Wednesday 28 March 2018

ஶ்ரீதேவிகளும், அஸ்வினிகளும் மரணித்தும் கொல்லப்படுகின்றனர்!!


Siragu-Shridevi1

அண்மையில் இரு மரணச் செய்திகள் நம்மை வருத்தத்தில் ஆழ்த்தியது. ஒன்று புகழ் பெற்ற நடிகை ஸ்ரீதேவியின் மரணம். அவர் மரணச் செய்தி வந்தவுடன் நாடு முழுவதும் திரைப்பட ரசிகர்கள் அவர்களுக்கு அஞ்சலியைத் தங்கள் முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்கள். அடுத்த நாள் அவரின் மரணம் மாரடைப்பால் அல்ல, குடிபோதையில் தண்ணீர் தொட்டியில் தவறி வீழ்ந்து இறந்து விட்டார் என்ற செய்தி பரவியதும் எந்த மக்கள் விழுந்து விழுந்து அவரைப் போற்றி அஞ்சலி செலுத்தினார்களோ? அவர்களே ஒரு பெண்ணுக்கு இந்த போதை தேவையா? குடி போதையில் தவறி விழுந்து இறந்தவளுக்கு என்ன அஞ்சலி வேண்டிக் கிடக்கு என்று அந்த நடிகையின் ஒழுக்கத்தை கீழ்த்தரமாக பேசி, அவரின் மரணத்தை நையாண்டி செய்தும் பதிவுகள் இட்டனர்.

இங்குதான் நமக்கு ஒரு கேள்வி வருகின்றது. இதே திரைப்படத் துறையில் இருக்கும் பல ஆண் நடிகர்கள் குடித்து அழிந்து ஒழியவில்லையா? பல கவிஞர்கள் குடிக்கு அடிமையாகி மடியவில்லையா? தனி மனித ஒழுக்கம் என்பதே இல்லாமல் பல பெண்களோடு உறவு வைத்துக் கொண்டு உலா வரவில்லையா?.
ஆனால் அவர்களைப் பற்றி இன்று குறிப்பிட்டாலும் அவர் போன்ற நடிகர் உண்டா? அவர் போல கவிஞர் உண்டா? மனிதர் எப்படி வாழ்ந்துள்ளார் என்று போற்றிப் பாடும் இதே சமூகம் ஒரு நடிகையை இவ்வளவு தரம் தாழ்ந்து அவர் மரணத்தில் விமர்சிக்கும் காரணம் என்ன என்று சிந்தித்துப் பார்த்தால் ஒன்று விளங்கும்!

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment