Thursday 8 March 2018

ஈ. வெ. ரா. வின் வாசிப்பில் இராமாயணம்


siragu periyar1
“இராமாயணக் குறிப்புகள்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட பெரியார் ஈ. வெ. ரா. வின் இராமாயண ஆய்வு நூல் மிகச் சிறியது, அறுபது பக்கங்களைக் கொண்டது. நூல் சிறியதாக இருந்தாலும், வெளியிட்ட காலத்தில் எதிர்ப்புகள், கண்டனங்கள், விவாதங்கள் பலவற்றைத் தவறாமல் கிளப்பிவிட்ட நூல். “கடவுள் இல்லை” என்ற நாத்திகர் ஒருவர் சமய நூலான வால்மீகி இராமாயணத்தின் மொழிபெயர்ப்புகள் சிலவற்றைப் படித்து, குறிப்புகள் எடுத்து தனது கோணத்தில் இராமாயணம் பற்றியக் கருத்துகளை ஒரு ஆய்வு நூலாக வெளியிட்டதன் பின்னணியில் இருப்பது அவரது ஆரிய எதிர்ப்பு அரசியலும், சமய மறுப்புக் கொள்கை பரப்பும் நோக்கமும் என்பதைத் தெளிவாகவே தமிழகம் அறியும்.

இந்தி எதிர்ப்பு முதல் பிராமணிய எதிர்ப்புவரை, சமய மறுப்பு கொள்கை முதல் சாதி மறுப்புக் கொள்கை வரை அவற்றின் அடிப்படையில் ஆரியத்தின் ஊடுருவல் என்பதைத்தான் பெரியார் அடையாளம் கண்டார். ஆரியத்தை மறுக்கவே திராவிடக் கழகம் என்ற இயக்கத்தையும் உருவாக்கினார். அவர் எதிர்த்த ஆரியத்தின் உயிர்நாடியாக அவர் கண்டது இராமாயணம்.  இராமாயணக் கதை ஆரிய மேலாதிக்கத்தையும் திராவிட அவமதிப்பையும் நிலைநிறுத்தவே பரப்பப்படுகிறது என்ற கோணத்தில் இராமாயணம் எரிப்பு, இராமர் படம் எரிப்பு, இராமாயணக் கதையின் பொய் புரட்டுகளை தோலுரிக்கும் இந்த நூல் வெளியீடு போன்றவற்றை முன்னெடுத்தார். இராமாயணத்தை அவர் ஒரு இலக்கியம் என்ற கோணத்தில் அணுக விரும்பாத பொழுது, மக்களிடம் விழிப்புணர்வு கொண்டு வர வேண்டும் என்ற வேகத்தில் இராமாயணம் என்ற இதிகாசம் அவர் கையில் எதிர்ப்பு அரசியல் கருவியின் அடையாளமாக மாறியது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment