Tuesday 7 May 2019

உற்பத்தித்திறன்


siragu urpaththi thiran2
கச்சாப் பொருள்களை மனித உழைப்பினால் இயந்திரங்களில் ஈடுபடுத்தி மாற்றங்கள் செய்வதன் மூலம் பண்டங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. கச்சாப் பொருள்களையும், இயந்திரங்களையும் அப்படியே வைத்துக்கொண்டு மனித உழைப்பில் சில மாற்றங்களைச் செய்வதன் மூலம் அதிக அளவு பண்டங்களை உற்பத்தி செய்ய முடிந்தால் அதை உற்பத்தித்திறன் அதிகரிப்பு என்று சொல்கிறோம். கச்சாப்பொருள்கள், இயந்திரங்கள், மனித உழைப்பு மூன்றிலும் மாற்றம் கொண்டுவந்து, குறிப்பிட்ட உற்பத்திச் செலவுக்கும் உற்பத்தி ஆகும் பண்டங்களின் அளவுக்கும் உள்ள விகிதம் குறையுமானால், அதாவது ஒரு குறிப்பிட்ட உற்பத்திச் செலவில் அதிக அளவிலான பண்டங்களை உற்பத்தி செய்ய முடியுமானால் அதுவும் உற்பத்தித்திறன் அதிகரிப்பே.

இவ்வாறு உற்பத்தித்திறன் அதிகரிப்பதால் முதலாளிக்கு இலாபம் அதிகரிக்கும். ஆனால் இதை முன்னிட்டு எந்த ஒரு முதலாளியும் தொழிலாளர்களுக்குக் கூலியை உயர்த்துவது இல்லை. இந்த உற்பத்தித்திறன் அதிகரிப்பு நிகழ்வுகள் தொழில்கள் அனைத்திலும் நிகழ்கையில் முதலாளிகளுக்கு இலாப உயர்வு கிடைத்த விகிதத்தில் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்காததால் ஏற்றத்தாழ்வு அதிகமாகிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment