Sunday 9 August 2015

இலங்கையின் வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ்வரன் அவர்களின் நேர்காணல்

vigneshwaran 1
வணக்கம், இன்று நாம் நேர்காணல் எடுக்கவிருப்பது இலங்கையின் வடக்கு மாகாண முதல்வர் மேன்மை தங்கிய மாண்புமிகு திரு.விக்னேஷ்வரன் ஐயா அவர்கள்.
கேள்வி: இலங்கையிலே போருக்குப் பின்னால் இலங்கை மக்கள் முள்வேலியில் அடைபட்டு இருக்கிறார்கள் மற்றும் இலங்கை இராணுவம் நம்முடைய வீதிகளில் உலா வந்துகொண்டிருக்கிறது. ஆனால் இலங்கை அரசாங்கமோ நேர்மாறாக கருத்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கிறது, மக்கள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள் என்று. நீங்கள் அங்கிருந்து வருகிறீர்கள் உண்மையான நிலவரம் என்ன என்பதை விளக்கிக் கூறுங்கள்?

பதில்: வடமாகாண மக்களுக்கு, இயல்பு வாழ்க்கைக்கு இடமளிக்கப்பட்டுள்ளது என்பதுதான் உண்மை. ஆனால் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் இராணுவ வீரர்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளார்கள். இரு சக்கர வண்டிகளிலே அதிகாலையிலும் மாலையிலும் ஏழு ஏழு பேர்கள் வீதி வலம் வருவார்கள். அதாவது தகவல் சேர்ப்பதற்காக அது நடக்கின்றது, என்று நாங்கள் நம்புகின்றோம். இராணுவத்தைக் குறைத்துள்ளதாக தமிழர்கள் கூறுவதும், நாங்கள் ஒரு போர் வீரரைக் கூட திருப்பி அழைக்கவில்லை என்று சிங்கள மக்கள் கூறுவதும், அரசாங்கத்தின் தேர்தலுக்கு முன்னதான தேவாரமாக மாறிவிட்டது. குறைக்கவில்லை என்பதுதான் உண்மை. சில முகாம்களை மூடிவிட்டு படைவீரர்களை பெரிய முகாம்களினுள் முன்னேற்றியுள்ளதுதான் உண்மையென்று எங்களுக்குத் தெரியவருகிறது. ஆகவே ராணுவத்தைக் குறைத்து தெற்குக்கு அனுப்பியதாகத் தெரியவில்லை. எப்போதாவது மக்கள் காணாமல் போவது நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. நேரடியாக இராணுவத்தினருடன் இவற்றை சம்பந்தப்படுத்தக்கூடியவாறு ஆதாரங்கள் எதுவும் இல்லை. சில தந்திரோபாய தளங்களில் மட்டும் போர்வீரர்கள் சிலரை தங்கவைத்து பின் இராணுவத்தை முட்டுமுழுதுமாக திரும்ப அழைத்தால்தான் வடகிழக்கு மாகாண மக்கள் உண்மையான இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பலாம் என்பது என்னுடைய கருத்து.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

No comments:

Post a Comment