Friday 13 September 2019

சங்க இலக்கியங்களில் கடலியல் சமூகம்


siragu kadaliyal2
தமிழர்களின் உள்ளத்து உணர்ச்சிகளையும் வேட்கைகளையும் புலப்படுத்துவதற்கு இயற்கையைப் பின்னணியாகக் கொண்டு பாடப்பட்டவை சங்க இலக்கியங்கள். மக்கள் தங்கள் வாழிடங்களை ஐந்து வகை நிலங்களாகப் பாகுபாடு செய்துள்ளனர். வயல், காடு, மலை கடல், மணல்பகுதிகள் என ஐந்தாகப் பிரித்து, தனித்தனிப் பெயரிட்டு அழைத்தனர். தங்கள் வாழிடங்களுக்கேற்ப, அக்காலத்தில் காணப்பட்ட தாவரங்கள், விலங்குகள், பறவைகள், தொழில், விழாக்கள், சடங்குகள், உணவுமுறை போன்றவற்றை சங்கப்பாடல்களில் பதிவு செய்துள்ளனர். இப்பாடல்களில் மனித சமுதாயத்தின் உயர்ந்த கருத்துக்களையும் வாழ்வியல் விழுமியங்களையும் காணமுடிகிறது. சங்க அகப்பாடல்களில் குறுந்தொகையில் கடலியல் சார்ந்த வரலாற்றுச் செய்திகள் மிகுதியாகக் காணப்படுகின்றன. குறுந்தொகை நெய்தல் திணைப் பாடல்களில் இடம்பெறும் கடலியல் சமூக வரலாற்றை இக்கட்டுரை ஆய்வு செய்கிறது.

சங்ககால புலவர்கள் 473 பேரில் 205 பேர் குறுந்தொகையிலுள்ள 401 பாடல்களைப் பாடியுள்ளனர். இவர்களுள் 46 புலவர்கள் குறுந்தொகை நெய்தல் திணையைச் சிறப்பித்துப் பாடியுள்ளனர். இந்நூல் 72 நெய்தல் திணைப்பாடல்கள் உள்ளன. இவற்றில் மூன்று பாடல்களை 381, 313, 326 இயற்றிய புலவர்கள் பெயர் தெரியவில்லை. அம்மூவனாரே கடல் சார்ந்த சமூக வரலாற்றை மிகுதியாகப் பத்துப்பாடல்களில் பாடியுள்ளார். அம்மூவனர் கடல் சார்ந்த நிலப்பகுதியின் வரலாறு, அங்கு வாழும் விலங்குகள். பறவைகள், செடி, கொடிகள், தொழில், உணவு முறை, மக்களின் இயல்புகள் மற்றும் தலைவன் தலைவியின் திணை அகஒழுக்கம் குறித்த செய்திகளை மிகுதியாகப் பாடியுள்ளார். சங்க இலக்கியங்களாகத் திகழ்ந்த பத்துப்பாட்டும் எட்டுத்தொகையுமாகும். எட்டுத்தொகை நூல்களுள் புறநானூறு, பதிற்றுப்பத்து ஆகியவை புறச் செய்திகளைக் கூறுகின்றன. நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை , அகநானூறு என்ற ஐந்தும் அகம் பற்றிய செய்திகளைக் கூறுகின்றன. பரிபாடல் அகம் புறம் இரண்டையும் ஒருங்கே உணர்த்தும் நூலாகும். சங்க இலக்கியங்கள் மனித வாழ்வை முதன்மைப்படுத்தி பாடுகின்றன. இயற்கை அதற்கு உறுதுணையாய் இரண்டாம் இடமே பெறுகின்றது. சங்க இலக்கியத்தில் விண்ணைத் தொட்டு நிற்கும் மலைகளையும், நீண்ட கடற்பரப்பையும், வயல்வெளிகளையும், அடர்ந்த காடுகளையும் உணர்ச்சி ததும்ப வலிமைமிக்க கருவிகளாகப் பயன்படுத்தியுள்ளனர். அகப்பாடல்களில் முதற்பொருளையும், கருப்பொருளையும் அறிவியல் பூர்வமாகப் பாடியுள்ளனர். இவை உரிப்பொருளுக்கு பின்னணியாக அமைந்துள்ளன.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment