Tuesday 1 October 2019

செம்மொழி இலக்கியங்களில் உயிரியல்

siragu uyiriyal2
செம்மொழி இலக்கியங்களில் சூழ்நிலைஇயல், உயிரியல், விலங்கியல், தாவரஇயல், மருத்துவஇயல், வானிலை இயல், உணவியல் எனப் பல்வேறு அறிவியல் சிந்தனைகள் காணப்படுகின்றன. சங்க இலக்கியங்கள் பலவற்றில் “உயிரியல்” பற்றிய செய்திகள் பெருவாரியாக உள்ளன. இவற்றில் திருக்குறள், குறுந்தொகை மற்றும் தொல்காப்பியத்தில் காணப்படும். “உயிரியல்” தொடர்பான கருத்துக்களை இக்கட்டுரையிலிடம் பெறச் செய்துள்ளேன். உலகப்பொதுமறை என அழைக்கப்படும் “திருக்குறள்” ஏறக்குறைய அறிவியல் அறிஞர்கள் குறைவாகவே இருந்திருப்பர். அறிவியல் எண்ணங்கள் என்பது அரிதாகவே இருந்திருக்கும். அக்காலட்டத்தில் விலங்குகள், தாவரங்களின் வகைப்பாட்டியல் உயிரினங்களின் பல்லுயிர்ப் பரவல் விலங்குகளின் நடத்தை இயல், பண்பு நலன்கள், தாவரங்கள் மற்றும் விலங்குகளின் வகைகள், வாழும்இடம், இவற்றின் சந்ததிகள் உணவு பழக்கவழக்கங்கள் பலவற்றை திருக்குறளில் பல குறட்பாக்களில் எடுத்துக் கூறியுள்ளார்.
திருவள்ளுவர் 46 குறட்பாக்களில் உயிரினம் பற்றிய செய்திகளைக் கூறியுள்ளார். அனிச்சம், குவளை எனும் இருமலர்கள் மட்டும் கூறப்பட்டுள்ளது. இதில் அனிச்சமலர் 4 முறை கூறப்பட்டுள்ளது. நெருஞ்சிப்பழம் எனும் ஒரே பழவகையும் குன்றி மணி எனும் ஒரே விதையும் பனை, மூங்கில் எனும் இரு மரங்களும் யானை 8 முறையும், பாம்பு 3 முறையும், ஆமை, கொக்கு, முதலை, காகம், மீன், நரி, கவரிமான், பசு, காளை, சிங்கம், புலி, ஆடு, குதிரை, முயல், அன்னம், மயில், ஒட்டகம், வாத்து, எருமை ஆகிய உயிரினங்கள் குறட்பாக்களில் கூறப்பட்டுள்ளன. புல், பயிர், கொம்பு, கொடி, மரம், மலர், காய், கனி, வித்து, மொட்டு எனத் தாவரங்களின் வகைகள் மற்றும் வளர்ச்சிப்பருவங்கள் கூறப்பட்டுள்ளன. அன்புடைமை அதிகாரத்தில் 77வது குறள் “என்பிலாதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம்” எனும் குறளில் எலும்பு இல்லாத உயிர்களான புழு போன்றவை வெயிலில் காய்ந்து அழிந்துவிடும். இதுபோல் அன்பு இல்லாத உயிர் அறத்தினை செய்ய இயலாமல் துன்புறும் எனக் கூறியுள்ளார். இக்குறளின் மூலம் விலங்குகளில் எலும்பு உள்ளவையும் எலும்பு அற்றவையும் உள்ளன என்பதைக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment