Friday 2 March 2018

யாருக்கும் கிடைக்காத பரிசு (சிறுகதை)


siragu yaarukkum1


வாசலில் இருந்து பாரிசாத பூக்களைப் பொறுக்கி எடுத்துக் கொண்டு பூசை அறைக்குள் நுழைந்து கடவுளை வணங்கினேன். அப்போது காலை 8.30. என் அலைபேசி சிணுங்கியது. நம்பரைப் பார்த்தால் புதிய நபரிடமிருந்து வந்திருக்கிறது. யாரிடமிருந்து என்று தெரியவில்லை? ஏதோ நல்ல விசயமாய் இருக்க வேண்டும் என்று மனசு சொல்லியது.
”ஹலோ, வணக்கம்., எழுத்தாளர் பாமா கிருஷ்ணன் தானே?” ஆண் குரல் கேட்டது.
”ஆமாம், நான் பாமாகிருஷ்ணன் நீங்க யார்?.”

என் பெயர் கேசவன். தி. நகரிலிருந்து பேசுகிறேன். வாசகர் வாசிப்பு என்னும் எங்கள் அமைப்பைப் ப|ற்றி சிறு அறிமுகம். சென்னையில் ஏராளமான இலக்கிய அமைப்புகள் இருக்கின்றன. அவற்றில் எங்களுடையதும் ஒன்று. சிறிய அமைப்பு. வாசிப்பில் ஆர்வமுள்ள சிலர் ஒவ்வொரு வாரமும் ஞாயிறு மாலை நான்கு மணிக்கு பத்திரிகையில் வெளிவந்த ஒரு சிறுகதையை. விமர்சனம் செய்வோம். சமீபத்தில் ——- பத்திரிகையில் பிரசுரமான நீங்கள் எழுதிய “திருநெல்வேலி ஜங்ஷன்” சிறுகதையை விமர்சனம் செய்து சிறந்த கதையாக தேர்ந்தெடுத்திருக்கிறோம். எல்லோரும் சிறந்த கதை எழுதிய உங்களுக்குப் பாராட்டு விழா நடத்த விரும்பியதால் வரும் ஞாயிற்றுக் கிழமை மாலை ஆறு மணிக்கு மையிலாப்பூரிலுள்ள கோகலே ஹாலில் நடக்கும் பாராட்டு விழாவிற்கு நீங்கள் கண்டிப்பாக வரவேண்டும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment