Tuesday 8 August 2017

தாய்ப்பாலும், ஆரோக்கியமான குழந்தைகளும்.!


Siragu thaaipaal1
உலகம் முழுவதும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரம், அதாவது ஒன்றாம் தேதியிலிருந்து ஏழாம் தேதி வரை உலக தாய்ப்பால் வாரமாகக் கொண்டாடப்படுகிறது. இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சமூக ஆர்வலர்கள் இதனை பயன்படுத்திக்கொள்கிறார்கள். அண்மைக்காலமாக, குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டும் பழக்கம் பெண்களிடையே குறைந்து கொண்டே வருகிறது என்பது மிகவும் வருத்தத்திற்குரிய ஒன்றாக இருக்கிறது. அதிலும் நம் இந்தியாவில், இந்த சதவிகிதம் அதிகமாக இருப்பதாக ஆய்வறிக்கை சொல்கிறது. இங்கு பெரு நகரங்களாகச் சொல்லப்படும், சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் 20 வயதிற்குள்ளாக உள்ளவர்களிடம், மிகை இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், எலும்பு வலுவின்மை, மூச்சுக்குழாய் பிரச்சினை போன்ற நோய்கள் 43 விழுக்காடு அதிகரித்துள்ளதாம்.
இதற்கு முன்பு இந்த அளவிற்கு இல்லை. 30 ஆண்டுகளுக்குள் இந்த திடீர் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. அதற்கு முக்கியக்காரணம் தாய்ப்பால் குடிக்காத குழந்தைகள் அதிகரித்துள்ளார்கள். நம்முடைய உணவுப்பழக்கமும் ஒன்று. நொறுக்குத்தீனி, அதிக கொழுப்புள்ள உணவுகள், மிக முக்கியமாக நோய் எதிர்ப்புத்திறன் இல்லாமையே தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. செயற்கையாக கடைகளில் விற்கப்படும் பால் பவுடர்கள் குழந்தைகளுக்கு எவ்வித சத்தையும் தருவதில்லை. மாறாக உடல் எடை கூடுவதற்குக் காரணமாகிறது. மந்தநிலையை குழந்தைகளுக்கு உருவாக்கி விடுகிறது. எவ்வித கலப்படமும் இல்லாத ஒரு சிறந்த உணவு தாய்ப்பால். இதில் அனைத்து சத்துக்களும் அடங்கியுள்ளன. நோய் எதிர்ப்பு ஆற்றலை அளிக்கவல்லது. மேலும் தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் ஆரோக்கியத்துடன் மட்டுமல்லாமல், சுறுசுறுப்புடனும், அறிவுடனும் வளருகிறார்கள் என்பது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment