Thursday 31 August 2017

சங்கப்பாடல் எளிய நடையில் (கவிதை)


Siragu kurundhogai-4
குறுந்தாட் கூதளி யாடிய நெடுவரைப்
பெருந்தேன் கண்ட இருக்கை முடவன்
உட்கைச் சிறுகுடை கோலிக் கீழிருந்து
சுட்டுபு நக்கி யாங்குக் காதலர்
நல்கார் நயவா ராயினும்
பல்காற் காண்டலும் உள்ளத்துக் கினிதே
இந்தப்பாடல்குறுந்தொகை 60, குறிஞ்சித் திணையில் வருகின்றது. தலைவனது பிரிவை தங்கிக்கொள்ள முடியாத தலைவி, தன் தோழியிடம், தலைவன் தன்னிடம் அன்பும், அருளும்இல்லாதவராக இருந்தாலும் அவரைப் பல முறை பார்த்தாலே சிறப்பு, இன்பம் எனக்கூறுகின்றாள். இப்பாடலை இயற்றியவர் பரணர்.
குறுந்தாட் – குறுகிய அடியையுடைய
கூதளி – கூதளஞ்செடி
யாடிய- அசைதல்
நெடுவரை- பெரிய மலை
உட்கைச் – உள்ளங்கை

சிறுகுடை கோலிக் – பாத்திரம் போன்று குவித்து

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 30 August 2017

யாவரும் கேளிர் (சிறுகதை)


puratchi kavignar13
பாலுவும் சித்ராவும்  கடற்கரை மணலில் உட்கார்ந்து மனம் விட்டுப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
அப்போது யாரோ இரண்டு பேர் ஒரு குழந்தையை முரட்டுத்தனமாக தூக்கிக் கொண்டு போவது சித்ராவின் கண்களில் பட்டது. சித்ரா அந்தக் குழந்தையை ஒரு வினாடி உற்றுப் பார்த்தாள். எங்கேயோ பார்த்த முகமாகத் தோன்றியது. குழந்தை  திமிறிக் கொண்டு கீழேயிறங்க முயற்சித்தது.
”அட, நம்ம மீனு குட்டி மாதிரியிருக்கிறது. மீனு, மீனு“ என்று கத்திக் கொண்டே வேகமாக அந்த ஆட்களை நோக்கி ஓடினாள். பாலுவும், அவன்கூட  நான்கைந்து நபர்களும் அவள் பின்னாடி ஓடி வந்தனர்.

தன்னை நோக்கி சிலர் ஒடி வருவதைப் பார்த்த இரண்டு பேரும் குழந்தையைப் போட்டுவிட்டு ஓட்டம் எடுத்தார்கள் குழந்தை மீனு அரண்டு போயிருந்தாள்,  பயத்துடன் சித்ராவின் கையை கெட்டியாகப் பிடித்து

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 29 August 2017

உன்னத மனிதனை எதிர்நோக்கும் உலகம்


Siragu Man and Superman-image

அணுசக்தி அறிவியல், அண்டவெளிப் பயணங்கள், விஞ்ஞான மேதைகள் குறித்து கட்டுரைகளும், நூல்களும் பல எழுதி அறிவியல் தமிழுலகில் தனக்கென ஓர் தனித்த இடத்தைத் தக்கவைத்துக் கொண்ட திரு. ஜெயபாரதன் அவர்கள் இலக்கியம் படைப்பதில் பன்முகத் திறமை கொண்டவர். கதைகள், கவிதைகள், கட்டுரைகள், நாடகங்கள், படக்கதைகள் என இவர் படைத்தப் படைப்புகளில் மொழிபெயர்ப்பு இலக்கியங்களுக்கும் தனியிடம் உண்டு. ரவீந்திரநாத் தாகூர், வால்ட் விட்மன், பெர்ட்ரெண்டு ரஸ்ஸல், எலிஸபெத் பிரௌனிங், கலீல் கிப்ரான், ஸர் வால்டர் ராலே, ஆஸ்கர் வைல்ட், எமிலி டிக்கின்ஸன், ரூமி, உமர் கயாம், ஷேக்ஸ்பியர், பெர்னார்ட் ஷா என இவர் மொழிபெயர்த்த இந்திய மற்றும் அயல்நாட்டு அறிஞர்களின் பட்டியல் நீளம். அவ்வாறே இவர் எழுதிய நாடகங்களின் பட்டியலும் சீதாயணம்,  ஆப்ரஹாம் லிங்கன், நெப்போலியன், சாக்ரடிஸ், ஸாலமி, ஜோன் ஆஃப் ஆர்க்,  கிளியோ பாட்ரா, ஒத்தலோ என்ற படைப்புகளை உள்ளடக்கிய மற்றுமொரு நீண்ட பட்டியலே.


இப்பட்டியல்களில் மேலும் ஒன்றாக இம்முறை இடம் பிடிப்பது, இவர் தமிழாக்கம் செய்துள்ள “மனிதன் & உன்னத மனிதன்” (Man & Superman) என்ற தலைப்பில், 1903 ஆம் ஆண்டில் அறிஞர் பெர்னார்ட் ஷா எழுதிய நாடகம். “உன்னத மனிதன்” என்ற இந்த நாடகம், பிரபல மேற்கத்திய கதைகளின் நாயகனாக, பெண்களை மயக்கி தனது வலையில் வீழ்த்துபவனாகக் காட்டப்படும் “டான் வான்” (Don Juan) என்ற கதாப்பாத்திரத்தினை ஜியார்ஜ் பெர்னார்ட் ஷாவும் கையாண்டு, சமூகம் பற்றிய தனது கருத்துகளை வெளிப்படுத்த எழுதிய நான்கு அங்க நாடகம். இதன் மூன்றாம் அங்கம் நரகத்தில் நடப்பதாகக் காட்டப்படுவது. இந்தப்பகுதியில் சாத்தான் வாயிலாகவும் கூட சமூகத்தைப் பற்றிய தமது கருத்தை, “மனிதன் ஒரு பெரும் படைப்பாளி கடவுள்போல்! என்ன படைத்திருக்கிறான்? உள்ளே வைத்திருப்பவை: கழுவேற்றும் முனை! கம்பத்தில் கட்டி எரிப்பது! தூக்கு மேடை! மின்னதிர்ச்சி நாற்காலி! நச்சு வாயு! ஆனால் வெளியே காது குளிர முழக்குவது: கடமை! நீதி நெறி! தேசப்பற்று! அத்தனையும் வேடம்!” என்று வெளிப்படுத்துகிறார் பெர்னார்ட் ஷா.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

பெண்ணியக் கட்டுரையாளர்- நீலாம்பிகை அம்மையார்


Siragu lady writer1

தமிழ் இலக்கியப் பரப்பில் கதை, கவிதை போன்ற வகைகளில் பெண்களின் பங்களிப்பு குறிப்பிட்டுச் சொல்லுகிற அளவிற்கு உள்ளது. ஆனால் கட்டுரைகளைப் பொறுத்தவரையில் அவ்வெண்ணிக்கை குறைவாகவே உள்ளது.  பெண் கட்டுரையாளர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். உரைநடை தமிழில் முகிழ்த்த காலம் தொட்டே இவ்வெண்ணிக்கை குறைவு இருந்துள்ளது. இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். கட்டுரைகளை எழுதுவதற்கு என்று ஒரு தகுதி இருக்கவேண்டும் என்ற எண்ணம், கட்டுரைகளை விரும்பிப்படிக்கும் வாசகர்கள் குறைவு, கட்டுரையின் கருப்பொருள் தேர்வில் ஏற்படும் சிக்கல்கள் என்று பல தடைகள் காரணமாக இவ்வெண்ணிக்கைக் குறைவு நிகழ்ந்திருக்கலாம், தொடர்ந்து வரலாம்.


தமிழில் மூத்த பெண் கட்டுரையாளர் என்று நீலாம்பிகை என்ற அம்மையாரைக் குறிப்பிடலாம். இவர் மறைமலை அடிகளாரின் மகளாகவும், மாணவியாகவும் விளங்கியவர்.  இவர் ‘‘முப்பெண்மணிகளின் வரலாறு(1928), பட்டினத்தார் போற்றிய மூவர்(1934), தனித்தமிழ்க் கட்டுரைகள், வடசொல் தமிழ் அகரவரிசை(சிற்றகராதி), ஆராய்ந்தெடுத்த அறுநூறு பழமொழிகளும் அவற்றிற்கேற்ற ஆங்கிலப் பழமொழிகளும் (1952)” ஆகிய நூல்களைப் படைத்தவராக அறியப் பெறுகிறார். அகராதித் துறையில் நுழைந்த பெண் இவர் என்றும் பெருமை கொள்ள முடிகின்றது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Friday 25 August 2017

ஒரு வாசகனின் கேள்வி! (கவிதை)


Siragu kavikkuyil

ஒரு வாசகன் என்னிடம் அந்தக் கேள்வியை கேட்டான்
நான் சொன்னேன். அது
“அறிவியலின் வரையறைக்கு உட்படாதது
அறிவியலின் கருத்துக்களை கேலிக்குள்ளாக்குவது” என்றேன்
“அறிவியலுக்கும் அதற்குமான தொடர்பென்ன?”

எழுத்தாளனின் சட்டையை பிடித்துக் கேள்வி கேட்கும்
சுதந்திர விமர்சகனின் சுதந்திரமான
ஆராய்ச்சியின் தொணி குரலில் வழுத்தது!



அறிவியல் சந்தேகங்களை எழுப்பவது
அறிவியலுக்கு உட்படாத கேலிக் கற்பனையை வடிப்பதில்
அலாதியான சுகம் காண்பது! இது!

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4/

ஆட்டிசத்தினால் பாதிக்கப்பட்டவரின் மூளையின் கட்டமைப்பில் உள்ள மாறுதல்


Siragu autism5

‘காந்த ஒத்திசைவு படமெடுக்கும் முறை’ என அறியப்படும் ‘எம்.ஆர்.ஐ.’ யைப் பயன்படுத்தி (MRI-Magnetic resonance imaging) மூளையைப் படம்பிடித்து, அப்படங்களை ஆராய்ந்த பொழுது, மரபியல் காரணிகளில் காணும் பாதிப்பினால் ‘மனஇறுக்கக் குறைபாடு’ என அழைக்கப்படும் ‘ஆட்டிசம்’ என்ற வளர்ச்சிக் குறைபாடுடையவர்களின் (genetic causes of autism-developmental disorder) மூளையின் கட்டமைப்பில் வழக்கத்திற்கு மாறான மாறுதல்கள் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளார்கள். மரபணு அடிப்படையில் மேற்கொண்ட ஆட்டிசம் ஆய்வுகளில் இதுவே முதல் பெரிய ஆய்வு என்று கூறப்படுகிறது. இந்த மாற்றங்கள் ஆட்டிசம் பாதிப்பிற்குள்ளாக்கியவர்களின் புரிந்துகொள்ளும் திறன், மற்றும் பழக்க வழக்கங்களில் (behavioral and cognitive outcomes) காணப்படும் குறைபாடுகளுக்கான காரணமாக அமைகிறது.


இவ்வாறு ‘எம்.ஆர்.ஐ.’ படங்கள் உதவியுடன் குறைபாட்டைக் கண்டறியும் முறையால், ஆட்டிசம் பாதிப்பை துவக்கத்திலேயே கண்டறிந்து அதற்கேற்ற தக்க சிகிச்சையை அளிக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுநாள் வரை ஒன்றரை வயதிலிருந்து இரண்டு வயதிற்குள், குழந்தையின் கற்றல், பேசுதல் ஆகியவற்றில் வளரும் குழந்தையின் வயதிற்கு ஏற்ற வளர்ச்சி இல்லாத பொழுது மட்டுமே குறைபாடு இருப்பதை மருத்துவப் பரிசோதனை மூலம் கண்டறியும் நிலையுள்ளது. அத்துடன், பெற்றோர் அல்லது குழந்தையை வளர்ப்பவர் குழந்தையின் வளர்ச்சி நிலைகளைக் குறித்துக் கொடுக்கும் தகவல்கள் மட்டுமே குறையைக் கண்டறிவதில் பெருமளவு உதவுகிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 23 August 2017

கடை அரிசியும் கடைசித் தலைமுறை விவசாயிகளும்..


Siragu kadai arisi1
“கடை அரிசி வாங்கி சாப்பிடுறவன்லாம் பேச வந்துட்டான்” என்னும் சொலவடை எங்கள் ஊரில் வழங்கப்பட்டு வந்த மிகப்பெரிய அவமான சுட்டு வாக்கியம்..
தன் உழைப்பில் ஈட்டாமல், அந்த உழைப்பில் விளைவித்ததோ அல்லது வேலைசெய்து நெல் கூலி வாங்கியோ உழைக்காமல் சமைத்து உண்ணும் சோறு என்பது மிகப்பெரிய அவமானமாக வாக்கியமாக எடுத்தாளப்பட்டது, நான் சிறுவனாக இருந்த அந்தக்காலத்தில்..

இப்போது, நாங்கள் அரிசியை கடையில் மட்டுமே வாங்கி உணவை உண்ணும் ஒவ்வொரு வேளையின் போதும் உணர்கிறேன்.. நாமே விளைவித்த ஒரு தக்காளியாவது அந்த உணவில் சேர்த்து அந்த அவமானத்தை ஈடுகட்டவேண்டும் என்று.. நமக்காக காய்கறிகளையாவது நாமே உற்பத்தி செய்ய வேண்டும்..

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 22 August 2017

விழிப்புணர்வை ஏற்படுத்தும் “கக்கூஸ்” ஆவணப்படம்


siragu 02-Kakkoos-screening-in-california

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்ட் 13ஆம் தேதி, 2017 அன்று, அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் சான் பிரான்சிஸ்கோ வளைகுடாப்பகுதியில் உள்ள மில்பிடாஸ் நகர நூலக அரங்கத்தில் பல்வேறு தன்னார்வ அமைப்புகளின் சார்பில் “கக்கூஸ்” ஆவணப்படம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு திரையிடப்பட்டது. சமூக ஆர்வலர் திவ்யா பாரதி இப்படத்தை இயக்கி உள்ளார். இந்திய சமூகத்தில் தவிர்க்கப்பட்டு மிகவும் ஒடுக்கப்பட்ட துப்புரவுத் தொழிலாளர்கள் நாள்தோறும் எதிர்கொள்ளும் அவலங்களை நம் கண்முன்னே நிறுத்தி, நம் கன்னத்தில் ஓங்கி அறையும் ஒரு ஆவணப்படம்.


உலகின் பண்பட்ட நாடுகள் எதிலும் இல்லாத “மனிதக்கழிவை மனிதன் கையால் அள்ளும்” கொடுமை 21-ம் நூற்றாண்டிலும் கூட இந்தியாவின் பல பகுதிகளில் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, சமூகநீதியில் ஓரளவு முன்னேறியுள்ள மாநிலமான தமிழ்நாட்டிலும் இது தொடர்கிறது என்ற கசப்பான உண்மையை கக்கூஸ் ஆவணப்படம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. மனிதக் கழிவை மனிதன் கையால் அள்ளுவதைத் தடுக்கச் சட்டங்கள் இருந்தபோதிலும், இந்திய நடுவண் அரசும், தமிழக மாநில அரசும் தங்கள் மெத்தனப்போக்கால் இந்த இழிவழக்கை ஒழிக்க எவ்விதச் சிறப்பு நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. எனவே, பெரும்பான்மையான இந்தியர்கள் இந்த அவலத்தின் கொடுமையை உணரமுடியாமல் வாழ்கின்றனர். அதன் பொருட்டு திரையிடப்பட்ட இந்த ஆவணப்படத்தைக் காண்பதற்கு கலிபோர்னியாவில் வாழும் இந்தியர்கள், அமெரிக்கர்கள், பிற தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள் எனப் பல்வேறு மக்கள் தங்கள் குழந்தைகளுடன் வருகை தண்டு ஆதரித்தார்கள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 17 August 2017

கவிதைச்சோலை (காதல் கவிக்குயில், புத்தரின் மலர்)


புத்தரின் மலர்

Siragu puttar

பெருவெள்ள மழைக் காலத்திற்கு பின்
அமைதியின் உருவாய்
ஒரு மெல்லிய பூ மிதந்து வருகிறது!
வெள்ள நதியோட்டத்தில்
மெல்லிய புன்னகை வீசிய மலரொன்று
மறுமலர்ச்சியின் நம்பிக்கை!



நதியின் பயணத்தில்
மெல்லிய இதழ்களை வருடிச் செல்லும்
நீரோட்டங்களை தன் வாழ்வின்
வழிகாட்டியாக கொண்டது!

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/

Wednesday 16 August 2017

என்னைப் புவியில் ஒரு பொருளாக்கியவர் இராமானுசர்


Siragu raamaanujar1

நாலாயிர திவ்ய பிரபந்தம் ஆழ்வார்களின் வைணவப்பாடல்களை மட்டும் கொண்டதல்ல. அதனுள் இராமானுஜர் பற்றிய பனுவலும் இடம்பெற்றுள்ளது. இராமானுச நூற்றந்தாதி என்னும் அப்பனுவலை எழுதியவர் திருவரங்கத்து அமுதனார் என்பவர் ஆவார். இவரின் இயற்பெயர் தெரியாத நிலையில் அமுதனார் என்பதே இவர் பெயராக அமைந்தது. திருவரங்கத்துக் கோயில் நிர்வாகப் பொறுப்பில் இவர் இருந்தவர் என்பதால் திருவரங்கத்துடன் இவர் பெயர் இணைந்து திருவரங்க அமுதனார் ஆனார்.


இவர் இராமானுச நூற்றந்தாதி என்ற பெயரில் நூறு பாடல்களை அந்தாதி முறையில் எழுதியுள்ளார். இவரின் ஆயிரக்கணக்கான பாடல்களில் இந்நூறை மட்டும் வைத்துக் கொண்டு மற்றவற்றை விலக்கி விடுகிறார் இராமானுஜர். இத்தொகுப்பு நாலாயிரத்தில் இணைந்து நாலாயிரம் என்ற தொகையைத் தந்து, நாலாயிர திவ்ய பிரபந்தத் தொகுப்பிற்கு முழுமை தருகிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 9 August 2017

திராவிட நாடிது! (கவிதை)


Siragu-diraavida-naadu


திராவிட தேசிய நாடிது -இங்கு
சிறுபுல் லடிமைபோல் யாவருமே இங்கில்லை
ஆதவன் சுடர்போல் மாதவர் இங்குண்டு
காதலர் மனையரசு செழிப்புறு வதீங்கு
கண்ணினை காக்கும் கருத்தினை கொண்டு
பகுத்தறி வினையூட்டி வளர்ந்திடு நாடு
சிந்தையை மாய்க்கும் பொல்லாக் குறளை
சிதைக்கும் செயல்வழி உள்ளதிரு நாடு
உள்ளத் திலிருக்கும் உயர்ந்த அன்பினால்


மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

முல்லைப்பாட்டில் காணலாகும் மேலாண்மைச் செய்திகள்


Siragu mullai paattu1
மேலாண்மை என்பதை ‘‘மக்களை வைத்துச் செய்ய வேண்டியவற்றைச் செய்து முடிப்பது” என்று வரையறுக்கிறார் பார்கர் போலெட். வீரிச் கோண்ட்ஸ் என்ற அறிஞர் ‘‘மேலாண்மை என்பது நிறுவனம் அல்லது அமைப்பின் இலக்குகளை அடைய மனித வளம், பொருள்வளம் மற்றும் நிதிவளம் ஆகியவற்றைச் சிறப்பாக பயன்படுத்தும் வழிமுறை” என்று வரையறுக்கிறார். மக்களைக் கொண்டு ஓர் அமைப்பு தன் நோக்கத்தை வெற்றிகரமாக அடையும் செயல்திட்டம் மேலாண்மை என்ற பொதுக்கருத்தை இவ்விரு அறிஞர்களின் கருத்துகள் வழியாகப் பெறமுடிகிறது.
மேலைநாடுகளில் மேலாண்மை என்ற துறை வளர்ச்சி பெற்று ஏறக்குறைய நூற்று இருபத்தைந்து ஆண்டுகள் கடந்து விட்டன. இந்நிலையில் வளரும் நாடுகளுக்கு இம்மேலாண்மைத் தத்துவங்கள் பரவி அவையும் அத்தத்துவங்கள் வழி நிற்க முயலுகின்றன. இவற்றோடு பழமையான மொழிகளில், இலக்கியங்களில் பல மேலாண்மைக் கூறுகள் அமைந்துகிடப்பதை இன்றைக்கு அறியமுடிகிறது. குறிப்பாகத் தமிழ் இலக்கியங்களில் பல்வேறு மேலாண்மைச் சிந்தனைகள் விரவிக்கிடக்கின்றன. பண்டை இலக்கியமான சங்க இலக்கியங்களில் பல மேலாண்மைக் கருத்துகள் தெரிவிக்கப்பெற்றுள்ளன. அவற்றில் முல்லைப்பாட்டில் காணப்படும் மேலாண்மைக் கூறுகளை இக்கட்டுரை எடுத்துரைக்கின்றது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 8 August 2017

தாய்ப்பாலும், ஆரோக்கியமான குழந்தைகளும்.!


Siragu thaaipaal1
உலகம் முழுவதும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரம், அதாவது ஒன்றாம் தேதியிலிருந்து ஏழாம் தேதி வரை உலக தாய்ப்பால் வாரமாகக் கொண்டாடப்படுகிறது. இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சமூக ஆர்வலர்கள் இதனை பயன்படுத்திக்கொள்கிறார்கள். அண்மைக்காலமாக, குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டும் பழக்கம் பெண்களிடையே குறைந்து கொண்டே வருகிறது என்பது மிகவும் வருத்தத்திற்குரிய ஒன்றாக இருக்கிறது. அதிலும் நம் இந்தியாவில், இந்த சதவிகிதம் அதிகமாக இருப்பதாக ஆய்வறிக்கை சொல்கிறது. இங்கு பெரு நகரங்களாகச் சொல்லப்படும், சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் 20 வயதிற்குள்ளாக உள்ளவர்களிடம், மிகை இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், எலும்பு வலுவின்மை, மூச்சுக்குழாய் பிரச்சினை போன்ற நோய்கள் 43 விழுக்காடு அதிகரித்துள்ளதாம்.
இதற்கு முன்பு இந்த அளவிற்கு இல்லை. 30 ஆண்டுகளுக்குள் இந்த திடீர் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. அதற்கு முக்கியக்காரணம் தாய்ப்பால் குடிக்காத குழந்தைகள் அதிகரித்துள்ளார்கள். நம்முடைய உணவுப்பழக்கமும் ஒன்று. நொறுக்குத்தீனி, அதிக கொழுப்புள்ள உணவுகள், மிக முக்கியமாக நோய் எதிர்ப்புத்திறன் இல்லாமையே தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. செயற்கையாக கடைகளில் விற்கப்படும் பால் பவுடர்கள் குழந்தைகளுக்கு எவ்வித சத்தையும் தருவதில்லை. மாறாக உடல் எடை கூடுவதற்குக் காரணமாகிறது. மந்தநிலையை குழந்தைகளுக்கு உருவாக்கி விடுகிறது. எவ்வித கலப்படமும் இல்லாத ஒரு சிறந்த உணவு தாய்ப்பால். இதில் அனைத்து சத்துக்களும் அடங்கியுள்ளன. நோய் எதிர்ப்பு ஆற்றலை அளிக்கவல்லது. மேலும் தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் ஆரோக்கியத்துடன் மட்டுமல்லாமல், சுறுசுறுப்புடனும், அறிவுடனும் வளருகிறார்கள் என்பது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 7 August 2017

தமிழ் மின்னூலகங்களும் தமிழ் மின்னூல்களும்


Siragu tamil ebook7
முன்னுரை:
தமிழில் நூல்கள் பல படிக்க விரும்புவோரின் ஆர்வத்தை நிறைவு செய்யும் நோக்கிலும், நூல்களை வரலாற்றுப் பதிவுகளாக ஆவணப்படுத்தும் நோக்கிலும் இணையவழி முயற்சியாக மின்னூல்களை (eBooks) உருவாக்கும் செயல்பாடு கடந்த 20 ஆண்டுகளாக நடந்து வருகின்றது. உலகில் எந்த மூலையில் இருந்தும் இணையம் வழியாகத் தமிழ்நூல்களை தங்கள் கணினி வழி படிக்கும் வாய்ப்பு பல தொழில் நுட்பங்களைக் கடந்து இக்காலத்தில் நன்கு மெருகேறிய நிலையில் உள்ளது எனலாம். நூல்களை html இணையப் பங்கங்களாக பலவகை ‘எழுத்துரு’க்களில் (fonts) உருவாக்கி அளித்த நிலையில் இருந்து முன்னேறி, ‘ஒருங்குறி’ (Unicode) எழுத்துருக்களைப் பயன்படுத்தும் முறைக்கு முன்னேறியது படிப்பவருக்கு உதவும் நல்லதோர் மாற்றம்.
மின்னூல்களின் வளர்ச்சி:
இப்பொழுது கணினி வழி படிப்பதையும் கடந்து கைபேசி, ஆமசான் ‘கிண்டில்’ அல்லது பிற ‘ஆன்ட்ராய்டு’ மின்பலகை (டேப்லட்) போன்றவை வழியாகவும் மின்னூல்களை பதிவிறக்கிப் படிக்கும் நிலை மிகப்பரவலாக வழக்கத்திற்கு வந்துவிட்டது. இது போன்ற புதுமுறை படிக்கும் கருவிகளுக்கான மென்பொருள்களும், அதற்கேற்ற வகையில் மின்னூல் வெளியீடுகளும் வந்துள்ளன.  கிண்டில் வழி படிப்போர் ‘மோபி’ (mobi) மின்னூல் வடிவிலும், பிறர் ‘இபப்’ (EPub) வகையிலான மின்னூல்களைப் படிக்கும் முறையும் உள்ளது. கணினி, கைபேசி, மின்பலகை போன்ற எந்தப் படிக்கும் கருவி கொண்டும் ‘உருப்பட வடிவம்’ (PDF) வகை மின்னூல்கள் படிக்கும் முறை உள்ளது. 

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 3 August 2017

தரணியே, தலை நிமிர்! (கவிதை)


Siragu cellpesi2

செல்பேசி செய்நன்மை
செயலளவில் உயர்வெனினும்- அவன்
செய்யும் கூத்துகளும்
செயற்கரிய என்றறிவோம்!
‘எதிரில் ஆள்’ இருந்தும்
எதிராளி போல் விலக்கி
அருகில் ஆள் இருந்தும்
அன்னியர் போல் மாற்றுகின்றான்..
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 2 August 2017

பிழைதிருத்திகள்


Siragu tamil in computer2
தற்காலத் தமிழின் வளர்ச்சிக்குப் பெரிதும் துணையாக நிற்பது கணினித் துறையாகும். தமிழில் எழுதுவது என்பது குறைந்து நேரடியாக கணினி அச்சாக்கம் செய்யும் நிலையில் தமிழின் படைப்புகள் கணினியுடன் நேரடித் தொடர்புகள் கொண்டு விளங்குகின்றன. எழுதுவது, அழகுபடுத்துவது, வெளியிடுவது என்று அனைத்து நிலைகளிலும் கணினியின் பயன்பாடு தமிழுக்கு மிக நெருக்கமாக அமைந்துவருகிறது. இந்நிலையில் கணினியின் வேகம், அதன் இயந்திரத்தன்மை, உள்ளிடும் நிலையில் ஏற்படும் கைபிசகல்கள், ஆகியன கருதி சில பிழைகளும் நேர்ந்துவிடுகின்றன. இந்தப்பிழைகளைக் களைந்து நலமான தமிழை வெளியிட தேர்ந்த பிழைதிருத்தி மென்பொருள்கள் தேவைப்படுகின்றன. இத்தேவை பெரிதும் உணரப்பெற்று வந்தாலும், இத்தேவையை முழுவதுமாக அமைத்துக்கொள்ள இயலவில்லை.
எம்.எஸ் வேர்டு என்ற சொல் செயலி வழியாகத்தான் தமிழை உள்ளிடுவதும் வெளியிடுவதும் பெருமளவில் நடைபெற்று வருகிறது. இச்சொல் செயலி ஆங்கில சொல், தொடர் பிழைகளை வசதிகளைப் பெற்றிருக்கிறது. இதனைக் கொண்டு – தமிழ்ச் சொல், தொடர் பிழைகளை நீக்க இயலாது. எனவே இதற்கென தனித்த மென்பொருள் உருவாக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 1 August 2017

‘ வந்தேமாதரம்’ என்ற பெயரில், கல்வியிலும் மதவாதமா ….!


Siragu vandhe maadharam2
கல்வி என்பது எல்லோருக்கும் பொதுவானது. பல மதங்கள், இனங்கள், மொழிகள், கலாச்சாரங்கள் கடந்து நம் அறிவை வளர்த்துக்கொள்ளும் சாதனமாக இருப்பது கல்விமுறைதான். அதுவும் இந்தியா போன்ற பன்முகத்தன்மையுள்ள, மதசார்பற்ற ஒரு துணைக்கண்டத்தில், ஒரு குறிப்பிட்ட மதத்தினரை போற்றுவதும், ஒரு குறிப்பிட்ட மதத்தினரை தூற்றுவதுமாக இருப்பதென்றால், அதனை ஏற்றுக்கொள்ள முடியுமா.? தற்போதுள்ள மதவாத பாசக அரசு மென்மேலும் மதவாதத்தை தூண்டும் விதமாகவே செயல்பட்டு வருவது மிகவும் வருத்தத்துக்குரியது… கடும் கண்டனத்துக்குரியது.!


இரு தினங்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு. எம்.எஸ். முரளிதரன் கூறியிருப்பது மக்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது எனலாம். ‘வந்தே மாதரம்’ பாடலைக் கட்டாயம் பாட வேண்டும் என்பது தான் அது. கல்வி நிலையங்களில் வாரம் ஒருமுறையும், அரசு அலுவகங்களில் மாதம் ஒரு முறையும் பாடப்பட வேண்டும் என்ற ஒரு கூற்று… இது நம் அரசமைப்புச் சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கும் மதச்சார்பின்மைக்கு எதிரானதாகும். இந்தப் பாடல் எதற்காக எழுதப்பட்டது, எதை முன்னிருத்தி பாடப்பட்டது என்ற விவரங்கள் அவருக்குத் தெரிந்து தான், இப்படி சொல்லி இருப்பாரா என்பது சந்தேகமாகவே உள்ளது. இந்தத் திணிப்பு எதற்கு என்பது மிக முக்கிய கேள்வியாக இருக்கிறது. இப்பாடலைப்பற்றி சிறிது பார்ப்போம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.