Wednesday 12 August 2015

வீர தீர சாகசச் செயல் புரிந்த பெண்களுக்காக வழங்கப்படும், ‘கல்பனா சாவ்லா’ விருது பெற்ற சுகிபிரேமலா

sugi premala2அப்போது நேரம் நள்ளிரவு 12.30. சுகி பிரேமலா அலைபேசிக்கு ஒரு அழைப்பு வருகிறது.
“அம்மா… நியாய விலைக் கடையின் அரிசியைக் கடத்திட்டு ஒரு வண்டி, மார்த்தாண்டம் வழியாக கேரளாவுக்கு போய்க்கிட்டு இருக்கு. உடனே வாங்க”
அடுத்த 10 நிமிடங்களுக்குள் சுகி பிரேமலா குழுவினரின் வண்டி, அரிசி கடத்திக் கொண்டு செல்லும் வண்டியை விரட்டிச் செல்கிறது. சினிமாவை விஞ்சும் பரபரப்பான நிமிடங்கள் அவை. கேரளா எல்லையை நெருங்கும் நேரத்தில் குறுக்கும் நெடுக்குமாக முந்தி மடக்கிப் பிடித்து கடத்தல் அரிசியை மீட்கிறார்கள்.

சுகி பிரேமலா. கன்னியாகுமரி மாவட்ட உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவில் பறக்கும் படை வட்டாட்சியராக பணியாற்றி வருகிறார். இதுவரை கேரளாவுக்கு கடத்த முயன்ற 110 டன் ரேசன் அரிசி மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 50 வாகனங்கள், 22,000 லிட்டர் மண்ணெண்ணெய், ஒன்றரை டன் அமோனியம் நைட்ரேட் (வெடிபொருள்) ஆகியவற்றை துணிச்சலுடன் மடக்கிப் பிடித்து கடத்தலைத் தடுத்திருக்கிறார். இவற்றில் பல கடத்தல் வாகனங்களை விரட்டிச் சென்று பிடிபட்டவையும் அடங்கும். கடத்தலில் ஈடுபட்ட 40-க்கும் மேற்பட்டவர்கள் இவரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

No comments:

Post a Comment