Wednesday, 10 May 2017

தமிழ்ப் பாவை வாழி!(கவிதை)


tamil-mozhi-fi

ஆரெழில் காவிரி வளநாடுடைத் தென்னாடு
மாச்சிறப்பினை கொண்ட வளநாடு தென்னாடு
பண்ணெடும் வரலாறாம் அவள்கொண்ட பண்பாடு
பல்இன மாந்தரைப் பெற்றவளாம் புகழ்செழுந்
தமிழ்மொழிப் பால்கொடுத்து வளர்த்த வளாம்அவள்
திருமேனி போல்வைகை பொருணை பாலாறு
தங்கத் தோழியுடனே தாயாய் நின்றுஎம்மை
தாலாட்டிச் சீராட்டிப் பாராட்டிப் பெற்றவளாம்
உயிர்தமிழ் மொழியாய் பிறந்திட்ட பாவையவள்!

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

http://siragu.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/

Tuesday, 9 May 2017

தமிழாய்வின் செம்மைக்குக் கணினித் துறை


Siragu tamil in computer2

தமிழாய்வின் செம்மைக்குக் கணினியின் துணை என்பது தவிர்க்கமுடியாததாகிவிட்டது. தகவல்கள் திரட்டல், பதிதல், ஆராய்தல், ஒழுங்குபடுத்தல், எண்ணிக்கையிடல் போன்ற பணிகளுக்கு இன்றைக்குக் கணினி மிக மிக அவசியமானதாக இருக்கிறது. கணினி உதவியுடன் செய்யப்படாத தமிழ் ஆய்வுகளின் துல்லியத்தன்மை சந்தேகத்திற்கு இடமாகின்ற அளவிற்கு கணினி உதவி தேவைப்படுவதாக உள்ளது.


தமிழ்மொழியின் சொல்வளம், தொடர் கட்டமைப்பு, பொருள் வளம் மிக முக்கியமான முன்னேற்றத்தை இன்னும் சில காலங்களில் பெறப்போவதற்கான அறிகுறிகள் தற்போது தெரிகின்றன. தமிழகம் சார்ந்த கணினி அறிஞர்கள், கணித அறிஞர்கள், பிறதுறை அறிஞர்கள் ஆகியோரின் வருகை தமிழின் அக, புற வளர்ச்சிக்கு உறுதுணையாக விளங்குகின்றன.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday, 8 May 2017

பேச்சுக்கலை


Siragu best speaker1

பேச்சுக் கலை கொண்டோரின் ஆற்றல் பிறரை எளிதில் அவர்கள் கொள்கை, கோட்பாட்டினை ஏற்க வைத்திடும்.

திருவள்ளுவர் சிறந்த பேச்சிற்கான இலக்கணம் பற்றிக் கூறும் போது,

“கேட்டார் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல் ”
என்கிறார்.

அதாவது சொல்லும்போது கேட்டவரைத் தன் வயப்படுத்தும் பண்புகளுடன், கேட்காதவரும் கேட்க விரும்புமாறு கூறப்படுவது சொல்வன்மையாகும்.

அத்தகைய சொல்வன்மை பெற்றோர் உலக அளவில், தமிழக அளவில் ஏராளமானோர் உண்டு.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88/

Sunday, 7 May 2017

உலக ஊடக உரிமை நாள்


3may_2010_eng

உலக ஊடக உரிமை நாள் (World Press Freedom Day) என்பது ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 3 தேதி கொண்டாடப்படுகிறது. இதன் நோக்கம், பத்திரிக்கை சுதந்திரத்தைப் பரப்புவதற்கும், பேச்சுரிமை சுதந்திரத்தை நினைவூட்டவும் ஏற்படுத்தப்பட்டதாகும். இதன் சிறப்பு என்னவென்றால், ஐ.நா.வின் ‘மனித உரிமை சாசனம்’ பகுதி 19-ல் இடம் பெற்றிருக்கிறது . 1993 ஆம் ஆண்டிலிருந்து, ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி, கடைபிடித்து வருகிறார்கள்.


இதற்கு முன்னதாகவே, 1991- ஆம் ஆண்டிலேயே ஆப்பிரிக்க நாட்டு கூட்டுப் பத்திரிகைகளால், “பத்திரிகை சுதந்திர சாசனம்” என்ற கோரிக்கையை, பத்திரிக்கைகளின் சுதந்திரத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்யும் விதமாக முன் வைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சிதான் இந்தத் தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகும். யுனெஸ்கோ நிறுவனத்தினர், இதற்கென பங்களிப்புச் செய்பவர்களில், ஒருவரைத் தேர்ந்தெடுத்து, விருதும் வழங்கி வருகிறார்கள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday, 3 May 2017

தென்னாட்டுக் குடிகள்! (கவிதை)


Siragu-tamilan1

தென்னாட்டுக் குடிகளே கேட்டீரோ? –என்
தென்னாட்டுக் குடிகளே கேட்டீரோ?
நரிமுகமாம் வடநாட்டுக் குடியொருவன்
நஞ்சை கண்டத்தில் ஒளித்து வைத்து
நற்குடி வாழுந் தென்னாட்டு இனத்தார்

வாழ்கவென புகழ்ந்தார் முன்னே! கேட்டீரோ?

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5/

Tuesday, 2 May 2017

புத்தக அறிமுகம்: பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை


Siragu-poonaachchi2

மனித மனம் எப்பொழுதும் உணர்ச்சிகளுக்கு அடிமைபட்டவைதான். மனதில் தோன்றும் பல்வேறு இனம் புரியாத உணர்ச்சிகளுக்கு உரை எழுதிவிட முடியுமா என்ன?


கூரை வீட்டின் மீது அமர்ந்து சீண்டிக் கொண்டு தன் இணையை தன் கவனத்தின் பக்கம் இழுக்க அவைகள் செய்கிற சேட்டைகள் நீள் இரவின் கனவில் நினைத்துப் பார்க்கிற போது அதிலிருந்தும் ஒரு கவிதையை எழுதிவிடலாம். அவை கொஞ்சல் மொழியுணர்ச்சிக்கு இடம் அளிப்பவையாகவே இருக்கக் கூடும். கோழி இனத்தில் பார்க்கிற போதும் கூட அவைகள் கிராம நாகரீக வாழ்வியலுடன் ஒன்றிப் போனவையே.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday, 1 May 2017

தமிழகத்தின் நீர்ப் பற்றாக்குறையைத் தீர்க்க ஊட்டியில் மோயாற்றின் மீது அணை கட்டத் தேவையா?


Siragu Moyar River1

“ஊட்டியின் மோயாற்றின் ஒரு பகுதி பவானிசாகர் அணைக்கும், அதன் வடக்குப் பகுதி கர்நாடக எல்லையிலும் பாய்கிறது. கர்நாடகாவில் பாயும் நீரானது கபினி மற்றும் நுகு அணைகளைச் சென்றடைகிறது. பின்னர் இரு அணையிலிருந்தும் வெளியேறும் நீரானது ஒன்றாக இணைந்து, டி.நரசிபுரா என்ற இடத்தில் காவிரியுடன் இணைந்து, மீண்டும் தமிழகத்திற்குள் நுழைகிறது. அதன்பிறகு ஒகேனக்கல் வழியாகத் தமிழகத்திற்குள் பாய்கிறது.”

கடந்த சில நாட்களாகத் தமிழக உழவர்களுக்கு உதவும் வகையில் சிந்தித்த சிலர் வெளியிட்டுள்ள தகவல் இது. இவ்வாறு கர்நாடகாவில் பாயும் மோயாற்றின் வழியாக கர்நாடகா பலன் அடைவதாகவும், இதனால் அவர்களுக்கே நாம் தான் நீர் தருகிறோம் என்றும், அதை அவர்கள் தமிழகத்திற்குத் தரமறுக்கிறார்கள் என்றும், நாம் கொடுக்கும் தண்ணீரை நமக்கே கொடுக்காமல் கர்நாடகம் நம்மை வஞ்சித்துக் கொண்டுள்ளது என்றும், மோயாற்றின் மீது நாம் ஓர் அணையைக் கட்டிவிட்டோம் என்றால் கர்நாடகா நீருக்காக நம்மைக் கெஞ்சும் நிலை உருவாகிவிடும் என்றும், இந்த உண்மை தெரிந்தும் அரசியல்வாதிகள் தங்கள் தன்னலத்தின் காரணமாக இத்தீர்வை எடுக்கும் முயற்சியை மேற்கொள்வதில்லை என்றும் பலமான கருத்துப் பரப்புரை சமூக வலைத்தளங்களிலும் மாறி மாறிப் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. 

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.