Wednesday 13 March 2019

நாகசாமியும், அவர்தம் சமற்கிருத பற்றும்!


siragu R-Nagaswamy1
சமீபத்தில், மத்திய மோடி அரசாங்கம் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தது நினைவில் இருக்கலாம். அது நம்மில் பலரையும் ஒரு அதிர்ச்சியில் உறையவைத்தது என்பது மறுக்கமுடியாத உண்மை. மிகவும் கண்டனத்துக்குரியதும் கூட. அது, செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படும் குடியரசுத் தலைவர் விருதுகளைத் தேர்வு செய்யும் குழுவில், மேனாள் தொல்லியல்துறை அதிகாரி நாகசாமியை மத்திய பா.ச.க அரசு நியமித்திருக்கிறது என்பதாகும். இதனால் தவறுதலான செயல்களுக்கு வழிகாட்டக்கூடிய ஆபத்து இருக்கிறது. மேலும், இதில் பொருந்தாத உண்மையற்ற நபர்களை தேர்ந்தெடுக்கக் கூடிய வாய்ப்பும் அதிகமிருக்கிறது.
மத்தியில், அமைந்திருக்கும் பா.ச.க தலைமையிலான அரசு, ஆரம்பத்திலிருந்தே, சமற்கிருதத் திணிப்பை முயற்சி செய்துகொண்டிருக்கிறது. ஆட்சியில் அமைந்த உடனே, சமற்கிருத வாரம் என்ற ஒன்றை கொண்டாட வேண்டும் என்று அறிவித்தது. அதற்கு எதிர்ப்புகள் பலமாக கிளம்பியதால், அத்திட்டத்தை கைவிட்டது. சிபிஎஸ்இ பள்ளிகளில் சமற்கிருதத்தை கட்டாயபாடமாக வேண்டும் என்றும் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. மத்திய அரசு கொண்டுவரும் நலத்திட்டங்கள் அனைத்தையும் சமற்கிருதப் பெயரிலேயே வைத்துக்கொண்டிருக்கிறது. இன்னும் ஏராளமாக சொல்லிக்கொண்டே போகலாம். ஒற்றை ஆட்சி முறையை கொண்டுவர துடித்துக்கொண்டிருப்பதால், அந்தந்த மாநிலமொழிகளை அலட்சியம் செய்யும் போக்கை கடைப்பிடித்தது.


மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment