Tuesday 24 September 2019

சங்க இலக்கியங்களில் மனையியல் செய்திகள்


siragu-manayiyal1
தமிழ் என்னும் சொல்லுக்கு இனிமை, நீர்மை என்று நிகண்டு பொருள் உரைக்கின்றது. ‘‘இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும்” (பிங்கலநிகண்டு), “தமிழுக்கும் அமுதென்று பேர்” என்கிறார் பாவேந்தர். இப்பண்புகளே தமிழ் மொழியைப் பல்லாயிரம் ஆண்டுகளாகக் கன்னித் தமிழாக முன்னைப் பழமைக்கும் பழையதாகவும், பின்னைப் புதுமைக்கும் புதியதாகவும் வளமையும் செழுமையும மிக்கதாக அழியாத் தன்மையுடன் நிலை நிறுத்தி வருகின்றன. இவ்வாறாகத் திகழும் தமிழ் மொழியில் இன்று பல துறைகளை நிறுவி சாதனைப் படைக்கின்றனர் சான்றோர்கள். அந்த வகையில் செம்மொழித் தகுதி பெற்ற தமிழ் இலக்கியங்களில் பல்துறை அறிவியல் சிந்தனைகள் என்ற தலைப்பில் “மனையியல்” துறையினை அடித்தளமாகக் கொண்டு “அகநானூற்றுப் பாடல்களில் மனையியல் செய்திகள்” என்ற தலைப்பில் இக்கட்டுரை வரையறுக்கப்பட்டுள்ளது.
மனையியல் – அறிமுகம்


மனையியல் அல்லது மனை அறிவியல் என்பது வீடு. குடும்பம் வாழ்வியல் தொடர்பான பல்வேறு கூறுகளுக்கான ஒரு கல்வித்துறை ஆகும். மனையியல் என்ற சொல்லுக்கு அகராதியில் ‘‘வீட்டைநிர்வகித்தல், குடும்பத்தினருக்குத் தேவையான ஊட்டச்சத்து உள்ள உணவு தயாரித்தல் முதலியவற்றை அறிவியல் முறையில் கற்றுத் தரும் படிப்பு.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment