Friday 16 August 2019

போரியல்


siragu thalayaalangaanam1
போர் என்பது ஒரு நாட்டின் அழிவு. ஒரு இனத்தின் அழிவு. போரினால் பெற்றோர்கள் தங்களின் வாரிசுகளையும், குழந்தைகள் தங்களின் பெற்றோர்களையும் இழப்பதே உச்சகட்ட கொடுமை. அதனால்தான் இன்று உலகமெங்கும் உள்ள மக்கள் அமைதியை விரும்புகிறார்கள். ஆனால் இவையனைத்தும் தெரிந்தும்கூட உலகின் சில மூலைகளில் இன்றும் போர்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இரண்டாம் உலகப்போர் நடந்தது. இதில் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு நகரத்தையே அழிக்கக்கூடிய அணுகுண்டுகள் பயன்படுத்தப்பட்டன. இது மட்டுமல்லாமல் கனரகப் பீரங்கிகள் இயந்திரத் துப்பாக்கிகள், நீர்மூழ்கிகள், வான்வழிப் போர்முறைகள் போன்றவைகளும் பயன்படுத்தப்பட்டன.
விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் வளர்ச்சி அடையாத கால காட்டமான சங்க காலத்தில் நம் தமிழ் மன்னர்கள் போர்கள் பல புரிந்து பல நாடுகளையும் கைப்பற்றியுள்ளனர். சங்க காலத்தில் வாழ்ந்த புலவர்கள் மன்னனின் போர்த்திறத்தையும் போரில் வெற்றிப்பெற்றதையும் பாடியிருக்கின்றனர். சில புலவர்கள் போரினால் ஏற்பட்ட கொடுமைகளை பாடியிருக்கிறார்கள். இன்னும் சில ரோம மன்னர்கள் பகையின்றி ஒற்றுமையுடன் வாழ பாடுபட்டிருக்கிறார்கள். சங்ககாலத்தில் நடந்த போர்களை பற்றி புலவர்கள் பாடிய சில பாடல்களைப் பற்றியும் போரை விரும்பாத சில புலவர்களை பற்றியும் விரிவாக அலசி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment