Wednesday, 9 November 2016

சுற்றுலாத்தலங்களை விளக்கும் அற்புதக் காட்சி அமைப்புகள் கொண்ட ஆவணப்படம்… …


siragu-tanjavur

அரைமணியில் பிரமாண்டத்தை காட்டிய ஆவணப்படம்… சுற்றுலாத்தலங்களை விளக்கும் அற்புத காட்சி அமைப்புகள்…
இளைஞர்களே இனி வரும் கால இந்தியாவின் அஸ்திவாரங்கள் என்பது வெறும் வார்த்தை அல்ல… நம் கலாச்சாரத்தின் மதிப்பையும், பண்பாட்டையும் இனி ஏட்டில் மட்டுமல்ல… திரையிலும் கொண்டு வந்து விடுகிறது சினிமாத்துறை என்பது வரம்தான்…
அதை சரியான திசையில் கொண்டு சென்றால் இந்தியாவின் புகழ் கொடி முக்கியமாக தமிழ்நாட்டின் புகழ் என்றும் பாடப்படும் என்பதற்கு ஒரு ஆவணப்படம் சாட்சியாக இருக்கிறது. இதன் பின்னணியில் உழைத்தவர்கள் ஒரு இளைஞர் பட்டாளம். உழைப்பு மிக பிரமாண்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.
அழகு கொஞ்சும் தஞ்சைத்தரணியில் காண்பதற்கு ஏராளமான இடங்கள் உள்ளன. கல்லில் கலை வண்ணம் கண்ட அற்புதமான இடம். தலையாட்டும் பொம்மைகளும், விண்ணுயர்ந்து நிற்கும் பெரிய கோயில் மட்டுமின்றி ஏராளமான காணக் கிடைக்காத பொக்கிசங்கள் நிறைந்த மண்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

அமெரிக்கத் தேர்தல் கூத்து

siragu-american-election1

ஈராண்டுகளுக்கு முன் இந்தத்தேர்தல் கூத்து துவங்கியது. சனநாயக்கட்சி (டெமோகிரேட்), குடியரசுக்கட்சி (ரிபப்லிகன்) கட்சிகளுக்குள் குடியரசுத்தலைவர் வேட்பாளர் தேர்ந்தெடுக்கும் கூத்து துவங்கியது. சனநாயக்கட்சிக்குள் ஹில்லரி கிளிண்டனும், பெர்னி சாண்டர்சும் போட்டியிட்டனர். ரிபப்லிகன் கட்சிக்குள் பலர் போட்டியிட்டனர். அதில் முடிவில் டொனல்டு டிரம்பும், ஹில்லரி கிளிண்டனும் வென்று இன்று வேட்பாளர்களாக நிற்கின்றனர். இந்த வாரம் செவ்வாய் கிழமையன்று குடியரசுத் தேர்தல் நடைபெறவுள்ளது. யார் வெல்வார்கள் என்று தேர்தல் கணிப்பாளர்கள் அவரவர் கொள்கைப்படி கூறிவருகின்றனர். இனி வேட்பாளர்கள் குறித்து பார்ப்போம்.
siragu-american-election2


டொனல்டு டிரம்பு: இவர் ரிபப்லிகன் கட்சியின் வேட்பாளராக வெல்வார் என்பதை அக்கட்சியினரே ஓராண்டிற்குமுன் கனவு கூட கண்டிருக்கமாட்டார்கள். ஆனால் இவரை எதிர்த்து நின்றவர் அனைவரும் கோமாளிகளாக நடந்து கொண்டதாலும், அரசியல் முதிர்ச்சியேதுமில்லாததாலும் தோற்றனர். டிரம்பு கட்சியினரின் கோபத்தைப்புரிந்து கொண்டு அதற்கு ஏற்றாற்போல் நடந்து கொண்டது அவரது வெற்றிக்கு வழிவகுத்தது. டிரம்பு ஒரு பொழுதுபோக்காளர், தொலைக்காட்சியில் நடந்து கொண்டது போலவே

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday, 7 November 2016

உலகத் தமிழ் அமைப்பின் வெள்ளி விழா நிகழ்வில் தமிழர் உரிமைகளை பாதுகாக்க உறுதியேற்பு


event2

கடந்த 1991 ஆம் ஆண்டு அமெரிக்காவில் வாழும் தமிழ் உணர்வாளர்கள் ஒன்றிணைந்து தமிழர் உரிமைகளை வென்றெடுக்கும் நோக்கில் சிகாகோ நகரில் கூடி உருவாக்கப்பட்ட “உலகத் தமிழ் அமைப்பு” இந்த ஆண்டு வெள்ளி விழா கண்டுள்ளது. “தமிழ் மொழி, தமிழர் நலன், தமிழர் உரிமை” என்ற முழக்கத்துடன் உலகமெங்கும் வாழும் தமிழர் நலனுக்காகவும், தமிழர் உரிமைகளைப் பாதுகாக்கவும் கடந்த 25 ஆண்டுகளாக தொடர்ந்து உழைத்து வரும் இவ்வமைப்பின் வெள்ளி விழா நிகழ்வு கடந்த 08 அக்டோபர் 2016 விர்சீனியாவில் உள்ள ஆல்டி நகரில் நடைபெற்றது.
event6


தமிழர்களின் உரிமைக்காகவும், அயல்மொழித் திணிப்பில் இருந்து தமிழ் மொழி காக்கவும் போராடி தன் இன்னுயிரை ஈகம் செய்த தமிழீழ, தமிழக மாவீரர்கள், ஈகியர்களுக்கு விழாவில் கூடியிருந்தவர்கள் அனைவரும் அமைதி அஞ்சலி செலுத்தினர். சிறப்பு அழைப்பாளார்கள் குத்துவிளக்கேற்ற, உலகத் தமிழ் அமைப்பின் தலைவர் ஐயா. வைத்தியலிங்கம் க. தேவ் அவர்களின் வரவேற்புரையுடன் விழா தொடங்கியது. விழா ஒருங்கிணைப்பாளர் திரு இரவி சுப்ரமணியம் அவர்கள் மாநாட்டு முன்னோட்டம் குறித்து விளக்கினார். வட அமெரிக்கத் தமிழச் சங்கப் பேரவையின் தலைவர் திருமதி செந்தாமரை பிரபாகர், தமிழ்நாடு அறக்கட்டளையின் தலைவர் திரு. சிவசைலம் தெய்வமணி, அமெரிக்கத் தமிழர் அரசியற் செயலவையின் சார்பாக திரு. எலியாசு அவர்களும் வெள்ளி விழா காணும் உலகத் தமிழ் அமைப்பின் வரலாற்றையும் பணிகளையும் நினைவுகூர்ந்து வாழ்த்துரை வழங்கினர். புரட்சிக்கவி பாரதிதாசன் “சங்கே முழங்கு”, “தூங்கும் புலியை பறை கொண்டு எழுப்புவோம்” பாடல்களுக்கு தமிழ்ப் பள்ளிக் குழந்தைகளின் எழுச்சி நடனத்துடன் விழா தொடங்கியது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

இளம் தமிழர் படையே வருக வருக!(கவிதை)


Siragu-ellaam-kodukkum-tamil1

இளம் தமிழர் படையே வருக வருக
இனம் தழைக்க வேற்படை வருக வருக!
கொடுந்தீமை படையினை அழிக்க சினம்
கொண்டு தமிழர் யாவரும் வருக வருக

எத்திசையிலும் போர் முரசெழுப்பியே வன்நரிப்
படைகள் வருவதனை யாவரும் ஏற்ப்பீரோ?
வடநாட்டினநரிக் கூட்டமொன்று நம்

வளமான நிலம் தேடி வருவதனை அறிவீரோ?

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/?p=22017

பஞ்ச தந்திரக் கதைகள்: தாண்டவராய முதலியார்


siragu-panjathandhira-kadhaigal1

கதைகள் என்றால் ஆசைப்படாதவர்கள் இல்லை. சிறுவர்கள் மட்டுமன்றிப் பெரியவர்களுக்கும் கதை என்றால் ஆசைதான். ஆங்கிலத்திலும் பெரியவர்களும் சிறுவர் கதைகளான ஈசாப் கதைகள், ஆலிஸ் இன் ஒண்டர்லேண்ட் போன்றவற்றைப் படித்து மகிழ்கிறார்கள். தமிழிலும் இவ்வாறே அநேகக் கதைகள் உள்ளன. தெனாலிராமன் கதைகள், மரியாதை ராமன் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள், விக்கிரமாதித்தியன் கதைகள் என்று எத்தனை எத்தனையோ. சிறுவயதில் இவற்றையெல்லாம் படித்து மகிழ்ந்தது உண்டு. இப்போது நிறைய பேருக்கு ஆங்கிலப் படிப்பின் காரணமாக இம்மாதிரிக் கதைகளின் தொடர்பு விட்டுப்போய் விட்டது.

பஞ்சதந்திரக் கதைகள், அரிய அறிவுரைக் கதைகளாகும். இவற்றில் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிலவற்றைச் சிறிய தொகுப்புகளிலும், யூ ட்யூப் முதலிய காணொளிகளிலும் இப்போது காண்கிறோம். அசலான கதைகளை அப்படியே எடுத்துரைத்தலும் சொல்லுதலும் படித்தலும் கேட்டலும் இல்லாமல் போய்விட்டது. யாருக்கும் நேரமில்லை! அதற்காகவே இந்தப் பகுதி. இது சிறுவர்களுக்கு மட்டுமல்ல, உறுதியாகப் பெரியவர்களுக்கும் பயன்தரும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Friday, 4 November 2016

ஏகாந்த வீணை… மயக்கும் இசை… வீணை செய்வதில் கைதேர்ந்த தஞ்சை கலைஞர் ராமலிங்கம்…


siragu-egaandha-veenai5
தஞ்சாவூர்:
காணும் பொருட்களில் கலை வண்ணம் கண்ட ஒரே ஊர் தஞ்சைதான். இங்கு உருவாக்கப்படும் வீணைகளுக்கு உலக அளவில் பெரும் புகழ் உண்டு. அந்த வீணையில் அற்புதமான வேலைப்பாடுகள் அமையப்பெற்று இருக்கும்.
அப்படிப்பட்ட வீணையை உருவாக்குவதில் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் பலர் உள்ளனர். இதில் வாடிக்கையாளர்கள் மனதில் நினைப்பதை அப்படியே கொண்டு வருவதில் திறமை வாய்ந்தவர் தஞ்சையை சேர்ந்த ஆர்.ராமலிங்கம். இவருக்கு வயது 75.
வாருங்கள்… இவர் பற்றி தெரிந்து கொள்வோம்.

கோயில்கள் சூழப்பட்ட தஞ்சை கர்நாடக இசையை வளர்த்த நகரம் என்பதையும் அறிந்து கொள்ள

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.


Tuesday, 1 November 2016

இரயில் சிநேகிதம்


siragu-train-friends3

பயணம் திட்டமிட்டதாயிருந்தாலும் சரி, எதிர்பாராததாயிருந்தாலும் சரி நமக்குள் மூழ்கி யோசிக்கும் வாய்ப்பைத் தரும். தனியே செல்லும்போது இதற்கான கால அவகாசம் அதிகம். உடன் பயணிக்கும் உறவினர்கள் / நண்பர்களுடன் உரையாடினாலும் அமைதியாகச் சிந்திக்கும் சந்தர்ப்பத்தை நாமே உருவாக்கிக் கொள்கிறோம்.

நாம் நெருக்கமானவர்களுடனும் அறிமுகமானவர்களுடனும் மட்டும் பயணம் செய்வதில்லை. முன் பின் அறிமுகமில்லா முகங்கள் பலவற்றைக் கடந்து வருகிறோம். இரயில் சிநேகிதம் என்று பொதுவில்குறிப்பிட்டாலும் பயணங்கள் ஏற்படுத்தும் நட்பையே இங்கே குறிப்பிடுகிறேன்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.