Tuesday 6 August 2019

குருட்டாட்டம்


siragu kuruttaattam1
பெரியார் பொதுவாழ்வில் நுழைந்தபோது, இந்நாட்டை ஆங்கிலேயர்கள் ஆட்சிசெய்து கொண்டு இருந்தார்கள். ஆனால் அவர்களை வழிநடத்தும் அதிகார பீடங்களில் பார்ப்பனர்களே ஆக்கிரமித்துக் கொண்டு இருந்தார்கள். ஆங்கிலேயர்கள் தங்கள் நாட்டின் நலன்களுக்காக இந்தியமக்களைச் சுரண்ட வேண்டுமானால் பார்ப்பனர்களின் வழிகாட்டுதலிலும், ஒத்துழைப்பிலும்தான் செய்யமுடிந்தது. ஏனெனில் அதிகாரக்கல்வி முழுவதும் பார்ப்பனர்களின் வசமே இருந்தது. ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் உழைப்புக்கல்வியையும், தொண்டுக்கல்வியையும் மட்டுமே பெறமுடிந்தது. பெறமுடிந்தது என்பதைவிட, பெற்றேதீர வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்கள்.
இந்நிலையில் கிறித்துவ சமயப்பரப்பாளர்கள் சாதிவேறுபாடு பாராமல் அனைத்து மக்களுக்கும், அனைத்து வகைக்கல்வியையும் அளித்தனர். அவர்களின் அறிவுரைகளைக்கேட்டு ஆங்கிலேய ஆட்சியாளர்கள் இந்தியாவில் அதிகாரக்கல்வியும், அதிகார வேலைகளும் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களுக்கு மறுக்கப்படுவதை எதிர்த்து நடவடிக்கைகளை எடுக்க முயன்றனர்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment