Monday 16 December 2019

மருத்துவ அறிவியல் – பகுதி – 2


siragu iyarkai maruththuvam
உற்றவன் தீர்ப்பான் மருந்து உழைச் செல்வான் என்று
அப்பால் நாற்கூற்றே மருந்து(950)
அதாவது மருத்துவர் நோயாளியின் உடல் நிலையை கண்டறியவேண்டும். நோயின் தன்மையை அறிந்து அதற்கேற்றார் போல் மருந்து கொடுக்கவேண்டும். மருத்துவன் நோயைப்பற்றிய நுண்ணறிவும், அனுபவமும் பெற்றிருத்தல் வேண்டும். கொடுக்கும் மருந்து நோயைக் குணமாக்காவிட்டாலும் சரி, பாதிப்பை ஏற்படுத்திவிடக் கூடாது. நோயாளியின் பிணிஅறிந்து  கவனித்துகொள்ளும் உதவியாளர் இருக்கவேண்டும் என்பன போன்றனவற்றை மருத்துவச் செயல்முறைகளாக வள்ளுவர் குறிப்பிடுகின்றார். பண்டைய மருத்துவர்கள் நோய்க்கு மருந்து மட்டும் தரவில்லை. மேலாக உள, உடல்நோய்க்கு மருந்து கொடுப்பவர்களாகவே இருந்துள்ளனர் என அறியமுடிகிறது.

வாயுறை வாழ்த்து என்னும் அறிவுரை பற்றி  எடுத்தியம்பும், தொல்காப்பியர் கசப்பான மூலிகைகளான வேம்பும், கடுவும் முதலில் வெறுக்கப்பட்டாலும் முடிவில் நலம் பயப்பதால் பெரிதும் விரும்பப்படும் என்பர். இதனை வேம்பும் கடுவும் போல (தொல்காப்பியம், பொருள்-417) என்ற நூற்பாவின் மூலமாகத் தொல்காப்பியர் காலத்தில் வேம்பும் கடுகும் மருந்தாகப் பயன்பட்டிருந்தன என்பதையும் நோயும் அதற்கான மருந்தும் வகுக்கப்பட்டிருந்தன என்பதையும் அறிய முடிகிறது. இச்செய்தி தொல்காப்பியரின் மருத்துவ அறிவை விளங்கிக் கொள்ள முடிகிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment