Monday 27 May 2019

குறளனும் கூனியும்


siragu ilakkiya kaadhal1
காதல் உலக உயிர்களின் தொடர்ச்சங்கலிக்கு வித்து. காதல் இல்லை எனின் இந்த பூமிப்பந்தின் வாழ்வு என்றோ முடிந்திருக்கும். உலக இலக்கியங்கள் அனைத்தும் காதல் உணர்வினை வெளிப்படுத்தும் பொழுது அழகான பெண் ஒருத்திக்கும் ஆணழகன் ஒருவனுக்குமிடையே உள்ள காதல் அன்பினையே பெரும்பாலும் விவரிக்கும். பெண்ணானவள் நீண்ட கருங்குழலும், கைகளில் வளை அணிந்தும் அன்ன நடை பயின்று வர, ஆணனவன் திரண்ட தோள்களோடு அகன்ற மார்புகளுடன் கையில் வாளேந்தி நிமிர்ந்த நடையுடன் நடந்து வர இருவரின் கண்களும் ஒரு நொடிக் கலப்பால் காதல் கொண்டு மகிழ்ந்தனர் என்று படித்திருப்போம். ஆனால் உருவத்தில் அழகில்லாதோர் காதல் கொள்வது பிழையா? அழகு காண்போரின் உள்ளத்து எண்ணத்தை பொறுத்தே உள்ளது. எந்த உயிருக்கும் காதல் உணர்வு பொதுவானது. கட்டமைக்கப்பட்ட அழகு காதலில் இரண்டாம் பட்சமே என்று கலித்தொகை பாடல் ஒன்று இயம்புகிறது. மருதன் இளநாகனார் மருதக்கலி 94வது பாடலில் அழகான காதல் உணர்வினை குறளனுக்கும் கூனிக்கும் நடுவில் தன் பாடல் வரிகளில் விவரிக்கின்றார். குறளன் இரண்டடி உயரம் கொண்டவன். கூனி வளைந்த முதுகு கொண்டவள். அவர்கள் இருவருக்கும் இடையில் நடக்கும் ஊடல் பின் எவ்வாறு காதலாக மாறுகின்றது என்பதை காண்போம்.
பாடல் :
மருதன் இளநாகனார், குறளனும் கூனியும் சொன்னது
குறளன்:

என் நோற்றனை கொல்லோ?
நீர் உள் நிழல் போல் நுடங்கிய மென் சாயல்
ஈங்கு உருச் சுருங்கி
இயலுவாய்! நின்னோடு உசாவுவேன், நின்றீத்தை!

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment