Monday 7 October 2019

சிறியதாகத் தோன்றும் பிரச்சினைகள்

சோசலிசத் தத்துவங்களை எளிமையாகவும், சுருக்கமாகவும் விளக்க வந்த தோழர் ப.ஜீவானந்தம், ஒரு சிறிய ஊரின் இருண்ட சந்து பொந்துகளில் இருந்து ஏழைக் குடும்பங்கள் வெளியேறுவதில் மக்களின் வாழ்வுப் போராட்டத்தின் பிரச்சினை பொதிந்து கிடக்கிறது என்று தொடங்கி, மக்களுக்கான சோசலிசத் தத்துவங்களை விளக்கி இருப்பார்.
ஆம். ஒரு ஏழைக்குடும்பம், தான் வாழும் ஊரில் வாழ முடியாமல் வெளியேறுகிறது என்றால், அச்சமூகம் மக்களின் நல்வாழ்வுக்கு எதிரான சமூக நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருக்கிறது என்றுதான் பொருள். இதுபோன்ற நோய்கள் பல நம் கண் முன்னே தெளிவாகத் தெரிந்தும் அவை நோய் என்று உணராமலேயே காலம் கடத்திக்கொண்டு இருக்கிறோம்.
siragu plastic1
ஒற்றைப் பயன்பாட்டு நெகிழியை (single use plastic)  இந்த ஆண்டுத் தொடக்கத்தில் அரசு தடைசெய்தது. காரணம் அது சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறது. சரி! சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் அனைத்து ஒற்றைப் பயன்பாட்டு நெகிழிகளும் தடை செய்யப்பட்டு விட்டனவா?

ஒற்றைப் பயன்பாட்டு நெகிழியைத் தடைசெய்து ஒன்பது மாதங்கள் ஆகிவிட்டன. தடை செய்யப்பட்ட நெகிழிப் பட்டியலில் தண்ணீர்ப்புட்டி (bottle) சேர்க்கப்படவில்லை. ஆனால் சுற்றுப்புறத்தை மாசுபடுத்துவதில் இதற்கு பெரும்பங்கு உண்டு. இதை சில சூழலியலாளர்கள் எடுத்துக்காட்டினார்கள். ஆனால் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சூழலியலாளர்களின் அழுத்தத்திற்கு அரசு செவிசாய்த்து விடக்கூடாது என்று எச்சரிக்கையாகத் தண்ணீர்ப் புட்டிக்குத் தடைவிதிக்கக்கூடாது என்று அதன் உற்பத்தியாளர்கள் 17.9.2019 அன்று அரசிடம் முறையிட்டு இருக்கின்றனர்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment