Thursday 31 October 2019

எண்ணியல்


siragu enniyal1
முன்னுரை:
மாந்தர் குல வளர்ச்சிக்கு மொழி என்பது இன்றியமையாததாகும் என்பதை அனைவரும் அறிவோம். மொழி என்பது உடல் அசைவுகளில் செய்கையாகத் தொடங்கி, நாவில் ஒலியாக மாற்றுப்பெற்று பேச்சாகி இன்று நமது கைகளில் எழுத்து வடிவமாகி உலக அறிவியல் வளர்ச்சியை தன்னகத்தே கொண்டு, கணினியில் நுழைந்து எண்களாகவும், எழுத்துக்களாகவும், குறியீடுகளாகவும், மாறி இப்பேரண்டத்தையே இயக்கும் மாபெரும் ஆற்றலாகித் திகழ்ந்து வருவதை யாரும் மறுப்பதற்கில்லை. அந்த வகையில் எண்ணியல் அறிவின் அடிப்படை கூறால் கணித வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. எண்கள் மற்றும் எண்ணியில் சார்ந்த கருத்துக்கள், கூட்டல், கழித்தல், வகுத்தல் முதலான கணிதத்தின் அடிப்படகளையும் பதிணென்கீழ்கணக்கு நூல்களில் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
கீழ்க்கணக்கு நூல்கள்

நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்
பால் வருகங் கோவை பழமொழி மாமூலம்
கைந்நிலை காஞ்சியோ மேலாதியென்பவே
மெய்நிலைய வாங்கீட் கணக்கு “(பழம்பாடல்)
என்ற இப்பாடலில் கீழ்க்கணக்கு பதினெட்டு நூல்கள் எவை எவை என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 30 October 2019

உழவுத் தொழிலே தலையாயது


siragu ulavu2
பல்வேறு முயற்சிக்குப் பின்னும் இவ்வுலகம் ஏரின் பின்னாகவே நிற்கிறது.  உழவுத் தொழில் செய்வோரே மற்றைத் தொழில் செய்வோருக்கும் உணவு அளித்தலால் அச்சாணி போன்றவர். உழுதுண்பவர் வாழ்நிலை சுதந்திரமானது. மற்றைத் தொழில் செய்வோர் உணவுக்கு உழவரைச் சார்ந்திருக்க வேண்டியுள்ளது. ஆதலால் உழுதுண்பவர்களுக்கு இரந்து வாழும் வாழ்க்கை நிலை இல்லை. மாறாக ஈர்ந்து வாழும் வாழ்க்கை நிலை உடையவர். உழவர், கொடையின் கீழ் அரசர்களின் வெண்கொற்றக் குடைகளும், ஆண்டிகளின் தவக் குடைகளும் குடைபிடிக்கும் என வள்ளுவர் உழவு என்ற அதிகாரத்தில் கூறுவர். உழவுத் தொழிலையும், உழவரின் மேன்மையையும் கூறும் வள்ளுவர் வேளாண்மை என்னும் அதிகாரம் படைத்துக் குறள் பாடாதது ஏன்? என்ற வினா எழுகிறது. அத்துடன் வேளாண் வேளாண்மை ஆகிய சொற்களுக்கான பொருள் யாது? ஆகியவற்றிற்கான விடை தேடுவது இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கமாகும்.
தொல்காப்பியத்தில் வேளாண் எனும் சொல்:

தொல்காப்பியர் வேளாண் என்னும் சொல்லை மூன்று இடங்களில் கையாள்வர். ஒன்று தலைவன் கூற்றை மொழிகின்ற இடத்தில்,
“வேளாண் எதிரும் விருப்பின் கண்ணும்”; (தொல். களவு:16:8)
என்றும், மற்றொன்று தோழி கூற்றில்,
“வேளாண் பெருநெறி வேண்டிய விடத்தும்”; (தொல். களவு:23:23)
என்னும் இருவிடங்களை நோக்குமிடத்து வேளாண் என்னும் சொல் கொடை என்னும் பொருளில் ஆளப்பட்டுள்ளது. இதற்கு இளம்பூரணர் உபகாரம் என்றும் நச்சினார்க்கினியர் கொடுத்தல் என்றும் உரை கூறுவர். தொல்காப்பியர் மரபியலில் வேளாளருக்குரிய தொழிலைக் குறிக்கின்ற பொழுது,

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 29 October 2019

சோழர்காலத்தின் மருத்துவம் பற்றிய கல்வெட்டுக் குறிப்புகள்


siragu kalvettu2
பேரரசர் அசோகரால் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் வெட்டப்பட்ட கிர்னார் கல்வெட்டின் மூலம் மக்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டதை அறிகிறோம். அவ்வாறே சமணத்துறவிகள் தங்கள் பள்ளிகளில் அன்னதானம், அபயதானம், ஒளடததானம், சாத்திரதானம் ஆகியவற்றைச் செய்ததாக மதுரை மாவட்டத்தின் மலையில் உள்ள பிராமி கல்வெட்டுகளால் அறிகிறோம். இக்கொடைகள் முறையே உணவு, அடைக்கலம், மருத்துவம், கல்விக் கொடைகள் எனப் பொருள்படும் (சமணமும் தமிழும், மயிலை சீனி. வேங்கடசாமி, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், பக்கம் 41). மிகக் குறைந்த அளவிலேயே தமிழ்நாட்டில் மருத்துவம் பற்றிய கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.

மருத்துவ மூலிகைகளைப் பயிரிடுவதற்கு செங்கொடிக்காணம், கண்ணிட்டுக் காணம் போன்ற வரிகள் விதிக்கப்பட்டதையும், மருத்துவர்களுக்கு ‘மருத்துவப்பேறு’ என்ற நிலமானியம் கொடுக்கப்பட்டதையும் பல்லவர் காலக் கல்வெட்டுகள் பதிவு செய்துள்ளதை அறிய முடிகிறது (தமிழர் நாகரிகமும் பண்பாடும், டாக்டர். அ. தட்சிணாமூர்த்தி, பக்கம் 366).

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 23 October 2019

தொகுப்பு கவிதை(தவறிழைக்கக் கூடாதவை, இசை மேதைமை)

தவறிழைக்கக் கூடாதவை

siragu thavarilaikkakoodaadhavai1

நீங்கள் ஒருநாள் கொலைக் குற்றவாளியின் நிழலில் நடந்து செல்கிறீர்கள்.
அவன் இரக்கமற்றவன், கொடூரமானவன், கோபமுடையவன்,
எவர் மீதும் அன்பு என்ற ஒன்றைக் காட்டாதவன் என்ற எண்ணம்
உங்களுக்குத் தோன்றலாம் அல்லது தோன்றாமல் கூட போகலாம்.
அவன் ஒரு குற்றவாளி அல்ல என்ற தீர்ப்பிற்கு பின்பு,
அவனை நீங்கள் சாதாரனமான பார்வையுடன் பார்க்க வேண்டிய
கட்டாயம் அல்லது சூழல் உங்களுக்கு ஏற்படலாம்.

அதுநாள் வரை, இடையில்
குற்றஞ்சாட்டப்பட்ட நபர் என்ற காரணத்திற்காக
செய்யாத குற்றத்திற்கு தண்டனையாக
கூனிக் குறுகி ஒரு புழுவைப் போல

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 22 October 2019

செம்மொழி இலக்கியங்களில் உடற்கூறு அறிவியல்


siragu udarkooru ariviyal1
கல்தோன்றி மண்தோன்றா காலத்து- வாளொடு
முன்தோன்றிய மூத்தகுடி”
என்று தமிழ்க் குடியின் தொன்மையை புறப்பொருள் வெண்பாமாலை கூறுகிறது.
கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும்
உன் உரத்து உதித்தெழுந்து ஒன்றுபல ஆயிடினும்
ஆரியம்போல் உலகவழக்கு அழிந்தொழிந்து சிதையா
உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே என்று தமிழ் மொழியின் செம்மைத் தன்மையினைப் பாடியுள்ளார் மனோன்மணீயம் பெ. சுந்தரம்பிள்ளை.
செம்மையும், தொன்மையும் நிறைந்த செம்மொழி இலக்கியங்களில் ஆங்காங்கே அறிவியல் சார்ந்த கருத்துகளும் இடம் பெற்றுள்ளன. இதனை மருத்துவ அறிவியல். வானியல், மின்னணுவியல், ஒலியியல், கணிப்பொறி அறிவியல், உடல்கூறு அறிவியல் எனப் பல்வகைப்படுத்தலாம். இவற்றில் உடற்கூறுஅறிவியல் பற்றிய செய்திகளை இக்கட்டுரை தந்து நிற்கின்றது.
உடற்கூறுஅறிவியல்

மனிதன், விலங்குகள், தாவரங்கள் ஆகியனவற்றின் உடலமைப்புகள் பற்றிய அறிவியல் ஆய்வு “உடல்கூறுஅறிவியல்” ஆகும்.
தொல்காப்பியத்தில் உடல்கூறு அறிவியல்

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 17 October 2019

திருக்கேதீச்சுவரமும், சைவ பண்பாட்டுத் தாக்கமும்


siragu thiruketheechcharam
ஆசிய கண்டம் மற்ற கண்டங்களை ஒப்பிட்டு நோக்கும் நிலையில் மற்ற கண்டங்களைவிட மிகப் பெரும் நிலப்பரப்பினையும், மக்கள் பெருக்கத்தையும் உடையது. மேலும் இக்கண்டத்தில் பல்வகை சமயங்கள், பல்வகை பண்பாடுகள், பல்வகை உணவுப் பழக்க வழக்கங்கள், பல்வேறு ஆடை அணிகலன்கள், பல்வேறு கலைகள், பல்வேறு நாகரிகங்கள் தோன்றின. தோன்றி வருகின்றன.
ஆசியாவில் உள்ள நாடுகள் மொத்தம் ஐம்பத்தொன்பது ஆகும். இவை தற்போது விளையாட்டு, கலை, பண்பாடு போன்ற பொதுமை நிகழ்வுகளால் ஒன்றுபட்டு வருகின்றன. ஆசிய விளையாட்டுப் போட்டிகள், ஆசிய கலாச்சார மாநாடுகள் போன்றன இந்நாடுகளை ஒன்றுபடுத்துவதில் மிகப்பெரும் பங்கு வகிக்கின்றன.

ஆசிய கண்டத்தின் பெரும்பாலான நாடுகள் ஆங்கிலேயப் பிடியில் இருந்தவை என்பது கருதியும் இவற்றுக்குள் ஓர் ஒருங்கிணைவு கடந்த மூன்று நூற்றாண்டுகளில் உண்டு. இந்நிலையில் ஆசியாவுக்கென ஒரு தனித்த பண்பாடு ஒருமை அமைந்து நிற்பதையும் காணமுடிகின்றது. இப்பண்பாட்டினை வலுப்படுத்தவும், தனித்துவமாக்கவும் அவ்வப்போது முயற்சிகள் மேற்கொள்ளப்பெற்றிருக்கின்றன. பெற்று வரப்பெறுகின்றன.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 16 October 2019

தொல்லியல்


siragu tholliyal3
தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் சொல்லப்படும் முல்லை, பாலை, நெய்தல், குறிஞ்சி, மருதம் ஆகிய ஐவகை நிலங்களில் குறிஞ்சி தவிர்த்த நால்வகை நிலங்கள் இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளன. கடலாடி, பரமக்குடி, இராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகள் முல்லை நிலமாகவும், திருவாடானை வட்டம் மருதநிலமாகவும், சுந்தரபாண்டியன் பட்டினம் முதல் கன்னிராஜபுரம் வரையிலான கடற்கரைப்பகுதி நெய்தல் நிலமாகவும்கமுதி, முதுகுளத்தூர், கடலாடியின் சில பகுதிகள் முல்லை திரிந்த பாலை நிலமாகவும் உள்ளன. இதற்கு ஆதாரமாக ஊர்ப் பெயர்கள், தாவரங்கள், விலங்குகள், நிலஅமைப்பு ஆகியவற்றைக் கொள்ளலாம்.

மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் இம்மாவட்டம் கீழ்ச்செம்பில் நாடு, வடதலை செம்பில் நாடு, செவ்விருக்கை நாடு, முத்தூற்றுக் கூற்றம், வரகுணவளநாடு, அரும்பூர்க் கூற்றம், துகவூர்க் கூற்றம், களாத்திருக்கை நாடு, இடைக்குளநாடு, ஏழூர் செம்பில் நாடு, அளற்றுநாடு, சுந்தரபாண்டியவளநாடு, உலகு சிந்தாமணி வளநாடு, கானப்பேர்க்கூற்றம், கோடிநாடு ஆகிய நாட்டுப் பிரிவுகளில் இருந்துள்ளது. பாண்டி மண்டலத்தின் ஒரு பகுதியான இம்மாவட்டம், பாண்டியர், சோழர், டில்லி சுல்தான்கள், விஜயநகர மன்னர்கள், மதுரை நாயக்கர்கள், சேதுபதிகள், ஆங்கிலேயர் ஆகியோர்களால் ஆளப்பட்டது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 15 October 2019

தமிழர் மருத்துவமுறை குறித்து அறிய உதவும் தொன்ம நூல்களும் ஓலைச்சுவடிகளும்


siragu uyiriyal5
தஞ்சை சரஸ்வதி மகால் நூலக ஓலைச்சுவடிகள் யாவும் தமிழர் கலை, இலக்கியம், வாழ்வு, பண்பாடு, மரபு, மருத்துவம் குறித்த தகவல் நிரம்பிய அரிய கருவூலங்கள். அவை சொல்லும் செய்திகள் பலவற்றை இன்றும் வெளியுலகம் அறிந்திருக்கவில்லை என்பது நமது முயற்சியில் உள்ள குறைபாட்டினைத் தெளிவாகவே காட்டுகிறது.  1980 ஆம் ஆண்டில் நடந்த உலகத்தமிழ் மாநாட்டின் போதே ஓலைச்சுவடிகளைப் பாதுகாக்க அரசால் நிதி ஒதுக்கப்பட்டது.

இருப்பினும் இன்றுவரை இப்பணியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவில்லை. நாற்பது ஆண்டு இடைவெளி விழுந்துவிட்டது என்றால், அது ஏறக்குறைய இரண்டு தலைமுறைகள் கடந்துவிட்டது என்ற ஓர் அவல நிலை. பண்டைய தகவல்களைப் பொருள் அறிந்து புரிந்து கொள்ளக்கூடிய முதிய அறிஞர் பலர் மறைந்திருப்பர். இளைய தலைமுறைகளுக்கு ஓலைகளைப் படிப்பதற்கும் புரிந்து கொள்வதற்கும் பயிற்சி கொடுக்கப்பட்டதாகவும் நம்மால் அறியக்கூடவில்லை.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 10 October 2019

அம்மூவனார்


siragu ammoovanaar1
சங்க காலப் புலவர்கள் அகம், புறம் ஆகியவற்றைப் பாடுபொருள்களாகக் கொண்டு கவிதைகள் புனைந்தனர். அகம் என்ற காதல் பொருளை மட்டும் பாடிய புலவர்கள் சிலர் உள்ளனர். அவ்வழியில் குறிக்கத்தக்கவர் அம்மூவனார் ஆவார். இவர் நெய்தல் திணைப் பாடல்கள் பாடுவதில் சிறப்பிடம் பெற்றவர் ஆவார். ஐங்குறுநூற்றுத் தொகுப்பில் நெய்தல் பாடுவதற்குச் சிறந்தவர் அம்மூவன் என்ற அடிப்படையில் இவருக்கு நெய்தல் திணை ஒதுக்கப்பெற்று அதற்குரிய பாடல்களை இயற்றினார். இவர் சேரநாட்டுத் தொண்டியையும், பாண்டிய நாட்டுக் கொற்கையையும் பாடியவர் என்பதால் நாடுகள் தோறும் அறியப்பட்டவராக விளங்குகிறார். திருக்கோவலூர் பற்றிய குறிப்பும் இவர் பாடல்களில் காணப்படுகிறது. எனவே நாடுகள் தோறும் பயணித்து நல்ல கவிதைகளை வழங்கிய பெருமைக்கு உரியவராக இவர் விளங்குகின்றார்.
அம்மூவனார் என்ற  பெயரில் உள்ள “அம்” என்பது அடைமொழியாகவும், “மூவன்” என்பது உதவிகள் செய்யும் ஒருவரின் பெயராகவும் கொள்ளமுடிகின்றது.
பாட்டும் தொகையும்
siragu uyiriyal5

இவர் பாடிய பாடல்களாக கிடைப்பன மொத்தம் நூற்று இருபத்தேழு பாடல்கள் ஆகும்.  அகநானூற்றுத் தொகுப்பில் ஆறு பாடல்களும் (10, 35, 140, 280, 370, 390) ஐங்குறுநூற்றுத் தொகுப்பில் நெய்தல் திணை சார்ந்து நூறு பாடல்களும் (101-200), குறுந்தொகைத் தொகுப்பில் பதினோரு பாடல்களும் (49, 125, 163, 303, 306, 318, 327, 340, 351, 397, 401), நற்றிணைத் தொகுப்பில் பத்துப் பாடல்களும் (4, 35, 76, 138, 275, 307, 315, 327, 395, 397) அமைந்துள்ளன. இவை தொகுப்பு வகைப்பட்டு அமைந்த வகைப்பாடு ஆகும். இன்னும் இவர் பாடல்களைப் பல்வகைப்படுத்த இயலும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 8 October 2019

தந்தையும்- தளபதியும்

Siragu ayyaavum-annaavum1
செப்டம்பர் மாதம் தந்தை பெரியார் – அறிஞர் அண்ணா இருபெரும் தலைவர்களின் பிறந்த நாட்கள். திராவிடர் இயக்கங்களின் தொடர் வெற்றிகளுக்கு சமூகத்திலும் – அரசியலிலும் வித்திட்டவர்கள். எவ்வாறு பிப்ரவரி மாதம் முழுவதும் அமெரிக்காவில் கறுப்பின வரலாற்று மாதமாக கொண்டாடுகின்றார்களோ, அதே போன்று செப்டம்பர் மாதம் முழுவதும் திராவிடர் வரலாற்று மாதமாக கொண்டாட வேண்டும் என்று தொடர் குரல்கள் ஒலிக்கத் தொடங்கிவிட்டன. அதற்கான வரலாற்று தேவை இன்றைய சூழலில் ஏற்பட்டிருக்கின்றது.
தந்தை பெரியார் அவர்களை பொறுத்தவரை சுயமரியாதை இயக்கத்தை 1925 ஆம் ஆண்டு தொடங்கியது முதல் எதிர்ப்புகளில் வளர்த்து – எதிர்ப்புகளையே உரமாக்கிக் கொண்டு தமிழ் மண்ணில் வேர் கொண்ட இயக்கம். அதற்குக் காரணம் தந்தை பெரியார் அவர்களிடத்தில் இயல்பாக இருந்த அச்சமற்ற – கொள்கையில் சமரசமற்ற தன்மை.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 7 October 2019

சிறியதாகத் தோன்றும் பிரச்சினைகள்

சோசலிசத் தத்துவங்களை எளிமையாகவும், சுருக்கமாகவும் விளக்க வந்த தோழர் ப.ஜீவானந்தம், ஒரு சிறிய ஊரின் இருண்ட சந்து பொந்துகளில் இருந்து ஏழைக் குடும்பங்கள் வெளியேறுவதில் மக்களின் வாழ்வுப் போராட்டத்தின் பிரச்சினை பொதிந்து கிடக்கிறது என்று தொடங்கி, மக்களுக்கான சோசலிசத் தத்துவங்களை விளக்கி இருப்பார்.
ஆம். ஒரு ஏழைக்குடும்பம், தான் வாழும் ஊரில் வாழ முடியாமல் வெளியேறுகிறது என்றால், அச்சமூகம் மக்களின் நல்வாழ்வுக்கு எதிரான சமூக நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருக்கிறது என்றுதான் பொருள். இதுபோன்ற நோய்கள் பல நம் கண் முன்னே தெளிவாகத் தெரிந்தும் அவை நோய் என்று உணராமலேயே காலம் கடத்திக்கொண்டு இருக்கிறோம்.
siragu plastic1
ஒற்றைப் பயன்பாட்டு நெகிழியை (single use plastic)  இந்த ஆண்டுத் தொடக்கத்தில் அரசு தடைசெய்தது. காரணம் அது சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறது. சரி! சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் அனைத்து ஒற்றைப் பயன்பாட்டு நெகிழிகளும் தடை செய்யப்பட்டு விட்டனவா?

ஒற்றைப் பயன்பாட்டு நெகிழியைத் தடைசெய்து ஒன்பது மாதங்கள் ஆகிவிட்டன. தடை செய்யப்பட்ட நெகிழிப் பட்டியலில் தண்ணீர்ப்புட்டி (bottle) சேர்க்கப்படவில்லை. ஆனால் சுற்றுப்புறத்தை மாசுபடுத்துவதில் இதற்கு பெரும்பங்கு உண்டு. இதை சில சூழலியலாளர்கள் எடுத்துக்காட்டினார்கள். ஆனால் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சூழலியலாளர்களின் அழுத்தத்திற்கு அரசு செவிசாய்த்து விடக்கூடாது என்று எச்சரிக்கையாகத் தண்ணீர்ப் புட்டிக்குத் தடைவிதிக்கக்கூடாது என்று அதன் உற்பத்தியாளர்கள் 17.9.2019 அன்று அரசிடம் முறையிட்டு இருக்கின்றனர்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 3 October 2019

தொகுப்பு கவிதை (பெண்ணின் பெருந்தக்க யாவுள, கடவுச்சீட்டு)

பெண்ணின் பெருந்தக்க யாவுள.


siragu pennin1
அவளுடைய கைப்பைகளில்
திருட்டுத்தனமாய்
சில்லறைக் காசுகளைத் துளாவிய போது
எதிர்பாராது
கையில் கிடைத்தன நாப்கின்கள் மூன்று.

அவளுடைய இந்த நாளை வெட்கமில்லாமல்
முகத்தில் அறைந்தார் போல்
முத்தமிட்டு எனது வேதனையை புரிந்து கொள்
என்றாள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 1 October 2019

செம்மொழி இலக்கியங்களில் உயிரியல்

siragu uyiriyal2
செம்மொழி இலக்கியங்களில் சூழ்நிலைஇயல், உயிரியல், விலங்கியல், தாவரஇயல், மருத்துவஇயல், வானிலை இயல், உணவியல் எனப் பல்வேறு அறிவியல் சிந்தனைகள் காணப்படுகின்றன. சங்க இலக்கியங்கள் பலவற்றில் “உயிரியல்” பற்றிய செய்திகள் பெருவாரியாக உள்ளன. இவற்றில் திருக்குறள், குறுந்தொகை மற்றும் தொல்காப்பியத்தில் காணப்படும். “உயிரியல்” தொடர்பான கருத்துக்களை இக்கட்டுரையிலிடம் பெறச் செய்துள்ளேன். உலகப்பொதுமறை என அழைக்கப்படும் “திருக்குறள்” ஏறக்குறைய அறிவியல் அறிஞர்கள் குறைவாகவே இருந்திருப்பர். அறிவியல் எண்ணங்கள் என்பது அரிதாகவே இருந்திருக்கும். அக்காலட்டத்தில் விலங்குகள், தாவரங்களின் வகைப்பாட்டியல் உயிரினங்களின் பல்லுயிர்ப் பரவல் விலங்குகளின் நடத்தை இயல், பண்பு நலன்கள், தாவரங்கள் மற்றும் விலங்குகளின் வகைகள், வாழும்இடம், இவற்றின் சந்ததிகள் உணவு பழக்கவழக்கங்கள் பலவற்றை திருக்குறளில் பல குறட்பாக்களில் எடுத்துக் கூறியுள்ளார்.
திருவள்ளுவர் 46 குறட்பாக்களில் உயிரினம் பற்றிய செய்திகளைக் கூறியுள்ளார். அனிச்சம், குவளை எனும் இருமலர்கள் மட்டும் கூறப்பட்டுள்ளது. இதில் அனிச்சமலர் 4 முறை கூறப்பட்டுள்ளது. நெருஞ்சிப்பழம் எனும் ஒரே பழவகையும் குன்றி மணி எனும் ஒரே விதையும் பனை, மூங்கில் எனும் இரு மரங்களும் யானை 8 முறையும், பாம்பு 3 முறையும், ஆமை, கொக்கு, முதலை, காகம், மீன், நரி, கவரிமான், பசு, காளை, சிங்கம், புலி, ஆடு, குதிரை, முயல், அன்னம், மயில், ஒட்டகம், வாத்து, எருமை ஆகிய உயிரினங்கள் குறட்பாக்களில் கூறப்பட்டுள்ளன. புல், பயிர், கொம்பு, கொடி, மரம், மலர், காய், கனி, வித்து, மொட்டு எனத் தாவரங்களின் வகைகள் மற்றும் வளர்ச்சிப்பருவங்கள் கூறப்பட்டுள்ளன. அன்புடைமை அதிகாரத்தில் 77வது குறள் “என்பிலாதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம்” எனும் குறளில் எலும்பு இல்லாத உயிர்களான புழு போன்றவை வெயிலில் காய்ந்து அழிந்துவிடும். இதுபோல் அன்பு இல்லாத உயிர் அறத்தினை செய்ய இயலாமல் துன்புறும் எனக் கூறியுள்ளார். இக்குறளின் மூலம் விலங்குகளில் எலும்பு உள்ளவையும் எலும்பு அற்றவையும் உள்ளன என்பதைக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.