்கம் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தது நினைவில் இருக்கலாம். அது நம்மில் பலரையும் ஒரு அதிர்ச்சியில் உறையவைத்தது என்பது மறுக்கமுடியாத உண்மை. மிகவும் கண்டனத்துக்குரியதும் கூட. அது, செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படும் குடியரசுத் தலைவர் விருதுகளைத் தேர்வு செய்யும் குழுவில், மேனாள் தொல்லியல்துறை அதிகாரி நாகசாமியை மத்திய பா.ச.க அரசு நியமித்திருக்கிறது என்பதாகும். இதனால் தவறுதலான செயல்களுக்கு வழிகாட்டக்கூடிய ஆபத்து இருக்கிறது. மேலும், இதில் பொருந்தாத உண்மையற்ற நபர்களை தேர்ந்தெடுக்கக் கூடிய வாய்ப்பும் அதிகமிருக்கிறது.
மத்தியில், அமைந்திருக்கும் பா.ச.க தலைமையிலான அரசு, ஆரம்பத்திலிருந்தே, சமற்கிருதத் திணிப்பை முயற்சி செய்துகொண்டிருக்கிறது. ஆட்சியில் அமைந்த உடனே, சமற்கிருத வாரம் என்ற ஒன்றை கொண்டாட வேண்டும் என்று அறிவித்தது. அதற்கு எதிர்ப்புகள் பலமாக கிளம்பியதால், அத்திட்டத்தை கைவிட்டது. சிபிஎஸ்இ பள்ளிகளில் சமற்கிருதத்தை கட்டாயபாடமாக வேண்டும் என்றும் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. மத்திய அரசு கொண்டுவரும் நலத்திட்டங்கள் அனைத்தையும் சமற்கிருதப் பெயரிலேயே வைத்துக்கொண்டிருக்கிறது. இன்னும் ஏராளமாக சொல்லிக்கொண்டே போகலாம். ஒற்றை ஆட்சி முறையை கொண்டுவர துடித்துக்கொண்டிருப்பதால், அந்தந்த மாநிலமொழிகளை அலட்சியம் செய்யும் போக்கை கடைப்பிடித்தது.


மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Friday 8 March 2019

விண் வெளியில் விளம்பரப் பலகைகள்


siragu vilambara palagai1
புதுப் பணக்காரர்களும், புதிதாக மதம் மாறியவர்களும் தங்களை வெளிப்படுத்திக் கொள்வதில் அதீத அவசரத்தையும், நிதானம் இன்மையையும் காட்டுவது இயல்பு. இதேபோல் சமதர்ம சமூகத்தில் இருந்து முதலாளித்துவ முறைக்கு மாறிய இரஷ்யர்கள் முதலாளித்துவ விளம்பர முறையில் நிதானமற்ற ஒரு புதிய உத்தியைப் புகுத்த முனைந்து இருக்கிறார்கள். தொடங்கு ஏவுகலன் (StartRocket) என்ற இரஷ்ய நாட்டுத் தனியார் நிறுவனம் வணிக விளம்பரம் செய்வதற்காகச் செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவும் திட்டம் ஒன்றை வகுத்து உள்ளது. இதைப்பற்றி அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி விளாட்சிட்னிகோவ் (Vlad Sitnikov) 2021ஆம் ஆண்டுக்குள் 200 சின்னஞ்சிறிய செயற்கைக் கோள்களை விளம்பரம் செய்வதற்காக விண்ணில் ஏவ திட்டமிட்டு இருப்பதாகத் தெரிவித்து உள்ளார். இக்கோள்கள் பூமியில் இருந்து 500 கி.மீ. தொலைவில் நிறுத்தப்படும் என்றும், இவை வணிக நிறுவனங்களின் விளம்பரப் பலகைகளாக இருக்கும் என்றும், இரவு நேரங்களில் ஒரு விளம்பரத்தை ஆறு நிமிடங்கள் வரை மிளிர வைக்கலாம் என்றும் திட்டமிட்டு இருப்பதாகவும் அவர் கூறினார்.

இதன் மூலம் விளம்பர உத்தியை விண்வெளிக்குக் கொண்டுசெல்ல இரஷ்யாவின் தனியார் நிறுவனம் திட்டமிட்டு உள்ளது. இவ்வாறு விளம்பரங்களை விண்வெளிக்குக் கொண்டு செல்வதால் விளம்பரச் செலவுகள் கூடி, பண்டங்களின் விலை கடுமையாக உயரும் அபாயம் உள்ளது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 7 March 2019

ஆற்றலின் மறுபெயர் – அன்னை மணியம்மையார்!!


siragu maniyammai 2
6.6.1946 முதல் 10.3.1978 வரை விடுதலை ஏட்டின் பொறுப்பாசிரியராக, அச்சிடுபவராக, வெளியிடுபவராக விளங்கியவர் அன்னை மணியம்மையார். ஒரு ஏட்டின் ஆசிரியர்களாக பலர் இருக்கலாம்; ஆனால் பொறுப்பாசிரியர் ஒருவர் தான். 32 காலம் ஒரு ஏட்டின் பொறுப்பாசிரியராக விளங்கியவர் அன்னை மணியம்மையார் அவர்கள். வெறும் பெயரளவில் மட்டுமல்லாது, அரசு விடுதலை ஏட்டின் மீது நெருக்கடி தரும் போதெல்லாம் அதனை ஏற்று சிறை சென்றவர் மணியம்மையார் அவர்கள்.
அது மட்டுமல்ல பெரியாரின் உரைகள் அனைத்தையும் நூல் வடிவில் கொண்டு வந்த பெருமை மணியம்மையாரையே சாரும். அய்யா அவர்கள் ஒரு மாதத்தில் இருபது நாட்களுக்கு மேல் மேடைகளில் பேசினார். அந்த பேச்சுகள் ஒவ்வொன்றையும் எழுத்து வடிவில் மக்களிடம் தவழவிட்டவர் மணியம்மையார் அவர்கள்.

இதனை அய்யா அவர்களே, “அம்மா என்னிடம் தொண்டராக வந்த பிறகு தான் என்னுடைய கருத்துகள் பல ஆயிரம் புத்தகங்களாக வெளிவர முடிந்தது”, என்று எழுதியுள்ளார்கள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 6 March 2019

ம.பொ.சி. யின் வாசிப்பில் சிலப்பதிகாரம்


siragu silappadhigaara thiranaaivu1
நூலும் நூலாசிரியரும்:
சிலப்பதிகாரத்தின் தனிப்பெருமை அது ஐம்பெருங்காப்பியங்களுள் தலையாயது என்ற சிறப்பு. அது பிறமொழி காப்பியங்களின் தழுவல் அன்று, தமிழகத்திற்கே உரித்தான இலக்கியம். தமிழகத்தின் ஒரு வரலாற்றுக் களஞ்சியம். தமிழினத்தின் பண்பாட்டுப் பெட்டகம். சாதாரண மக்களின் வாழ்வையும் காட்டும் வரலாற்று இலக்கியமாகத் தமிழுக்கு அமைந்த சிறப்பு சிலப்பதிகாரத்திற்கு மட்டுமே உண்டு.

சிலப்பதிகாரத்துடன் இணைத்து அடையாளம் காணப்படுபவர் சிலம்புச் செல்வர் டாக்டர் ம.பொ.சிவஞானம் (ம.பொ.சி.) அவர்கள். சிலப்பதிகாரத்தின் மீது இவர் கொண்டிருந்த ஆளுமையின் காரணமாக 1950இல் பேராசிரியர் இரா.பி. சேதுப்பிள்ளை அவர்களால் ‘சிலம்புச் செல்வர்’ என்ற பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது. சிலப்பதிகாரம் குறித்து இவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கை 13. சிலப்பதிகாரத்தைக் கற்றுத் துறை போகிய ம.பொ.சி. அவர்கள் இந்நூலில், தாம் எழுதிய சிலப்பதிகாரம் குறித்த இலக்கிய ஆய்வுக் கட்டுரைகள், அவர்தம் ‘செங்கோல்’ இதழில் வெளியான அவரது இலக்கியக் கட்டுரைகள் பல, பல்வேறு காலங்களில் அவர் ஆற்றிய சிலம்பு குறித்த சொற்பொழிவுகள் சில என ஒரு 34 கட்டுரைகளைத் தொகுத்து “சிலப்பதிகாரத் திறனாய்வு” என்ற தலைப்பில் அளித்துள்ளார். இந்நூலை மிகப் பொருத்தமாக, சிலப்பதிகாரத்தின் சிறப்பினை நிலைநாட்ட எழுநிலை மாடங்களோடு கூடிய புதிய பூம்புகாரை உருவாக்கிய தமிழக அரசின் முன்னாள் முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களுக்குக் காணிக்கையாக்கி இருக்கிறார் ம.பொ.சி.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.