Wednesday 26 June 2019

நறுமண பயிர்களின் மருத்துவ குணங்கள்


siragu-narumana-porutkal1
வாசனைச் செடிகள் மட்டுமே உங்கள் சுவை மொட்டுக்களை தூண்டும் ஆனால், அதிலிருந்து தாவர ஊட்டச்சத்துக்கள், அத்தியாவசிய தாவர எண்ணெய்கள், ஆண்டிஆக்சிடண்டுகள், கனிமங்கள் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியம் அத்தியாவசியமாக தேவைப்படும் வைட்டமின்கள் ஒரு ஈர்க்கக்கூடிய பட்டியலில் இயற்றப்படுகின்றன. வாசனைச் செடிகளுக்கு மருத்துவத்தில் கூடுதல் தொடர்பு உள்ளது.
மிளகு மருத்துவ குணங்கள்:
“பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்”
மிளகு “கிங் ஆப் ஸ்பைசஸ்” என்று குறிப்பிடப்படுகிறது.

  1. மிளகு தூள் (ஒரு தேக்கரண்டி), சர்க்கரை (ஒரு தேக்கரண்டி), தேன் (ஒரு தேக்கரண்டி) குழைத்து சாப்பிட்டால் நீண்ட நாள் இருமல் சரியாகிவிடும்.
  2. மிளகுதூள் (ஒரு தேக்கரண்டி), வெல்லம் (ஒரு தேக்கரண்டி), தயிர் (ஒரு தேக்கரண்டி) – காலையில் குழைத்து தொடர்ந்து சாப்பிட்டால் தலை பாரம், மூக்கு அடைப்பு ஆகியவை குணமாகும்.

மொழிப்போர் !!


siragu mozhippor1
அண்மையில் நாடாளுமன்றத்தில் தமிழ் வாழ்க! பெரியார் வாழ்க! திராவிடம் வெல்க! உலக தொழிலாளர்களே ஒன்று படுங்கள்! மார்க்சியம் வாழ்க! போன்ற முழக்கங்கள் இந்திய துணைக்கண்டத்தையே தமிழ் நாட்டை நோக்கி திருப்பியுள்ளது. குறிப்பாக தாய் மொழியான தமிழில் உறுப்பினர்கள் பதவி ஏற்றது பலரின் புருவங்களை உயர்த்தியுள்ளது. சனாதனம் முழு பலத்தோடு நாடாளுமன்றத்தில் இருக்கின்ற நிலையிலும் எந்த தத்துவம் தமிழர்களுக்கு இந்த துணிவை தந்திருக்கின்றது என்று வரலாறு அறிந்தவர்கள் அறிவர். 100 ஆண்டுகள் இந்த மண்ணில் பெரியார் என்ற தத்துவப் பேரரசன் போட்டுத்தந்த கருத்தியல் பலம் நமக்கு துணிவை தந்து கொண்டே இருக்கும் என்று வரலாறு மீண்டும் பொறித்துள்ளது. இதில் சில சில்வண்டுகள் ஏதோ ஒரு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் 2009 க்குப் பின் தொடங்கிய முழக்கமது என்று சிறுபிள்ளைத்தனமாக உளறிக்கொட்டிக் கொண்டு இருக்கின்றனர். திராவிடர் இயக்கத்தின் மறுக்க முடியாத வெற்றியை தங்கள் பெயரின் கீழ் போட்டுக்கொள்ளும் கீழ்த்தரமான செப்படி வித்தைகளை நொறுக்க மொழிப்போர் குறித்த வரலாற்று நிகழ்வுகளை போராட்டங்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
1938 ஏப்ரல் 21 அப்போது முதலமைச்சராக இருந்த ராஜகோபாலாச்சாரி முதல் வகுப்பிலிருந்து மூன்றாம் வகுப்பு முடிய பயிலும் மாணவர்கள் இந்தியைக் கட்டயமாகப் படிக்க வேண்டும் என்று ஆணைப் பிறப்பித்தார். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, சோமசுந்தர பாரதி ஆகியோர் இந்தித் திணிப்பை எதிர்த்து தொடர் பரப்புரை செய்தனர். “புற்றிலிருந்து ஈசல் கிளம்புவது போல் கிளம்புகிறார்களே! இந்தச் சனியன் இப்படி ஆகும் என்று தெரிந்திருந்தால், இந்தியைக் கட்டாயமாக்கி இருக்க மாட்டேன்! என்று சட்டமன்றத்தில் கூறிய ராஜகோபாலச்சாரி இறுதியில் 1940 பிப்ரவரி 21 இந்தித் திணிப்பு திட்டத்தை நீக்கி ஆணை பிறப்பித்தார்.

முதல் இந்தித் திணிப்பு எதிர்ப்பு போர் வெற்றி நமக்கே. ஆனாலும் இந்தியம் மீண்டும் 1948 ஜூன் 20 இந்தியைத் திணித்தது. 1948 ஜூலை 17 ஆம் நாள், சென்னை செயின்ட் மேரி மண்டபத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டில் பெரியார், அண்ணா, திருவிக ஆகியோர் கலந்து கொண்டு இந்தித் திணிப்பை எதிர்த்து மக்களை திரட்டினர். 1948 செப்டம்பர் இந்தித் திணிப்பை எதிர்த்து தமிழ் நாடெங்கும் மறியல் நடைபெற்றது. அன்றைய தினத்தில் தான் கலைஞர் அவர்களுக்கும் தயாளு அம்மையாருக்கும் திருமணம் ஏற்பாடாகி இருந்தது. மணப்பந்தலில் இருந்த கலைஞர், இந்தித் திணிப்பு மறியல் முழக்கம் கேட்டதும், அதில் கலந்து கொள்ள சென்று விட்டார். பின் ஒருவாறு திருமண வீட்டார், மறியல் நடைபெற்ற இடத்திற்குச் சென்று கலைஞரை அழைத்து வந்து திருமணம் செய்து வைத்தனர். திருமணத்தை விட இந்தித் திணிப்பை எதிர்ப்பது தான் முதல் கடமை என்ற எண்ணம் கொண்ட தலைவர்களை வளர்த்தெடுத்தது திராவிடர் இயக்கம். 1950 ஜூலை 18 கட்டாய இந்தியை ஒழித்து அரசு ஆணை பிறப்பித்தது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 25 June 2019

கூடங்குளம் அணு உலையில் சேகரிக்கப்படும், அணுக்கழிவின் பேராபத்தை உணர்வோம்!


siragu koodankulam1
தற்போது, தமிழ்நாட்டு மக்களாகிய நாம் பல பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறோம். நம்மைச் சுற்றி பல வழிகளிலும் பேராபத்து சூழ்ந்திருக்கிறது என்பது வெளிப்படையான உண்மை. மீத்தேன், ஹைட்ரோகார்பன், 8 வழி சாலை, நியூட்ரினோ, கெயில் குழாய் பாதிப்பு, புதிய கல்விக் கொள்கை, இந்தி, சமஸ்கிருதத் திணிப்பு, குடிநீர் பிரச்சனை, தகுந்த பாதுகாப்பற்ற நிலையிலுள்ள கூடங்குளம் அணு உலை என ஏராளம் நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், தற்போது நம் மீது தாக்கப்படும் பேராபத்து என்னவெனில், அணுக்கழிவை கொட்டுவதற்கான மையத்தை கூடங்குளம் அணு மின் நிலையத்திலேயே வைத்துக்கொள்ள வேண்டும் என்று எடுக்கப்பட்டிருக்கும் முடிவு மிகவும் விபரீதமான ஒன்றாக இருக்கிறது. அதற்கு முன்பாக, சற்று சுருக்கமாக கூடங்குளம் அணு மின் நிலையம் பற்றிய தகவல்களைப் பற்றி பார்ப்போம்.

தமிழ் நாட்டில், திருநெல்வேலி மாவட்டத்தில், கூடங்குளத்தில் இந்திய அணுமின் கழகத்தின் நிர்வாகத்தில் ரஷ்ய நாட்டின் உதவியுடன் உருவாகிய ஒரு திட்டத்தின் விளைவு தான் கூடங்குளம் அணு மின் நிலையம். இது 1988-ல், அன்றைய பிரதமர் திரு. ராஜிவ் காந்தியும், அப்போதைய ரஷ்ய நாட்டுப் பிரதமர் மிக்கைல் கார்பசேவ்வும் சேர்ந்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்கள். ஆனால், அதன் பிறகு, ரஷ்யா பல நாடுகளாக பிரிந்த நிலையில், இந்தியா, அணுக்கரு வழங்கும் குழுமத்தின் ஒப்புதல் பெறவில்லை என்ற காரணத்தை கூறி அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்தது. ஆதலால் இத்திட்டம் பத்தாண்டுகள் கிடப்பில் போடப்பட்டது. ஒன்றுபட்ட ரஷ்யாவின், உக்ரைன் நாட்டில் உள்ள செர்னோபில் என்ற இடத்தில் நிறுவப்பட்டிருந்த அணுஉலை வெடித்து சிதறி, மிகப் பெரிய பாதிப்புகளை உண்டாக்கி விட்டது. பல லட்சக்கணக்கில் மக்கள் பாதிப்புக்குள்ளாயினர். இன்றளவும் கூட அதன் தாக்கம் இருப்பதாக சொல்லப்படுகிறது. மக்கள் வாழ தகுதியற்ற இடமாக அது ஆகிவிட்டபடியால், மக்கள் அங்கிருந்து வேறு இடங்களுக்கு மாறிவிட்டார்கள் என்ற வரலாறு நம் கண் முன்னே பதிவு செய்திருக்கிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

எண்குணத்தான் – பொருள் கொள்ளும் முயற்சிகள்


siragu enkunaththaan2
முன்னுரை:
‘எண்குணத்தான்’ குறிப்பது என்ன?
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.(குறள்: 9)
எண்வகைப்பட்ட குணங்கள் கொண்ட இறைவனின் திருவடி தொழுதல் அல்லது வணங்குதல் குறித்த குறள் இது. அவ்வாறு வணங்காத தலையானது சுவையறியா வாய், காணாத கண், நுகரா மூக்கு, கேளாச் செவி, உணர்வற்ற உடல் போன்ற புலனில்லாத பொறிகளுக்கு ஒப்பாகும் என குறள் குறிப்பிடுகிறது. அதாவது மூளை செயல்படாத ஒரு மனித நிலை/தலை. அவ்வாறு வணங்காதாரை அறிவற்ற மனிதர் என்கிறார் வள்ளுவர். அவ்வாறு வணங்கப்பட வேண்டியவர் யாரென வள்ளுவர் குறிப்பிட்டார் என்ற கருத்து பேதங்களும் உண்டு. ஆனால், இக்கட்டுரையின் மையக்கருத்து அதுவன்று. எண்குணத்தான் என்ற பொருள் குறித்து மட்டும் அறிய முற்படுவது இக்கட்டுரையின் நோக்கம்.
தமிழ் அகரமுதலி எண்குணத்தான் என்பதை எட்டுக் குணங்களையுடைய கடவுள், அருகன், சிவன் எனப் பொருள் விளக்கம் தரும். ஆனால் குறளுக்கு விளக்கவுரை எழுதியோர் எண்குணங்கள் என்பதற்கு பற்பல வகையில் விளக்கம் தர முற்பட்டது தெரிகிறது.

ஆங்கிலத்தில் இக்குறளின் எண்குணத்தான் என்பதற்கு விளக்கம் கொடுக்கும்பொழுதும் “who is possessed of ‘the Eight-fold Excellence,” என்றும் “eight attributes” என்று கொடுப்பதைக் காணலாம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 19 June 2019

இந்தியின் தோற்றம்


Sanskrit verse from Bhagavad Gita
அரேபிய மொழியை சற்று எளிமையாக்கி உருது உருவானது. எனவே தான் உருது பேசுபவர்களுக்கு அரபு மொழி புரிகிறது. உருது சமஸ்கிருதத்தில் கலந்து இந்தி பிறந்தது. எனவே தான் இந்திக்கும் உருதுக்கும் பெரிய வேறுபாடு இல்லை. தேவநாகரீ எழுத்துரு கொண்டது இந்தி, அரேபியா எழுத்துரு கொண்டது உருது. மற்றபடி இந்தி சமஸ்கிருதத்தில் இருந்து மட்டுமே பிறந்ததது என்பது தவறான பிரச்சாரம். இதைத் தாண்டி இந்தியின் பூர்விகம் அரபு மொழியாகும். இதன் தாயகம் பாரசீகம் எனப்படும் ஈரான், மெசபடோமியா எனப்படும் ஈராக், சிரியா துருக்கி போன்ற நாடுகளாகும்.
இந்தி இந்தியாவின் அடையாளமா?

முகலாயர் ஆட்சியில் பிறந்த ஒரு மொழி எப்படி இந்தியாவின் அடையாளமாகும்? சுமார் 500 ஆண்டுகள் வரலாறு மட்டுமே கொண்ட இளம் மொழி எப்படி தேசிய மொழியாக முடியும்? முகலாயரின் ஆட்சி மொழியான உருது ஆங்கிலேயர் ஆட்சியில் நவீன இந்தியாக வடிவெடுத்தது. இந்தி எந்த விதத்திலும் மற்ற மொழிகளைவிட உயர்ந்தது அல்ல, அதை மற்றவர்கள் மீது திணிக்க வேண்டிய அவசியமும் அல்ல.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 18 June 2019

புதிய கல்விக் கொள்கை, புறக்கணிக்கப்படவேண்டிய ஒன்று


siragu mumozhi kolgai1
புதிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கையில், என்னென்ன சொல்லப்பட்டிருக்கிறன்றன என்று சரிவர தெரிந்துகொள்ளாமலேயே, பலர் பலவாறு தங்களின் கருத்துகளை கூறிவருகின்றனர். இதை, அவசரமாக, போகிறபோக்கில், கல்வியில் புதுமை, முன்னேற்றம் என்று ஆதரவு தெரிவித்து, அமல்படுத்துவது என்பது மிகவும் ஆபத்தானது என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். இதனை, கல்வியாளர்கள் மத்தியில், கூர்ந்து படித்து, புரிந்துகொண்டு, அதிலுள்ள அனைத்தையும் உணர்ந்து, அதற்கான விவாதங்கள் நடைபெறவேண்டும் என்பது மிகவும் முக்கியம்.

‘தேசிய கல்விக் கொள்கை – 2019’ என்ற வரைவு, திரு. கஸ்தூரி ரங்கன் அவர்கள் தலைமையிலான குழு ஒன்று, 484 பக்கங்கள் கொண்ட ஒரு அறிக்கை வரைவாக மத்திய அரசிற்கு அளித்துள்ளது. இது முற்றிலும் ஆங்கில மொழியினால் எழுதப்பட்டிருக்கிறது. பா.ச.க ஆட்சியில் அமர்ந்த ஒரு வாரத்திற்குள், மிக அவசரமாக செயல்படுத்த திட்டமிட்டு, அதற்கான பணிகளை துவக்கியுள்ளது என்பதை பார்க்கும்போது, எதற்கு இந்த அவசரம் என்ற கேள்வி நம் எல்லோர் மனதிலும் எழாமல் இல்லை. மேலும், இந்த அறிக்கை வரைவைப் பற்றி கருத்துகள் கூறுவதற்கு கால அவகாசம் கொடுத்திருப்பதென்னவோ, 30 நாட்கள் மட்டுமே. அதாவது ஜூன் 30 தேதிக்குள் தெரிவிக்கப்படவேண்டும் என்று நமக்கான காலத்தை குறுகிய நேரத்தில் சொல்லப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

கோவூர் கிழாரின் அறிவுரை!! (கவிதை)


siragu kovur kilar1
தொண்டை நாட்டில் கோவூரெனும் ஊரில்
தோன்றிய கோவூர் கிழார் புறநானூற்று
பாடலொன்றில்  சோழன் நலங்கிள்ளி நெடுங்கிள்ளி
பகை தகர்த்து ஒன்றிணைய அறிவுரை வழங்கினார்
அக்காலத்து புலவர்கள் பரிசிலும் பெறுவர்
அறிவுரையும் தருவோரென அழகாய் செப்பிடும்
பாடலிது, பாங்காய் கேட்டு பயன்பெறம்மா !!

நலங்கிள்ளி உறையூரை முற்றுகையிட உள்ளே
நெடுங்கிள்ளி அடைப்பட்டானே, போர் தடுக்க
புலவரும் கூறினார் அறிவு மொழி
பூரிப்படையும் தமிழர் ஒற்றுமை மொழி !!
படை திரட்டி பகை கொண்டு
பாடையேற்ற துடிப்பது இனயெதிரி அன்று

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 13 June 2019

ஆண்தகை (சிறுகதை)


siragu aanthagai1
குறுக்கும் நெடுக்குமான கோடுகளுக்கு நடுவில் மங்களம் பாடுவதில் வல்லவர்கள். அவர்கள்தான் அவனை முதலில் வரவேற்றனர். பார்ப்பதற்கு தம்மைப் போன்ற தோற்றப்பொலிவுடன் இருந்ததால் முதல் சந்திப்பிலேயே கட்டித்தழுவி தங்களுடைய அன்பை வெளிப்படுத்தினர். தான் யார்? என்பதையும் ஏன் இந்த கோலத்தில் இந்தப் புள்ளியில் வந்து நிற்கிறேன் என்றும் அவர்கள் கேட்கத் தயாராக இல்லை என்பதை அவனால் அப்போது நம்பமுடியவில்லை. குறைந்த பட்சம் தன்னுடைய பெயரையாவது கேட்பார்கள் என்று மனதிற்குள் நினைத்தான். அவனுடைய கண்கள் எதிரிலிருந்த முகங்களை நோட்டம் விட்டன.
கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்துக்கொண்டிருந்த பெண் மீது அவனுடைய பார்வை சென்ற போது,“பயில்வான் பக்கிரிக்கு! தண்ணீர் கொடும்மா!” என்ற குரல் கனத்து ஒலித்தது.
அது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. தன்னுடைய பெயரை இவர்கள் எப்படி அறிந்து கொண்டார்கள் என்று யோசித்து முடிப்பதற்குள் விருந்திற்கு அனுமதிக்கப்பட்டிருந்தான் பக்கிரி. இல்லை… இல்லை… பயில்வான் பக்கிரி.

உணவைக் கையால் எடுத்து வாயில் வைக்கும் சமயத்தில் லொல்! லொல்! என்ற சத்தம் கேட்டது. அந்தச் சத்தம் தன்னை நோக்கித்தான் வருகிறதோ! என்ற சந்தேகம் பயில்வான் பக்கிரியின் மனதிற்குள் இருந்தாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாதவனாய் உணவை சாப்பிட்டுக்கொண்டிருந்தான்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

இலக்கியங்களில் தாவரங்கள்


siragu-sanga-ilakkiyam1
தமிழ் மொழியின் இலக்கியப் பரப்பில் காலத்தில் முற்பட்ட இலக்கியம் சங்க இலக்கியமாகும். பாண்டிய மன்னர்கள் தம் தலைநகரங்களில் தமிழ் பேரவை அமைத்துத் தமிழ்மொழியின் இலக்கியப் பேரவை அமைத்துத் தமிழ்மொழியின் இலக்கியப் பழைமையினைக் காத்தனர். இப்பேரவைப் புலவர்களால் பாடப்பட்ட இலக்கியங்களின் தொகுப்புச் சங்க இலக்கியம் ஆகும்.
சங்க இலக்கியம்- வேறுபெயர்கள்

உயர்தனி இலக்கியம், சங்க இலக்கியம், சங்கத்தமிழ், சங்க நூல், சங்கப் பனுவல், சான்றோர் செய்யுள், செவ்வியல் இலக்கியம், திணை இலக்கியம், திணைப்பாட்டு, தொகையும் பாட்டும், பண்டைத்தமிழ், பண்டைய இலக்கியம், பதினெண் மேற்கணக்கு, பழந்தமிழ் இலக்கியம், பழைமை இலக்கியம் என்றெல்லாம் சங்க இலக்கியம் வழங்கப்படுகின்றது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 6 June 2019

தமிழ் மருத்துவம்


siragu siddha1
தமிழ் இலக்கியங்களில் மருத்துவக் குறிப்புகள் பல கிடைக்கின்றன. இதன் வழி தமிழர்கள் மருத்துவத்துறையிலும் தேர்ச்சி பெற்றிருந்தனர் என்பது தெரியவருகிறது. நூல்களுக்குப் பெயர்களே மருந்தின் பெயர்களாக வைத்துள்ளனர். திரிகடுகம், ஏலாதி, சிறுபஞ்சமூலம் போன்றன இதற்குச் சான்றுகள் ஆகும். மருந்துகளைப் பயன்படுத்தியதோடு மருத்துவ முறைகளையும் தமிழர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். இதனின்று கிளைத்ததே சித்த மருத்துவம் ஆகும். ஆயுர்வேதம், யுனானி போன்ற மருத்துவ முறைகளைப் போலத் தமிழர்கள் பயன்படுத்திய மருத்துவ முறை சித்த மருத்துவம் எனப்படுகிறது.

இயற்கையில் கிடைக்கக் கூடிய எண்ணற்ற புல், பூண்டு, மரம், செடி, கொடி, வேர், பட்டை, இலை, பூ, பிஞ்சு, காய், பழம், வித்து முதலியவைகளைக் கொண்டும் நவரத்தின நவலோகங்களைக் கொண்டும் இரசம் கந்தகம், கற்பூரம், தாரம் அயம், பவளம், துருசு முதலியவற்றைக்கொண்டும் திரிகடுகு, திரிசாதி, திரிபலை, அரிசி வகை, பஸ்பம், செந்தூரம், மாத்திரை, கட்டுகள், பொடிகள், குளித்தைலங்கள், கசாயங்கள் போன்றன கொண்டு செய்யப்படும் மருத்துவ முறை சித்த மருத்துவம் ஆகின்றது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 4 June 2019

கலைஞர் நடத்திய அறப்போர்


siragu Karunanidhi_murasoli 1
நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன் 3 ம் தேதி அன்று, முத்துவேலருக்கும் அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாகப் பிறந்த தட்சிணாமூர்த்தி என்ற கருணாநிதி பிற்காலத்தில் கலைஞர் என்றே அழைக்கப்பட்டார்.சிறுவயதிலேயே அரசியலில் ஈர்க்கப்பட்ட கருணாநிதி பள்ளி நாட்களிலேயே மாணவ பேச்சாளராகவும், ‘தமிழ் மாணவர் மன்றம்’ என்ற ஒரு மன்றத்தையும் துவக்கியவர். ‘முரசொலி’ (1942) என்ற துண்டறிக்கை இதழையும் புனைபெயரில் பள்ளிநாட்களில் நடத்தியவர் கருணாநிதி. பிற்காலத்தில் வார இதழ், தினசரி என்ற பல உருமாற்றங்களையும் எதிர்கொண்ட முரசொலி இதழ்கள், 1962க்குப் பிறகு தடையின்றி வெளிவந்தது.
நம்நாடு என்ற இதழ் திமுக கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடாக இருந்த அக்காலத்தில், முரசொலி இதழ்கள் கருணாநிதியின் கருத்துகளைத் தாங்கி வந்தன. அவரது அரசியல், இலக்கிய ஆளுமைக்கு அடையாளம் முரசொலி இதழ் என்றால் மிகையன்று. ஒரு இயக்கத்தின் தலைவரின் குறிக்கோளை, கொள்கையை, தொலைநோக்கை எதிரொலிக்கும் வகையில் தனது எழுத்தை நுட்பமாக இதழ்களில் வெளியிடத் தெரிந்தவர் கருணாநிதி. மக்களை பத்திரிக்கைகளைப் படிக்க வைத்த இயக்கம் திராவிட இயக்கம் என்று கூறப்படும் அளவிற்கு பத்திரிக்கைகளைத் திராவிட இயக்க ஆதரவாளர்கள் துவக்கி வெளியிட்டுக் கொண்டிருந்த காலத்தில் கருணாநிதியும் முரசொலியைத் தனது தனிப்பட்ட பத்திரிக்கையாகத்தான் துவக்கினார். அது அன்று ஒரு கட்சியின் கொள்கை பரப்பும் இதழ் என்ற தகுதியில் துவக்கப்படவில்லை. இன்று 75 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமாகக் கடந்துவிட்ட முரசொலி இதழ் கடந்து வந்த பாதையில் பல சுவையான செய்திகள் உள்ளன. அவை தமிழகம் கடந்த அரசியல் மைல் கற்களாகவும் அறியப்பட வேண்டியவை.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 3 June 2019

நடந்து முடிந்திருக்கும் 17 – வது, இந்திய மக்களவைத் தேர்தல் முடிவுகள்!


siragu lok sabha election1
அகில இந்திய அளவில், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்த 17வது மக்களவைத்தேர்தல் முடிவுகள் கடந்த வாரம் வெளிவந்தன. தேசிய சனநாயகக்கூட்டணி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. நாடெங்கிலும் உள்ள 542 தொகுதிகளில், 350- க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கைப்பற்றி பிரம்மாண்ட வெற்றி பெற்றது. இதன்மூலம் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் பலத்தை பா.ச.க பெற்றது. எதிர்த்து போட்டியிட்ட காங்கிரசு கட்சி 52 இடங்களில் மட்டுமே வெற்றிபெற முடிந்திருக்கிறது. ஐந்து மாதங்களுக்கு முன், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர் ஆகிய மாநிலங்களில் வெற்றிபெற்று ஆட்சியமைத்த காங்கிரசு அரசால், இந்த பொதுத்தேர்தலில் வெற்றிபெற முடியாமல் போயிருக்கிறது என்பது வியப்புக்குரிய ஒன்றாகத்தானிருக்கிறது!
பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, பொருளாதார வீழ்ச்சி, வேலைவாய்ப்பின்மை, பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பின்மை, சாதி, மத கலவரங்கள் என, கடந்த ஐந்து ஆண்டுகளில் நாடு முழுவதும் மக்கள் பா.ச.க ஆட்சியின் மீது மிகவும் அதிருப்தி கொண்டவர்களாக இருந்தபோது இப்படிப்பட்ட அமோக வெற்றி எப்படி சாத்தியமாயிற்று என்ற ஒரு கேள்விக்கு, பலவிதமான பதில்கள் நம்முள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த வெற்றிக்குப் பின்னால், பா.ச.க தலைவர் அமித்ஷா- பிரதமர் மோடி வகுத்த வியூகம், அவர்களுக்கு நினைத்ததை விட, அதிகமாக, வடக்கு, கிழக்கு, மேற்கு மாநிலங்களில் வெற்றியைப் பெற்றுத் தந்திருக்கிறது எனலாம். ஆனால் தெற்கில், அவர்களால் அந்தளவிற்கு வெற்றிபெற முடியவில்லை. அதிலும், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப்பிரதேசம் முழுவதுமாக பா.ச.க-வை புறந்தள்ளியிருக்கிறது.\\

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.