Monday 3 June 2019

நடந்து முடிந்திருக்கும் 17 – வது, இந்திய மக்களவைத் தேர்தல் முடிவுகள்!


siragu lok sabha election1
அகில இந்திய அளவில், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்த 17வது மக்களவைத்தேர்தல் முடிவுகள் கடந்த வாரம் வெளிவந்தன. தேசிய சனநாயகக்கூட்டணி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. நாடெங்கிலும் உள்ள 542 தொகுதிகளில், 350- க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கைப்பற்றி பிரம்மாண்ட வெற்றி பெற்றது. இதன்மூலம் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் பலத்தை பா.ச.க பெற்றது. எதிர்த்து போட்டியிட்ட காங்கிரசு கட்சி 52 இடங்களில் மட்டுமே வெற்றிபெற முடிந்திருக்கிறது. ஐந்து மாதங்களுக்கு முன், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர் ஆகிய மாநிலங்களில் வெற்றிபெற்று ஆட்சியமைத்த காங்கிரசு அரசால், இந்த பொதுத்தேர்தலில் வெற்றிபெற முடியாமல் போயிருக்கிறது என்பது வியப்புக்குரிய ஒன்றாகத்தானிருக்கிறது!
பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, பொருளாதார வீழ்ச்சி, வேலைவாய்ப்பின்மை, பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பின்மை, சாதி, மத கலவரங்கள் என, கடந்த ஐந்து ஆண்டுகளில் நாடு முழுவதும் மக்கள் பா.ச.க ஆட்சியின் மீது மிகவும் அதிருப்தி கொண்டவர்களாக இருந்தபோது இப்படிப்பட்ட அமோக வெற்றி எப்படி சாத்தியமாயிற்று என்ற ஒரு கேள்விக்கு, பலவிதமான பதில்கள் நம்முள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த வெற்றிக்குப் பின்னால், பா.ச.க தலைவர் அமித்ஷா- பிரதமர் மோடி வகுத்த வியூகம், அவர்களுக்கு நினைத்ததை விட, அதிகமாக, வடக்கு, கிழக்கு, மேற்கு மாநிலங்களில் வெற்றியைப் பெற்றுத் தந்திருக்கிறது எனலாம். ஆனால் தெற்கில், அவர்களால் அந்தளவிற்கு வெற்றிபெற முடியவில்லை. அதிலும், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப்பிரதேசம் முழுவதுமாக பா.ச.க-வை புறந்தள்ளியிருக்கிறது.\\

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment