Tuesday 3 December 2019

மண்ணியல்


siragu manniyal2
மண்ணியல் என்பது மண்ணின் வகைபற்றிப் பழக்கும் அறிவியல் மட்டும் அன்று. மண்ணியல் என்பதை ஆங்கிலத்தில் என்பர். புவி பற்றிய அறிவியல். அறிவியல் என்னும் மரத்தின் கிளை மண்ணியல். எல்லா அறிவியல் துறையும் நிரூபித்தல் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டதாய் இருக்கும். ஆனால் மண்ணியல் மட்டும்தான் ‘இப்படி இருக்கலாம்’ எனக் கருத்துத் தெரிவிக்கும். மண், கல், பாறை, அதன் வகைகள், நீரியல் வானம், விண்மீன், சூரியக்குடும்பம், கோள்கள், கற்படி உருவங்கள், படிகங்கள் பற்றிப்படிப்பதும், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகட்கு முன்பு தோன்றிய உயிரினங்கள், கடல்கோள் பற்றிப்டிப்பதும் மண்ணியல் ஆகும். இயற்பியல், வேதியியல் துறைகள் அறிவு, புவி அமைப்பியல் பற்றிய கருத்துகளும் இடம்பெறும் இது குறித்து ‘செம்மொழி இலக்கியங்களில்’ சொல்லப்பட்டிருக்கும் கருத்துகளை ஆய்வு நோக்கில் சுருங்கக் காணலாம்.
தொல்காப்பியர் விண்வெளி விஞ்ஞானி

தொல்காப்பியம் இடைச் சங்க காலத்தில் எழுந்த முதல் இலக்கண, இலக்கிய நூலை யாத்த தொல்காப்பியர் கி.மு 711 இவ்வுலகத்தின் ஐம்பெரும் பூதங்களான சேர்க்கைத் தோற்றம் பற்றியும், உலகிலுள்ள ஆறறிவு உயிர்களின் வளர்ச்சி பற்றியும் ஆய்ந்து, தொகுத்து மரபியலில் சூத்திரம் அமைத்த சிறப்பினையும் காண்கின்றோம். மரபியலென்பது முன்னோர் சொல் வழக்கு, அன்றுதொட்டு வழிவழியாக வரும் பழக்க வழக்கங்கள் ஆகியவை பற்றிக் கூறப்படுவதாகும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment