Wednesday 24 July 2019

இலக்கியங்களில் கல்வி


siragu-kalviyiyal1
செம்மொழி இலக்கியங்களில் கல்வி பற்றிய செய்திகள் பல காணப்படுகின்றன. சங்க காலத்தில் கற்றறிந்த புலவர்கள் அவையாகத் தமிழ்ச்சங்கங்கள் அமைந்திருந்தன. பெண்பாற் புலவர்கள் முப்பதுக்கும் மேலாக இருந்தமைக்கான சான்றுகள் உள்ளன. இவ்வகையில் கல்வி நிலையில் சிறப்புற்ற சமுதாயமாக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே தமிழினம் இருந்துள்ளது. சங்ககால கல்வி நிலையை விளக்குவதாக இக்கட்டுரை அமைகிறது.
தொல்காப்பியத்தில் கல்வி

பண்டைய இலக்கணமான தொல்காப்பியத்தில் கல்வி பற்றிய செய்திகள் காணப்படுகின்றன.
“ஒதல் பகையே தூதிவை பிரிவே” அகத்திணையியல்-27
“ஓதலும் தூதும் உயர்ந்தோர் மேன” அகத்திணையியல் 28
ஆகிய நூற்பாக்கள் கல்வி சார்ந்த செய்திகளை அளிக்கும் நூற்பாக்கள் ஆகும்.
தொல்காப்பிய காலத்தில் பிறநாட்டுக்குக் கல்வி கற்கச் செல்வது வழக்காக இருந்தது. கல்வித்தரத்தில் உயர்ந்தோரை மன்னன் மதிப்பான் என்ற நிலைய இருந்தது. கல்வியில் உயர்ந்தோர் சான்றோர் எனப்பட்டனர். 

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment