Thursday 27 August 2015

முதல் சுதந்திரப் போராட்ட மாவீரர் பூலித்தேவர்- பகுதி-3

puli thevar10
புலித்தேவர் கோட்டையை தகர்க்க முடியாமல் தோல்வி அடைந்து திருச்சி திரும்பிய ஆங்கிலப்படைத் தளபதி கெரான் மற்றும் நவாப்பின் படையினர் அவமானத்தின் உச்சிக்கே சென்றனர். புலித்தேவரின் கோட்டையில் சிறு விரிசலைக் கூட ஆங்கிலேயரின் பீரங்கி குண்டுகள் ஏற்படுத்த முடியவில்லை. அவரின் கோட்டை மிகவும் வலிமை வாய்ந்ததாக இருந்தது. புலித்தேவர் கோட்டையை பனை ஓலை, பனை நார், சுண்ணாம்பு, வரகு, குதிரை வாலி, கடுக்காய், பதநீர், முட்டை, பெரிய சிறிய கூழாங்கற்கள், கருப்பட்டி, தானியங்களின் வைக்கோல்கள், கம்பப் பசை மற்றும் பல்வேறு பொருட்களைக் கொண்டு கட்டப்பட்டது. அந்நாட்களில் நமது தமிழ் மன்னர்கள் கோட்டைகளை இம்முறையிலேயே கட்டினார்கள். எனவே தான் அந்நியனின் பீரங்கிக் குண்டுகளினாலும் சேதம் அடையாமல் நமது மன்னர்களின் வீரநெஞ்சம் போன்று, கோட்டை சுவரும் கம்பீரமாக நின்றது.
புலித்தேவர் அந்நியர்களை விரட்டி அடித்த செய்தி தென்னகம் எங்கும் காட்டுத் தீ போன்று பரவியது. புலித்தேவரின் புகழ் மற்ற பாளையங்களிலும் உயர்ந்தது. புலித்தேவர், மறவர் பாளையங்கள் அனைத்தையும் ஒரு அணியில் சேர்த்து, அந்நியர்களை நம் மண்ணில் இருந்து விரட்ட திட்டமிட்டார். தமது நெற்கட்டான் செவ்வல் கோட்டையை மேலும் வலிமை உடையதாக மாற்றினார். மேலும் ஊத்துமலை, பனையூர், வாசுதேவநல்லூர், கொல்லங்கொண்டான், களக்காடு போன்ற இடங்களில் கோட்டையைக் கட்டினார். இதில் களக்காடு இயற்கை பாதுகாப்பைக் கொண்டது, மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்தது, இதன் அருகில் பேயாறு ஓடியது. கோட்டையின் அருகில் இருந்த அடர்ந்த காடுகளைத் தாண்டி கோட்டையை நெருங்குவது என்பது, அந்நியர்கள் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத ஒன்றாக இருந்தது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

Wednesday 26 August 2015

அலோபதி மருந்து சாப்பிடும்போது சித்த மருந்து சாப்பிடலாமா?

siddha1

அலோபதி மருந்து சாப்பிடும்போது சித்த மருந்து சாப்பிடலாமா? அல்லது சித்த மருந்து சாப்பிடும்போது அலோபதி மருந்து சாப்பிடலாமா? என்ற கேள்விகள் பலர் மனதில் இருக்கிறது.
கிட்டத்தட்ட எல்லா நோயாளிகளும் இந்தக் கேள்வியைக் கேட்டுவிடுவார்கள்.
ஏதேனும் ஒரு பிரச்சனைக்கு சித்த மருத்துவமே நல்லது என தெரிந்ததும் சித்த மருத்துவம் எடுக்க முடிவெடுப்பர். ஆனால் அவர்கள் ஏற்கனவே வேறு ஏதேனும் ஒரு பிரச்சனைக்காக அலோபதி மருத்துவம் சாப்பிட்டுக் கொண்டிருப்பர். அப்படிப்பட்ட நிலையில் இதோடு அதையும் சேர்த்து சாப்பிடலாமா என்ற குழப்பம் சிலருக்கு வருகிறது. இருவேறு மருத்துவ முறைகளை ஒரே நேரத்தில் சாப்பிடலாமா? அதனால் எதுவும் பிரச்சனைகள் வருமா என்பது இவர்கள் சந்தேகம்.
அதேபோல என்னிடம் சித்த மருத்துவம் எடுத்துக் கொள்ளும் நோயாளிகளும் “டாக்டர் இந்த மருந்து சாப்பிடும் போது திடீரென அவசரத்திற்கு அலோபதி மருந்து ஏதேனும் சாப்பிட வேண்டியதிருந்தால் சாப்பிடலாமா?” என கேட்பார்கள்.

-  இது நியாயமான சந்தேகம்தான்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

Tuesday 25 August 2015

அமெரிக்காவில் யோகா

Finding peace by the waters
இந்திய அரசின் முயற்சியால், குறிப்பாக பிரதமர் மோதி ஐக்கிய நாடுகள் பொது சபையில் நிகழ்த்திய உரையின் அடிப்படையில் “அனைத்துலக யோகா நாளாக” ஆண்டுதோறும் ஜூன் 21 ஆம் நாள் கொண்டாடப்படும் என ஐ. நா. சபை அறிவித்துள்ளது. தொடர்ந்து, ஐயாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த யோகா கலையின் பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்யும் வகையில் நடவடிக்கை எடுத்த இந்திய அரசு, ஜூன் 21, 2015 அன்று முதல் அனைத்துலக யோகா நாளை இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி அவர்களது தலைமை டெல்லியில் கொண்டாடியது. இந்நிலையில் அமெரிக்காவில் யோகாவின் பரவலைப்பற்றிய ஆய்வறிக்கை ஒன்றும் சென்ற மாதம் வெளியானது.
yoga4
டன் அண்ட் பிராட்ஸ்ட்ரீட் (Dun & Bradstreet) என்ற அமெரிக்க வணிக சேவை நிறுவனம், உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான வணிகநிறுவனங்களைப் பற்றிய தரவுகளை சேகரித்து, அந்த நிறுவனங்களின் நிர்வாகத் தொடர்பு, நிதிநிலை போன்ற முக்கியமான தகவல்களை கட்டண அடிப்படையில் தேவையானோருக்கு வழங்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளது. இந்த ‘டன் அண்ட் பிராட்ஸ்ட்ரீட்’ நிறுவனம், அமெரிக்காவில் தொழில் நடத்திவரும் யோகா மற்றும் தியான நிறுவனங்களையும் (yoga and meditation centers); “குத்தூசி மருத்துவம்” என அழைக்கப்படும் சீனாவின் பாரம்பரிய மாற்றுமுறை மருத்துவ (ancient chinese acupuncture medical practice – alternative medicine) நிறுவனங்களையும் பற்றி ஆராய்ந்தது. ஒவ்வொரு அமெரிக்க நகரிலும் 10,000 பேருக்கு, இது போன்ற எத்தனை நிறுவனங்கள் சேவைபுரிகின்றன என்ற தகவலைக் கொண்டு “சென்டெக்ஸ்” (Zen-dex) என்ற குறியீட்டை உருவாக்கி, சீன நாட்டில் தோன்றிய மகாயான புத்தமதத்தின் பிரிவான ‘சென்’ பிரிவின் அடிப்படையில் அக்குறியீட்டிற்குப் பெயரிட்டுள்ளது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

Monday 24 August 2015

தற்காலக் கல்விமுறை

tharkaalak kalvi murai2
கல்வி என்பது இருளிலிருந்து ஒளியை நோக்கிய ஒரு பயணம். அறியாமையிலிருந்து அறிவை நோக்கிய முன்னேற்றம். இன்றைக்குக் கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை பெருகிப் போயிருக்கிறது. ஆனால் கல்வியின் தரம் உயர்ந்திருக்கிறதா? கற்றவர்களின் அறியாமை முற்றிலும் விலகியிருக்கிறதா? என்பது ஆராயப்பட வேண்டிய ஒன்று. என் உறவினர் வீட்டில் நடந்த ஒரு சம்பவம். அவர்களின் மகன் நான்காம் வகுப்புப் படிக்கிறான். அவனுக்குக் கோள்கள் குறித்து ஒரு பாடம். பாடப்புத்தகத்தில் அதை ஒட்டி ஒரு படம். ஆங்காங்கே தொலைவில் நட்சத்திரங்கள் இருக்க , சில கிரகங்கள் மட்டும் இருப்பதைப் போன்ற படம். அவனுடைய வகுப்பு ஆசிரியை பெரிய பேப்பரில் பெரிதாக அதைப் போல வரைந்து வரும் படி வீட்டுப் பயிற்சி கொடுத்திருக்கிறார். தொலைக்காட்சிகளில் பென்10, ஏலியன் போர்ஸ், மார்ஸ் உள்ளிட்ட சிறுவர் நிகழ்ச்சிகளைப் பார்த்து ‘ஏலியன்’ குறித்துக் கற்பனையை வளர்த்துக் கொண்டிருந்த சிறுவன், தன் கற்பனைச் சிறகை விரித்து வரைந்திருக்கிறான். பெரிய நீலவண்ண தாளில் சில கிரகங்கள், செயற்கைக்கோள், பறக்கும் தட்டு, தலையில் ஆன்டனா உள்ள பெரிய கண்களுடைய வினோத ஏலியன், பூமி, செவ்வாய், சனிக்கிரகம், இரண்டு நிலவுள்ள புதுக்கிரகம் இப்படியாக இரவு முழுவதும் வரைந்து வண்ணம் தீட்டியிருக்கிறான். அவனுடைய பெற்றோர் அவனை மிகவும் பாராட்டி ஆசிரியரின் பாராட்டும் கிடைக்கும் என நம்பிக்கையூட்டியிருக்கிறார்கள். மாலையில் வந்த பையன் முகத்தில் மிகுந்த அவமான உணர்வு. எதையும் சொல்லவில்லை. எதைக் கேட்டாலும் பதிலில்லை. கவலை தோய்ந்த முகத்துடன் உண்ணாமல் உறங்கி விட்டான்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

Wednesday 19 August 2015

இருமலை குணப்படுத்த குறிப்புகள்

irumal1


  • சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலக்காய் ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு, இருமல் குணமாகும்.

  • மிளகை தூள் செய்து, சம அளவு பனைவெல்லம் கலந்து சுண்டைக்காய் அளவு ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட, சூட்டினால் உண்டாகும் இருமல் குணமாகும்.

  • விஷ்ணுகிரந்தி பொடியை வெந்நீரில் கலந்து குடிக்க இருமல் குணமாகும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

Tuesday 18 August 2015

குற்றாலத்தில் மூலிகை செடிகளை வளர்த்து பராமரித்து வரும் இத்தாலிய பெண்மணி!

mooligai thottam fi
களை கட்டும் குற்றாலம் பகுதி, சுற்றுலாப் பயணிகளின் ஆரவாரம், ஆர்ப்பரிக்கும் அருவிகள், மந்திக் கூட்டங்களின் சலசலப்பு, சாரல் மழை.. என பரபரப்பாகக் காணப்பட்ட குற்றாலத்தில், சுகந்த மணம் பரப்பிய ஒரு மூலிகைத் தோட்டத்தில் வெள்ளைக்காரப் பெண்மணி ஒருவரைக் கண்டோம். ‘யார் அவர்’ என்ற ஆர்வத்தோடு அருகே சென்றோம். அவர் இத்தாலி நாட்டைச் சேர்ந்த மேகி. குற்றாலத்தில் மூலிகைத் தோட்டம் அமைத்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மூலிகைத் தாவரங்களை வளர்த்து பராமரித்து வருகிறார். அவருடன் ஒரு நேர்க்காணல்:
உங்களைப்பற்றி?

மேகி: இத்தாலி நாட்டிலுள்ள வரிஸி நகரம் தான் எனது சொந்த ஊர். கடந்த 20 ஆண்டுகளாக குற்றாலத்தில் வசித்து வருகிறேன். கல்யாணம் பண்ணிக்கொள்ளவில்லை. இயற்கை தான் என் குடும்பம்; என் உறவு..

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

Monday 17 August 2015

மருத்துவம் செய்ய வேண்டியது நோய்க்கு அல்ல, நோயாளிக்கே

Dr.Jerome
இன்றும்கூட நம்நாடு முழு படிப்பறிவை எட்டிய நாடு அல்ல. எல்லாத் துறைகளிலும் அறியாமை நமக்கு இருந்தாலும் கூட, மருத்துவ துறையில் பொதுமக்களுக்கு தற்குறித்தனம் அதிகமாகவே உள்ளது.
பிள்ளைகள் 30 வயது வரும் வரை கூட அவர்களை பெற்றோர் தங்கள் கட்டுப்பாட்டில்தான் வளர்க்கின்றனர். மருத்துவத்தில் கூட ஏதாவது தீவிர நோய் நிலையில்தான் மருத்துவமனைக்கு தூக்கிக் கொண்டு ஓடுகிறார்களே தவிர மற்றபடி ஏதாவது உடல் பிரச்சனை வந்தால், “ பெரியப்பா சொன்னார்…., சித்தி சொன்னார்… “ என்று மருத்துவம் ஆரம்பிக்கிறார்கள்.
இவர்களைப் பொறுத்தவரை பெரியப்பாதான் பொது மருத்துவர், அவர் ஒரு சிறப்பு மருத்துவரைப் பரிந்துரைப்பார். அந்த சிறப்பு மருத்துவர் யார் தெரியுமா? ஏற்கனவே அந்த நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்ட ஒன்றுவிட்ட சித்திதான் அந்த சிறப்பு மருத்துவர். இப்படியாக நோய் முற்றும் வரை சிகிச்சை தொடரும். இவர்களைப் பொருத்தவரை ஒரு குறிப்பிட்ட நோய்க்கு ஒரு குறிப்பிட்ட மருந்து உள்ளது, அதை எடுத்துக் கொண்டால் அந்த நோய் குணமாகிவிடும் என நினைக்கிறார்கள். ஆனால் அப்படியல்ல. நோய் வேறு, நோயாளி வேறு.
நோய்க்கும் நோயாளிக்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்துகொள்வது மிகவும் அடிப்படையான ஒன்று. அதை விளக்குவதற்கே இந்தக் கட்டுரை.

ஒரு நோயை உதாரணமாக வைத்து நோய்க்கும் நோயாளிக்கும் உள்ள வித்தியாசத்தை விளக்குகிறேன்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

Sunday 16 August 2015

முதல் சுதந்திரப் போராட்ட மாவீரர் பூலித்தேவர்- பகுதி-2

திருநெல்வேலிச் சீமை கிழக்கு பாளையம், மேற்கு பாளையம் என்று இரு பாளையங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. கிழக்கு பாளையத்தினை கட்டபொம்மனின் பாட்டனார் ஆட்சி செய்து வந்தார், மேற்கு பாளையத்தினை மறவர் இனத்தினைச் சேர்ந்த புலித்தேவரின் முன்னோர்கள் ஆட்சி செய்து வந்தனர். வாரிசு உரிமைப் போட்டியில் ஆற்காடு நவாப்க்கு உதவிய ஆங்கிலேயர்களுக்கு கைமாறாகவும், அவர்களிடம் வாங்கிய கடனைத் திருப்பி அடைப்பதற்காகவும், திருநெல்வேலி மற்றும் தென்னகத்தில் வரி வசூல் செய்யும் உரிமையும், அதனைச் சார்ந்த ஓர் ஒப்பந்தமும் ஆங்கிலேயர்களிடம் ஆற்காடு நவாப் கொடுத்தார். தென்னகத்தில் புலித்தேவரிடம் முன்பே வரி வசூல் செய்ய முடியாமல் திணறிய நவாப், அவரின் மீது போர் தொடுத்தும் அதில் தோல்வி அடைந்தும் இருந்தார். எனவே இந்த சிக்கலான பகுதியில் நம்மால் வரி வசூல் செய்ய முடியாது, இதனை எப்படி சமாளிப்பது என்று இருந்தவர், இந்தப் பகுதிகளின் வரியை ஆங்கிலேயர்கள் எடுத்துக் கொள்ளட்டும் என்று ஆங்கிலேயர்களுக்கு கொடுத்தார் ஆற்காடு நவாப்.
puli thevar2
இந்த ஒப்பந்தத்தினை அடிப்படையாகக் கொண்டு, வியாபாரத் தொழிலுக்காக இங்கு வந்த அன்னியர்கள் நமது நாட்டில் வரி வசூல் செய்ய முதல் அடித்தளமாக இந்த ஒப்பந்தம் அமைந்தது. நவாப்பிடம் உரிமை பெற்ற வெள்ளையர்கள், தென்னகத்தில் வரிவசூல் செய்யும் எண்ணத்துடன், மறத்தமிழர் புலித்தேவரின் வீரத்தினை அறியாமல் அவரிடமும் வரிவசூல் செய்ய அலெக்ஸாண்டர் கெரான் என்பவன் தலைமை ஏற்று புறப்பட்டான். இவன் வரி வசூல் செய்ய படையுடன் தென்னகம் வருகிறான் என்ற செய்தி கிடைத்ததும் தென்னகத்தில் இருந்த சில பாளையத்துக்காரர்கள், அவனை வரவேற்று வரி செலுத்தினர். வீரபாண்டி கட்டபொம்மனின் முன்னோர்களும் இவனுக்கு வரி கொடுத்தனர். மேற்கு பாளையத்துக்குச் சென்றான் புலித்தேவரிடம் வரி கேட்டான். “பிழைப்புக்கு வந்த அன்னியர்கள் நீங்கள், உங்களுக்கு நான் எப்படி வரி செலுத்துவேன், வரி என்ற பெயரில் ஒரு நெல்மணியைக்கூட நீங்கள் கொண்டு செல்ல முடியாது என்றார் புலித்தேவர். உடனே ஆங்கிலேயரின் படையை தலைமை ஏற்று வந்த கெரான் “வரி என்ற பெயருக்காகவாவது ஒரு சிறு தொகையை கப்பமாக உங்கள் பாளையம் கொடுத்தால் போதும்” என்று கூறினான். புலித்தேவரின் காலில் விழவில்லை, மற்றபடி அனைத்து வழிகளிலும் புலித்தேவரிடம் எவ்வளவு மன்றாடிக் கேட்டும், புலித்தேவர் வரி கொடுக்க மறுத்துவிட்டார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

Thursday 13 August 2015

தமிழாய்வில் முதலில் முனைவர் பட்டம் பெற்றவர்

subramanya sastri2
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வடமொழிப் பேராசிரியராகப் பணியாற்றிய பி.சா. சுப்பிரமணிய சாஸ்திரியார் (Dr. P.S. Subrahmanya Sastri) அவர்கள் பின்னங்குடி சாமிநாத சாஸ்திரி, மங்களாம்பாள் இணையரின் மூத்த மகனாக, திருச்சி மாவட்டம் பாலக்கிருஷ்ணம் பட்டியில் ஜூலை 29, 1890 ஆண்டு பிறந்தவர். இந்த ஆண்டு இவரது 125 ஆம் ஆண்டு நிறைவு ஆண்டாகும்[1]. பன்மொழி அறிஞரான பி.சா. சுப்பிரமணிய சாஸ்திரியார் தமிழிற்கும் வடமொழிக்கும் ஆற்றிய இலக்கியப்பணிகள் குறிப்பிடத்தக்கது.
தமிழிலக்கணப் பணியும் மொழிநூற் பணியும் செய்த பி.சா. சுப்பிரமணிய சாஸ்திரியார், தொல்காப்பியத்தை முதலில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர். தொல்காப்பிய மொழி பெயர்ப்பு பணியை 1919ல் தொடங்கி 1956ல் நிறைவு செய்துள்ளார் [2]. தொல்காப்பிய எழுத்ததிகார மொழிபெயர்ப்பை 1930 லும், சொல்லதிகார மொழிபெயர்ப்பை 1937 லும், பொருளதிகார மொழிபெயர்ப்பை 1945 லும் வெளியிட்டார். தொல்காப்பியக் குறிப்பு என்று பி.சா. சுப்பிரமணிய சாஸ்திரியார் எழுத்ததிகாரத்திற்கும் சொல்லதிகாரத்திற்கும் எழுதிய நூல்கள் மிகச் சிறந்தனவாகப் போற்றப்படுகின்றன.

தமிழ் அகராதியியலில் ஒரு திருப்புமுனையாக இருந்த “சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகராதி” உருவானதிலும் (1912ஆம் ஆண்டு முதல் 1932 ஆம் ஆண்டு வரை) இவருக்குப் பெரும் பங்கு உண்டு, அகராதியின் துணை ஆசிரியர்களுள் ஒருவராகப் பணியாற்றினார். வடமொழி நூலான பதஞ்சலியின் “மகாபாஷ்யா”வும் இவரால் ஆங்கிலத்தில் முதலில் மொழிபெயர்க்கப்பட்டது. மேலும் இவர் வடமொழியிலிருந்து தமிழுக்கும் மொழிபெயர்ப்பு செய்துள்ளார். ஆனந்தவர்த்தனர் என்பவரின் “தொன்யாலோகம்” என்னும் வடமொழி அணி இலக்கண நூலை “தொனிவிளக்கு” எனத் தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

Wednesday 12 August 2015

வீர தீர சாகசச் செயல் புரிந்த பெண்களுக்காக வழங்கப்படும், ‘கல்பனா சாவ்லா’ விருது பெற்ற சுகிபிரேமலா

sugi premala2அப்போது நேரம் நள்ளிரவு 12.30. சுகி பிரேமலா அலைபேசிக்கு ஒரு அழைப்பு வருகிறது.
“அம்மா… நியாய விலைக் கடையின் அரிசியைக் கடத்திட்டு ஒரு வண்டி, மார்த்தாண்டம் வழியாக கேரளாவுக்கு போய்க்கிட்டு இருக்கு. உடனே வாங்க”
அடுத்த 10 நிமிடங்களுக்குள் சுகி பிரேமலா குழுவினரின் வண்டி, அரிசி கடத்திக் கொண்டு செல்லும் வண்டியை விரட்டிச் செல்கிறது. சினிமாவை விஞ்சும் பரபரப்பான நிமிடங்கள் அவை. கேரளா எல்லையை நெருங்கும் நேரத்தில் குறுக்கும் நெடுக்குமாக முந்தி மடக்கிப் பிடித்து கடத்தல் அரிசியை மீட்கிறார்கள்.

சுகி பிரேமலா. கன்னியாகுமரி மாவட்ட உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவில் பறக்கும் படை வட்டாட்சியராக பணியாற்றி வருகிறார். இதுவரை கேரளாவுக்கு கடத்த முயன்ற 110 டன் ரேசன் அரிசி மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 50 வாகனங்கள், 22,000 லிட்டர் மண்ணெண்ணெய், ஒன்றரை டன் அமோனியம் நைட்ரேட் (வெடிபொருள்) ஆகியவற்றை துணிச்சலுடன் மடக்கிப் பிடித்து கடத்தலைத் தடுத்திருக்கிறார். இவற்றில் பல கடத்தல் வாகனங்களை விரட்டிச் சென்று பிடிபட்டவையும் அடங்கும். கடத்தலில் ஈடுபட்ட 40-க்கும் மேற்பட்டவர்கள் இவரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

Tuesday 11 August 2015

முதல் சுதந்திரப் போராட்ட மாவீரர் பூலித்தேவர்

puli thevar4

இது முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த உண்மை சம்பவம்.
மதுரையில் பாண்டிய மன்னர்களின் ஆட்சி, அவர்களுக்குப் பின் வந்த அவர்களது வாரிசுகளில் சிறிது சிறிதாக மாற்றம் ஏற்பட்டு, இறுதியில் பாண்டிய வம்சத்தின் ஆட்சி முடிவுற்று, நாயக்க மன்னர்களின் ஆட்சி தொடங்கியது. தமிழ்நாடு, சங்க காலத்தில் 24 கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அதில் ஒன்று புலியூர் கோட்டம். பூலியூர்க் கோட்டமே புலியூர்க் கோட்டமாக வழங்கியிருக்க வேண்டும். பாண்டிய அரசர்களால், பாண்டிய நாடு 32 பாளையங்களாகப் பிரிக்கப்பட்டு ஆட்சி செய்யப்பட்டது. அதில் ஒரு பாளையம்தான் நெற்கட்டான் செவ்வல் பாளையமாகும். பாண்டிய மன்னர்களினால் பாளையங்களின் அரசராக புலித்தேவரின் முன்னோர்கள் நெற்கட்டான் செவ்வல் பகுதியை ஆட்சி செய்து வந்தனர்.

பாண்டியரின் மறைவுக்குப் பிறகு, நாயக்கரின் ஆட்சி தொடங்கியதும் நாயக்க அரசர்களுக்கு ஒரு சிறு அச்சம் இருந்தது. பாண்டிய வாரிசுகள் மீண்டும் படையெடுத்து பாண்டிய நாட்டை கைப்பற்றிவிடுவார்களே என்று எண்ணி, தனது ஆட்சிக்குட்பட்ட நிலங்களை 72 பாளையங்களாகப் பிரித்தனர். அதில் ஒரு பாளையமாக நெற்கட்டான் செவ்வல் பகுதி இருந்தது. இது போன்று பாளையங்களைப் பிரிக்க நாயக்க அரசுக்கு அவர்களின் அமைச்சர் அரியநாத முதலியார் ஆலோசனை தெரிவித்திருந்தார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

Monday 10 August 2015

என்னென்ன நோய்களுக்கு சித்த மருத்துவம் எடுத்துக்கொள்வதே நல்லது?

சிறகு இணைய இதழைப் படித்து நிறைய பேர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொள்கிறீர்கள். மூன்று பெற்றோர் தங்கள் பிள்ளைகளை சித்தமருத்துவம் படிக்க வைக்க விரும்புவதாகக் கூறினர். அதில் ஒருவரின் மகன் தற்போது எட்டாம் வகுப்பு படிக்கிறானாம்.
சித்த மருத்துவத்தைப் பற்றிய சரியான அறிமுகத்தை முதலில் தமிழ் கூறும் நல்லுலகிற்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்ற ‘இலக்கோடு’ எழுத ஆரம்பிக்கப்பட்ட இந்த தொடர் சரியான முறையில் சென்றுகொண்டிருப்பதை இது காட்டுகிறது.
ஆனால் இதில் நிறைய பேர் மருத்துவம் எழுதும்படி கேட்டுக்கொண்டீர்கள். சித்த மருத்துவத்தைப் பற்றிய அறிமுகத்தைக் கொடுப்பதுதான் இந்தத் தொடரின் நோக்கமே தவிர நோய்களுக்கான மருத்துவம் எழுதுவதல்ல. ஆனாலும் நீங்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க இடையிடையே மருத்துவமும் எழுதுவேன்.
இனி இந்தக் கட்டுரைப் பற்றி.
எல்லா நோய்களுக்கும் சித்த மருத்துவத்தில் சிகிச்சை அளிக்க முடியும் என்றாலும், எந்தெந்த நோய்களுக்கெல்லாம் சித்த மருத்துவமே சிறந்தது என்பதை இந்தக் கட்டுரையில் பட்டியலிடுகிறேன்.
இந்தக் கட்டுரை எழுதுவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.
ஒன்று – எந்த நோய்களுக்கெல்லாம் சித்த மருத்துவமே சிறந்தது எனக் கூறுவது.
இரண்டு – இந்த நோய்களுக்கு பெரும்பாலானவர்கள் ஆரம்பத்திலேயே சித்த மருத்துவம் எடுத்துக்கொள்ளாமல் காலம் தாழ்த்தி நோய் முற்றிய நிலையில் மாற்று மருத்துவம் செய்து பார்ப்போமே என்று வருகின்றனர்.
இவ்வாறு நோய் முற்றிய நிலையில் வருவதை விட ஆரம்ப நிலையிலேயே சித்த மருத்துவம் எடுத்துக்கொண்டால் இந்த நோய்களிலிருந்து முற்றிலுமாக விடுதலை அடைய முடியும்.
இனி நோய்களைப் பார்ப்போம்.
ennenna noigalukku1

தோல் நோய்கள் :

மிக அதிக எண்ணிக்கையில் நோய்கள் ஏற்படும் மிகவும் சிக்கலான உறுப்பு தோல். சிகிச்சை எடுத்துக்கொண்டாலும் மீண்டும் மீண்டும் ஏற்படுபவை தோல்நோய்கள். ஆனால் முறையாக சித்த மருத்துவம் எடுத்துக்கொள்வதால் தோல் நோய்களிலிருந்து முற்றிலும் விடுபட முடியும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

Sunday 9 August 2015

இலங்கையின் வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ்வரன் அவர்களின் நேர்காணல்

vigneshwaran 1
வணக்கம், இன்று நாம் நேர்காணல் எடுக்கவிருப்பது இலங்கையின் வடக்கு மாகாண முதல்வர் மேன்மை தங்கிய மாண்புமிகு திரு.விக்னேஷ்வரன் ஐயா அவர்கள்.
கேள்வி: இலங்கையிலே போருக்குப் பின்னால் இலங்கை மக்கள் முள்வேலியில் அடைபட்டு இருக்கிறார்கள் மற்றும் இலங்கை இராணுவம் நம்முடைய வீதிகளில் உலா வந்துகொண்டிருக்கிறது. ஆனால் இலங்கை அரசாங்கமோ நேர்மாறாக கருத்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கிறது, மக்கள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள் என்று. நீங்கள் அங்கிருந்து வருகிறீர்கள் உண்மையான நிலவரம் என்ன என்பதை விளக்கிக் கூறுங்கள்?

பதில்: வடமாகாண மக்களுக்கு, இயல்பு வாழ்க்கைக்கு இடமளிக்கப்பட்டுள்ளது என்பதுதான் உண்மை. ஆனால் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் இராணுவ வீரர்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளார்கள். இரு சக்கர வண்டிகளிலே அதிகாலையிலும் மாலையிலும் ஏழு ஏழு பேர்கள் வீதி வலம் வருவார்கள். அதாவது தகவல் சேர்ப்பதற்காக அது நடக்கின்றது, என்று நாங்கள் நம்புகின்றோம். இராணுவத்தைக் குறைத்துள்ளதாக தமிழர்கள் கூறுவதும், நாங்கள் ஒரு போர் வீரரைக் கூட திருப்பி அழைக்கவில்லை என்று சிங்கள மக்கள் கூறுவதும், அரசாங்கத்தின் தேர்தலுக்கு முன்னதான தேவாரமாக மாறிவிட்டது. குறைக்கவில்லை என்பதுதான் உண்மை. சில முகாம்களை மூடிவிட்டு படைவீரர்களை பெரிய முகாம்களினுள் முன்னேற்றியுள்ளதுதான் உண்மையென்று எங்களுக்குத் தெரியவருகிறது. ஆகவே ராணுவத்தைக் குறைத்து தெற்குக்கு அனுப்பியதாகத் தெரியவில்லை. எப்போதாவது மக்கள் காணாமல் போவது நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. நேரடியாக இராணுவத்தினருடன் இவற்றை சம்பந்தப்படுத்தக்கூடியவாறு ஆதாரங்கள் எதுவும் இல்லை. சில தந்திரோபாய தளங்களில் மட்டும் போர்வீரர்கள் சிலரை தங்கவைத்து பின் இராணுவத்தை முட்டுமுழுதுமாக திரும்ப அழைத்தால்தான் வடகிழக்கு மாகாண மக்கள் உண்மையான இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பலாம் என்பது என்னுடைய கருத்து.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

Wednesday 5 August 2015

மலச்சிக்கலைக் குணப்படுத்த குறிப்புகள்

malachikkal2
  1. நீர் வறட்சி மலச்சிக்கலை ஏற்படுத்தும். அதிக திரவ உணவுகள் வறட்சியைத் தடுப்பதற்கு உதவும். ஆனால் காபி, தேநீர் மற்றும் மது போன்றவற்றைத் தவிர்க்கவும்.
  2. தினமும் உணவில் ஏதாவது ஒரு கீரை வகையை சேர்த்துக் கொண்டால் மலச்சிக்கலை விரட்டலாம்.
  3. கொய்யாப் பழத்தினை விதையுடன் உண்டு வந்தால் குடல் இயக்கம் சீராவதோடு, மலச்சிக்கலையும் தீர்க்கும்.
  4. எலுமிச்சை சாறு 5 மி.லி உடன் ஒரு சிட்டிகை உப்பு, 300 மி.லி வெந்நீர் கலந்து காலை வெறும் வயிற்றில் குடித்தால் மலச்சிக்கல் தீரும். உடல் உற்சாகம் பெரும்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

Tuesday 4 August 2015

மருத்துவம் என்றாலே அது செயற்கைதான்

Dr.Jerome
இப்போதெல்லாம் இயற்கை மருத்துவம், இயற்கை விவசாயம், இயற்கை உணவு என்று பேசுவது வாடிக்கையாகிவிட்டது. என்ன புரிகிறதோ இல்லையோ இதைப்பற்றி பேசுவதும், கேட்பதும் சிலருக்கு ஒருவித மகிழ்ச்சியைத் தருகிறது.
இயற்கை என்றாலே ஏதோ இன்பமயமானது எனவும், செயற்கை என்றாலே ஏதோ கொடூர முகம் கொண்டது என்பது போலவும் ஒரு உருவகத்தை இவர்கள் மனதில் ஏற்படுத்திக் கொள்கின்றனர். அது அப்படியல்ல என்பதை விளக்கத்தான் இந்த கட்டுரை. ஒரு விளக்கத்திற்காக ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிடுகிறேன்.
ஒரு மரம் நிற்கிறது. – இது இயற்கை
வேகமாக காற்று வீசுகிறது – இது இயற்கை
அதனால் மரத்தின் ஒரு கிளை முறிந்து விடுகிறது – இது இயற்கை
இவை அனைத்தும் இயற்கைதானே. இதில் வருத்தப்படுவதற்கு ஒன்றுமில்லையே.
அதைப் போலத்தான், பிறப்பு, இளமை, இன்பம், பிணி, மூப்பு, மரணம் இவை அனைத்தும் இயற்கைதானே. இவற்றில் வருத்தப்படுவதற்கு ஒன்றுமில்லையே.

இவையெல்லாம் இயற்கை என்றால் இதில் கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லையே. அப்படியிருக்க பிணி வந்தவுடன் ஏன் அதை எதிர்த்து மருத்துவம் செய்ய வேண்டும்? நோய் ஒன்றும் செயற்கை இல்லையே…

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

Monday 3 August 2015

போதையின் ஆட்சி

pothayin aatchi1
தன் குடிமக்களை போதையில் ஆழ்த்தி, போதையின் வளர்ச்சிக்கு இலக்கு நிர்ணயித்து, அதில் வரும் வருமானத்தில் ஆட்சியை நடத்தும் அரசியல்வாதிகளை ஆட்சியாளர்களாக மீண்டும் மீண்டும் பெறும் கேவலமான நிலையில் தமிழகம் இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக மக்களின் சிந்திக்கும் திறனை போலிப் பிரச்சாரங்கள் மூலமும், மொண்ணைத்தனமான கல்வியின் மூலமும் திட்டமிட்டு அழித்து விட்டார்கள். தொடர்ந்து தங்களையே ஆட்சியாளர்களாகத் தேர்ந்தெடுக்கச் செய்வதற்கு அந்த மக்களாகிய நம் அனைவருக்கும் தேர்தல் நேரத்தில் செய்யப்படும் சிறு வெறுப்புப் பிரச்சாரமும் சில இலவசங்களும் மட்டும் போதுமென்றாக்கி  விட்டார்கள். நாமும் சுபம் என்று அமைந்து விட்டோம். தன் வாலை உணவென உண்ண முயலும் பாம்பு போல, மக்களாட்சி சமூகத்தில் அரசியல்வாதிகள்  குடிமக்களை விழுங்கி தொடர்ந்து இந்த சமூகத்தை அதன் கீழ்மையை நோக்கி இழுத்துச் சென்று கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் எஞ்சியிருக்கும் குறைந்தபட்ச சிந்தனையோட்டத்தை வளர்த்தெடுத்து, மது தமிழகத்தை முழுவதும் அழிக்கும்முன் பாதுகாத்தாக வேண்டும். இல்லையெனில், சமூகத்தின் முழு அழிவின் சாம்பலில், இருந்து புதிய சமூகம் எழுந்து வர காத்திருக்க வேண்டும்.
இன்று தமிழகத்தை பீடித்திருக்கும் கொலை நோய் போதை. தமிழக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 40% பேர் தினசரி மது அருந்துவதாகவும் இந்த  எண்ணிக்கை வருடத்திற்கு 8% கூடிக்கொண்டிருப்பதாகவும் கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் சென்றால், தமிழ்நாட்டில் இன்னும் ஒரு பத்து வருடங்களில், மது ஒவ்வாமை இருப்பவர்கள் தவிர அனைவரும் இந்த அவலப் பழக்கத்திற்கு அடிமையாகியிருப்பார்கள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

Sunday 2 August 2015

தொழில் முனைவோர்களை உருவாக்குவோம்

thozhil munaivor8
கேள்வி: எல்லோரும் வேலையைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்? யார் வேலையை வழங்கப்போகிறார்கள்?
பதில்: இன்றைய காலகட்டத்தில் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் 99 விழுக்காடு மாணவர்கள் வேலையைத்தேடி Campus Interview என்ற ஒரு பெருவிழா ஆண்டுதோறும் நடந்துகொண்டிருக்கிறது. அதில் ஒரு சில நபர்களுக்கு நல்ல வேலைகள் அமையலாம், சிலநபர்களுக்கு அமையாமல் போகலாம், சில நபர்களுக்கு வருத்தமும் ஏற்படலாம். இப்படி ஒரு காலகட்டத்தில் ஏன் நீங்கள் வேலையைத் தேடுகிறீர்கள்?, நீங்கள் ஏன் பத்து நபர்களுக்கு வேலையைத் தரக்கூடாது?, அதற்கான வசதி வாய்ப்புகள் நம் நாட்டில் இருக்கிறதா?, அதற்கு சமுதாயம் என்ன செய்கிறது?, கல்விச் சாலைகள் என்ன செய்கிறது?, மத்திய மாநில அரசுகள் என்ன செய்துகொண்டிருக்கிறது? இதையெல்லாம் ஒரு இளைஞனுக்கு வழிகாட்டுதலாக இருந்தால், நிச்சயமாக அந்த இளைஞனை புதிய பாதையில், வேலை வழங்குபவராக மாற்றக்கூடிய தருணமாக அமையும். எல்லோரும் பன்னாட்டு நிறுவனங்களுக்குத்தான் வேலை செய்யவேண்டும் என்ற ஒரு மோகத்தில் இருந்து விலகி இந்தியாவிலிருந்தே நானும் ஒரு பன்னாட்டு நிறுவனத்தை உருவாக்கலாம். அதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உலகமயமாக்கப்பட்ட இந்த சந்தையில் இன்றைக்கு இருக்கிறது. இதற்கு பெற்றோர்கள் என்ன செய்யவேண்டும்?, கல்விச் சாலைகள் என்ன செய்ய வேண்டும்?, மத்திய மாநில அரசுகளை எப்படி அணுக வேண்டும்? இம்மாதிரியான வழிகாட்டுதல் இருந்தால் நிச்சயமாக ஒரு இளைஞன் வேலை தேடுபவர்களை விட, வேலை வழங்குபவராக மாறக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. இந்த வழிகாட்டுதலை செய்வதுதான் இந்தத் தொழில் முனைவோர் மன்றம்.

குறிப்பாக இளைஞர்களுக்கு நேரடியாக வழிகாட்டுதலை செய்வது மட்டுமல்லாமல், அந்த இளைஞனை வேலை வழங்குவதற்கான பக்குவத்தை கொடுக்கிறது. அதனை எப்படிக் கொண்டு வருவது என்று பார்த்தீர்கள் என்றால் கல்லூரியில் வேலைக்கான மேலாளர் (placement officer) இருக்கிறார். எல்லா கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் வேலைவாய்ப்புத் தேடலுக்கான முன்னுரிமை அதிகமாகக் கொடுக்கப்படுவது இருக்கிறது, ஆனால் வேலை வழங்குபவர்களுக்கான வாய்ப்புகள் இருக்கிறதா என்றால், அது குறைவாக இருக்கிறது. ஆனால் மத்திய மாநில அரசுகள் பல திட்டங்களை அமைத்திருப்பதால் அந்தக் கல்லூரிகளும், பல்கலைக்கழகமும் Entrepreneur Development Cell என்ற ஒரு துறையை அமைத்தார்களானால் அந்த இளைஞனை வேலை வழங்குபவராக மாற்றக்கூடிய வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கின்றன.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.