Friday 25 August 2017

ஆட்டிசத்தினால் பாதிக்கப்பட்டவரின் மூளையின் கட்டமைப்பில் உள்ள மாறுதல்


Siragu autism5

‘காந்த ஒத்திசைவு படமெடுக்கும் முறை’ என அறியப்படும் ‘எம்.ஆர்.ஐ.’ யைப் பயன்படுத்தி (MRI-Magnetic resonance imaging) மூளையைப் படம்பிடித்து, அப்படங்களை ஆராய்ந்த பொழுது, மரபியல் காரணிகளில் காணும் பாதிப்பினால் ‘மனஇறுக்கக் குறைபாடு’ என அழைக்கப்படும் ‘ஆட்டிசம்’ என்ற வளர்ச்சிக் குறைபாடுடையவர்களின் (genetic causes of autism-developmental disorder) மூளையின் கட்டமைப்பில் வழக்கத்திற்கு மாறான மாறுதல்கள் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளார்கள். மரபணு அடிப்படையில் மேற்கொண்ட ஆட்டிசம் ஆய்வுகளில் இதுவே முதல் பெரிய ஆய்வு என்று கூறப்படுகிறது. இந்த மாற்றங்கள் ஆட்டிசம் பாதிப்பிற்குள்ளாக்கியவர்களின் புரிந்துகொள்ளும் திறன், மற்றும் பழக்க வழக்கங்களில் (behavioral and cognitive outcomes) காணப்படும் குறைபாடுகளுக்கான காரணமாக அமைகிறது.


இவ்வாறு ‘எம்.ஆர்.ஐ.’ படங்கள் உதவியுடன் குறைபாட்டைக் கண்டறியும் முறையால், ஆட்டிசம் பாதிப்பை துவக்கத்திலேயே கண்டறிந்து அதற்கேற்ற தக்க சிகிச்சையை அளிக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுநாள் வரை ஒன்றரை வயதிலிருந்து இரண்டு வயதிற்குள், குழந்தையின் கற்றல், பேசுதல் ஆகியவற்றில் வளரும் குழந்தையின் வயதிற்கு ஏற்ற வளர்ச்சி இல்லாத பொழுது மட்டுமே குறைபாடு இருப்பதை மருத்துவப் பரிசோதனை மூலம் கண்டறியும் நிலையுள்ளது. அத்துடன், பெற்றோர் அல்லது குழந்தையை வளர்ப்பவர் குழந்தையின் வளர்ச்சி நிலைகளைக் குறித்துக் கொடுக்கும் தகவல்கள் மட்டுமே குறையைக் கண்டறிவதில் பெருமளவு உதவுகிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment