Thursday 29 August 2019

மயிலை சிவ முத்துவின் குழந்தைக் கதைகளின் நோக்கும் போக்கும்


siragu mayilai sivamuththu1
குழந்தைகளுக்கான கதைகள் குழந்தைகளின் சிக்கல்களை முன்வைத்து அமையவேண்டும். அவர்களுக்கு கதைகள் பெரும்பாலும் ‘‘ஒரு ஊரில் ஒரு பெரியவர் இருந்தார்” என்ற நிலையிலேயே தொடங்கவேண்டும். சிறுகதை போன்று ஏதோ ஒரு இடத்தில் தொடங்கி ஏதோ ஒரு இடத்தில் முடிதலாகச் சிக்கலும் சிடுக்கும் நிறைந்ததாக இருந்துவிடக் கூடாது. மேலும் கதையின் கருப்பொருளும் குழந்தைகளை மையமிட்டு அமைந்திருக்க வேண்டும். குழந்தைகளின் பழக்க வழக்கங்கள், பள்ளி வாழ்வு, பெற்றோரை, பெரியோரை மதித்தல் போன்றனவே கருப்பொருள்களாக அமைதல் வேண்டும். மேலும் படங்கள், பெரிய பெரிய எழுத்துகள், சிறிய சிறிய கதைகள் இவையே குழந்தைகளின் கதை இலக்கியத்திற்கான வரையறையாக இருக்க முடியும். மேலும் நடை என்பது அவர்களுடன் தொடர்புடையதாக அமையவேண்டும். சிறுகதை ஆசிரியரின் இலக்கியப் புலமைக்கு இங்கு இடமிருக்க முடியாது. இவ்வகையில் குழந்தைகளின் கதைகள் தனித்த வாசிப்பு அனுபவம் மிக்கன.

குழந்தைகளுக்கான கதைகளை எழுதிய குழந்தை எழுத்தாளர்களின் குறிக்கத்தக்கவர்களில் ஒருவர்  மயிலை சிவ முத்து ஆவார். இவரின் பாடல்கள், கதைகள் குழந்தைகளின் உலகம் சார்ந்தவை. இன்றைய குழந்தைகள், இக்கதைகளை, இக்கவிதைகளை வாசித்து உணர்ந்து அக்கதைகளுடன், கவிதைகளுடன் இணைந்து செல்ல இயலும். அத்தகைய பொது அறக் கதைகளை குழந்தைகளுக்கு வழங்கியவர் மயிலை சிவ முத்து.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 27 August 2019

இன்னா நாற்பது குறிப்பிடும் இன்னாதவை


siragu innaa naarpadhu1
சங்கம் மருவிய காலத்துப் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான ‘இன்னா நாற்பது’ என்பது மக்களை நல்வழிப்படுத்தும் அறவுரைகளை 40 வெண்பாக்களில் வடித்துக் கொடுக்கும் ஓர் சிறிய நூலாகும். இவற்றுடன் துவக்கத்தில் ஒரு கடவுள் வாழ்த்துப் பாடலும் உண்டு. அப்பாடல் வைதிக சமயத்துக் கடவுளரான சிவன், பலராமன், திருமால், முருகன் ஆகிய கடவுளரைத் தொழவேண்டும் என்ற கருத்தை உரைக்கின்றது. இப்பாடல் தவிர்த்து இறை என்னும் பொருள் குறித்தவையாகவோ இறைவழிபாடு, கடவுள், தெய்வம், இம்மை, மறுமை, ஆன்மா போன்ற சமயக் கருத்துக்களோ நூலெங்கிலும் காணப்படவில்லை. கடவுள் வாழ்த்தைத் தவிர்த்து, அறம் வலியுறுத்தும் நோக்கம் கொண்ட மற்ற 40 பாடல்களிலும் இறை நம்பிக்கை குறித்தும், நல்வழி நடத்தல் என்பதே மறுமையின் நல்வாழ்வுக்கு என்ற கருத்தும் காணப் பெறாததால் இக் கடவுள் வாழ்த்துப் பாடல் பிற்கால இடைச்செருகல் எனக் கருத வழியுண்டு.

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் 40 என்ற தொகை நூல்கள் என்ற சிறப்பைப் பெறுவன இன்னா நாற்பது, இனியவை நாற்பது, கார்நாற்பது, களவழி நாற்பது என்ற நான்கு நூல்கள் மட்டுமே. இவற்றுள் இன்னா நாற்பதும் இனியவை நாற்பதும் அறநூல்களாக மக்களை வாழ்வில் நெறிப்படுத்தும் கருத்துகளைக் கொண்டவை. இன்னா நாற்பது வாழ்வில் எவையெவை துன்பம் தருவன என்பவற்றை ‘இன்னாதவை’ எனக் குறிப்பிட்டுச் செல்கிறது. இன்னாதவை என்பவை பாடலின் பொருளுக்கேற்ப ‘இனிமையற்றவை’ எனவோ அல்லது ‘தகுதியற்றவை’ எனவோ அல்லது ‘பயனற்றவை’ எனவோ பொருள் கொண்டு அமையும். இதற்கு மாறாக வாழ்வின் ‘இனியவை’ எவை என்று கூறி அறநெறியை வலியுறுத்துவது இனியவை நாற்பது. இவையிரண்டையும் தவிர்த்து கார்நாற்பதும், களவழி நாற்பதும் முறையே தமிழுக்கே உரிய ‘அகம்’ ‘புறம்’ என்ற திணைகளைக் கருப்பொருளாகக் கொண்டவை.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 26 August 2019

தமிழ்நாடு முதன்மை மாநிலம்


Siragu tamilnadu1
தமிழ்நாட்டை தனியாகப் பார்த்தால் நம்முடைய வளர்ச்சி என்ன என்று நம்மால் அறிய முடியாது. ஒட்டு மொத்த இந்தியாவுடன் ஒப்பிட்டுப் பார்த்தால்தான் புரியும். தமிழ்நாட்டின் ஐ.ஏ.எஸ் அதிகாரியாகப் பணியாற்றியவர் எஸ். நாராயணன். அவர் ஒரு தமிழ்நாட்டுப் பார்ப்பனர். மத்திய அமைச்சரவையின் செயலாளராகவும் இருந்தார். ஓய்வு பெற்ற பின்னால், உலக நாடுகளுக்குச் சென்று பொருளாதார ஆய்வாளராகவும் ஆலோசகராவும் இருக்கிறார். அவர் 6 மாதத்திற்கு முன்னால் dravidian year என்ற நூலை எழுதி வெளியிட்டிருக்கிறார். அதில் திராவிட இயக்க ஆட்சியில் துணை ஆட்சியராக, மாவட்ட ஆட்சியராக, அரசு செயலாளராக பணியாற்றியபோது அவருக்குக் கிடைத்த அனுபவங்களை எழுதியுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்த முன்பும் அவர் பதவியில் இருந்தார், ஆட்சிக்கு வந்த பின்பும் இருந்தார்.

“முன்பெல்லாம் ஏதேனும் ஒரு பகுதியில் ஒரு குறை இருக்கும், அதை அரசால் தீர்க்க முடியுமென்றால், அரசு அதிகாரிகள் அறிக்கை அனுப்புவார்கள், எங்களுக்கு அறிக்கை வரும். ஆனால் திராவிட முன்னேற்றக் கழகம் ஆரம்பித்த பின்னால்தான் கட்சியின் பிரதிநிதிகள் மக்களின் பிரச்சனைகளை எங்களிடம் எடுத்துவந்து பேசத் தொடங்கினார்கள். அரசு அதிகாரிகளிடமிருந்து நாங்கள் பெற்ற குறைகளை விட, கட்சியின் பிரதிநிதிகள் எடுத்து வைத்ததுதான் மிக அதிகம். தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளான சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்ல, கட்சியின் அனைத்து நிலை பொறுப்பில் இருப்பவர்களும் வந்து எளிய மக்களின் கோரிக்கையை அன்றாடம் எங்களிடம் பேசியதெல்லாம் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்த பின்னர்தான் என்று பதிவு செய்திருக்கின்றார். தமிழ்நாட்டை விட்டு வெளியே போனபின்புதான் தமிழ்நாட்டை அவர் புரிந்து கொள்கின்றார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 22 August 2019

நீரியல்


siragu neeriyal5
இலக்கியங்கள் காலந்தோறும் நடைபெற்ற நிகழ்வுகளின் வரலாற்றுப் பெட்டகங்களாக விளங்குகின்றன. இலக்கியங்களின் வாயிலாக ஒரு நாட்டின் வரலாற்றையும், மக்களின் பழக்கவழக்கங்களையும் அறியலாம். குறிப்பாக பண்டைக்கால மனிதன் இயற்கையோடு இயைந்த வாழ்வினையே மேற்கொண்டான். இவ்வுலகம் பஞ்சபூதங்களான நிலம், நீர், காற்று ஆகாயம், நெருப்பு ஆகியவற்றைக் கொண்டு இயங்குகிறது. உலகில் தோன்றிய உயிரினங்களில் ஒன்றாகிய மனிதனும் இவற்றின் துணைகொண்டே செயல்படுகிறான். உலகமக்களின் உயிர் வாழ்விற்கு மட்டுமின்றி அனைத்துப் பயன்பாட்டிற்கும் நீர் உதவுகிறது. நீர் இல்லாமல் எதுவும் செய்ய இயலாது. அத்தகைய நீரின் இன்றியமையாமையை விளக்குவதே இக்கட்டுரையாம்.
நீரின்றி அமையாது உலகம்

மனிதனை மகிழ்விப்பதும் வாழ்விப்பதும் இயற்கையாகும். இயற்கையின் இயக்கத்தில் தான் மனிதனின் வாழ்க்கையும் இயங்குகிறது. இலக்கியங்கள் இயற்கைக் காட்சிகளின் வழியாக மனிதவாழ்வினைப் போதித்தன. சங்ககாலப் புலவர்கள் மாந்தர்களை வருணிப்பதற்கும் வாழ்வியல் கருத்துக்களை எடுத்துரைப்பதற்கும் நிலத்தின் வகைப்பாட்டினைச் சுட்டுவதற்கும் இயற்கைக்காட்சிகளைப் பயன்படுத்தினர் என்றால் மிகையாகாது. இயற்கைக்கும் மனிதன் வாழ்வதற்கும் அடிப்படை ஆதாரமாக விளங்குவது தண்ணீர் தான். பழங்காலம் முதல் இன்று வரை மக்கள் நீருக்கு உரிய மரியாதையும் முக்கியத்துவமும் தந்து வருகின்றனர். மக்கள் வாழ்வு நீரையே நம்பி இருந்துள்ளமையையும் அதனைப் போற்றியும் பாதுகாத்தும் வந்துள்ளமையும் சங்ககால இலக்கியங்கள் பறைசாற்றுவதனை அறிந்துணரலாம். இலக்கண நூல்கள் உணர்த்தும் முதற்பொருள் கருப்பொருள் உரிப்பொருள் ஆகிய மூன்றனுள் கருப்பொருள்கள் பதினான்கனுள் ஒன்றாகக் கருதப்படுவது நீர்நிலையாம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 21 August 2019

வணிக மேலாண்மை


siragu vanigam1
பொருள் ஈட்டும் நோக்குடன் தன்னிடம் உள்ள மூலப்பொருட்களை வைத்து தொழில் செய்யும் முறைமையே வணிகமாகும் என்பர். சிறந்த வணிகத்திற்கான மேலாண்மை நடவடிக்கைகளை திருக்குறள் வழி ஒப்பிட்டறிவதே இக்கட்டுரையாகும்.

வரிச் கோண்ட்ஸ் என்ற அறிஞர் “மேலாண்மை என்பது நிருவனம் அல்லது அமைப்பின் இலக்குகளை அடைய மனித வளம், பொருள் வளம் மற்றும் நிதிவளம் ஆகியவற்றை சிறப்பாக பயன்படுத்தும் வழிமுறை” என்று வரையறுக்கிறார். மேலைநாடுகளில் மேலாண்மை என்ற துறை வளர்ச்சி பெற்று எறக்குறைய நூற்று இருபத்தைந்து ஆண்டுகள் கடந்து விட்டன. இந்நிலையில் வளரும் நாடுகளுக்கு இம்மேலாண்மை தத்துவங்கள் பரவி அவையும் அத்தத்துவங்கள் வழி நிற்க முயலுகின்றன. இவற்றோடு பழமையான மொழிகளில் இலக்கியங்களில் பழ மேலாண்மை கூறுகள் அமைந்து கிடைப்பதை இன்றைக்கு அறிய முடிகிறது. குறிப்பாக திருக்கயளில் பல்வேறு மேலாண்மைச் சிந்தனைகள் விரவிடக்கிடக்கின்றன.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 20 August 2019

சங்க இலக்கியம் உணர்த்தும் பகுத்தறிவுச் சிந்தனைகள்

Siragu ovvoru nodiyilum
பகுத்தறிவுக் கொள்கை இன்றைய காலத்தில் தோன்றியவை அல்ல மனிதன் என்று சிந்திக்கத் தொடங்னானோ அன்றே உண்டானவையாகும். பகுத்தறிவு என்ற பெயர்தான் பிற்காலத்தில் வந்ததே தவிர அதன் பொருண்மை அல்லது அதன் பொருள் எனப்படும் பகுத்து ஆராயும் முறை சிந்திக்கத் தொடங்கிய நாளில் இருந்தே இருந்து வருகின்றது. ஒவ்வொரு காலகட்டத்திலும் மனிதனை நல் வழிப்படுத்த சில பகுத்தறிவுக் கூறுகள் எடுத்துக் கூறபட்டன.அந்த வழிமுறையில் பகுத்தறிவுக் கொள்கையினை மனிதனுக்கு உணர்த்துவதில், சங்க இலக்கியத்தின் பங்கு என்ன என்பதனை இக்கட்டுரை ஆராய்ந்து விளக்குகிறது.

மனித மூளையின் ஆற்றலினால் தோன்றுகின்ற சிந்தனா சக்தியின் விழைவால் அவனது மனதிலே நன்றும் தீதுமாய் எண்ணங்கள் கலந்திருக்கின்றன. இவற்றுள் நல்லது எது தீயது எது என அறியும் நுண்ணியல் ஆற்றலே பகுத்தறிவாகும். எந்த ஒரு கொள்ளைகையையும் கோட்பாட்டையும் அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் அதன் உண்மைத் தன்மையை ஆராய்ந்து ஏற்றுக் கொள்வதோ அல்லது ஏற்காமல் விட்டு விடுவதோ பகுத்தறிவு ஆகும். எந்த ஒன்றின் உண்மைத் தன்மையை அறிவதுதான் பகுத்தறிவு.இது ஏன் என்ற கேள்வி கேட்கப்படுவதன் மூலமே தெளிவுபடும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Friday 16 August 2019

போரியல்


siragu thalayaalangaanam1
போர் என்பது ஒரு நாட்டின் அழிவு. ஒரு இனத்தின் அழிவு. போரினால் பெற்றோர்கள் தங்களின் வாரிசுகளையும், குழந்தைகள் தங்களின் பெற்றோர்களையும் இழப்பதே உச்சகட்ட கொடுமை. அதனால்தான் இன்று உலகமெங்கும் உள்ள மக்கள் அமைதியை விரும்புகிறார்கள். ஆனால் இவையனைத்தும் தெரிந்தும்கூட உலகின் சில மூலைகளில் இன்றும் போர்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இரண்டாம் உலகப்போர் நடந்தது. இதில் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு நகரத்தையே அழிக்கக்கூடிய அணுகுண்டுகள் பயன்படுத்தப்பட்டன. இது மட்டுமல்லாமல் கனரகப் பீரங்கிகள் இயந்திரத் துப்பாக்கிகள், நீர்மூழ்கிகள், வான்வழிப் போர்முறைகள் போன்றவைகளும் பயன்படுத்தப்பட்டன.
விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் வளர்ச்சி அடையாத கால காட்டமான சங்க காலத்தில் நம் தமிழ் மன்னர்கள் போர்கள் பல புரிந்து பல நாடுகளையும் கைப்பற்றியுள்ளனர். சங்க காலத்தில் வாழ்ந்த புலவர்கள் மன்னனின் போர்த்திறத்தையும் போரில் வெற்றிப்பெற்றதையும் பாடியிருக்கின்றனர். சில புலவர்கள் போரினால் ஏற்பட்ட கொடுமைகளை பாடியிருக்கிறார்கள். இன்னும் சில ரோம மன்னர்கள் பகையின்றி ஒற்றுமையுடன் வாழ பாடுபட்டிருக்கிறார்கள். சங்ககாலத்தில் நடந்த போர்களை பற்றி புலவர்கள் பாடிய சில பாடல்களைப் பற்றியும் போரை விரும்பாத சில புலவர்களை பற்றியும் விரிவாக அலசி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 14 August 2019

இந்திய செய்தி நிறுவனங்களின் சாதீய முகம்


siragu saadhi1
மக்களாட்சியின் அடிப்படை அதன் பன்முகத்தன்மை கொண்ட மக்களின் உரிமைகளின் மேல் கட்டமைக்கப்படுகிறது. அதனால் மக்கட்தொகையின் உண்மையான பிரதிநிதியாக இருக்க வேண்டியது மக்களாட்சி முறையைப் பின்பற்றும் அரசு ஒன்றின் கடமையாகிறது. பன்முகத்தன்மை கொண்ட மக்களின் விகிதாச்சாரம் மக்களின் பிரதிநிதிகளாகத் தேர்வு செய்யப்படுபவரிடம் இல்லாத பொழுது அதை நீக்க நடவடிக்கை எடுக்க அரசு முயல வேண்டும். சிறுபான்மையினர், விளிம்புநிலை மக்கள், பெண்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் எனப் பாலின, வர்க்க, வயது, சமயம், இனம், நிற எந்த வேறுபாடாக இருப்பினும் அவர்களது பிரதிநிதித்துவம் இல்லாமல் போகும் பொழுது அவர்கள் உரிமையைத் தேவையை அரசுக்குத் தெரிவிக்கும் வாய்ப்பும் இல்லாது போகும். அந்த நிலை வாய்ப்பிழந்தவர்களின் முன்னேற்றத்தையும் பெரிதும் பாதிக்கும். மக்களாட்சியின் அரசுத்துறை, நீதித்துறை, சட்டமன்றம் போன்றவற்றில் இன்றுவரை தலித் மற்றும் பழங்குடியினர் தேவையை உரைக்க வாய்ப்பில்லாமல் இருக்கிறது. மக்களாட்சியின் நான்காவது தூண் எனப்படும் ஊடகத்துறையும் இதற்கு விதிவிலக்கல்ல என்பதைத்தான் ஒரு புதிய ஆய்வறிக்கை கூறுகிறது.
ஊடகத்துறையில் நாட்டு மக்களின் பிரதிநிதித்துவம் இருந்தாலே அது மக்களாட்சிக்குச் சரியான தகவலைத் தந்து கடமையாற்ற முடியும். ஆனால் … பன்னாட்டு ‘சிவில் சொசைட்டி நிறுவனமான’ ஆக்ஸ்ஃபாம் இந்தியாவும் வலைத்தளத்தில் இயங்கி வரும் செய்தி நிறுவனமான நியூஸ் லாண்டரியும் இணைந்து ஆகஸ்ட் 2 ஆம் நாளன்று புது டெல்லியில் நடந்த மீடியா ரம்பிள் (Media Rumble) என்ற ஊடகச் சூழல் பற்றிய கருத்தரங்கில் வெளியிட்ட ஆய்வறிக்கை ஒன்று இந்திய ஊடகங்களில் ஒடுக்கப்பட்ட செய்தியாளர்களின் பிரதிநிதித்துவம் என்ன என்பதை விவரிக்கிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 13 August 2019

பிரிவு 370 நீக்கியது சரியா?


siragu-pirivu-370-2
அண்மையில் நரேந்திர மோடி அரசு பிரிவு 370 ஐ நீக்கி ஜம்மு & காஷ்மீர் மாநில உரிமையை தடை செய்து அதனை யூனியன் டெரிட்ரீயாக அறிவித்து உள்ளது. யூனியன் டெரிட்ரீகளை மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுக்கும் நேரத்தில் ஒரு மாநிலத்தின் உரிமைகளை நடுவண் அரசு பறித்திருப்பது மக்களாட்சியின் தோல்வி.
அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னர் பிரிவு 370 ஐ பற்றி நிறைய விவாதங்கள் நடைபெற்றன. அன்று அதிகாரத்தில் இருந்த காங்கிரசு கட்சிக்கு தனி அந்தஸ்த்து தரும் பிரிவு 370 இல் விருப்பம் இல்லை என்ற போதும், பாகிஸ்தானின் தலையீடு காரணமாகவும், ஐ.நா வின் தலையீடு காரணமாகவும் அப்போதைய பிரதமர் நேரு இதற்கு ஒத்துக்கொண்டார். மேலும் இந்தியாவோடு ஜம்மு & காஷ்மீர் இணைக்கப்பட வேண்டும் என்பதை மகாராஜா ஹரி சிங் தான் கையெழுத்திட்டார், அவருக்கு மக்களின் ஆதரவு இல்லாத நிலையில் சிறப்பு அதிகாரம் கொண்ட மாநிலமாக ஜம்மு & காஷ்மீரை இந்தியா அங்கீகரித்தது.

ஆர்.எஸ்.எஸ் காந்தியின் கொலையில் தொடர்பிருந்த காரணத்தினால் மறைமுகமாக இயங்கிக் கொண்டு இருந்தது. அதனால் ஆர்.எஸ்.எஸ் இந்து மகா சபையின் மூலமாக எதிர்ப்பை பதிவு செய்தது என்ற போதும் அவர்களால் தடுக்க முடியவில்லை. அன்று செய்ய முடியாத அநீதியை முழு பலத்துடன் ஆட்சிக்கு வந்துவிட்டதால் இன்று செய்ய துணிகின்றனர்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 8 August 2019

தொகுப்பு கவிதை (ஊசி போட்டுக்கோ அம்மு, எனது நண்பன் ஒரு பத்ரிகைக்காரன்)

ஊசி போட்டுக்கோ அம்மு


                                                -இல.பிரகாசம்
siragu oosi pottukko1
ஊசியை போட்டுக் கொள்
வேண்டாம்.
போட்டுக் கொண்டால் தான் சரியாகும்.
வலிக்குமே.
வலிக்காது அம்மு நான் இருக்கிறேன்
வேண்டாம்.
நான் போட்டுக் கொள்ளட்டுமா?
வேண்டாம். உனக்கு வலிக்கும்ல

முதலில் நான் போட்டுக் கொள்கிறேன் அப்புறம் நீ

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 7 August 2019

மக்கள் தகவல் தொடர்பியல்

 மனிதன் சமுதாயமாக வாழ முற்பட்டபோது முதல் தகவல் தொடர்பு முறை அமைந்திருக்க வேண்டும். மொழி தோன்றுவதற்கு முன்பே தகவல் தொடர்பு சைகைகளால் அமைந்திருக்க முடியும். இவ்வகையில் தற்காலத்தில் பெருவளர்ச்சி பெற்றுள்ள மக்கள் தகவல் தொடர்பியல் துறை செம்மொழி இலக்கிய காலத்தில் ஓரளவிற்கு அச்சமுதாய தேவைக்கு ஏற்ப அமைந்திருந்தது. அரசன், அவனுக்குக் கீழ் அமைச்சர்கள், ஐம்பெருங்குழு, எண்பேராயம், வரி வசூல் செய்பவர்கள் என்று அரச சுற்றம் செம்மொழி காலத்தில் இருந்தது. இந்தச் சுற்றம் எடுக்கும் முடிவுகள், கட்டளைகள் மக்களுக்கு அறிவிக்கப்பெற்றன. அவை நடைமுறைக்கு வந்தன.
siragu thagaval thodarbu
சங்க காலத்தில் முரசு அறைந்து செய்தி அறிவிக்கும் நடைமுறை இருந்துள்ளது. இது தவிர பறை முழக்குதல், முழவு கொட்டுதல், மணி அடித்தல் போன்ற செயல்பாடுகள் வழியாக மக்கள் அதிகாரக் குழுக்களுடன் இணைவு பெற்றனர். இவ்வடிப்படையில் சங்ககாலத்திலேயே தமிழர்கள் மக்கள் தகவல் தொடர்பியல் கூறுகளைச் சிந்தனைகளைப் பெற்றிருந்தனர் என்பது தெரியவருகிறது.

மக்கள் தகவல் தொடர்பியல் இன்று பல்வகை நிலைகளில் விரிந்து பரவி ஆழ் நிலையில் சமுதாயத்திற்குத் தொண்டாற்றி வருகிறது. ‘‘தொடர்பியல் உலகின் ஒரு மூலையில் நடைபெறும் நிகழ்வுகளையும் நம்மைச் சுற்றி நடைபெறும் நிகழ்வுகளையும் கண்முன் கொண்டு வந்து நிறுத்தி உலக நாடுகளை எல்லாம் அளவில் சுருக்கி நெருக்க வைத்துள்ளது. மக்கள் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளவும் தொடர்பியல் கருவியாகப் பயன்படுகிறது” என்று தகலியலுக்கான விளக்கம் தரப்பெறுகிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 6 August 2019

குருட்டாட்டம்


siragu kuruttaattam1
பெரியார் பொதுவாழ்வில் நுழைந்தபோது, இந்நாட்டை ஆங்கிலேயர்கள் ஆட்சிசெய்து கொண்டு இருந்தார்கள். ஆனால் அவர்களை வழிநடத்தும் அதிகார பீடங்களில் பார்ப்பனர்களே ஆக்கிரமித்துக் கொண்டு இருந்தார்கள். ஆங்கிலேயர்கள் தங்கள் நாட்டின் நலன்களுக்காக இந்தியமக்களைச் சுரண்ட வேண்டுமானால் பார்ப்பனர்களின் வழிகாட்டுதலிலும், ஒத்துழைப்பிலும்தான் செய்யமுடிந்தது. ஏனெனில் அதிகாரக்கல்வி முழுவதும் பார்ப்பனர்களின் வசமே இருந்தது. ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் உழைப்புக்கல்வியையும், தொண்டுக்கல்வியையும் மட்டுமே பெறமுடிந்தது. பெறமுடிந்தது என்பதைவிட, பெற்றேதீர வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்கள்.
இந்நிலையில் கிறித்துவ சமயப்பரப்பாளர்கள் சாதிவேறுபாடு பாராமல் அனைத்து மக்களுக்கும், அனைத்து வகைக்கல்வியையும் அளித்தனர். அவர்களின் அறிவுரைகளைக்கேட்டு ஆங்கிலேய ஆட்சியாளர்கள் இந்தியாவில் அதிகாரக்கல்வியும், அதிகார வேலைகளும் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களுக்கு மறுக்கப்படுவதை எதிர்த்து நடவடிக்கைகளை எடுக்க முயன்றனர்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Friday 2 August 2019

தினா சனிசார்


siragu dina sanichar1
ருட்யார்ட் கிப்ளிங் (Rudyard Kipling) எழுதிய ஜங்கிள் புக் (Jungle Book) இந்தியாவில் வாழ்ந்த உண்மைக் கதை என நாம் அறிவோமா? jungle Book-ல் வரும் மௌக்லி (mowgli) பாத்திரம் போலவே, தினா என்ற சிறுவன் ஓநாய்களால் வளர்க்கப்பட்டச் சிறுவன்.
தினா நான்கு கால்களுடன் ஓநாய்கள் நடுவில் நடந்து கொண்டுச் செல்வதை வேட்டையாடிகள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். எப்படி அந்தச் சிறுவன் ஓநாய் கூட்டத்துடன் சேர்ந்திருக்க முடியும் என்று அவர்களுக்கு தெரியவில்லை. ஆனால் உண்மையில் ஓநாய்கள் அந்த மனிதக் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்திருக்கின்றன. அவனை மீட்க அந்த வேட்டையாடிகள் பெரும் முயற்சி செய்தனர். அனைத்து முயற்சியும் வீணாகிப்போனது. இறுதியில் அந்தச் சிறுவனை பாதுகாத்து வந்த ஓநாயை கொன்று அவனை மீட்டனர்.

வேட்டையாடிகள் அந்தச் சிறுவனை கிறித்துவ மிசினரிகளிடம் ஒப்படைத்தனர். அவர்கள் தான் அவனுக்கு தினா சனிசார் (Dina Sanichar) என பெயரிட்டனர். Sanichar என்றால் உருது மொழியில் சனிக்கிழமை என்று பொருள். அந்த சிறுவன் அந்த ஆதரவற்ற இல்லத்திற்கு சனிக்கிழமை அன்று சேர்த்துவிடப்பட்ட காரணத்தினால் அந்தப் பெயர் கொடுத்தனர்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

கருத்து நயத்திற்கு ஓர் காளமேகம்


siragu kalamegam1
சங்ககாலம் முதல் பெரும்பாலான இலக்கியங்கள் அவை கூறும் கருத்தின் அடிப்படையில் திரட்டப்பட்டவையே. இத் திரட்டு நூல்கள் தொகை நூல்கள் என அழைக்கப்பட்டன. அவ்வாறே, கி.பி. 12 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னரும், பாடல்கள் தொகுக்கப்பட்ட 19 ஆம் நூற்றாண்டு காலம் வரையில் வாழ்ந்த புலவர்கள் பலரின் தனிப் பாடல்கள் பல ‘தனிப்பாடல் திரட்டு’ எனத் தொகுக்கப்பட்டன. இராமநாதபுரம் புரவலர் பொன்னுசாமித் தேவர் (1837-1870, இவர் பாண்டித்துரைத் தேவரின் தந்தை) முன்னெடுக்க, தில்லையம்பூர் சந்திரசேகரக் கவிராயர் தேடித் தொகுத்தவை தனிப்பாடல் திரட்டு நூலில் உள்ள பாடல்கள். இந்த நூலில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைத் திரட்டிக் கொடுத்தவர் திருக்காட்டுப்பள்ளி இராமசாமி முதலியார் என்பவராகவும் அச்சிட்டவர் பெரியதம்பி என்பவராகவும் அறியப்படுகிறார்கள். இதுவே முதல் தனிப்பாடல் திரட்டு நூலாகும். பின்னர் மேலும் சில தொகுப்புகளும் தொடர்ந்து பலரால் வெளியிடப்பட்டன. தனிப்பாடல் திரட்டுத் தொகுப்பு நூல்களின் உள்ள பாடல்களின் எண்ணிக்கை ஒவ்வொன்றிலும் வேறுபட்டே உள்ளன.
தனிப்பாடல்களை எழுதினாராகக் கம்பர் ஒளவை முதற்கொண்டு 97 புலவர்களின் தனிப்பாடல்கள் காணக்கிடைத்தாலும், தனிப்பாடல் எனில் இலக்கியச் சுவைக்காகத் தனிச்சிறப்புடன் கூறப்படுபவர் காளமேகப்புலவரே என்றால் அது மிகையன்று. தனிப்பாடல் திரட்டு என்றாலே காளமேகப் புலவரால் பாடப்பெற்ற பாடல்களே பலருக்கும் நினைவு வரும் அளவிற்குச் சிறப்புப் பெற்றவர் காளமேகம். இவர் நாகைக்கருகே உள்ள திருமலைராயன் பட்டினம் பகுதியை ஆண்ட சிற்றரசன் திருமலைராயன் (பொது ஆண்டு 1455-1468) என்பவரின் காலத்தில் வாழ்ந்தவர் என அவர் பாடல் குறிப்பின் மூலம் தெரிய வருகிறது. திருமலைராயன் ஆட்சிக்காலத்தின் அடிப்படையில் இவரும் 15 ஆம் நூற்றாண்டின் மத்தியில் வாழ்ந்தவர் என்றே கணிக்கப்படுகிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.