Wednesday, 9 August 2017

திராவிட நாடிது! (கவிதை)


Siragu-diraavida-naadu


திராவிட தேசிய நாடிது -இங்கு
சிறுபுல் லடிமைபோல் யாவருமே இங்கில்லை
ஆதவன் சுடர்போல் மாதவர் இங்குண்டு
காதலர் மனையரசு செழிப்புறு வதீங்கு
கண்ணினை காக்கும் கருத்தினை கொண்டு
பகுத்தறி வினையூட்டி வளர்ந்திடு நாடு
சிந்தையை மாய்க்கும் பொல்லாக் குறளை
சிதைக்கும் செயல்வழி உள்ளதிரு நாடு
உள்ளத் திலிருக்கும் உயர்ந்த அன்பினால்


மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

முல்லைப்பாட்டில் காணலாகும் மேலாண்மைச் செய்திகள்


Siragu mullai paattu1
மேலாண்மை என்பதை ‘‘மக்களை வைத்துச் செய்ய வேண்டியவற்றைச் செய்து முடிப்பது” என்று வரையறுக்கிறார் பார்கர் போலெட். வீரிச் கோண்ட்ஸ் என்ற அறிஞர் ‘‘மேலாண்மை என்பது நிறுவனம் அல்லது அமைப்பின் இலக்குகளை அடைய மனித வளம், பொருள்வளம் மற்றும் நிதிவளம் ஆகியவற்றைச் சிறப்பாக பயன்படுத்தும் வழிமுறை” என்று வரையறுக்கிறார். மக்களைக் கொண்டு ஓர் அமைப்பு தன் நோக்கத்தை வெற்றிகரமாக அடையும் செயல்திட்டம் மேலாண்மை என்ற பொதுக்கருத்தை இவ்விரு அறிஞர்களின் கருத்துகள் வழியாகப் பெறமுடிகிறது.
மேலைநாடுகளில் மேலாண்மை என்ற துறை வளர்ச்சி பெற்று ஏறக்குறைய நூற்று இருபத்தைந்து ஆண்டுகள் கடந்து விட்டன. இந்நிலையில் வளரும் நாடுகளுக்கு இம்மேலாண்மைத் தத்துவங்கள் பரவி அவையும் அத்தத்துவங்கள் வழி நிற்க முயலுகின்றன. இவற்றோடு பழமையான மொழிகளில், இலக்கியங்களில் பல மேலாண்மைக் கூறுகள் அமைந்துகிடப்பதை இன்றைக்கு அறியமுடிகிறது. குறிப்பாகத் தமிழ் இலக்கியங்களில் பல்வேறு மேலாண்மைச் சிந்தனைகள் விரவிக்கிடக்கின்றன. பண்டை இலக்கியமான சங்க இலக்கியங்களில் பல மேலாண்மைக் கருத்துகள் தெரிவிக்கப்பெற்றுள்ளன. அவற்றில் முல்லைப்பாட்டில் காணப்படும் மேலாண்மைக் கூறுகளை இக்கட்டுரை எடுத்துரைக்கின்றது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday, 8 August 2017

தாய்ப்பாலும், ஆரோக்கியமான குழந்தைகளும்.!


Siragu thaaipaal1
உலகம் முழுவதும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரம், அதாவது ஒன்றாம் தேதியிலிருந்து ஏழாம் தேதி வரை உலக தாய்ப்பால் வாரமாகக் கொண்டாடப்படுகிறது. இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சமூக ஆர்வலர்கள் இதனை பயன்படுத்திக்கொள்கிறார்கள். அண்மைக்காலமாக, குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டும் பழக்கம் பெண்களிடையே குறைந்து கொண்டே வருகிறது என்பது மிகவும் வருத்தத்திற்குரிய ஒன்றாக இருக்கிறது. அதிலும் நம் இந்தியாவில், இந்த சதவிகிதம் அதிகமாக இருப்பதாக ஆய்வறிக்கை சொல்கிறது. இங்கு பெரு நகரங்களாகச் சொல்லப்படும், சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் 20 வயதிற்குள்ளாக உள்ளவர்களிடம், மிகை இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், எலும்பு வலுவின்மை, மூச்சுக்குழாய் பிரச்சினை போன்ற நோய்கள் 43 விழுக்காடு அதிகரித்துள்ளதாம்.
இதற்கு முன்பு இந்த அளவிற்கு இல்லை. 30 ஆண்டுகளுக்குள் இந்த திடீர் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. அதற்கு முக்கியக்காரணம் தாய்ப்பால் குடிக்காத குழந்தைகள் அதிகரித்துள்ளார்கள். நம்முடைய உணவுப்பழக்கமும் ஒன்று. நொறுக்குத்தீனி, அதிக கொழுப்புள்ள உணவுகள், மிக முக்கியமாக நோய் எதிர்ப்புத்திறன் இல்லாமையே தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. செயற்கையாக கடைகளில் விற்கப்படும் பால் பவுடர்கள் குழந்தைகளுக்கு எவ்வித சத்தையும் தருவதில்லை. மாறாக உடல் எடை கூடுவதற்குக் காரணமாகிறது. மந்தநிலையை குழந்தைகளுக்கு உருவாக்கி விடுகிறது. எவ்வித கலப்படமும் இல்லாத ஒரு சிறந்த உணவு தாய்ப்பால். இதில் அனைத்து சத்துக்களும் அடங்கியுள்ளன. நோய் எதிர்ப்பு ஆற்றலை அளிக்கவல்லது. மேலும் தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் ஆரோக்கியத்துடன் மட்டுமல்லாமல், சுறுசுறுப்புடனும், அறிவுடனும் வளருகிறார்கள் என்பது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday, 7 August 2017

தமிழ் மின்னூலகங்களும் தமிழ் மின்னூல்களும்


Siragu tamil ebook7
முன்னுரை:
தமிழில் நூல்கள் பல படிக்க விரும்புவோரின் ஆர்வத்தை நிறைவு செய்யும் நோக்கிலும், நூல்களை வரலாற்றுப் பதிவுகளாக ஆவணப்படுத்தும் நோக்கிலும் இணையவழி முயற்சியாக மின்னூல்களை (eBooks) உருவாக்கும் செயல்பாடு கடந்த 20 ஆண்டுகளாக நடந்து வருகின்றது. உலகில் எந்த மூலையில் இருந்தும் இணையம் வழியாகத் தமிழ்நூல்களை தங்கள் கணினி வழி படிக்கும் வாய்ப்பு பல தொழில் நுட்பங்களைக் கடந்து இக்காலத்தில் நன்கு மெருகேறிய நிலையில் உள்ளது எனலாம். நூல்களை html இணையப் பங்கங்களாக பலவகை ‘எழுத்துரு’க்களில் (fonts) உருவாக்கி அளித்த நிலையில் இருந்து முன்னேறி, ‘ஒருங்குறி’ (Unicode) எழுத்துருக்களைப் பயன்படுத்தும் முறைக்கு முன்னேறியது படிப்பவருக்கு உதவும் நல்லதோர் மாற்றம்.
மின்னூல்களின் வளர்ச்சி:
இப்பொழுது கணினி வழி படிப்பதையும் கடந்து கைபேசி, ஆமசான் ‘கிண்டில்’ அல்லது பிற ‘ஆன்ட்ராய்டு’ மின்பலகை (டேப்லட்) போன்றவை வழியாகவும் மின்னூல்களை பதிவிறக்கிப் படிக்கும் நிலை மிகப்பரவலாக வழக்கத்திற்கு வந்துவிட்டது. இது போன்ற புதுமுறை படிக்கும் கருவிகளுக்கான மென்பொருள்களும், அதற்கேற்ற வகையில் மின்னூல் வெளியீடுகளும் வந்துள்ளன.  கிண்டில் வழி படிப்போர் ‘மோபி’ (mobi) மின்னூல் வடிவிலும், பிறர் ‘இபப்’ (EPub) வகையிலான மின்னூல்களைப் படிக்கும் முறையும் உள்ளது. கணினி, கைபேசி, மின்பலகை போன்ற எந்தப் படிக்கும் கருவி கொண்டும் ‘உருப்பட வடிவம்’ (PDF) வகை மின்னூல்கள் படிக்கும் முறை உள்ளது. 

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday, 3 August 2017

தரணியே, தலை நிமிர்! (கவிதை)


Siragu cellpesi2

செல்பேசி செய்நன்மை
செயலளவில் உயர்வெனினும்- அவன்
செய்யும் கூத்துகளும்
செயற்கரிய என்றறிவோம்!
‘எதிரில் ஆள்’ இருந்தும்
எதிராளி போல் விலக்கி
அருகில் ஆள் இருந்தும்
அன்னியர் போல் மாற்றுகின்றான்..
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday, 2 August 2017

பிழைதிருத்திகள்


Siragu tamil in computer2
தற்காலத் தமிழின் வளர்ச்சிக்குப் பெரிதும் துணையாக நிற்பது கணினித் துறையாகும். தமிழில் எழுதுவது என்பது குறைந்து நேரடியாக கணினி அச்சாக்கம் செய்யும் நிலையில் தமிழின் படைப்புகள் கணினியுடன் நேரடித் தொடர்புகள் கொண்டு விளங்குகின்றன. எழுதுவது, அழகுபடுத்துவது, வெளியிடுவது என்று அனைத்து நிலைகளிலும் கணினியின் பயன்பாடு தமிழுக்கு மிக நெருக்கமாக அமைந்துவருகிறது. இந்நிலையில் கணினியின் வேகம், அதன் இயந்திரத்தன்மை, உள்ளிடும் நிலையில் ஏற்படும் கைபிசகல்கள், ஆகியன கருதி சில பிழைகளும் நேர்ந்துவிடுகின்றன. இந்தப்பிழைகளைக் களைந்து நலமான தமிழை வெளியிட தேர்ந்த பிழைதிருத்தி மென்பொருள்கள் தேவைப்படுகின்றன. இத்தேவை பெரிதும் உணரப்பெற்று வந்தாலும், இத்தேவையை முழுவதுமாக அமைத்துக்கொள்ள இயலவில்லை.
எம்.எஸ் வேர்டு என்ற சொல் செயலி வழியாகத்தான் தமிழை உள்ளிடுவதும் வெளியிடுவதும் பெருமளவில் நடைபெற்று வருகிறது. இச்சொல் செயலி ஆங்கில சொல், தொடர் பிழைகளை வசதிகளைப் பெற்றிருக்கிறது. இதனைக் கொண்டு – தமிழ்ச் சொல், தொடர் பிழைகளை நீக்க இயலாது. எனவே இதற்கென தனித்த மென்பொருள் உருவாக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday, 1 August 2017

‘ வந்தேமாதரம்’ என்ற பெயரில், கல்வியிலும் மதவாதமா ….!


Siragu vandhe maadharam2
கல்வி என்பது எல்லோருக்கும் பொதுவானது. பல மதங்கள், இனங்கள், மொழிகள், கலாச்சாரங்கள் கடந்து நம் அறிவை வளர்த்துக்கொள்ளும் சாதனமாக இருப்பது கல்விமுறைதான். அதுவும் இந்தியா போன்ற பன்முகத்தன்மையுள்ள, மதசார்பற்ற ஒரு துணைக்கண்டத்தில், ஒரு குறிப்பிட்ட மதத்தினரை போற்றுவதும், ஒரு குறிப்பிட்ட மதத்தினரை தூற்றுவதுமாக இருப்பதென்றால், அதனை ஏற்றுக்கொள்ள முடியுமா.? தற்போதுள்ள மதவாத பாசக அரசு மென்மேலும் மதவாதத்தை தூண்டும் விதமாகவே செயல்பட்டு வருவது மிகவும் வருத்தத்துக்குரியது… கடும் கண்டனத்துக்குரியது.!


இரு தினங்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு. எம்.எஸ். முரளிதரன் கூறியிருப்பது மக்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது எனலாம். ‘வந்தே மாதரம்’ பாடலைக் கட்டாயம் பாட வேண்டும் என்பது தான் அது. கல்வி நிலையங்களில் வாரம் ஒருமுறையும், அரசு அலுவகங்களில் மாதம் ஒரு முறையும் பாடப்பட வேண்டும் என்ற ஒரு கூற்று… இது நம் அரசமைப்புச் சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கும் மதச்சார்பின்மைக்கு எதிரானதாகும். இந்தப் பாடல் எதற்காக எழுதப்பட்டது, எதை முன்னிருத்தி பாடப்பட்டது என்ற விவரங்கள் அவருக்குத் தெரிந்து தான், இப்படி சொல்லி இருப்பாரா என்பது சந்தேகமாகவே உள்ளது. இந்தத் திணிப்பு எதற்கு என்பது மிக முக்கிய கேள்வியாக இருக்கிறது. இப்பாடலைப்பற்றி சிறிது பார்ப்போம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.