Tuesday 6 March 2018

தமிழக காவல்துறையின் மெத்தனமும், சாதீய வன்முறைகளும்.!


Siragu pirappokkum1

சமீபகாலமாக நம் மாநிலத்தில், சாதி ரீதியான கொடுமைகள் பெருகி வருகின்றன என்பது மிகவும் வேதனையான ஒன்று. சாதி ஒழிப்பிற்கு மிகப்பெரிய அளவில் துணையாக இருப்பது, இந்த சாதி மறுப்புத் திருமணங்கள் தான். நம் சமூகம் சாதி என்ற புற்றுநோயில் புரையோடி இருந்த காலம் எல்லாம் கடந்து, தற்போது ஆரோக்கியமான பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்று நாம் என்னும் சமயம் தான் இது போன்ற செய்திகள் வருகின்றன. சில நாட்களுக்கு முன்பு, நாம் எல்லோரும் அறிந்த ஒரு செய்தி தான். தூத்துக்குடி மாவட்டம் புன்னைக்காயல் என்ற ஊரில், “கிராம பஞ்சாயத்து” என்ற பெயரில், அவ்வூர் மக்களில் சிலர், ஒன்றுகூடி, சாதி மறுப்புத் திருமணங்கள் செய்துகொண்ட 12 குடும்பத்தவர்கள் ஊருக்குள் நுழையக் கூடாது என்றும், ஊரில் வசிக்க தகுதியற்றவர்கள் என்றும், மணமக்களுக்குரிய அடிப்படை வசதிகளை, உரிமைகளை பறிக்கும் விதமாக சில முடிவுகளை எடுத்து, கிராம பஞ்சாயத்து என்ற போர்வையில், கட்டப் பஞ்சாயத்து செய்து, தண்டோரா போட்டு அறிவிப்பு செய்திருக்கிறார்கள்.

siragu saatheeiya vanmurai


எந்த அளவிற்கு கடுமையான ஒரு சாதிய வன்முறை இது. வளர்ந்து, முன்னேறி வரும் நம் சமூகம் நாகரீகம் என்ற ஒருவளர்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருக்கும்போது, இதுபோன்ற, காட்டுமிராண்டித்த தனமான செய்கைகள் நம்மை அதால பாதாளத்திற்குள் தள்ளிவிட்டு விடாதா… மிகவும் கண்டனத்திற்குரிய செய்கை அல்லவா இது. இவ்வளவு தூரம் செல்வதற்கு, அந்த ஊரின் காவல்துறை எப்படி அனுமதித்தது. இம்மாதிரி ஒரு நிகழ்வு, அந்த மாவட்ட ஆட்சியரின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டதா என்ற கேள்வி நம் எல்லோரின் மனதிலும் வருகிறதல்லவா. தண்டோரா போடுமளவுக்கு சென்றிருக்கும்போது, இதனைப்பற்றிய செய்தி, மேலதிகாரிகளுக்குத் தெரியாமல் இருந்திருக்குமா. தெரியாமல் நடக்க வாய்ப்பில்லை. தெரிந்திருந்தது நடந்திருந்தால், இதன் பின்னல் உள்ளவர்கள் அனைவருமே உடந்தை என்பது தானே உண்மையாகயிருக்க முடியும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment