Monday 10 August 2015

என்னென்ன நோய்களுக்கு சித்த மருத்துவம் எடுத்துக்கொள்வதே நல்லது?

சிறகு இணைய இதழைப் படித்து நிறைய பேர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொள்கிறீர்கள். மூன்று பெற்றோர் தங்கள் பிள்ளைகளை சித்தமருத்துவம் படிக்க வைக்க விரும்புவதாகக் கூறினர். அதில் ஒருவரின் மகன் தற்போது எட்டாம் வகுப்பு படிக்கிறானாம்.
சித்த மருத்துவத்தைப் பற்றிய சரியான அறிமுகத்தை முதலில் தமிழ் கூறும் நல்லுலகிற்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்ற ‘இலக்கோடு’ எழுத ஆரம்பிக்கப்பட்ட இந்த தொடர் சரியான முறையில் சென்றுகொண்டிருப்பதை இது காட்டுகிறது.
ஆனால் இதில் நிறைய பேர் மருத்துவம் எழுதும்படி கேட்டுக்கொண்டீர்கள். சித்த மருத்துவத்தைப் பற்றிய அறிமுகத்தைக் கொடுப்பதுதான் இந்தத் தொடரின் நோக்கமே தவிர நோய்களுக்கான மருத்துவம் எழுதுவதல்ல. ஆனாலும் நீங்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க இடையிடையே மருத்துவமும் எழுதுவேன்.
இனி இந்தக் கட்டுரைப் பற்றி.
எல்லா நோய்களுக்கும் சித்த மருத்துவத்தில் சிகிச்சை அளிக்க முடியும் என்றாலும், எந்தெந்த நோய்களுக்கெல்லாம் சித்த மருத்துவமே சிறந்தது என்பதை இந்தக் கட்டுரையில் பட்டியலிடுகிறேன்.
இந்தக் கட்டுரை எழுதுவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.
ஒன்று – எந்த நோய்களுக்கெல்லாம் சித்த மருத்துவமே சிறந்தது எனக் கூறுவது.
இரண்டு – இந்த நோய்களுக்கு பெரும்பாலானவர்கள் ஆரம்பத்திலேயே சித்த மருத்துவம் எடுத்துக்கொள்ளாமல் காலம் தாழ்த்தி நோய் முற்றிய நிலையில் மாற்று மருத்துவம் செய்து பார்ப்போமே என்று வருகின்றனர்.
இவ்வாறு நோய் முற்றிய நிலையில் வருவதை விட ஆரம்ப நிலையிலேயே சித்த மருத்துவம் எடுத்துக்கொண்டால் இந்த நோய்களிலிருந்து முற்றிலுமாக விடுதலை அடைய முடியும்.
இனி நோய்களைப் பார்ப்போம்.
ennenna noigalukku1

தோல் நோய்கள் :

மிக அதிக எண்ணிக்கையில் நோய்கள் ஏற்படும் மிகவும் சிக்கலான உறுப்பு தோல். சிகிச்சை எடுத்துக்கொண்டாலும் மீண்டும் மீண்டும் ஏற்படுபவை தோல்நோய்கள். ஆனால் முறையாக சித்த மருத்துவம் எடுத்துக்கொள்வதால் தோல் நோய்களிலிருந்து முற்றிலும் விடுபட முடியும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

No comments:

Post a Comment