Wednesday 29 May 2019

தொகுப்பு கவிதை (குளவிக் கூடு, ஒளிப்பிழம்பான பாதை, ஓய்வு, அச்சு)

குளவிக் கூடு


siragu kulavi koodu1
கூடு கட்டிய குளவியின்
‘ஈ’ என்ற ஓசை காதுக்குள் புகுந்து கொள்கிறது.
அது, தான் கட்டிய கூட்டிற்குள் நுழைய
ஏன் என்னிடம் அனுமதி கேட்கிறது?

கஜா புயல் தாக்கிய போது எங்கே சென்றது
அந்தக் குளவி?
எங்கே ஒளிந்திருக்கும்?
அதன் பிள்ளைகள் என்ன ஆனது?
என்ற கேள்விகள்
அதனுடைய ‘ஈ’ ஒலியோடு துளைத்துக் கொண்டிருந்தது.



மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 28 May 2019

ராகுல சாங்கிருத்தியாயன் பார்வையில் ‘ஆரியர் வருகை’

siragu volka-to-ganges cover
‘வால்காவிலிருந்து கங்கை வரை’ என்ற தலைப்பில், ராகுல சாங்கிருத்யாயனால் இந்தியில் ‘வால்கா சே கங்கா’ என்று எழுதப்பட்ட இந்த நூல் மானுடவியல் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட செவ்வியல் இலக்கியம் என்ற தகுதி பெற்றது. இந்த வரலாற்றுப் புனைவில் 20 கதைகளில் மனித சமுதாயத்தின் வளர்ச்சி தொகுக்கப்படுகிறது. இந்நூல் 1943 இல் வெளியிடப்பட்டு பின்னர் பலமொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டது. ராகுல சாங்கிருத்தியாயன் பிரிட்டிஷ் ஆதிக்கத்தை எதிர்த்து எழுதியதற்காக மூன்றாண்டுக் காலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்பொழுது சிறையில் உருவான நூல் இது. இந்நூலை எழுதியதற்காக சமயப் பழமைவாதிகளால் வசை பாடப்பட்டார். இருப்பினும் மறு ஆண்டே அடுத்த பதிப்பு வெளிவரும் அளவிற்கு நூல் விற்பனையானது. தமிழில் கண. முத்தையா மொழிபெயர்ப்பில் இந்நூல் முன்னரே 1949ல் வெளிவந்து முப்பதுக்கும் மேற்பட்ட பதிப்புகளைக் கண்ட சிறப்புடையது. நூலின் மொழிபெயர்ப்பும் கண. முத்தையா வால் சிறையில்தான் எழுதப்பட்டது. கால்நூற்றாண்டிற்கும் மேல் இந்திப் பேராசிரியராகப் பணியாற்றிய டாக்டர் என். ஸ்ரீதரன் சமீபத்தில் இந்தியிலிருந்து தமிழாக்கம் செய்துள்ளார். அது 2016 இல் கவிதா பப்ளிகேசஷன்ஸ் வெளியீட்டில் முதல் பதிப்பாக வெளிவந்துள்ளது. என். ஸ்ரீதரன் பல குறிப்புகளையும் தேடிக்கொடுத்து வாசிப்பை விரிவாக்க உதவியுள்ளார்.

ராகுல சாங்கிருத்தியாயன், கேதார்நாத் பாண்டே என்ற பெயருடன் உத்தரப்பிரதேச குக்கிராமம் ஒன்றில் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தவர். துவக்கப்பள்ளி வரை மட்டுமே முறையான கல்வி கற்றாலும் தானே கற்று 30க்கும் மேற்பட்ட மொழிகள் அறிந்த பன்மொழி அறிஞராகவும், பலதுறை வல்லுநராகவும் 70 வயதுவரை வாழ்ந்து 1963 இல் மறைந்தவர். இவர் ‘மகா பண்டிட்’ என்ற பட்டமும் பெற்றவர்.  தமிழகத்தில் இவர் வாழ்ந்த காலத்தில் தமிழும் அறிந்து கொண்டார். ராகுல சாங்கிருத்தியாயன் இந்துவாகப் பிறந்து இந்து சமயத் தத்துவங்களை அறிந்தவர். ஆரிய சமாஜத்தின் சுவாமி தயானந்த சரஸ்வதியின் மேல் பற்று கொண்டவர். இலங்கையில் புத்த மதத்தைத் தழுவி புத்த பிக்குவாகவும் தீட்சை பெற்று ராகுல சாங்கிருத்தியாயன் என்று மாறியவர். பெளத்த தத்துவங்களிலும் பாலி மொழியிலும் வல்லுநர். 

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 27 May 2019

குறளனும் கூனியும்


siragu ilakkiya kaadhal1
காதல் உலக உயிர்களின் தொடர்ச்சங்கலிக்கு வித்து. காதல் இல்லை எனின் இந்த பூமிப்பந்தின் வாழ்வு என்றோ முடிந்திருக்கும். உலக இலக்கியங்கள் அனைத்தும் காதல் உணர்வினை வெளிப்படுத்தும் பொழுது அழகான பெண் ஒருத்திக்கும் ஆணழகன் ஒருவனுக்குமிடையே உள்ள காதல் அன்பினையே பெரும்பாலும் விவரிக்கும். பெண்ணானவள் நீண்ட கருங்குழலும், கைகளில் வளை அணிந்தும் அன்ன நடை பயின்று வர, ஆணனவன் திரண்ட தோள்களோடு அகன்ற மார்புகளுடன் கையில் வாளேந்தி நிமிர்ந்த நடையுடன் நடந்து வர இருவரின் கண்களும் ஒரு நொடிக் கலப்பால் காதல் கொண்டு மகிழ்ந்தனர் என்று படித்திருப்போம். ஆனால் உருவத்தில் அழகில்லாதோர் காதல் கொள்வது பிழையா? அழகு காண்போரின் உள்ளத்து எண்ணத்தை பொறுத்தே உள்ளது. எந்த உயிருக்கும் காதல் உணர்வு பொதுவானது. கட்டமைக்கப்பட்ட அழகு காதலில் இரண்டாம் பட்சமே என்று கலித்தொகை பாடல் ஒன்று இயம்புகிறது. மருதன் இளநாகனார் மருதக்கலி 94வது பாடலில் அழகான காதல் உணர்வினை குறளனுக்கும் கூனிக்கும் நடுவில் தன் பாடல் வரிகளில் விவரிக்கின்றார். குறளன் இரண்டடி உயரம் கொண்டவன். கூனி வளைந்த முதுகு கொண்டவள். அவர்கள் இருவருக்கும் இடையில் நடக்கும் ஊடல் பின் எவ்வாறு காதலாக மாறுகின்றது என்பதை காண்போம்.
பாடல் :
மருதன் இளநாகனார், குறளனும் கூனியும் சொன்னது
குறளன்:

என் நோற்றனை கொல்லோ?
நீர் உள் நிழல் போல் நுடங்கிய மென் சாயல்
ஈங்கு உருச் சுருங்கி
இயலுவாய்! நின்னோடு உசாவுவேன், நின்றீத்தை!

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Friday 24 May 2019

குறுந்தொகையும் சூழலியலும்


siragu kurundhogai1
\நவீன அறிவியல் யுகத்தில் இன்று பரவலாகப் பேசப்பெறும் ஒரு துறை சூழலியலாகும். “சுற்றுச்சூழல் (Environment) என்னும் சொல்லுக்கு நேரடிப்பொருள் சுற்றுப்புறம் (Surroundings). 1960க்கு முன் வரை, இச்சொல்லானது, வெப்பம், ஒளி, போன்ற இயற்பியல் காரணிகள் உள்ளிட்ட உயிரிகளின் சூழலைக் குறித்தது. பின்னரோ, அபரிமிதமான வளர்ச்சிப்போக்கில் விரிந்த தொழில்பெருக்கம், வேளாண்மை விரிவு, சூழல்மாசுகள், மக்கட்பெருக்கம் இவை தொடர்பான பிரச்சினைகளால் அச்சொல் மறுபரிசீலனைக்கு உள்ளானது.”
இத்தகு கருத்தாக்கங்கள் எழுவதற்கு முன்பே தோன்றிய பழந்தமிழ் இலக்கியங்களில், சூழலியல் சிந்தனைகள் குறித்துத் தேடுவது அவ்வளவு பொருத்தமற்றதுபோலத் தோன்றினாலும், இன்றைய சூழலியல் கருத்தாக்கத்திற்கான வேர்களையும் விழுமியங்களையும் அவை கொண்டிருக்கின்றன என்பதை மறுக்க இயலாது.
நிலப்பாகுபாடும் திணைக்கோட்பாடும் வரையறுத்தளித்த வாழ்வியற் சிந்தனைகள் தமிழிலக்கணத்தின் பொருள் இலக்கணமாகத் துலங்குவது குறிப்பிடத்தக்கது என்றே கொள்ளலாம்.

வளமிகு வாழ்விற்குப் புறப்பொருள் தேடுதலின் காரணமாகக் தொலைத்த அகப் பொருளின் ஆழத்தையும் பொருளையும் தெளிவுற விளக்கி, அறத்தின்வழியே பொருளுணர்த்தி இன்பம் நல்க விழைந்த தமிழ் இலக்கிய, இலக்கண நோக்குகள் என்றும் போற்றத்தக்கவை. அவை சூழலியற் கருத்துக்களின் அடிப்படைக் கூறுகளைக் கொண்டு திகழ்வதைக் கண்கூடாகக் காணலாம். அந்த அடிப்படையில் குறுந்தொகையும் சூழலியலும் என்கிற பொருண்மையில் சில கருத்துக்களை, இக்கட்டுரையில் காணலாம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

சங்க இலக்கியத்தில் வானிலையியல்

siragu vaanilai1
தமிழ் இலக்கியத்தில் அறிவியல் என்ற தலைப்பைப் பார்த்ததுமே நினைவுக்கு வருவது ஔவையின் வாக்குதான். இலக்கியத்தில் அறிவியல் குறித்துப் பேச அல்லது எழுதத் தொடங்கும் எந்தவொரு ஆராய்ச்சியாளருக்கும் முதலில் தோன்றுவது திருவள்ளுவமாலையில் ஔவையார் எழுதியுள்ள “அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்” என்ற பாடலே. இந்தப் பாடல் ஔவையாரோடு வள்ளுவரையும் நினைவிற்கு கொண்டு வந்து விடும். ஔவையின் வாக்கு குறித்து அதிக விளக்கம் கூறத் தேவையில்லை.மிகச்சிறிய அலகாகக் கருதப்படும் அணுவையே துளைத்தல் குறித்த சிந்தனை இலக்கியத்தில் எப்படி வந்தது என்பது மிகப்பெரிய வியப்புதான். தொடர்ச்சியாக நினைவில் வருவது, வள்ளுவரின் பெயராகும்.உலக வாழ்க்கைக்கு அடிப்படையாக இருப்பது நீர் எனக் கூறிடின் அதில் மிகையில்லை. ஆங்கிலத்தில் Water – the elixir of life “ என்று சொல்வார்கள். இதையே வள்ளுவர் –
”நீரின்றமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன் றமையாது ஒழுகு.”
siragu vaanilai

என்கிறார். எவ்வகையில் உயர்ந்தவராக இருந்தாலும் நீர் இல்லாமல் இவ்வுலகில் வாழ முடியாது. அதுபோலவே மழை பெய்யவில்லை என்றால் வாழ்க்கையின் ஆதாரமான நீரும் இல்லை. இது ஒரு சுழற்சிச் சக்கரம் போன்றது. இரண்டு வரிகளுக்குள் அடங்கும் இந்த அரிய கருத்துக்கு நிகரான ஆங்கில Water is the elixir of life என்ற கருத்து நிச்சயமாக வள்ளுவருக்கு முன்னால் தோன்றியிருக்க முடியாது. ஆனால் தமிழில் இந்தக் கருத்து சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே பதியப்பட்டிருக்கிறது என்றால், பெருமைப்படுவது ஒருபுறம் இருக்க, அறிவியல் நோக்குப் பார்வையில் வியப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. வள்ளுவருக்கு முன்னர் குடபுலவியனார் என்ற புலவர் புறநானூற்றில் இக்கருத்தை மிக அழகாக சொல்லுகிறார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2/

தமிழ்நாட்டை பாலைவனமாக ஒருபோதும் அனுமதியோம்!


iragu hydro carbon2
ஹைட்ரோகார்பன் திட்டத்தை மத்திய அரசு, தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டிருக்கும் செய்தி நாம் எல்லோரும் அறிந்ததே. இதற்கு மக்களின் போராட்டங்கள் வலுக்கும் இந்நிலையிலும் கூட, அதற்கான பணியை தொடங்கி விட்டன அந்நிறுவனங்கள். விழுப்புரம் தொடங்கி நாகை மாவட்டம் வரை ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கான கிணறுகளை வெட்டும் பணி, மத்திய அரசின் அனுமதியோடு மிக துரிதமாக நடைபெற ஆயுத்தமாகி வருகின்றன. நாடு முழுவதும் 22 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. டெல்டா மாவட்டங்களில், மட்டும் 274 இடங்களில் கிணறுகள் தோண்டுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. விழுப்புரம் முதல் புதுச்சேரி வரை, 1794 சதுரகிலோ மிட்டர் தூரம் வரை தோண்டுவதற்கான பணி தொடங்கப்படவுள்ளன.
இதன்படி, நாகை மாவட்டத்தின், மயிலாடுதுறை செம்பனார் கோவில் மற்றும் வேதாரண்யம் கரியாப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனம் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான முயற்சிகளில் மும்முரமாக இறங்கியிருக்கிறது. அப்பகுதிகளில் விவசாயிகள், பொதுமக்கள் அனைவரும் தங்கள் போராட்டங்களை நடந்த துவங்கியுள்ளனர். மக்களின் இந்த கடும் எதிர்ப்பை மீறியும் அந்நிறுவனம் தங்களுடைய பணியை தொடர்வதற்கான பொக்லைன் இயந்திரங்களை விவசாய நிலங்களில் கொண்டுவந்து இறக்கியுள்ளனர்.

இப்படி ஏன் மக்கள் எதிர்ப்பை மீறியும் மத்திய அரசு இந்த கொடூர செயலில் ஈடுபடுகிறது, இதனால் என்ன லாபம் என்பதை இக்கட்டுரையின் வாயிலாக சற்று சுருக்கமாகப் பார்ப்போம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 22 May 2019

மழை ஏன் பெய்கிறது? (சிறுகதை)


siragu rain
மரம் செடிகொடிகளின் இலைகளில் மழைத்துளிகள் துளிர்த்து இருந்தன. வீசியவாடைக் காற்றில் அத்துளிகள் சிறுசாரலாய் முகத்தில் தெறித்தன. நந்தினி தன் வீட்டுக் கொல்லையில் இருந்தாள். அவள் ஊஞ்சல் ஆடிக் கொண்டிருந்தாள். எட்டு வயது சிறுமி அவள். சற்றுமுன் பெய்தமழையின் குளிர்ச்சி கொல்லை எங்கும் நிறைந்திருந்தது. நந்தினிக்கு திடீரென்று “மழை ஏன் பெய்கிறது?” – என்ற சந்தேகம் வந்தது.
மேகத்தேரில் பவனி சென்று கொண்டிருந்த வருண பகவான் நந்தினியைப் பார்த்தார். அவர் அவள் முன்னே தோன்றினார். வருணனின் பேரழில் தோற்றம் அவளை வணங்கச் செய்தது. நந்தினி அவரிடம் “தாங்கள் யார்?”–என்று கேட்டாள். “நான் வருணன்! மழையின் கடவுள்!”–என்றார் அவர். சற்றுமுன் தன் மனத்தில் எழுந்த சந்தேகத்தை அவரிடம் கேட்டாள்.
“மழை பெய்தால் உனக்கு எப்படி இருக்கிறது?”–கேட்டார் வருணன்.
“மழை பெய்தால் மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறது!”–நந்தினி சொன்னாள்.
“அதற்காகத் தான் மழை தருகிறேன்!”–என்ற வருணன் நந்தினி தனது பதிலில் திருப்தி அடையவில்லை என்பதைப் புரிந்துகொண்டார்.

“கருணை, கொடை, அருள், அமுது இந்த நான்கு வார்த்தைகளுக்கும் பொருள் தெரிந்து கொண்டுவா! நான் ஏன் மழை தருகிறேன் என்பதைச் சொல்கிறேன்!”–என்றவர் அங்கிருந்து மறைந்து போனார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

வெஸ்ட்மினிஸ்டர் அபே நினைவுச்சின்னத்தில் திருச்சி மலைக்கோட்டை

பிரித்தானியப் பேரரசின் மணிமகுடத்தை அலங்கரிக்கும் ஒரு சிறந்த அணிகலன் (India, the crown jewel of the British Empire) என இந்தியா பெயர் பெற்றது. இவ்வாறு குறிப்பிட்டவர் பெஞ்சமின் டிஸ்ரேலி (Benjamin Disraeli, 1874-81) என்ற இங்கிலாந்தின் பிரதமர். உலக வரலாற்றில், வளங்கள் பல கொண்ட, சிறப்பு மிக்க இந்தியா இங்கிலாந்துக்குக் கிட்டாமலே கைநழுவிப் போயும் இருக்கலாம். இந்தியாவை நவீன போர்க்கருவிகள் உதவிகொண்டு பிரான்ஸ் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து இன்று நாம் யாவரும் பிரஞ்சு மொழி பேசும் நிலைக்கும் தள்ளப்பட்டிருக்கலாம். ஆனால் அதற்கெல்லாம் முட்டுக்கட்டை போட்டவர் தனது ஐம்பதாவது வயதில் இங்கிலாந்தின் கிழக்கிந்திய வணிக நிறுவனத்தைப் பிரெஞ்சு வணிக அமைப்பின் தாக்குதல்களிலிருந்து காக்கும் பொறுப்பை ஏற்ற மேஜர் ஸ்ட்ரிங்கர் லாரன்ஸ். இவரே இந்தியாவின் இராணுவத்தை முதலில் கட்டமைத்து உருவாக்கியவர் என்ற பெருமை பெற்றவர். இந்திய ராணுவத்தின் தந்தை என்று ஆங்கிலேயர் இவரைக் குறிப்பிட்டார்கள் (The First English Commander-in-Chief, India – Major-General Stringer Lawrence).
இவர் உருவாக்கி வளர்த்தெடுத்த கிழக்கிந்தியக் கம்பெனியின் பாதுகாப்புப்படையே பின்னர் பிரிட்டிஷ் இந்தியாவின் இராணுவமாகவும், இந்திய விடுதலைக்குப் பிறகு இந்தியாவின் இராணுவமாகவும் ஆனது. இந்தியாவில் தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்தும் எண்ணத்துடன் திறம்படச் செயலாற்றிக் கொண்டிருந்த பிரஞ்சு ஆளுநர் டூப்ளே (Dupleix) வின் கனவைக் கலைத்து, பிரான்ஸ் நாட்டிலேயே டூப்ளே மதிப்பிழந்து போகும் அளவிற்குத் தக்காணத்தில் அதிரடியாகப் போர்களை இவர் மட்டும் நடத்தியிராவிட்டால் இங்கிலாந்து இந்தியாவில் கால் ஊன்றி இருக்கமுடியாது. நாம் படித்த வரலாற்று நூல்களில் இவர் முக்கியத்துவம் சிறப்பித்துக் கூறப்படவில்லை என்பது மட்டுமல்ல, இங்கிலாந்திலும் இவர் சாதனையை யாரும் சென்ற நூற்றாண்டிலேயே நினைவு வைத்திருந்ததாகத் தெரியவில்லை. அவ்வாறுதான் மேஜர் ஸ்ட்ரிங்கர் லாரன்ஸ் வரலாற்றை 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் நூலாக எழுதி வெளியிட்ட ஜான் பிட்டுல்ஃப் என்பவரும் கருதுகிறார் என்பதை அவர் நூலைப் படிக்கையில் அறிய முடிகிறது. வரலாற்றின் திருப்புமுனையை உருவாக்கிய ஒருவர் ஏனோ யாராலும் அறியப்படாமலே இருந்துவரும் நிலை தொடர்கிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 13 May 2019

பெண்களை கற்காலத்திற்கு அனுப்புவதா!?


siragu-pengal1
பெண்கள் இன்று பல துறைகளில் முன்னேறிக் கொண்டு வருகின்றனர். இந்தியா போன்ற மிக பிற்போக்கு கொண்ட ஒரு நாட்டில் பெண்களின் முன்னேற்றம் என்பது பல போராட்டங்களை முன்னெடுத்தே இங்கு சாத்தியப்பட்டது. ஆனால் அண்மைக்காலங்களில் மீண்டும் பெண்கள் வீடுகளுக்குள் முடங்கிவிட வேண்டும் என்று மத பாசிச சக்திகள் செயல்படுவது மிகப் பெரிய அச்சமாக உருவாகி உள்ளது. மக்கள் தொகையில் சரிபாதியாக உள்ள பெண்கள் ஒரு சமுகத்தின் வளர்ச்சிக்கு பங்களிப்பது மிகத் தேவை. ஆனால் அந்த மனித பங்களிப்பை மதப்பண்பாடு மொழிப்பண்பாடு என சிதைப்பது பெண்கள் இன்று அடைந்திருக்கும் முன்னேற்றத்தை பின்னோக்கி இழுத்துச் செல்லும்.

சமூக வலை தளங்களில் இயங்கும் பெண்களுக்கு தரப்படும் அச்சுறுத்தல்கள், அவர்கள் பெரியாரியல் கருத்துகளைப் பேசும் போது அந்தப் பெண்களை பாலியல் ரீதியாக வசை பாடுவது, பெண்களின் அங்கங்களை அவர்கள் அறியாது படம் எடுத்து மிரட்டுவது போன்ற கொடுஞ் செயல்களில் ஈடுபடுவது, டிக்டாக்கில் பேசும் பெண்கள் மீது மணவிலக்கு நடவடிக்கைகள் என்று பெண்களை அனைத்து மதங்களும் பாகுபாடில்லாமல் அழுத்துகின்றன.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 9 May 2019

குறிஞ்சி நிலத் தாவரங்கள்


siragu kurinji nilam1
கருவில் இருக்கும் குழந்தை நோயோடு மண்ணிற்கு வருகின்ற சூழலில் நமது வாழ்க்கை முறையுள்ளது. நம் ஆதிப்பண்பாட்டின் அழித்தொழிப்பினால், ஐம்பது வயதைக் கடந்து செல்வது இன்று அரிதாகிவிட்டது. கல்வியில் தொடங்கி உண்ணும் உணவு வரை வெள்ளையினப் பண்பாடே நம்மை ஆட்கொண்டுள்ளது. இந்தியக் கண்டத்தை ஐரோப்பியர்கள் தங்களுக்குரியதாகத் தகவமைத்துக் கொண்டதன் விளைவு சொந்த மண்ணில் சுகமற்று வாழ்ந்து வருகிறோம். உலகிற்கு நோய் நொடியின்றி நூறாண்டு காலம் வாழ்வதற்கான விதிகளைக் கற்றுக் கொடுத்த தமிழினம் சுகாதாரமற்ற விளிம்பிற்குச் சென்றுகொண்டிருக்கிற அவலநிலையின் வெளிப்பாடுதான் இயற்கையைப் புறந்தள்ளுதலின் அறியாமை. இரண்டாயிரம் ஆண்டுக்காலத் தொன்மையுடைய தமிழர்களின் சூழலியல் சார்ந்த வாழ்வியல் முறைகள் குறித்து சங்கத் திணைக்கவிதைகள் வழி அறியமுடிகின்றன. எனவேதான், இச்சங்க காலத்தை ‘இயற்கை நெறிக்காலம்’ என வரையறை செய்துள்ளனர். ஐவகை நிலப்பகுப்பும் நிலத்திற்கானச் சூழல் தகவமைவும், சூழல் சார்ந்த மாந்தர் வாழ்வியலும் சார்ந்த திணைமவியல் கோட்பாட்டுச் சூழல் கட்டமைப்பில்தான் தமிழர்கள் வாழ்ந்துள்ளனர். இந்நிலம் தவிர்த்து பிறதேசத்து செல்வாக்கினை தமிழர்கள் வாழவிரும்பாத காலம்தான் திணைமவியல்காலம்.
தமிழ் நிலத்தை வரையறை செய்துள்ள கருத்தைத் தொல்காப்பியத்தின் சிறப்புப் பாயிரம் “வடவேங்கடம் தென்குமரி ஆஇடைத் தமிழ் கூறும் நல் உலகத்து” வழி அறியலாகிறது. “ஓர் இனத்தின் வாழ்க்கைமுறையும் நம்பிக்கைகளும், குணநலன்களும், பண்பாட்டுக்கூறுகளும், அந்த இனம் சார்ந்திருக்கும் நிலத்தன்மை, தட்பவெட்பநிலை ஆகியவற்றின் பின்னணியில்தான் அமையும் என குரோஸ் ஹோட்ஜ் எனும் நிலவியல் அறிஞர் கூறுகிறார். தமிழர்களுக்கு இக்கருத்து பொருத்தமாக அமைந்துள்ளது. திணைமவியல் சூழலில் பயிர்விக்கப்பட்ட உணவுப் பயிர்கள், உழவுமுறைகள், பயிர்அறுவடை, பயிர்க்காவல் முறை ஆகியன குறித்த பதிவுகள் திணைக்கவிதைகளில் காணக்கிடைக்கின்றன. திணைக்கட்டமைப்பில் முதன்மையாக அமைந்த குறிஞ்சி நிலமே வேளாண்மையின் தோற்றுவாயாக இருந்திருக்க முடியும். நாகரிக வளர்ச்சியின் விளைவாக நீர் மேலாண்மை உருவாக்கத்தில் மருதம் உதயமாயிருக்க வேண்டும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 8 May 2019

தமிழர்களின் போர்க்கருவிகள்


siragu porkkaruvigal1
தமிழர் தொல்காப்பிய காலந்தொட்டே போர்க்கருவிகளைக் கையாள்வதிலும். அவற்றை வடிவமைத்துக் கொள்வதிலும் பழக்கமுடையவராக இருந்துள்ளனர், மேலும் தமிழர்களின் எயில்போர் மிகச் சிறப்பு வாய்ந்த்தாக இருந்துள்ளது, எயிலிடத்து பல கருவிகளை அவர்கள் பரப்பிப் போர் செய்துள்ளனர், தமிழர் பயன்படுத்திய மரபுசார் போர்க்கருவிகளை இரண்டு வகைகளாக பகுத்துக் கொள்ள இயலும், அவை 1, இயல்புப் போரில் பயன்படுத்தப் பெறும் வாள், வேல், வில் ஆகிய முப்போர்க்கருவிகள் 2, எயிற்போர்க்கருவிகள் என்பனவாகும், இவற்றுள் இயல்புப்போர் (அதாவது ஒருவகையில் தும்பைத் திணைப் போர்) என்பது மட்டும் இங்கு எடுத்துக் கொள்ள ப் பெற்று விளக்கப்படுகிறது,
மன்னர்களும் அவர்களின் போர்க்கருவிகளும்:

மன்னன் வழித்தே மலர்தலை உலகம் என்ற அற்றை மொழிக்கு ஏற்ப மன்னர்தம் வழித்ததாக அற்றைத் தமிழக மக்கள் செயல்பட்டனர், அவர்களின் பாதுகாப்பு கருதி மன்னர்கள் போர்ப்படைகளை வைத்திருந்தனர், நால்வகைப்படைகள் – மன்னர்களால் அமைக்கப் பெற்றிருந்தன, இம்மன்னர்கள் பொன், பொருள், நிலம், பாதுகாப்பு முதலானவற்றில் ஏதேனும் ஒரு காரணம் பற்றிப் போர் தொடங்குகையில் ஊர்க்கு, வீட்டிற்கு இத்தனைபேர் என்ற நிலையில் ஆண்கள் போரில் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 7 May 2019

உற்பத்தித்திறன்


siragu urpaththi thiran2
கச்சாப் பொருள்களை மனித உழைப்பினால் இயந்திரங்களில் ஈடுபடுத்தி மாற்றங்கள் செய்வதன் மூலம் பண்டங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. கச்சாப் பொருள்களையும், இயந்திரங்களையும் அப்படியே வைத்துக்கொண்டு மனித உழைப்பில் சில மாற்றங்களைச் செய்வதன் மூலம் அதிக அளவு பண்டங்களை உற்பத்தி செய்ய முடிந்தால் அதை உற்பத்தித்திறன் அதிகரிப்பு என்று சொல்கிறோம். கச்சாப்பொருள்கள், இயந்திரங்கள், மனித உழைப்பு மூன்றிலும் மாற்றம் கொண்டுவந்து, குறிப்பிட்ட உற்பத்திச் செலவுக்கும் உற்பத்தி ஆகும் பண்டங்களின் அளவுக்கும் உள்ள விகிதம் குறையுமானால், அதாவது ஒரு குறிப்பிட்ட உற்பத்திச் செலவில் அதிக அளவிலான பண்டங்களை உற்பத்தி செய்ய முடியுமானால் அதுவும் உற்பத்தித்திறன் அதிகரிப்பே.

இவ்வாறு உற்பத்தித்திறன் அதிகரிப்பதால் முதலாளிக்கு இலாபம் அதிகரிக்கும். ஆனால் இதை முன்னிட்டு எந்த ஒரு முதலாளியும் தொழிலாளர்களுக்குக் கூலியை உயர்த்துவது இல்லை. இந்த உற்பத்தித்திறன் அதிகரிப்பு நிகழ்வுகள் தொழில்கள் அனைத்திலும் நிகழ்கையில் முதலாளிகளுக்கு இலாப உயர்வு கிடைத்த விகிதத்தில் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்காததால் ஏற்றத்தாழ்வு அதிகமாகிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 1 May 2019

தமிழும் கணித்தலும்


Siragu tamil in computer2
முன்னுரை :
கணினியில் தமிழ் தோன்றியது 1980 காலப்பகுதியிலேயே தான் தனி மேசைக் கணினிகள் அல்லது தனியாள் மேசைக்கணினிகள் (personal desktop computers) விற்பனைக்கு விடப்பட்டன. பல வியாபார நிறுவனங்கள் இப்படிப்பட்ட பல கணினிகளைத் தயாரித்து வெளியிட்டு சந்தைக்கு முந்த முயன்று கொண்டிருந்தன. இவைகளும் தத்தமக்கெனத் தனியான இயக்கு தளங்களைக் (Operating system) கொண்டிருந்தன. பின்னர் மக் ஓ.ஸ்.(MacOS), மைக்ரோசாப்ட் (Microsoft DOS), ஓ.எஸ்.2 (OS2) வகை இயக்கு தளமுடைய கணினிகள் கிட்டத் தட்ட ஒரு பொதுக் கருவியாக உருவெடுக்கத் தொடங்கின. இவ் வகைக் கணினிகள் மேசைக் கணினிகளாக விற்பனைக்கு வந்தது கிட்டத்தட்ட 1983-84 அளவில். இவை வெளிவந்து கொண்டிருக்கும்போது தமிழ்க் கணினி வல்லுநர்கள், தமிழைக் கணினியில் கொண்டு வரும் முயற்சிகளைத் தொடங்கினர்.

கணினிகள் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே இயக்கக் கட்டளைகளையும் (operation commands) மறுமொழிகளையும் கொண்டிருந்தன. நமது ஆழ்மனத்தின் எண்ணங்கள், உள்ளத்தில் அமிழ்ந்து கிடக்கும் கனவுகள், ஆசைகள், கற்பனைகள் இவற்றை எல்லாம் பிறரிடம் பகிர்ந்து கொள்கையில், அவற்றின் சாரம் மாறாமல், தயக்கமோ, தடையோ ஏதுமில்லாது எடுத்துக் கூற ஓர் கருவியாக இருப்பது அவரவரது தாய் மொழி.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.