Tuesday 31 December 2019

இன்றும் சம்பூகன்களும் இராமன்களும்

சம்பூகன் எனும் ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஓர் இளைஞன் தவம் செய்ததால் ஒரு பார்ப்பன இளைஞன் மரணம் அடைந்து விட்டதாகக்கூறி, சம்பூகனை இராமன் தலைகீழாகத் தொங்கப்போட்டு, கழுத்தை வெட்டிக்கொன்றார். இதே போன்ற நிகழ்வு ஒன்று ஒரிசா மாநிலம், மல்கங்கிரி மாவட்டம், இண்டகுடா கிராமத்தில் நடைபெற்று உள்ளது.
siragu samboogangalum1

யாகங்கள் செய்வதினாலும், மந்திரங்களை உச்சரிப்பதினாலும் ஒரு நரை மயிரைக் கருப்பாக்கக்கூட முடியாது. ஆனால் இவற்றினால் அரிய பெரிய நன்மைகள் கிடைக்கும் என்று நம்பும் ஒரு பெரும்மக்கள் திரள் நம்மிடையே இருக்கவே செய்கிறது. கூடவே இந்த யாகங்களையும் மந்திரங்களையும் பார்ப்பனர்களும் பார்ப்பனர்களின் “ஒப்புதல்” பெற்றவர்கள் மட்டுமே செய்யவேண்டும் என்றும் இவர்கள் நம்புகிறார்கள். அதிலும் சாதிப்படி நிலையில் தங்கள் சாதியைவிட உயர்ந்த சாதியில் உள்ளவர்கள்தான் இவற்றைச் செய்யத் தகுதி பெற்றவர்கள் என்று மனமார நம்புகிறார்கள். அதுகூடப் பரவாயில்லை. தங்கள் சாதியைவிடக் கீழ்நிலையில் உள்ளவர்கள் இவற்றைச் செய்தால் கோபம் பொத்துக் கொண்டுவந்து விடுகிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Friday 27 December 2019

குன்றக்குடி குறவஞ்சியில் காணலாகும் வழிபாட்டு மரபுகள்


siragu kundrakudi-kuravanji
1837 ஆம் ஆண்டளவில் வீரபத்திரக் கவிராயர் என்பவரால் குன்றக்குடி குறவஞ்சி என்ற சிற்றிலக்கியம் பாடப்பெற்றுள்ளது. இது ‘குன்றாக்குடி குறவஞ்சி’ எனவும், ‘குன்றக்குடியில் எழுந்தருளியிருக்கும் சிவசுப்பிரமணியக் கடவுள் குறவஞ்சி’ என்றும் அழைக்கப்பெறுகின்றது. குன்றா வளமுடைய இக்குறவஞ்சி குன்றாக்குறவஞ்சி என்று அழைப்பது மிகவும் பொருத்தமுடையதாகும்.


இக்குறவஞ்சி சொல்நலம், பொருள் நலம், உவமை நலம் பெற்று விளங்குவதுடன் குன்றக்குடி கோயில், மடம் ஆகியன பற்றிய பல வரலாற்றுக் குறிப்புகளைக் கொண்டுள்ளது. மேலும் குன்றக்குடியைச் சுற்றியுள்ள வயல்களின் பெயர்கள், அங்கு திரிந்த கொக்குகளின் வகைகள், குன்றக்குடி மட வரலாறு, குன்றக்குடி சந்நிதானப் பெருமை போன்ற பலவற்றையும் அழகுபட மொழிகின்றது. குறவஞ்சிக்கான இலக்கணக் கட்டமைப்பு மாறாமலும் அதேநேரத்தில் குன்றக்குடி பற்றிச் சொல்லவேண்டிய செய்திகளை சொல்லிய நிலையிலும் இக்குறவஞ்சி குறவஞ்சிவ கை வரலாற்றில் குறிக்கத்தக்கதாக விளங்குகிறது. இக்குறவஞ்சி தரும் வழிபாட்டு மரபுகள் பற்றிய செய்திகள் இக்கட்டுரையில் தொகுத்து உரைக்கப்பெறுகின்றன.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 26 December 2019

கைபர் காண்வாய் சிரிக்கின்றது… (கவிதை)


siragu kaibar1

உண்ணும் உணவின்
உறைப்பும் உப்பும்
சுவைக்காது,
கருநீலக் கண்கள்
வெளிறியிருக்கும்
தூங்குவது போன்றது
சாக்காடு பின் தூங்கி
விழிப்பது நம் பிறப்பு,
என்பதில் தூக்கம் கலையா
சாக்காடே மேலென விழித்திருக்கும்
கண்கள் உண்மை உரைக்கும்,
பிறந்த குழந்தை பெற்றவளுக்கு

சுமையாகும்,

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9/

Monday 23 December 2019

செம்பியன் மாதேவி என்னும் வரலாற்று நாயகி


Siragu sembiyan cover
பெரும்பான்மையோர் கோயில்களுக்கு வழிபடுவதற்காகச் சென்றாலும், வரலாற்று நோக்கில் ஆராய்வதற்காக ஆய்வாளர்களும், கோயில்களின் கட்டிடக்கலையையும் சிற்ப அழகைக் கண்டு களிக்கச் செல்வோரும் உள்ளனர். அவர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருப்பினும் அவர்களே நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற மரபுச் செல்வங்களின் விலை குறிக்க முடியாத மதிப்பையும் உணர்ந்தவர்களாகவும் இருப்பர். இக்காலத்தில் மரபுச் செல்வங்கள் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் தோன்றியதுடன் அவற்றைக் குறித்து அறியவும் பாதுகாக்கவும் ஒரு சில குழுவினர் இயங்கி வருகிறார்கள். செம்பியன் மாதேவி என்ற வரலாற்று நூலை அண்மையில் வெளியிட்டுள்ள பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வு மையம் என்ற அமைப்பும் இத்தகையோரில் ஒருவர்.

தொல்லியல் ஆய்வாளர்களான முனைவர் பொ. இராசேந்திரன் மற்றும் முனைவர் சொ. சாந்தலிங்கம் ஆகியோர் ‘செம்பியன் மாதேவி – வாழ்வும் பணியும்’ என்ற நூலின் ஆசிரியர்கள். பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வு மையம் பாண்டிய நாட்டின் வரலாறு குறித்த ஆய்வு நூல்களை இதுகாறும் வெளியிட்டு வந்தது. பாண்டிய நாட்டை சோழர்களும் இரண்டு நூற்றாண்டுகள் ஆண்டு வந்ததால் அவர்கள் குறித்த வரலாறும் பாண்டிய வரலாற்றுடன் இணைந்திருக்கும் காரணத்தினால் செம்பியன் மாதேவியின் வரலாற்றுப் பங்களிப்பு குறித்தும் தமது கவனத்தைத் திருப்பி இந்த நூலை வெளியிட்டுள்ளனர். செப்டெம்பர் 2019 வெளியீடு கண்டது இந்நூல். இதன் வெளியீட்டிற்கு உதவிய புரவலர் மேனாள் தமிழக கல்வி அமைச்சரும் இந்நாள் சட்டமன்ற உறுப்பினருமான திரு. தங்கம் தென்னரசு அவர்கள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 19 December 2019

தொழில் நுட்பவியல்- பகுதி-2

நாவாய் (கப்பல்)
siragu tholil nutpaviyal4
மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்ட பண்டைத் தமிழகக் கடற் பகுதி நெய்தல் நிலம் எனப்பட்டது. கடலை நம்பி வாழ்ந்த மக்கள் கலம் செலுத்துவதிலும் வல்லவர்களாயிருந்தனர். காவிரிப் பூம்பட்டினமும், கொற்கையும், முசிறியும் தலைசிறந்த துறைமுக நகரங்களாக இருந்தன. பழங்காலத்தில் இந்திய நாட்டின் ஏனைய பகுதிகளை விடப் பழந்தமிழ் நாடே கடற்படை ஆற்றலில் சிறந்திருந்தது என்பதை நிலவியல் ஆசிரியர்கள் எடுத்தியம்பி உள்ளனர்.

புழந்தமிழ் தொழில்நுட்ப ஆற்றலைப் புலப்படுத்தும் வண்ணம், அம்பிகள், முகப்பில் விலங்கு, பறவை, மனிதனின் தலைவடிவங்கள் இடம் பெற்றன. கட்டுமரம், தோணி, ஓடம், பஃறி, பரிசல், படகு திமில் முதலியன சிறுசிறு தொழில்புரியப் பயன்பட்டன. கலங்கள் பெரும் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்டன. நீர் விளையாடவும், பொழுது போக்கவும் சங்ககால மக்கள் புணை, தெப்பம் மிதவை முதலானவைகளையும், பறவைமுக அம்பிகளையும் பயன்படுத்தினர். பெரும் அகழிகளையும் ஆறு, கடல் முதலானவற்றையும் கடப்பதற்கு போர்க் காலங்களிலும் அரிமுக அம்பி, கரிமுக அம்பி, பரிமுக அம்பி, புலிமுக அம்பி ஆகியவை பயன்படுத்தப்பட்டன.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 18 December 2019

மேலாண்மை பொன்னுச்சாமியின் சிறுகதைகளில் காணலாகும் சமுதாய விழுமியங்கள்


siragu melaanmai ponnusami3
கரிசல் மண் சார்ந்த எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி ஆவார். மேலாண்மறைநாடு என்ற சிற்றூரில் பிறந்து, ஓரளவிற்குப் பள்ளிக் கல்வி பெற்று, தன் இலக்கிய வாசிப்புத் திறனால் எழுத்தாளராக உருவானவர். தன் சிறுகதைப் படைப்புகளுக்காக சாகித்திய அகாதமி விருது பெற்ற இவர் தன் கதைகளில் பல சமுதாய விழுமியங்களை வெளிப்படுத்தியுள்ளார். கூலித் தொழிலாளர் தம் நேர்மை, போராடுபவர்களின் வெற்றி, பெண்களின் மேன்மை, மக்களிடம் காணப்படும் மனிதத்தன்மை போன்றன இவரின் கதைகளில் விழுமியங்களாக வெளிப்பட்டு  நிற்கின்றன. இவரின் கதைகளில் கரிசல் மண் சார்ந்த மனிதர்களின் தன்மைகள், கரிசல் மண் சாரந்த புழங்கு பொருள்கள், கரிசல் வட்டார வழக்குகள் போன்றன இயல்பாக அமைந்துள்ளன. இவரின் கதைகள் வழியாக சமத்துவமாக, தேமற்ற சமுதாயத்தை காணும் இவரின் விருப்பத்தை அறிந்து கொள்ளமுடிகின்றது.

மானாவாரிப் பூ, பூக்காத மாலை, மின்சாரப்பூ போன்றன இவரின் புகழ்பெற்ற சிறுகதைத் தொகுப்புகள் ஆகும். மின்சாரப்பூ என்பது இவரின் சாகித்திய அகாதமி பரிசு பெற்ற சிறுகதைத்தொகுப்பாகும். மின்சாரப்பூ தொகுப்பில் இடம்பெறும் கதைகளில் காணலாகும் சமுதாய விழுமியங்கள் குறித்த செய்திகளை இக்கட்டுரைத் தொகுத்து ஆராய்கிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 16 December 2019

எதற்காகக் காத்துக் கொண்டு இருக்கிறோம்?

தி லான்செட் (The Lancet) என்ற மருத்துவ வாரப் பத்திரிக்கை 1823ஆம் ஆண்டில் தாமஸ் வேக்லி (Thomas Wakely) என்ற ஆங்கிலேய மருத்துவரால் இலண்டனில் தொடங்கப்பட்டது. இன்று இது இலண்டன், நியூயார்க், பெய்ஜிங் ஆகிய நகரங்களில் இருந்து வெளிவந்து கொண்டு இருக்கிறது. இதில் மருத்துவ அறிவியல் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் இடம் பெறுகின்றன. அண்மையில் உலக சுகாதார நிறுவனம் (WHO), பல்கலைக் கழகக் கல்லூரி, இலண்டன், (University College, London), திசுங்குவா பல்கலைக் கழகம், பெய்ஜிங் (Tsinghua University, Beijing) உட்பட உலகின் மிக உயர்ந்த 33 நிறுவனங்களைச் சேர்ந்த 120 நிபுணர்கள் ஆராய்ந்து எழுதிய கட்டுரை ஒன்று இதில் வெளியாகி உள்ளது. இது புது தில்லியில் 13.11.2019 அன்று பத்திரிக்கையாளர்களின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது.
siragu edharkaaga1

இக்கட்டுரையில், புவி வெப்ப உயர்வு தெடர்ந்து உயர்ந்து கொண்டு இருக்கிறது என்றும், இதன் காரணமாக, உணவு தானிய உற்பத்தி 2% குறைந்து உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் புவி வெப்ப உயர்வு, ஏழை நாடுகளில் உள்ள குழந்தைகளின் உடல் நலத்தை மட்டும் அல்ல, பணக்கார நாடுகளின் குழந்தைகளின் உடல் நலத்தையும் ஏற்கனவே பாதித்து உள்ளது என்றும், இது தொடர்ந்தால் எதிர்காலத்தில் உலகில் உள்ள குழந்தைகளின் உடல் நலம் வெகுவாகப் பாதிக்கப்படும் என்றும் அக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

மருத்துவ அறிவியல் – பகுதி – 2


siragu iyarkai maruththuvam
உற்றவன் தீர்ப்பான் மருந்து உழைச் செல்வான் என்று
அப்பால் நாற்கூற்றே மருந்து(950)
அதாவது மருத்துவர் நோயாளியின் உடல் நிலையை கண்டறியவேண்டும். நோயின் தன்மையை அறிந்து அதற்கேற்றார் போல் மருந்து கொடுக்கவேண்டும். மருத்துவன் நோயைப்பற்றிய நுண்ணறிவும், அனுபவமும் பெற்றிருத்தல் வேண்டும். கொடுக்கும் மருந்து நோயைக் குணமாக்காவிட்டாலும் சரி, பாதிப்பை ஏற்படுத்திவிடக் கூடாது. நோயாளியின் பிணிஅறிந்து  கவனித்துகொள்ளும் உதவியாளர் இருக்கவேண்டும் என்பன போன்றனவற்றை மருத்துவச் செயல்முறைகளாக வள்ளுவர் குறிப்பிடுகின்றார். பண்டைய மருத்துவர்கள் நோய்க்கு மருந்து மட்டும் தரவில்லை. மேலாக உள, உடல்நோய்க்கு மருந்து கொடுப்பவர்களாகவே இருந்துள்ளனர் என அறியமுடிகிறது.

வாயுறை வாழ்த்து என்னும் அறிவுரை பற்றி  எடுத்தியம்பும், தொல்காப்பியர் கசப்பான மூலிகைகளான வேம்பும், கடுவும் முதலில் வெறுக்கப்பட்டாலும் முடிவில் நலம் பயப்பதால் பெரிதும் விரும்பப்படும் என்பர். இதனை வேம்பும் கடுவும் போல (தொல்காப்பியம், பொருள்-417) என்ற நூற்பாவின் மூலமாகத் தொல்காப்பியர் காலத்தில் வேம்பும் கடுகும் மருந்தாகப் பயன்பட்டிருந்தன என்பதையும் நோயும் அதற்கான மருந்தும் வகுக்கப்பட்டிருந்தன என்பதையும் அறிய முடிகிறது. இச்செய்தி தொல்காப்பியரின் மருத்துவ அறிவை விளங்கிக் கொள்ள முடிகிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

காலம் இப்படியே போகாது… (சிறுகதை)


siragu kuruttaattam1
“என்ன தாயி ஒரு மாதிரி இருக்க? ஒடம்பு ஏதும் சரியில்லையா?”
“அதெல்லாம் இல்லம்மா, நான் இஸ்கூலுக்கு போயிட்டு வரேன்”
“சரிம்மா”
மருதாயி ஐந்தாம் வகுப்பு படிக்கிறாள். அவளின் தாய் அஞ்சுகம் வீட்டு வேலை செய்து தான் அவர்கள் பொழப்பு ஓடுகின்றது. அஞ்சுகத்தின் கணவர் கட்டிடத் தொழிலாளியாக இருக்கிறார். ஏதோ கொஞ்சம் பணம் வரும். மருதாயி அவர்களுக்கு ஒரே மகள். எப்படியும் அவளை உசந்த படிப்பு படிக்க வச்சிரணும்னு இருவருமே வாயை கட்டி வயித்தை கட்டி உழைத்தார்கள்.
அஞ்சுகத்திற்கு ரெண்டு நாளாக காய்ச்சல், வீட்டில் ஒரு சமையலும் செய்ய முடியவில்லை. எப்படியும் இன்னைக்கு புள்ளைக்கு எதாவது செஞ்சு கொடுக்கணும் என்று நினைத்துக் கொண்டே கடை வீதிக்கு தளர்வாக நடந்து வந்தாள். .

“இந்தா அஞ்சுகம், உம் பொண்ணு வந்தா ஒரு எட்டு வீட்டுக்கு வந்துட்டு போகச் சொல்லு”, என்று மீனாட்சி மாமி கூறினாள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Friday 13 December 2019

மனிதநேயம் கூறும் ஓர் அறிவியல் புதினம்

தமிழில் அறிவியல் படைப்புகள் வெளியிடுபவர் எண்ணிக்கை குறைவு. அறிவியல் அடிப்படையில் கற்பனை செய்து அறிவியல் புதினம் உருவாக்குவோர் எண்ணிக்கை அதனினும் மிக மிகக் குறைவு. ஜூல்ஸ்வெர்ன், எச்.ஜி. வெல்ஸ் போன்ற மேலைநாட்டு அறிவியல் புதின எழுத்தாளர் போன்ற ஒரு படைப்பாளிகள் வரிசை தமிழ் மொழியில் இல்லை. அறிவியல் புதினம் என்றால் எழுத்தாளர் சுஜாதா பெயர் மட்டுமே அனைவருக்கும் சட்டென நினைவு வரும் அளவிற்கு ஒரு வறட்சி நிலை தமிழ் இலக்கியத்தில்.
siragu 13aam-ulagil-oru-kadhal-book-cover

தனது “13ஆம் உலகில் ஒரு காதல்” என்ற நூலின் மூலம் இக்குறையை நீக்க முயன்றுள்ளார் இ.பு.ஞானப்பிரகாசன். இவர் ‘நமது களம்’ இணைய இதழில் துணையாசிரியர், மொழிபெயர்ப்பாளர், பல இதழ்களிலும் இவரது படைப்புகள் வெளிவந்துள்ளன. அமேசான் கிண்டில் நடத்தும் ‘Pen to Publish 2019′ போட்டியில் கலந்துகொண்டு ஆசிரியர் எழுதியுள்ள இந்த நூலை அவர் தமது முதல் புதினம் என்று குறிப்பிட்டாலும் விறுவிறுப்பாகக் கதை சொல்லும் எழுத்தின் நடையும், தொய்வில்லாது கதையை நடத்திச் செல்லும் பாங்கும் ஒரு சிறந்த அறிவியல் புதின எழுத்தாளர் தமிழ் இலக்கிய உலகில் உருவாகியுள்ளார் என்றே கட்டியம் கூறுகின்றன.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 4 December 2019

தொழில் நுட்பவியல்

பண்டைத் தமிழர் புவியியல், பயிரியல், உயிரியல், தொழில் நுட்பவியல் ஆகிய அறிவியல் துறைகளில் மேம்பட்டவர்களாக விளங்கியுள்ளனர். அவை குறித்த செய்திகள் சங்க இலக்கியங்களில் காணக்கிடக்கின்றன. அவற்றுள் தொழில் நுட்பவியல் குறித்த செய்திகள் மட்டும் ஈண்டு ஆய்வுப்பொருளாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. சங்ககாலத் தொழில் நுட்பவியலுக்கு அக்காலத்து எழுந்த கட்டிடங்கள், அரண்கள், நகரமைப்பு, கப்பல்கள், போர்கருவிகள் ஆகியன சான்றாக உள்ளன. அவைகள் குறித்த செய்திகளை ஆராய்ந்து வெளிப்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
கட்டிடக்கலை:
siragu tholil nutpaviyal1

தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனது அரண்மனை திட்டமிடப்பட்டுச் சிற்பநூல் வல்லாரால் கட்டடப்பெற்றது. மன்றங்கள், நாளோலக்க மண்டபம், படைவீடு, கருவூலம், வழிபடு தெய்வங்களுக்குரிய கோட்டங்கள், அட்டிற்சாலை, இளவேனில் மண்டபம், பள்ளியறை, அரசியின் கோயில்மாடம், மாளிகைக் கூடம், கோபுரம், யானைத்தறி, குதிரைக் கொட்டில், பயிற்சிக்கூடம் முதலான அமைப்புகளுடன் அரண்மனை அமைக்கப்பட்டிருந்தது. கட்டடக்கலை வல்ல பொறியாளர் நுண்ணிய நூலைப் பிடித்து மன்னர்கேற்ப அரண்மனை அமைத்துள்ளனர். அரண்மனையைச் சுற்றி மாடங்களும், அவற்றை வளைத்து மதிலும் கட்டப்பட்டன. வாயிலருகில் கொற்றவை கோயில் கட்டப்பட்டது. வாயிற்கதவுகளிரண்டிலும் உத்திரம் என்னும் மீனின் பெயர் கொண்ட உத்திரக் கற்கவியில் இரண்டு குவளை மலர்களைப் போலச் செய்யப்பட்ட கைப்பிடிகள் செருகப்பட்டன. அவை தாழ்ப்பாளுடன் அமைத்தவை. கைவன்மை மிகுந்த கருமான் பரித்த இரும்புசிட்டியால் பிணித்துச் செவ்வரக்கிட்டு முடுக்கிச் செய்யப்பட்டதால் கதவுகள் குற்ற மற்றவையாக இருந்தன.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 3 December 2019

மண்ணியல்


siragu manniyal2
மண்ணியல் என்பது மண்ணின் வகைபற்றிப் பழக்கும் அறிவியல் மட்டும் அன்று. மண்ணியல் என்பதை ஆங்கிலத்தில் என்பர். புவி பற்றிய அறிவியல். அறிவியல் என்னும் மரத்தின் கிளை மண்ணியல். எல்லா அறிவியல் துறையும் நிரூபித்தல் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டதாய் இருக்கும். ஆனால் மண்ணியல் மட்டும்தான் ‘இப்படி இருக்கலாம்’ எனக் கருத்துத் தெரிவிக்கும். மண், கல், பாறை, அதன் வகைகள், நீரியல் வானம், விண்மீன், சூரியக்குடும்பம், கோள்கள், கற்படி உருவங்கள், படிகங்கள் பற்றிப்படிப்பதும், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகட்கு முன்பு தோன்றிய உயிரினங்கள், கடல்கோள் பற்றிப்டிப்பதும் மண்ணியல் ஆகும். இயற்பியல், வேதியியல் துறைகள் அறிவு, புவி அமைப்பியல் பற்றிய கருத்துகளும் இடம்பெறும் இது குறித்து ‘செம்மொழி இலக்கியங்களில்’ சொல்லப்பட்டிருக்கும் கருத்துகளை ஆய்வு நோக்கில் சுருங்கக் காணலாம்.
தொல்காப்பியர் விண்வெளி விஞ்ஞானி

தொல்காப்பியம் இடைச் சங்க காலத்தில் எழுந்த முதல் இலக்கண, இலக்கிய நூலை யாத்த தொல்காப்பியர் கி.மு 711 இவ்வுலகத்தின் ஐம்பெரும் பூதங்களான சேர்க்கைத் தோற்றம் பற்றியும், உலகிலுள்ள ஆறறிவு உயிர்களின் வளர்ச்சி பற்றியும் ஆய்ந்து, தொகுத்து மரபியலில் சூத்திரம் அமைத்த சிறப்பினையும் காண்கின்றோம். மரபியலென்பது முன்னோர் சொல் வழக்கு, அன்றுதொட்டு வழிவழியாக வரும் பழக்க வழக்கங்கள் ஆகியவை பற்றிக் கூறப்படுவதாகும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 2 December 2019

மருத்துவ அறிவியல்

siragu medical2
ஒவ்வொரு மனித சமுதாயமும் நலவாழ்வைக் கொண்டியங்குவதில் ஒரு மேம்பட்ட அறிவியல் பூர்வமான செயல்முறைகளைக் கொண்டிருக்கின்றன என அறிகிறோம். மனித சமூகத்தில் ஏற்படும் நோய்களைக் கண்டறிந்து, நோய்களைத் தீர்ப்பதற்கான மருத்துவ முறைகளைப் பார்க்கும்பொழுது நோயும் மருத்துவமும் மனித இனப் பண்பாட்டு வரலாற்றில் பிரிக்க முடியாது.
ஐரோப்பியர்கள் வந்த பிறகு அலோபதி மருத்துவமுறைகள் தமிழர்களின் வாழ்வில் இரண்டறக்கலந்துள்ளது என்றாலும், தமிழர்கள் காலங்காலமாகத் தனித்துவமான மருத்துவ முறைகளைக்கொண்டு வாழ்ந்து வந்துள்ளனர் என்பதை கலை, இலக்கியம், வரலாறு, கல்வெட்டுகள், செப்பேடுகள், வாய்மொழி வழக்காறுகள், நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள், போன்றவற்றில் காணமுடிகிறது. இத்தகைய மருத்துவத்தை தமிழர் மருத்துவம் அல்லது தமிழ்மருத்துவம் என்று குறிப்பிடுகின்றனர்.

கிராமப்புற மக்கள் குறித்த வாழ்வியல் வழக்காறுகளை ஆய்வுசெய்யும் அறிஞர்கள், தமிழ் மருத்துவத்தை நாட்டுப்புற மக்களே பெரும்பான்மையாக கையாளுவதால் இதனை நாட்டுப்புற மருத்துவம் என்பர். தமிழகக் கிராமப்புறங்களில் நாட்டு வைத்தியம், கைமருத்துவம், பாட்டி வைத்தியம், மூலிகை மருத்துவம் என்றும் கூறுகின்றனர்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.