Thursday 31 October 2019

எண்ணியல்


siragu enniyal1
முன்னுரை:
மாந்தர் குல வளர்ச்சிக்கு மொழி என்பது இன்றியமையாததாகும் என்பதை அனைவரும் அறிவோம். மொழி என்பது உடல் அசைவுகளில் செய்கையாகத் தொடங்கி, நாவில் ஒலியாக மாற்றுப்பெற்று பேச்சாகி இன்று நமது கைகளில் எழுத்து வடிவமாகி உலக அறிவியல் வளர்ச்சியை தன்னகத்தே கொண்டு, கணினியில் நுழைந்து எண்களாகவும், எழுத்துக்களாகவும், குறியீடுகளாகவும், மாறி இப்பேரண்டத்தையே இயக்கும் மாபெரும் ஆற்றலாகித் திகழ்ந்து வருவதை யாரும் மறுப்பதற்கில்லை. அந்த வகையில் எண்ணியல் அறிவின் அடிப்படை கூறால் கணித வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. எண்கள் மற்றும் எண்ணியில் சார்ந்த கருத்துக்கள், கூட்டல், கழித்தல், வகுத்தல் முதலான கணிதத்தின் அடிப்படகளையும் பதிணென்கீழ்கணக்கு நூல்களில் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
கீழ்க்கணக்கு நூல்கள்

நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்
பால் வருகங் கோவை பழமொழி மாமூலம்
கைந்நிலை காஞ்சியோ மேலாதியென்பவே
மெய்நிலைய வாங்கீட் கணக்கு “(பழம்பாடல்)
என்ற இப்பாடலில் கீழ்க்கணக்கு பதினெட்டு நூல்கள் எவை எவை என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment