Tuesday 25 June 2019

எண்குணத்தான் – பொருள் கொள்ளும் முயற்சிகள்


siragu enkunaththaan2
முன்னுரை:
‘எண்குணத்தான்’ குறிப்பது என்ன?
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.(குறள்: 9)
எண்வகைப்பட்ட குணங்கள் கொண்ட இறைவனின் திருவடி தொழுதல் அல்லது வணங்குதல் குறித்த குறள் இது. அவ்வாறு வணங்காத தலையானது சுவையறியா வாய், காணாத கண், நுகரா மூக்கு, கேளாச் செவி, உணர்வற்ற உடல் போன்ற புலனில்லாத பொறிகளுக்கு ஒப்பாகும் என குறள் குறிப்பிடுகிறது. அதாவது மூளை செயல்படாத ஒரு மனித நிலை/தலை. அவ்வாறு வணங்காதாரை அறிவற்ற மனிதர் என்கிறார் வள்ளுவர். அவ்வாறு வணங்கப்பட வேண்டியவர் யாரென வள்ளுவர் குறிப்பிட்டார் என்ற கருத்து பேதங்களும் உண்டு. ஆனால், இக்கட்டுரையின் மையக்கருத்து அதுவன்று. எண்குணத்தான் என்ற பொருள் குறித்து மட்டும் அறிய முற்படுவது இக்கட்டுரையின் நோக்கம்.
தமிழ் அகரமுதலி எண்குணத்தான் என்பதை எட்டுக் குணங்களையுடைய கடவுள், அருகன், சிவன் எனப் பொருள் விளக்கம் தரும். ஆனால் குறளுக்கு விளக்கவுரை எழுதியோர் எண்குணங்கள் என்பதற்கு பற்பல வகையில் விளக்கம் தர முற்பட்டது தெரிகிறது.

ஆங்கிலத்தில் இக்குறளின் எண்குணத்தான் என்பதற்கு விளக்கம் கொடுக்கும்பொழுதும் “who is possessed of ‘the Eight-fold Excellence,” என்றும் “eight attributes” என்று கொடுப்பதைக் காணலாம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment