Friday 26 July 2019

பறவைகள்


siragu paravaigal2
குயில் ஓசை, மயில்தோகை , தூக்கணாங்குருவிக்கூடு, முதலானவை வியப்பானவை. கிளி, புறா,அன்னம், அன்றில் போன்றவை மக்களுக்கு மகிழ்ச்சித் தருகின்றன. காக்கை, குருவி, வீட்டுக்கோழி முதலியன சுற்றுப்புறக் கழிவுகளை உட்கொள்கின்றன. பறவையின் எச்சங்களால் நிறைய வனங்கள் உருவாகியுள்ளன. தாவரங்களிலுள்ள பூச்சி, புழுக்களையும் வயல்வெளிகளையும் பாழாக்கும் எலி, சுண்டெலி போன்றவற்றையும் பறவைகள் கட்டுப்படுத்துகின்றன. மேலும் மனிதர்கள் புலி, சிங்கம் போன்ற விலங்குகளுக்குப் பயப்படுவது போல், கழுகு, பருந்து வல்லூறு, கிளி போன்ற பறவைகளுக்குப் பயப்படுவதில்லை பறவையியல் பேரறிஞர் சலீம் அலி ‘மனிதர்களின்று பறவைகளால் வாழமுடியும், ஆனால் பறவைகளின்றி மனிதர்களால் வாழ முடியாது என்று குறிப்பிடுவார். இத்தகு சிறப்பு வாய்ந்த பறவைகள் சங்க காலத்தில் மக்களால் எவ்வாறு அறியப்பட்டிருந்தன என்பதை அறிலாம்.
தொல்காப்பியம்

உயிர்கள் பகுப்பைத் தொல்காப்பியம்
‘ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
இரண்டறி வதுவே அதனொடு நாவே
மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே
நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே
ஆறறி வதுவே அவற்றொடு மனளே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே’
(மரபியல்-நூற்பா-27)
என்று கூறுகிறது. இவ்உயிர் பகுப்பில்
மாவும் புள்ளும் ஐயறி விளவே
பிறவும் உளவெ அக்கினைப்பிறப்பே
என்று கூறுகிறது. எனவே ஐந்தறிவு உயிராக பறவையினம் பாகுபடுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment