Wednesday 31 July 2019

மத்திய பா.ச.க அரசு, சமூகநீதிக்கு முற்றிலும் எதிரான அரசு


Siragu ida odhukkeedu2
பா.ச.க மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் சமூக அநீதி படு வேகமாக அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது தெளிவான உண்மை. அதில் எல்லாவற்றையும் விட அதி பயங்கரமானதாக இருக்கிறது. கடந்த ஆட்சியில் பா.ச.க அரசினால் சட்டமாக்கப்பட்ட இந்த பொருளாதார ரீதியாக பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர்கான 10% இடஒதுக்கீடு. நாம் துவக்கத்திலிருந்தே, கூறி வருகிறோம். இட ஒதுக்கீடு என்பது ஒரு வறுமை ஒழிப்புத் திட்டமல்ல, அது ஈராயிரம் ஆண்டுகளாக சமூக ரீதியாக, கல்வி ரீதியாக உரிமைகள் மறுக்கப்பட்டு, மிகவும் மோசமாக, இழிநிலையில் ஒடுக்கிவைக்கப்பட்டிருந்த, இந்த மண்ணின் மக்களாகிய நம்முடைய வளர்ச்சிக்காகவும், முன்னேற்றத்திற்காகவும், சமூகத்தில் எல்லோரும் சமநிலை எய்திடவேண்டும் என்ற காரணத்தாலும், சுதந்திர இந்தியாவில், டாக்டர் அண்ணல் அம்பேத்கார் மற்றும் அப்போதைய பிரதமர் பண்டிட் ஜவகர்லால் நேரு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதில், பொருளாதார ரீதியாக என்று எதிராக உள்நுழைக்கக் கூடாது என குறிப்பிட்டு வருகிறோம். ஆனால், மத்திய பா.ச.க அரசு இந்த பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு 10% இடஒதுக்கீடு என்ற சட்டத்தை கொண்டுவந்து சமூகநீதியை குழிதோண்டி புதைக்க எத்தனிக்கிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment