Wednesday 14 August 2019

இந்திய செய்தி நிறுவனங்களின் சாதீய முகம்


siragu saadhi1
மக்களாட்சியின் அடிப்படை அதன் பன்முகத்தன்மை கொண்ட மக்களின் உரிமைகளின் மேல் கட்டமைக்கப்படுகிறது. அதனால் மக்கட்தொகையின் உண்மையான பிரதிநிதியாக இருக்க வேண்டியது மக்களாட்சி முறையைப் பின்பற்றும் அரசு ஒன்றின் கடமையாகிறது. பன்முகத்தன்மை கொண்ட மக்களின் விகிதாச்சாரம் மக்களின் பிரதிநிதிகளாகத் தேர்வு செய்யப்படுபவரிடம் இல்லாத பொழுது அதை நீக்க நடவடிக்கை எடுக்க அரசு முயல வேண்டும். சிறுபான்மையினர், விளிம்புநிலை மக்கள், பெண்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் எனப் பாலின, வர்க்க, வயது, சமயம், இனம், நிற எந்த வேறுபாடாக இருப்பினும் அவர்களது பிரதிநிதித்துவம் இல்லாமல் போகும் பொழுது அவர்கள் உரிமையைத் தேவையை அரசுக்குத் தெரிவிக்கும் வாய்ப்பும் இல்லாது போகும். அந்த நிலை வாய்ப்பிழந்தவர்களின் முன்னேற்றத்தையும் பெரிதும் பாதிக்கும். மக்களாட்சியின் அரசுத்துறை, நீதித்துறை, சட்டமன்றம் போன்றவற்றில் இன்றுவரை தலித் மற்றும் பழங்குடியினர் தேவையை உரைக்க வாய்ப்பில்லாமல் இருக்கிறது. மக்களாட்சியின் நான்காவது தூண் எனப்படும் ஊடகத்துறையும் இதற்கு விதிவிலக்கல்ல என்பதைத்தான் ஒரு புதிய ஆய்வறிக்கை கூறுகிறது.
ஊடகத்துறையில் நாட்டு மக்களின் பிரதிநிதித்துவம் இருந்தாலே அது மக்களாட்சிக்குச் சரியான தகவலைத் தந்து கடமையாற்ற முடியும். ஆனால் … பன்னாட்டு ‘சிவில் சொசைட்டி நிறுவனமான’ ஆக்ஸ்ஃபாம் இந்தியாவும் வலைத்தளத்தில் இயங்கி வரும் செய்தி நிறுவனமான நியூஸ் லாண்டரியும் இணைந்து ஆகஸ்ட் 2 ஆம் நாளன்று புது டெல்லியில் நடந்த மீடியா ரம்பிள் (Media Rumble) என்ற ஊடகச் சூழல் பற்றிய கருத்தரங்கில் வெளியிட்ட ஆய்வறிக்கை ஒன்று இந்திய ஊடகங்களில் ஒடுக்கப்பட்ட செய்தியாளர்களின் பிரதிநிதித்துவம் என்ன என்பதை விவரிக்கிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment