Wednesday 26 June 2019

மொழிப்போர் !!


siragu mozhippor1
அண்மையில் நாடாளுமன்றத்தில் தமிழ் வாழ்க! பெரியார் வாழ்க! திராவிடம் வெல்க! உலக தொழிலாளர்களே ஒன்று படுங்கள்! மார்க்சியம் வாழ்க! போன்ற முழக்கங்கள் இந்திய துணைக்கண்டத்தையே தமிழ் நாட்டை நோக்கி திருப்பியுள்ளது. குறிப்பாக தாய் மொழியான தமிழில் உறுப்பினர்கள் பதவி ஏற்றது பலரின் புருவங்களை உயர்த்தியுள்ளது. சனாதனம் முழு பலத்தோடு நாடாளுமன்றத்தில் இருக்கின்ற நிலையிலும் எந்த தத்துவம் தமிழர்களுக்கு இந்த துணிவை தந்திருக்கின்றது என்று வரலாறு அறிந்தவர்கள் அறிவர். 100 ஆண்டுகள் இந்த மண்ணில் பெரியார் என்ற தத்துவப் பேரரசன் போட்டுத்தந்த கருத்தியல் பலம் நமக்கு துணிவை தந்து கொண்டே இருக்கும் என்று வரலாறு மீண்டும் பொறித்துள்ளது. இதில் சில சில்வண்டுகள் ஏதோ ஒரு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் 2009 க்குப் பின் தொடங்கிய முழக்கமது என்று சிறுபிள்ளைத்தனமாக உளறிக்கொட்டிக் கொண்டு இருக்கின்றனர். திராவிடர் இயக்கத்தின் மறுக்க முடியாத வெற்றியை தங்கள் பெயரின் கீழ் போட்டுக்கொள்ளும் கீழ்த்தரமான செப்படி வித்தைகளை நொறுக்க மொழிப்போர் குறித்த வரலாற்று நிகழ்வுகளை போராட்டங்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
1938 ஏப்ரல் 21 அப்போது முதலமைச்சராக இருந்த ராஜகோபாலாச்சாரி முதல் வகுப்பிலிருந்து மூன்றாம் வகுப்பு முடிய பயிலும் மாணவர்கள் இந்தியைக் கட்டயமாகப் படிக்க வேண்டும் என்று ஆணைப் பிறப்பித்தார். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, சோமசுந்தர பாரதி ஆகியோர் இந்தித் திணிப்பை எதிர்த்து தொடர் பரப்புரை செய்தனர். “புற்றிலிருந்து ஈசல் கிளம்புவது போல் கிளம்புகிறார்களே! இந்தச் சனியன் இப்படி ஆகும் என்று தெரிந்திருந்தால், இந்தியைக் கட்டாயமாக்கி இருக்க மாட்டேன்! என்று சட்டமன்றத்தில் கூறிய ராஜகோபாலச்சாரி இறுதியில் 1940 பிப்ரவரி 21 இந்தித் திணிப்பு திட்டத்தை நீக்கி ஆணை பிறப்பித்தார்.

முதல் இந்தித் திணிப்பு எதிர்ப்பு போர் வெற்றி நமக்கே. ஆனாலும் இந்தியம் மீண்டும் 1948 ஜூன் 20 இந்தியைத் திணித்தது. 1948 ஜூலை 17 ஆம் நாள், சென்னை செயின்ட் மேரி மண்டபத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டில் பெரியார், அண்ணா, திருவிக ஆகியோர் கலந்து கொண்டு இந்தித் திணிப்பை எதிர்த்து மக்களை திரட்டினர். 1948 செப்டம்பர் இந்தித் திணிப்பை எதிர்த்து தமிழ் நாடெங்கும் மறியல் நடைபெற்றது. அன்றைய தினத்தில் தான் கலைஞர் அவர்களுக்கும் தயாளு அம்மையாருக்கும் திருமணம் ஏற்பாடாகி இருந்தது. மணப்பந்தலில் இருந்த கலைஞர், இந்தித் திணிப்பு மறியல் முழக்கம் கேட்டதும், அதில் கலந்து கொள்ள சென்று விட்டார். பின் ஒருவாறு திருமண வீட்டார், மறியல் நடைபெற்ற இடத்திற்குச் சென்று கலைஞரை அழைத்து வந்து திருமணம் செய்து வைத்தனர். திருமணத்தை விட இந்தித் திணிப்பை எதிர்ப்பது தான் முதல் கடமை என்ற எண்ணம் கொண்ட தலைவர்களை வளர்த்தெடுத்தது திராவிடர் இயக்கம். 1950 ஜூலை 18 கட்டாய இந்தியை ஒழித்து அரசு ஆணை பிறப்பித்தது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment