Thursday 29 March 2018

சுந்தர ராமசாமி கவிதையும் நவீனமும்


Siragu sundra ramasamy1
தமிழில் புதுக்கவிதையானது தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்ற காலமாக நாம் 20-ம் நூற்றாண்டின் பிற்பகுதியை குறிப்பிடலாம். சி.சு.செல்லப்பா நடத்திய இதழான ‘எழுத்து’ அத்தகைய இடத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. அவ்விதழில் புதுக்கவிதைகளை அக்கால இளைஞர்கள் பலர் ஏற்றுக் கொண்டதோடு நில்லாமல் தாங்களும் அவைகளை முயன்று பார்த்தனர். அவ்வகையில் புதுக்கவிதையின் மரபிற்கு பல குறிப்பிடத்தக்க கவிஞர்கள் தோன்றினர் என்பதில் மிகையல்ல.
புதுக்கவிதையானது இனி யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. அதன் வளர்ச்சி 1950-60 களிலேயே உச்சத்தை தொட்டுவிட்டது என்று நாம் முன்னோடிகளின் பதிவுகளிலிருந்து தகவல்களை பெறுகிறோம். எனினும் சோதனை என்பது பிற்காலத்தில் மட்டுப்பட்டே காணப்பட்டது என்பதை ஆய்வுகளின் தரவுகள் கூறுவதையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அத்தகைய சூழ்நிலையில் தமிழுக்கு புதுக்கவிதையாளராக அறிமுகம் ஆனவர் சுந்தர ராமசாமி.
சுந்தர ராமசாமியின் கவிதைக் கூறு:

1970-80களில் தமிழ் கவிதையில் தொய்வு நிலை ஏற்பட்டுக் கொண்டிருந்த நிலையில் கவிதையில் பல மாற்றங்களைக் கொண்டுவந்த பெருமைக்குரியவர் என்ற வகையில் சுந்தர ராமசாமியின் கவிதைகள் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன. அவைகளின் கூறுபாடுகள் பிற்காலத்தில் கவிதை எழுத வந்தவர்களுக்கு புதிய உத்வேகத்தையும் தெம்பையும் அளித்தது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 28 March 2018

ஶ்ரீதேவிகளும், அஸ்வினிகளும் மரணித்தும் கொல்லப்படுகின்றனர்!!


Siragu-Shridevi1

அண்மையில் இரு மரணச் செய்திகள் நம்மை வருத்தத்தில் ஆழ்த்தியது. ஒன்று புகழ் பெற்ற நடிகை ஸ்ரீதேவியின் மரணம். அவர் மரணச் செய்தி வந்தவுடன் நாடு முழுவதும் திரைப்பட ரசிகர்கள் அவர்களுக்கு அஞ்சலியைத் தங்கள் முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்கள். அடுத்த நாள் அவரின் மரணம் மாரடைப்பால் அல்ல, குடிபோதையில் தண்ணீர் தொட்டியில் தவறி வீழ்ந்து இறந்து விட்டார் என்ற செய்தி பரவியதும் எந்த மக்கள் விழுந்து விழுந்து அவரைப் போற்றி அஞ்சலி செலுத்தினார்களோ? அவர்களே ஒரு பெண்ணுக்கு இந்த போதை தேவையா? குடி போதையில் தவறி விழுந்து இறந்தவளுக்கு என்ன அஞ்சலி வேண்டிக் கிடக்கு என்று அந்த நடிகையின் ஒழுக்கத்தை கீழ்த்தரமாக பேசி, அவரின் மரணத்தை நையாண்டி செய்தும் பதிவுகள் இட்டனர்.

இங்குதான் நமக்கு ஒரு கேள்வி வருகின்றது. இதே திரைப்படத் துறையில் இருக்கும் பல ஆண் நடிகர்கள் குடித்து அழிந்து ஒழியவில்லையா? பல கவிஞர்கள் குடிக்கு அடிமையாகி மடியவில்லையா? தனி மனித ஒழுக்கம் என்பதே இல்லாமல் பல பெண்களோடு உறவு வைத்துக் கொண்டு உலா வரவில்லையா?.
ஆனால் அவர்களைப் பற்றி இன்று குறிப்பிட்டாலும் அவர் போன்ற நடிகர் உண்டா? அவர் போல கவிஞர் உண்டா? மனிதர் எப்படி வாழ்ந்துள்ளார் என்று போற்றிப் பாடும் இதே சமூகம் ஒரு நடிகையை இவ்வளவு தரம் தாழ்ந்து அவர் மரணத்தில் விமர்சிக்கும் காரணம் என்ன என்று சிந்தித்துப் பார்த்தால் ஒன்று விளங்கும்!

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 27 March 2018

ராமராஜ்ஜிய ரதயாத்திரையும், தமிழக அரசின் 144 தடையுத்தரவும்.!


Siragu ramrajyarathayatrai1

கடந்த மாதம்,  உத்திரபிரதேச மாநிலத்திலிருந்து ராமராஜ்ஜிய ரதம் என்ற ஒன்று கிளம்பி, கர்நாடகா வழியாக தென்னிந்தியாவிற்குள்  நுழைந்து,  கேரளா வழியாக, இரு தினங்களுக்கு முன், தமிழ்நாட்டிற்குள் வந்ததும், அதனைத் தொடர்ந்து நம் மாநிலத்தில் நடந்த போராட்டங்களும், கைதுகளும், சிலை உடைப்பு சம்பவங்கள் போன்றவைகளும் நடந்தேறியிருக்கின்றன என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான்.  இந்த ரதயாத்திரையின் நோக்கம் ராமராஜ்ஜியம் அமைப்பது, ராமர் கோவில் கட்டுவோம்  என்பதாகும். அயோத்தியில், 400 ஆண்டுகள் பழைமையான பாபர் மசூதி இடிக்கப்பட்டதும், அதனைத் தொடர்ந்து நடந்த மதக்கலவரங்களும், முன்னாள் மத்திய அமைச்சர் அத்வானி அவர்களின் ராமராஜ்ஜிய ரதயாத்திரை ஏற்படுத்திய விளைவுகளும் நாடறிந்த செய்தியாகும். உண்மை இப்படியிருக்கையில், இப்போது, மறுபடியும், விஸ்வ இந்து பரிஷத் என்ற இந்துத்துவ அமைப்பு, இந்த ரதயாத்திரை என்ற ஒரு விசயத்தை கையில் எடுத்துக்கொண்டு ஐந்து மாநிலங்கள் வழியாக உலா வருகிறோம் என்ற பெயரில் நாட்டில் மதக்கலவரங்களை ஏற்படுத்த முயற்சி செய்கிறது.

இந்த ரதயாத்திரை என்பது தேவையில்லாத ஒன்று. இன்னமும், இந்த வழக்கு நீதிமன்றத்தில் முடிவடையாத நிலையில், ராமர் கோவில் கட்டுவோம் என்பது நீதிமன்ற அவமதிப்பு அல்லவா. இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு. பல இனங்கள், கலாச்சாரங்கள், பல மொழிகள் பேசும் மக்கள் என  பன்முகத்தன்மையுள்ள நாடு. அப்படியிருக்கையில், ஒரு மதத்தை சார்ந்து ஆட்சி அமைப்போம் என்று சொல்வது நேர்மையாகுமா.? வடஇந்தியாவில், மதத்தை வைத்து அரசியல் செய்து, வெற்றி பெற்ற பா.ச.க அரசு, இங்கும் அதே யுக்தியை கையாளப்பார்க்கிறது என்பது தானே உண்மை.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81/

Wednesday 21 March 2018

நீத்தார் பெருமை (கவிதை)


மாட்சிமை தங்கிய மகளிருக்கு
உலக மகளிர்தின வாழ்த்துகள்!
Siragu penniyam1

செயற்கரிய செய்வார் பெரியர் சிரியர்(?!)
செயற்கரிய செய்கலா தார்

என்னே ஒரு பொருத்தம்?
மகளிரின் நன்நாளில்
மகளிருக்கு மாண்பு செய்த
மகத்துவரே பேசுபொருள்!

சமூகம் விழித்தெழ
சமத்துவம் மேலோங்க
சுயம்புகள் சுடர்விட
நயம்பல செய்ததொரு



பெருமகன் பெரியார்!

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/

Tuesday 20 March 2018

எதிர் வீடு (சிறுகதை)


Siragu Autism1

அதிகாலை நேரம். இருள் நீங்கி வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாகப் படர்ந்து கொண்டிருந்தது. ஞாயிற்றுக்கிழமை, கொஞ்ச நேரம் தூங்கலாம் என்று பார்த்தால் வேதகோஷ்டிகளின் இனிமையான சப்தம் என்னை எழுப்பி விட்டது. என் கணவர் பக்கத்தில் ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்தார். இடியே விழுந்தாலும் கலையாத கும்பகர்ணன் தூக்கம். நான் அவருக்கு நேர் எதிர். சிறு ஓசை கேட்டாலும் எழுந்து விடுவேன்.

வாசல் கதவைத் திறந்து பார்த்தேன். எதிர் வீட்டில் நான்கு சாஸ்திரிகள் வேத பாராயணம் செய்து கொண்டிருந்தார்கள். வாசலில் பெரிய கோலம் போட்டு செம்மண் செவ்வனே போடப்பட்டிருந்தது. வீட்டைப் புதியதாக வாங்கியவர்கள் அதைப் புதுப்பித்து ஹோமம் செய்கிறார்கள். அன்று எதிர்வீடு மிகவும் கோலாகலமாயிருந்தது.


நாங்கள் குடியிருக்கும் ”அபிநயா ஃபிளாட்ஸ்” கோடம்பாக்கத்தில் இருக்கிறது. கீழே நான்கு வீடுகள். முதல் மாடியில் நான்கு, இரண்டாவது மாடியில் நான்கு ஆக மொத்தம் பன்னிரண்டு வீடுகள் இருக்கும். குடியிருப்புக்குள் நுழைந்ததும் இடது பக்கம் இரண்டு திண்ணைகள் இருக்கும். காலை பத்து மணிக்கு அந்தத் திண்ணையில் குடியிருப்பிலுள்ள வேலைக்குப் போகாத பெண்கள் அமர்ந்து அரட்டைக் கச்சேரி நடத்துவார்கள். வயதான முதியவர்கள் மாலை நேரத்தில் அந்தத் திண்ணையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பார்கள். நான் கீழே குடியிருக்கிறேன். முதல் மாடியில் பட்டாபி சாஸ்திரிகள் அவர் மனைவி பத்மா, குழந்தை காஞ்சனா ஆக மூன்று பேர் கொண்ட குடும்பம் இருக்கிறது. என் எதிர் வீடு நிறைய நாளாய் பூட்டியிருந்தது. போன மாதம்தான் விற்றுப் போனது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 19 March 2018

பெண்களுக்கான அறிவுரைகள்


Siragu pengalukkaana2

யுனிசெஃப் (United Nations Children’s Fund or UNICEF) அல்லது “ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்” எனப்படும் பன்னாட்டுச் சிறுவர்களின் நலவாழ்வில் அக்கறை கொண்ட அமைப்பானது, இணையவெளியில் ஒவ்வொரு நாளும் 175,000 சிறுவர்கள் பயனர்களாக நுழைகிறார்கள், அவர்களுக்குப் பாதுகாப்பான நடவடிக்கையில் மக்கள் செயல்பட வேண்டும் என்னும் நோக்கில் “பகிரும் முன் சிந்தியுங்கள்” (Think before you send – https://youtu.be/ObHyjhS4BZw) என்ற ஒரு காணொளி தயாரித்துச் சரியாக மூன்று மாதங்களுக்கு முன்னர் (டிசம்பர் 11, 2017 அன்று) யூடியூப் வழியாக வெளியிட்டது. இது நாள் வரை அதைப் பார்த்தோரின் எண்ணிக்கை சுமார் 3,000 சொச்சம். அதாவது மாதமொன்றுக்குச் சராசரியாக 1,000 பார்வையாளர்கள் என்ற நிலையில் அது பரவியுள்ளது என்று தெரிகிறது.


“காலா” என்ற ரஜினிகாந்த் நடித்து வரவிருக்கும் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வமான விளம்பரக் காணொளி 10 நாட்களுக்குள் 2 கோடி (20 million) தமிழர்களால் மட்டுமே பார்க்கப்பட்டுவிட்ட சாதனையின் அருகே, உலக அளவு பார்வையாளர்களை சென்றடைய விரும்பும் யுனிசெஃப் காணொளியின் சாதனை கிட்டே கூட நிற்கத் தகுதியில்லை. அந்த அளவு இணையத்தைப் பயன்படுத்துவோர் பொறுப்புணர்வு கொண்டவராக உள்ளனர். உலகில் இதுநாள் வரை வாழ்ந்துவரும் மக்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டவராக இக்கால இளையதலைமுறையினர் உள்ளனர். அவர்களுக்கு இணையம் பல அறிவார்ந்த செய்திகளைத் தருவதுடன் ஆபத்தான வாழ்க்கையையும் அவர்கள் அறியாமலே எதிர்நோக்க வைக்கிறது என்ற அக்கறையில் தயாரிக்கப்பட்ட யுனிசெஃப்  காணொளி, ஒரு செய்தியைப் பகிரும்முன் அதன் விளைவைச் சிந்திக்கச் சொல்கிறது. ஒருவரைப் பற்றி உண்மையா பொய்யா எனத் தெரியாத தகவலை அதே நொடிப்பொழுதில் முடிவெடுத்துப் பரப்பிவிட்டால் பாதிக்கப்படுபவர் உயிரையும் இழக்க நேரும் என்று காட்ட முற்படுகிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 15 March 2018

புரட்சி எங்கும்!, தீயின் சிறகொன்று (கவிதை)

புரட்சி எங்கும்!

siragu periyaar1

சிலைத கர்ப்பு செய்தார் பகைவர்
செயல்ப டும்காலம் இதுவென காட்டினார்
திரிபுரா மராட்டா கேரள வங்கம்
தென்தமிழ் நாடென எங்கும் புரட்சி!
பொதுவுடமை சிலைதனை தகர்த்தார் மக்கள்
பொறுமை இழந்ததனை கண்டோம்! லெனின்
புகட்டிய பொதுவுடமை தீயாய் பரவியது!

பகுத்தறிவு மேதை பெரியார் சிலைதனை
பகைகொண்டு சிதைத்தார் சாதி மக்களின்
பகையென உணர்ந்தார் புரட்சி பரவியது!

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A/

Wednesday 14 March 2018

பூ (சிறுகதை)


siragu poo1


ஒருகாட்டில் செடி ஒன்று இருந்தது. அதில் சிறிதும் பெரிதுமாய் நிறையப் பூக்கள் இருந்தன. சிறிய கருவண்டு ஒன்று தேனுக்காக அந்தச் செடியைச் சுற்றிவந்தது. அப்போது பூ ஒன்று மிகுந்த வாட்டத்துடன் இருப்பதை அது பார்த்தது. வண்டு அந்தப் பூவிடம் “நீ ஏன் வாட்டமா இருக்க?”– என்று கேட்டது. அதற்கு அந்தப்பூ “பூக்களின் தோற்றம் வளர்ச்சில ஏழு நிலைகள் உண்டு! அதை நீ தெரிஞ்சுக்கிட்டாத்தான் என்னோட இந்த வாட்டத்துக்கான காரணத்தை உன்னால புரிஞ்சுக்க முடியும்!”– என்றது.
“பூக்களின் வளர்ச்சில ஏழு நிலைகளா? கொஞ்சம் சொல்ல முடியுமா?”- ஆர்வத்துடன் கேட்டது வண்டு.
“சொல்றேன்! ஒரு பூ முதன்முதலா செடில உருவாகுறத அரும்புன்னு சொல்வாங்க! ‘அரும்பு’ பூக்களின் முதல்நிலை!”– என்றது பூ.

“நீ முதன்முதலா செடில உருவான அந்தத் தருணம் எப்படி இருந்துச்சு?”–கேட்டது கருவண்டு.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 13 March 2018

உலக மகளிர் தினத்தில் அறிந்து கொள்வோம் – இராவண லீலாவின் புரட்சித்தலைவியை !!


siragu maniammai1


பெரியார் செத்துக் கொண்டிருந்தார். தமிழர் அழுது கொண்டிருந்தார்கள். ஆனால் பெரியாரின் உடம்பை விட்டுப் பிரிந்து போக மூட்டை முடிச்சுகளுடன் காத்திருந்த உயிரைப் போகாதே என்று பிடித்து இழுத்து வைத்துக் கொண்டிருந்தவை இரண்டு. ஒன்று அவரின் பெருந்தொண்டு, மக்கள்மீது அவர் வைத்திருந்த அருள் மற்றொன்று.
ஆயினும், காற்றிறங்கிப் பொதிமாடு போல் பெருத்துத் தொங்கும் அவர் விதையின் ஒருபால் ஒட்டிய ஆண்குறியினின்று முன்னறிவிப்பு இன்றிப் பெருகும் சிறுநீரை உடனிருந்து கலன் ஏந்திக் காக்கும் ஓர் அருந்தொண்டு, அவர் பெருந்தொண்டால் முடியாது. அவர் மக்கள் மேல் வைத்துள்ள அருளால் முடியாது. பெரியார் வாழட்டும் என்று தன் துடிக்கும் இளமையைப் பெரியார்க்கு ஒப்படைத்த ஒரு பொடிப் பெண்ணை அன்னை என்று புகழாமல் நாம் வேறு என்ன என்று புகழவல்லோம்?

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 12 March 2018

மகளிர்தினக் கொண்டாட்டங்கள், மகளிரின் சிறப்பை உணர்த்துகின்றனவா …!


Siragu penniyam1

கடந்த சில ஆண்டுகளாகவே, நம் நாட்டில், நம் சமூகத்தில், பெண்கள் பாதுகாப்பின்றி வாழ்கிறார்கள் என்று தான் நடக்கும் சம்பவங்கள் நமக்கு உணர்த்துகின்றன. பாலியல் ரீதியாக பல வன்கொடுமைகளை, வன்புணர்வுகளை நம் சமூகப் பெண்கள் சந்தித்தவண்ணம் இருக்கிறார்கள் என்பது வேதனைக்குரிய ஒன்றாக இருக்கிறது. மேலைநாடுகளில் மகளிர்தினம் என்ற ஒன்றை கொண்டாடுகிறார்கள் என்றால், அவர்கள் அவர்களுக்கான முழு உரிமைகளை, போராடி பெற்றெடுத்திருக்கிறார்கள். நாம் இன்னமும் அந்தளவிற்கு உரிமைகளை பெற்று இருக்கிறோமா என்ற கேள்விக்கு, பதில் இல்லை என்பது தானே உண்மை.!

ஆண்டுதோறும் மார்ச் 8 -ந் தேதி உலக மகளிர்தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் நம் நாட்டிலோ, பெண்களுக்கெதிரான வன்முறைகள், கொடுமைகள் குறைந்தபாடில்லை. இன்னும் சொல்லப்போனால், அதிகரித்திருக்கிறது என்பதுதான் வருத்தத்துடன் ஒப்புக்கொள்ளக்கூடிய உண்மை. இங்கு கொண்டாடப்படும் கொண்டாட்டங்கள் அனைத்தும், நாம் பெறவேண்டிய உரிமைகளை சொல்வதில்லை. இந்த சமூகத்தில் நமக்கான இடத்தை எப்படி பெற வேண்டும், அதனை எப்படி இன்னும் பல வழிகளில் முன்னேற்றப்பட வேண்டும் என்று கற்றுக் கொடுப்பதில்லை என்பது தான் காரணமாக இருக்கிறது. இந்த செய்திகள் ஆண்பிள்ளைகளுக்கும், பெண்பிள்ளைகளுக்கும் சரியாக சென்றடைவதில்லை. 

இந்த ஆண்டு, மகளிர்தினத்தின் முதல்நாள், திருச்சி, துவாக்குடி ஊரை சேர்ந்த உஷா என்ற கர்ப்பிணிப் பெண் காவல்துறை ஆய்வாளர் ஒருவராலேயே, எட்டி உதைக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார் என்பது சகித்துக்கொள்ளக்கூடிய ஒன்றா? இந்த நிகழ்வு நூறு விழுக்காடு ஆண்கள் சம்பந்தப்பட்ட ஒன்று. அதிலும், ஆய்வாளர் தவறு தான் மிக முக்கிய குற்றமாக இருக்கிறது. ஆனால், உயிரிழந்தது ஒரு பெண். அடுத்து பார்த்தீர்களென்றால், மகளிர்தினத்தின் மறுநாள், 19 வயதே நிரம்பிய இளந்தளிர் அஸ்வினி என்ற கல்லூரி மாணவி, காதலன் என்று சொல்லப்படும் ஒருவனால் கத்தியால் குத்தப்பட்டு இறந்திருக்கிறார். தன்னை காதலிக்கவில்லையென்றால், ஆசிட் ஊற்றுவது, கத்தியால் குத்தி கொல்வது, எரித்து கொல்வது என்ற வன்முறைகள் எல்லாம் நமக்கு உணர்த்துவது என்னவென்றால், பெண்கள் பாதுகாப்பற்ற நிலையில் தான் நம் நாட்டில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள், ஆண்களின் உடைமைகளாக பார்க்கப்படுகின்றனர் என்பது தான்.!

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Friday 9 March 2018

பிரிவினைக்கு எதிராய்! (கவிதை)


siragu pirivinaikku edhiraai2

தோழியடி எம்தோழி யடிநீ – நம்
தேச மெனும்சோ லையினுட் செல்வோம்.

மேரு மலைமீது ஆடுகின்ற மந்தி
சேரு தடிதம் கூட்டத் துள்ளே
கூறு போட பலபேர் உள்ளார்
நூறு நூறாய் இந்த நாட்டை

கடலாடி வந்த நுரைகரை ததும்புதடி
கரைகண்ட பின்னே அலையோடும் போச்சுதடி



கரைமீது மோதும் உமிழ்நீர் போல்சிலர்

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 8 March 2018

ஈ. வெ. ரா. வின் வாசிப்பில் இராமாயணம்


siragu periyar1
“இராமாயணக் குறிப்புகள்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட பெரியார் ஈ. வெ. ரா. வின் இராமாயண ஆய்வு நூல் மிகச் சிறியது, அறுபது பக்கங்களைக் கொண்டது. நூல் சிறியதாக இருந்தாலும், வெளியிட்ட காலத்தில் எதிர்ப்புகள், கண்டனங்கள், விவாதங்கள் பலவற்றைத் தவறாமல் கிளப்பிவிட்ட நூல். “கடவுள் இல்லை” என்ற நாத்திகர் ஒருவர் சமய நூலான வால்மீகி இராமாயணத்தின் மொழிபெயர்ப்புகள் சிலவற்றைப் படித்து, குறிப்புகள் எடுத்து தனது கோணத்தில் இராமாயணம் பற்றியக் கருத்துகளை ஒரு ஆய்வு நூலாக வெளியிட்டதன் பின்னணியில் இருப்பது அவரது ஆரிய எதிர்ப்பு அரசியலும், சமய மறுப்புக் கொள்கை பரப்பும் நோக்கமும் என்பதைத் தெளிவாகவே தமிழகம் அறியும்.

இந்தி எதிர்ப்பு முதல் பிராமணிய எதிர்ப்புவரை, சமய மறுப்பு கொள்கை முதல் சாதி மறுப்புக் கொள்கை வரை அவற்றின் அடிப்படையில் ஆரியத்தின் ஊடுருவல் என்பதைத்தான் பெரியார் அடையாளம் கண்டார். ஆரியத்தை மறுக்கவே திராவிடக் கழகம் என்ற இயக்கத்தையும் உருவாக்கினார். அவர் எதிர்த்த ஆரியத்தின் உயிர்நாடியாக அவர் கண்டது இராமாயணம்.  இராமாயணக் கதை ஆரிய மேலாதிக்கத்தையும் திராவிட அவமதிப்பையும் நிலைநிறுத்தவே பரப்பப்படுகிறது என்ற கோணத்தில் இராமாயணம் எரிப்பு, இராமர் படம் எரிப்பு, இராமாயணக் கதையின் பொய் புரட்டுகளை தோலுரிக்கும் இந்த நூல் வெளியீடு போன்றவற்றை முன்னெடுத்தார். இராமாயணத்தை அவர் ஒரு இலக்கியம் என்ற கோணத்தில் அணுக விரும்பாத பொழுது, மக்களிடம் விழிப்புணர்வு கொண்டு வர வேண்டும் என்ற வேகத்தில் இராமாயணம் என்ற இதிகாசம் அவர் கையில் எதிர்ப்பு அரசியல் கருவியின் அடையாளமாக மாறியது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 6 March 2018

தமிழக காவல்துறையின் மெத்தனமும், சாதீய வன்முறைகளும்.!


Siragu pirappokkum1

சமீபகாலமாக நம் மாநிலத்தில், சாதி ரீதியான கொடுமைகள் பெருகி வருகின்றன என்பது மிகவும் வேதனையான ஒன்று. சாதி ஒழிப்பிற்கு மிகப்பெரிய அளவில் துணையாக இருப்பது, இந்த சாதி மறுப்புத் திருமணங்கள் தான். நம் சமூகம் சாதி என்ற புற்றுநோயில் புரையோடி இருந்த காலம் எல்லாம் கடந்து, தற்போது ஆரோக்கியமான பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்று நாம் என்னும் சமயம் தான் இது போன்ற செய்திகள் வருகின்றன. சில நாட்களுக்கு முன்பு, நாம் எல்லோரும் அறிந்த ஒரு செய்தி தான். தூத்துக்குடி மாவட்டம் புன்னைக்காயல் என்ற ஊரில், “கிராம பஞ்சாயத்து” என்ற பெயரில், அவ்வூர் மக்களில் சிலர், ஒன்றுகூடி, சாதி மறுப்புத் திருமணங்கள் செய்துகொண்ட 12 குடும்பத்தவர்கள் ஊருக்குள் நுழையக் கூடாது என்றும், ஊரில் வசிக்க தகுதியற்றவர்கள் என்றும், மணமக்களுக்குரிய அடிப்படை வசதிகளை, உரிமைகளை பறிக்கும் விதமாக சில முடிவுகளை எடுத்து, கிராம பஞ்சாயத்து என்ற போர்வையில், கட்டப் பஞ்சாயத்து செய்து, தண்டோரா போட்டு அறிவிப்பு செய்திருக்கிறார்கள்.

siragu saatheeiya vanmurai


எந்த அளவிற்கு கடுமையான ஒரு சாதிய வன்முறை இது. வளர்ந்து, முன்னேறி வரும் நம் சமூகம் நாகரீகம் என்ற ஒருவளர்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருக்கும்போது, இதுபோன்ற, காட்டுமிராண்டித்த தனமான செய்கைகள் நம்மை அதால பாதாளத்திற்குள் தள்ளிவிட்டு விடாதா… மிகவும் கண்டனத்திற்குரிய செய்கை அல்லவா இது. இவ்வளவு தூரம் செல்வதற்கு, அந்த ஊரின் காவல்துறை எப்படி அனுமதித்தது. இம்மாதிரி ஒரு நிகழ்வு, அந்த மாவட்ட ஆட்சியரின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டதா என்ற கேள்வி நம் எல்லோரின் மனதிலும் வருகிறதல்லவா. தண்டோரா போடுமளவுக்கு சென்றிருக்கும்போது, இதனைப்பற்றிய செய்தி, மேலதிகாரிகளுக்குத் தெரியாமல் இருந்திருக்குமா. தெரியாமல் நடக்க வாய்ப்பில்லை. தெரிந்திருந்தது நடந்திருந்தால், இதன் பின்னல் உள்ளவர்கள் அனைவருமே உடந்தை என்பது தானே உண்மையாகயிருக்க முடியும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

ஆங்கில மருத்துவமும் முதலாளித்துவ உற்பத்தி முறையும்


siragu allopathic1

ஆங்கில மருத்துவ (அல்லோபதி) முறையின் “கொடூர” இயல்பைப் பற்றி முகநூலிலும் (facebook), புலனத்திலும் (whatsapp) நம் அறிவு ஜீவிகள் பரபரப்பான விவாதங்களைச் செய்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களின் விவாதங்களைக் கேட்டால் இந்த ஆங்கில மருத்துவ முறை மனித குலத்தின் வளர்ச்சியைக் கெடுப்பதற்கு என்றே வளர்த்து எடுக்கப்பட்டதோ என்று தோன்றும். இது உண்மையா? ஒரு சிறு விபத்து நடந்தால் இந்த அறிவு ஜீவிகள் ஆங்கில மருத்துவ முறையை நாடாமல் இருக்க முடியுமா? அப்படியானால் உண்மையான பிரச்சினை என்ன? இந்த அறிவு ஜீவிகளைப் புலம்ப வைக்கும் உண்மையான காரணம் என்ன?

உண்மையில் ஆங்கில மருத்துவ முறையில் எந்த விதமான தவறும் இல்லை என்பது மட்டும் அல்ல, மற்ற எல்லா மருத்துவ முறைகளைக் காட்டிலும் ஆங்கில மருத்துவ முறை தான் பரந்த அளவில் மனித குலத்திற்குப் பயன் தரக் கூடியது. அது மக்களின் வெறுப்புக்கு உள்ளாகக் காரணம் நோய்க்கு ஏற்பச் சிகிச்சை செய்யமாமல், ஒருவனின் செலவளிக்கும் வலுவிற்கு ஏற்பச் சிகிச்சை செய்யத் தூண்டும் முதலாளித்துவ உற்பத்தி முறையே.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Friday 2 March 2018

யாருக்கும் கிடைக்காத பரிசு (சிறுகதை)


siragu yaarukkum1


வாசலில் இருந்து பாரிசாத பூக்களைப் பொறுக்கி எடுத்துக் கொண்டு பூசை அறைக்குள் நுழைந்து கடவுளை வணங்கினேன். அப்போது காலை 8.30. என் அலைபேசி சிணுங்கியது. நம்பரைப் பார்த்தால் புதிய நபரிடமிருந்து வந்திருக்கிறது. யாரிடமிருந்து என்று தெரியவில்லை? ஏதோ நல்ல விசயமாய் இருக்க வேண்டும் என்று மனசு சொல்லியது.
”ஹலோ, வணக்கம்., எழுத்தாளர் பாமா கிருஷ்ணன் தானே?” ஆண் குரல் கேட்டது.
”ஆமாம், நான் பாமாகிருஷ்ணன் நீங்க யார்?.”

என் பெயர் கேசவன். தி. நகரிலிருந்து பேசுகிறேன். வாசகர் வாசிப்பு என்னும் எங்கள் அமைப்பைப் ப|ற்றி சிறு அறிமுகம். சென்னையில் ஏராளமான இலக்கிய அமைப்புகள் இருக்கின்றன. அவற்றில் எங்களுடையதும் ஒன்று. சிறிய அமைப்பு. வாசிப்பில் ஆர்வமுள்ள சிலர் ஒவ்வொரு வாரமும் ஞாயிறு மாலை நான்கு மணிக்கு பத்திரிகையில் வெளிவந்த ஒரு சிறுகதையை. விமர்சனம் செய்வோம். சமீபத்தில் ——- பத்திரிகையில் பிரசுரமான நீங்கள் எழுதிய “திருநெல்வேலி ஜங்ஷன்” சிறுகதையை விமர்சனம் செய்து சிறந்த கதையாக தேர்ந்தெடுத்திருக்கிறோம். எல்லோரும் சிறந்த கதை எழுதிய உங்களுக்குப் பாராட்டு விழா நடத்த விரும்பியதால் வரும் ஞாயிற்றுக் கிழமை மாலை ஆறு மணிக்கு மையிலாப்பூரிலுள்ள கோகலே ஹாலில் நடக்கும் பாராட்டு விழாவிற்கு நீங்கள் கண்டிப்பாக வரவேண்டும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 1 March 2018

தமிழர்கள் யார் ?


Siragu hinduism1
இன்றைக்கு நிலையற்ற அரசியல் சூழலில் தமிழ்நாடு சிக்கித் தவித்து வருகின்றது. இந்துத்துவம் தன் கொடூரக் கைகளை தமிழ்நாட்டின் மீது பரவத் துடிக்கின்றது. இந்த வாய்ப்பில் தான் கவிஞர் வைரமுத்து ஆண்டாள் பற்றிக் கூறிய ஒரு ஆய்வுக் கட்டுரையின் மேற்கோளை பெரும் சர்ச்சையாக்கி தமிழ் மண்ணை கலவர மண்ணாக மாற்ற சூழ்ச்சி செய்தது பார்ப்பனியம். அந்த சர்ச்சையில் தான் பா.ச.க இந்துக்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்ற முழக்கத்தை முன் வைத்து மத கலவரத்திற்கு வித்திட முயன்றது. அந்த நேரத்தில் தான் பழ. கருப்பையா போன்றவர்கள் தமிழர்கள் இந்துக்கள் அல்ல, என்ற எதிர் முழக்கத்தை முன் வைத்து பா.ச.க-வின் மத கலவர யுக்திக்கு எதிர் வாதம் வைத்தனர்.

தமிழர்கள் இந்துக்கள் அல்ல என்றால் தமிழர்கள் யார்? என்ற கேள்வி வலுப்பெறுகிறது. இந்தக் கேள்வியை வரலாற்று ரீதியாக நாம் அணுக வேண்டிய தேவை உள்ளது. தமிழர்கள் இந்துக்கள் அல்ல, ஆனால் அவர்கள் வீர சைவர்கள், வீர வைணவர்கள் என்ற குரல், வரலாற்றில் பிழையான, ஆபத்தான குரல் மட்டுமல்ல, பார்ப்பனியத்திற்கு கொல்லைப்புறம் வழியாக வரவழைக்கும் குரலும் என்பதை நாம் மறந்து விட முடியாது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.