Tuesday 9 July 2019

பா.ச.க-வின் ஆட்சியில் பலவீனமாக்கப்படும் இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவம்


Siragu five years of bjp govt
இரண்டாவது முறையாக ஆட்சியில் அமர்ந்திருக்கும் பா.ச.க அரசு, படு வேகமாக தங்கள் வேலைகளை முடுக்கி விட்டிருக்கிறது. ஆட்சியில் அமர்ந்து, இன்னும் இரு மாதங்கள் கூட ஆகாத நிலையில், தங்களின் ஒற்றை ஆட்சி என்ற அஜெண்டாவை நோக்கி விரைவாக நடைபோடுகிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே கலாச்சாரம், ஒரே கல்வி, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே சிவில் சட்டம் என்றும் கூறி அதற்கான செயல் வடிவங்களை ஏற்படுத்துவதற்கான முயற்சியில் அதி தீவிரமாக இறங்கிய மத்திய பா.ச.க அரசு இப்போது கையில் எடுத்திருக்கும் விடயம், ஒரே நாடு, ஒரே ரேசன் அட்டை என்பதாகும்.

இவர்கள் நடைமுறைப்படுத்த துடிக்கும் இந்த ஒரே என்ற செயல், ஒற்றை ஆட்சி முறையை நோக்கித்தான் நகர்த்தப்படுகிறது என்பது இந்திய அரசியலை உற்று கவனிப்பவர்களுக்கு நன்கு விளங்கும். அதுவும் இந்த ஒற்றை ஆட்சி என்பதன் உள்நோக்கமே, ஒரே இந்துராஷ்டிரம் என்பதாகும். ஒரே மதம் என்பது இந்து மதமாகும். ஒரே மொழி என்பது முதலில் இந்தி, அதன் பிறகு சமஸ்கிருதம் என்ற முறையில் நம் மீது திணிக்கப்படும் சர்வாதிகார முறை அல்லாமல் வேறில்லை என்பதை நாம் உணரவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். பா.ச.க கூறும் ஒரே தேர்தல் என்பதும், சனநாயகத்திற்கு வேட்டு வைக்கும் செயல்தான். மக்களாட்சி முறை ஒழிக்கப்பட்டு, சனாதிபதி ஆட்சி முறையை கொண்டுவருவதற்கான மறைமுக திட்டமாகும். ஏதோ ஒரு காரணத்தால், ஒரு மாநில ஆட்சி கலைக்கப்பட்டால், பொதுத் தேர்தல் வரும் வரை, மக்களால் தேர்ந்தெடுக்க முடியாத, ஆளுநர் ஆட்சி நடைபெறும் சூழல் ஏற்படும். மற்றும் இது தனக்கு இணங்காத மாநில ஆட்சியை காழ்ப்புணர்ச்சி காரணமாக நீக்கும் செயலாகக்கூட அமைய வாய்ப்பிருக்கிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment