Tuesday 13 August 2019

பிரிவு 370 நீக்கியது சரியா?


siragu-pirivu-370-2
அண்மையில் நரேந்திர மோடி அரசு பிரிவு 370 ஐ நீக்கி ஜம்மு & காஷ்மீர் மாநில உரிமையை தடை செய்து அதனை யூனியன் டெரிட்ரீயாக அறிவித்து உள்ளது. யூனியன் டெரிட்ரீகளை மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுக்கும் நேரத்தில் ஒரு மாநிலத்தின் உரிமைகளை நடுவண் அரசு பறித்திருப்பது மக்களாட்சியின் தோல்வி.
அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னர் பிரிவு 370 ஐ பற்றி நிறைய விவாதங்கள் நடைபெற்றன. அன்று அதிகாரத்தில் இருந்த காங்கிரசு கட்சிக்கு தனி அந்தஸ்த்து தரும் பிரிவு 370 இல் விருப்பம் இல்லை என்ற போதும், பாகிஸ்தானின் தலையீடு காரணமாகவும், ஐ.நா வின் தலையீடு காரணமாகவும் அப்போதைய பிரதமர் நேரு இதற்கு ஒத்துக்கொண்டார். மேலும் இந்தியாவோடு ஜம்மு & காஷ்மீர் இணைக்கப்பட வேண்டும் என்பதை மகாராஜா ஹரி சிங் தான் கையெழுத்திட்டார், அவருக்கு மக்களின் ஆதரவு இல்லாத நிலையில் சிறப்பு அதிகாரம் கொண்ட மாநிலமாக ஜம்மு & காஷ்மீரை இந்தியா அங்கீகரித்தது.

ஆர்.எஸ்.எஸ் காந்தியின் கொலையில் தொடர்பிருந்த காரணத்தினால் மறைமுகமாக இயங்கிக் கொண்டு இருந்தது. அதனால் ஆர்.எஸ்.எஸ் இந்து மகா சபையின் மூலமாக எதிர்ப்பை பதிவு செய்தது என்ற போதும் அவர்களால் தடுக்க முடியவில்லை. அன்று செய்ய முடியாத அநீதியை முழு பலத்துடன் ஆட்சிக்கு வந்துவிட்டதால் இன்று செய்ய துணிகின்றனர்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment