Wednesday 22 May 2019

மழை ஏன் பெய்கிறது? (சிறுகதை)


siragu rain
மரம் செடிகொடிகளின் இலைகளில் மழைத்துளிகள் துளிர்த்து இருந்தன. வீசியவாடைக் காற்றில் அத்துளிகள் சிறுசாரலாய் முகத்தில் தெறித்தன. நந்தினி தன் வீட்டுக் கொல்லையில் இருந்தாள். அவள் ஊஞ்சல் ஆடிக் கொண்டிருந்தாள். எட்டு வயது சிறுமி அவள். சற்றுமுன் பெய்தமழையின் குளிர்ச்சி கொல்லை எங்கும் நிறைந்திருந்தது. நந்தினிக்கு திடீரென்று “மழை ஏன் பெய்கிறது?” – என்ற சந்தேகம் வந்தது.
மேகத்தேரில் பவனி சென்று கொண்டிருந்த வருண பகவான் நந்தினியைப் பார்த்தார். அவர் அவள் முன்னே தோன்றினார். வருணனின் பேரழில் தோற்றம் அவளை வணங்கச் செய்தது. நந்தினி அவரிடம் “தாங்கள் யார்?”–என்று கேட்டாள். “நான் வருணன்! மழையின் கடவுள்!”–என்றார் அவர். சற்றுமுன் தன் மனத்தில் எழுந்த சந்தேகத்தை அவரிடம் கேட்டாள்.
“மழை பெய்தால் உனக்கு எப்படி இருக்கிறது?”–கேட்டார் வருணன்.
“மழை பெய்தால் மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறது!”–நந்தினி சொன்னாள்.
“அதற்காகத் தான் மழை தருகிறேன்!”–என்ற வருணன் நந்தினி தனது பதிலில் திருப்தி அடையவில்லை என்பதைப் புரிந்துகொண்டார்.

“கருணை, கொடை, அருள், அமுது இந்த நான்கு வார்த்தைகளுக்கும் பொருள் தெரிந்து கொண்டுவா! நான் ஏன் மழை தருகிறேன் என்பதைச் சொல்கிறேன்!”–என்றவர் அங்கிருந்து மறைந்து போனார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment