Thursday 22 August 2019

நீரியல்


siragu neeriyal5
இலக்கியங்கள் காலந்தோறும் நடைபெற்ற நிகழ்வுகளின் வரலாற்றுப் பெட்டகங்களாக விளங்குகின்றன. இலக்கியங்களின் வாயிலாக ஒரு நாட்டின் வரலாற்றையும், மக்களின் பழக்கவழக்கங்களையும் அறியலாம். குறிப்பாக பண்டைக்கால மனிதன் இயற்கையோடு இயைந்த வாழ்வினையே மேற்கொண்டான். இவ்வுலகம் பஞ்சபூதங்களான நிலம், நீர், காற்று ஆகாயம், நெருப்பு ஆகியவற்றைக் கொண்டு இயங்குகிறது. உலகில் தோன்றிய உயிரினங்களில் ஒன்றாகிய மனிதனும் இவற்றின் துணைகொண்டே செயல்படுகிறான். உலகமக்களின் உயிர் வாழ்விற்கு மட்டுமின்றி அனைத்துப் பயன்பாட்டிற்கும் நீர் உதவுகிறது. நீர் இல்லாமல் எதுவும் செய்ய இயலாது. அத்தகைய நீரின் இன்றியமையாமையை விளக்குவதே இக்கட்டுரையாம்.
நீரின்றி அமையாது உலகம்

மனிதனை மகிழ்விப்பதும் வாழ்விப்பதும் இயற்கையாகும். இயற்கையின் இயக்கத்தில் தான் மனிதனின் வாழ்க்கையும் இயங்குகிறது. இலக்கியங்கள் இயற்கைக் காட்சிகளின் வழியாக மனிதவாழ்வினைப் போதித்தன. சங்ககாலப் புலவர்கள் மாந்தர்களை வருணிப்பதற்கும் வாழ்வியல் கருத்துக்களை எடுத்துரைப்பதற்கும் நிலத்தின் வகைப்பாட்டினைச் சுட்டுவதற்கும் இயற்கைக்காட்சிகளைப் பயன்படுத்தினர் என்றால் மிகையாகாது. இயற்கைக்கும் மனிதன் வாழ்வதற்கும் அடிப்படை ஆதாரமாக விளங்குவது தண்ணீர் தான். பழங்காலம் முதல் இன்று வரை மக்கள் நீருக்கு உரிய மரியாதையும் முக்கியத்துவமும் தந்து வருகின்றனர். மக்கள் வாழ்வு நீரையே நம்பி இருந்துள்ளமையையும் அதனைப் போற்றியும் பாதுகாத்தும் வந்துள்ளமையும் சங்ககால இலக்கியங்கள் பறைசாற்றுவதனை அறிந்துணரலாம். இலக்கண நூல்கள் உணர்த்தும் முதற்பொருள் கருப்பொருள் உரிப்பொருள் ஆகிய மூன்றனுள் கருப்பொருள்கள் பதினான்கனுள் ஒன்றாகக் கருதப்படுவது நீர்நிலையாம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment