Thursday 5 September 2019

செம்மொழி இலக்கியங்களில் உழவு


siragu ulavu2
ஆடை இல்லாமல் மனிதன் வாழ்ந்தது முதல், அறிவியல் கல்வி செழித்தோங்கும் இந்த விஞ்ஞானக் காலம் வரை மனிதன் உணவைத்தேடி அலைந்த வண்ணமேயிருக்கிறான். செவ்வாய்க் கிரகத்துக்கு விண்கலம் அனுப்புகிற மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட நவீன எந்திரங்களால் மண்ணிலே விதைக்காமல் உணவைச் சுயமாகத் தரமுடியாது.
கடவுளை வேண்டுகிற அடியார்கள்கூட உணவுக்காகப் பிரார்த்திக்கின்றனர். திருமங்கை ஆழ்வார்,
“கூறைசோறு இவைதந்து எனக்கு அருளி
அடியேனைப் பேணி ஆண்டுகொள் எந்தாய்”
உணவும் இருப்பிடம் தந்து என்னை ஆட்கொள் என்று வேண்டுகிறார்.
சங்க இலக்கியத்தில் பசித்த வறியோருக்கு உணவு அளித்த மனிதனை ‘பசிப்பிணி மருத்துவன்’ எனப் புகழ்ந்துள்ளனர். இதன் மூலம் பசிபோக்குபவன் ஒரு மருத்துவன் என்பதை இந்த உலகத்துக்கே தந்தவர்கள் சங்கத்தமிழர், உணவின் முக்கியம் அறிந்துதான் திருவள்ளுவர் “உழவு” என்ற தலைப்பில் தமது கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார்.
‘சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்
உழுந்தும் உழவே தலை’. (1031)

பலதொழில்களைச் செய்து சுழன்றாலும் இறுதியில் ஏர்த்தொழிலின் பின்னாலேயே இந்த உலகம் நிற்கிறது. அதனால் எவ்வளவு துன்பமடைந்தாலும் உழவே தலையானது என்று சொல்கிறார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment